மன்மதன்
29-01-2007, 06:31 PM
என்னதான் சொல்லுங்க ..போட்டியை நேரில் கண்டுகளிப்பதே ஒரு சுகம்தான்.. என்னுடன் ஒரு உங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமான
நண்பர் வந்திருந்தார். செமத்தியான கூட்டம் என்பதால் , டைமுக்கு மைதானம் சென்றாலும், நீண்ட பெரிய க்யூவில் நின்று உள்ளே போவதற்குள் 5 ஓவர் முடிந்திருந்தது. ரொம்ப ஓவர். கம்பீர் கம்பீரமாக பெவிலியனில் உட்கார்ந்திருந்தார். வெளியே வரிசையில் நிற்கும் போதே, ஓஓ வென மைதானத்திலிருந்து கேட்கும் இரைச்சல் அற்புத உணர்வு. நம் நண்பர் அடித்த கமெண்ட்கள் இருக்கிறதே.. அடடா....ஹாஹ்ஹா ரகம்..
ஒருவழியாக உள்ளே சென்று இடத்தை புடிச்சாச்சி. நல்ல இடம். கீழிலிருந்து மூணாவது வரிசை. எங்களுக்கு மேல் வரிசையில் வரிசையாக குடிமகன்கள் கலாய்ச்சிக்கொண்டும், வாட்டர் பாட்டில் கொண்டு அருமையான ட்ரம்ஸ் வாசித்துக்கொண்டும் எங்கள் ஏரியாவை கலக்கினார்கள். நம் நண்பர் கையும் ஊறவே அவர் கையிலும் இரண்டு காலி பாட்டில்கள் சிக்கின.. அப்பப்ப நாங்களும் சேர்ந்து ஏரியாவே ஆஹா ஓஹோவென்றிருந்தது.
முதல் 30 ஓவர். அருமை அருமை. பேரிரைச்சல் அடங்கவே இல்லை. அப்புறம் ஆரம்பித்தது கொட்டாவி.. அதுவும் கடைசி வரை அடங்கவே இல்லை. நாமதான் வெறித்தனமா இந்தியாவை நேசிப்போமா.. நம்ம ஆள் 4,4ஆக அடிக்கும் போது நாற்காலியில் ஏறி நின்று ஆட்டம் போட்டோம் ... (பல சமயங்களில் கேமராவை நோக்கிதான்..:D) அது எல்லாம் 26 ஓவரில் காலி. அப்புறம் வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங் பண்ணும் போது முதல் பந்தில் கேல் ஆட்டம் இழந்தபோது தூக்கம் கலைந்தது. அதே உற்சாகம். அத்துடன் நம்ம ஆட்கள், அதான் வீரர்கள் (விதியேன்னு அப்படித்தான் அழைக்கவேண்டியிருக்கிறது:rolleyes:) நல்லா சாப்பிட்டு வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன், மூளை சரியா வேலை செய்யாம , அல்லது 2 மேட்ச்தான் ஜெயிச்சிட்டோமே, போனா போவுது என்று இந்த மேட்சை தாரை வார்த்து கொடுத்தனர்.
கண்டிப்பாக இது ஜெயிக்க வேண்டிய மேட்ச். ஸ்ரீசாந்த் தன் பௌலிங்கை மறந்து போயி விக்கெட் கீப்பரை விடவும் அகலமாக பந்து போட்டு 5,5 ரன்களாக கொடுத்தும், அவரையே தொடர்ந்து திசை (End) மாத்தாமல் கொடுத்தது, கங்குலி அல்லது தோனி மற்றும் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்த மேட்ச் ஆடியதற்கும் விளைவாகவே இந்த தோல்வியை கருதுகிறேன்..
மற்றபடி வெஸ்ட் இண்டீஸ் அடித்த ஒவ்வொரு ரன்னுக்கும் அதாவது பவுண்டரி, சிக்ஸர்களுக்கு நம்ம ஆடியன்ஸ் கைதட்டி உற்சாகமூட்டினர். சாமுவேல் 98ல் அவுட் ஆகி போகும் போது எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். லாராவுக்கு சென்னை ரசிகர்கள் அதிகம். கடைசியில் இந்தியா இழுவை போட்ட போதுகூட 'அடச்சே சீக்கிரம் முடிங்கப்பா..வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்கட்டும்' என்ற கமெண்டை கேட்க முடிந்தது. கடைசியில் கண்ட்ரோல் பண்ணுகிறோம் பேர்வழி என்று இந்தியா பண்ணியது கோமாளித்தனமானது. அதை முன்னாடியே பண்ணினால் என்னாவாம்?
சரி மேட்சை விடுவோம்.. சில சுவாரஸ்யங்களை பார்ப்போம்..
முதல் சுவாரஸ்யம் , என் கூட வந்து நன்றாக கமெண்ட் அடித்த நண்பர் பூ. அடுத்து, எங்களுக்கு இரண்டு வரிசை அதாவது முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு நபர் சரியான கிரிக்கெட் பைத்தியம். அந்த பக்கம் ஃபீல்டிங் நின்ற அனைத்து வீரர்களும் அந்த நபரை (ஒரு 25 வயது இருக்கலாம்) கொலைவெறியுடன் பார்த்துவிட்டுதான் சென்றார்கள். சச்சின் உள்பட. ஏன் என்று 'பூ' விளக்கினால் நன்றாக இருக்கும்.
அப்புறம், மைதானத்தில் ஆடியன்ஸை கவர் பண்ணுவதற்கு காமிரா ஒண்ணே ஒண்ணு. அது முதலில் எங்கள் பக்கம் இருந்தது, எங்கள் பக்கம் இருந்தவரை எங்களுக்கு 20 இருக்கைகள் தள்ளி ரோஜாக்கூட்டம் ஒன்று இருந்தது, அந்த ஜொள்பாண்டி கேமராமேன் எப்ப பார்த்தாலும் அந்த ரோ.கூ வையே கவர் பண்ணிக்கிட்டு இருந்தாப்ல. அதுல 'பூ'வுக்கு ரொம்ப கோபம். (நாம கவர் பண்ண முடியலேன்னு கூட இருக்கலாம் :rolleyes:)
அலை ஏற்படுத்துவதில் சென்னை ரசிகர்களுக்கு முதலிடம் தரலாம். நன்றாக என்ஜாய் பண்ணினோம்.
கேண்டீன் கொள்ளை லாபத்தில் இயங்கியது. இரண்டு சின்ன சைஸ் சப்பாத்தி (ஒண்ணரைதான் இருந்தது 30ரூ, நாலு சமோசா 30ரூ...)
மேட்ச் பார்க்க ஒரு வி.ஐ.பி குடும்பத்துடன் வந்திருந்தார். அவர் படம் இணைத்துள்ளேன்.
http://img.photobucket.com/albums/v372/manmathan/Image020.jpg
http://img.photobucket.com/albums/v372/manmathan/Image019.jpg
வீடியோ இங்கே (http://smg.photobucket.com/albums/v372/manmathan/?action=view¤t=Video003.flv)
மற்ற விசயங்களை பூவிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும்..:D:D
(சென்ற வருடம் நான், சேரன், பூ மேட்ச் பார்க்க போனோம். மழை பார்த்து வந்தோம். இந்த தடவை மேட்ச் பார்த்தோம். ரசித்தோம். வருடத்திற்கு இரண்டு மேட்சாவது நடத்தினால் நன்றாக இருக்கும்..;);))
நண்பர் வந்திருந்தார். செமத்தியான கூட்டம் என்பதால் , டைமுக்கு மைதானம் சென்றாலும், நீண்ட பெரிய க்யூவில் நின்று உள்ளே போவதற்குள் 5 ஓவர் முடிந்திருந்தது. ரொம்ப ஓவர். கம்பீர் கம்பீரமாக பெவிலியனில் உட்கார்ந்திருந்தார். வெளியே வரிசையில் நிற்கும் போதே, ஓஓ வென மைதானத்திலிருந்து கேட்கும் இரைச்சல் அற்புத உணர்வு. நம் நண்பர் அடித்த கமெண்ட்கள் இருக்கிறதே.. அடடா....ஹாஹ்ஹா ரகம்..
ஒருவழியாக உள்ளே சென்று இடத்தை புடிச்சாச்சி. நல்ல இடம். கீழிலிருந்து மூணாவது வரிசை. எங்களுக்கு மேல் வரிசையில் வரிசையாக குடிமகன்கள் கலாய்ச்சிக்கொண்டும், வாட்டர் பாட்டில் கொண்டு அருமையான ட்ரம்ஸ் வாசித்துக்கொண்டும் எங்கள் ஏரியாவை கலக்கினார்கள். நம் நண்பர் கையும் ஊறவே அவர் கையிலும் இரண்டு காலி பாட்டில்கள் சிக்கின.. அப்பப்ப நாங்களும் சேர்ந்து ஏரியாவே ஆஹா ஓஹோவென்றிருந்தது.
முதல் 30 ஓவர். அருமை அருமை. பேரிரைச்சல் அடங்கவே இல்லை. அப்புறம் ஆரம்பித்தது கொட்டாவி.. அதுவும் கடைசி வரை அடங்கவே இல்லை. நாமதான் வெறித்தனமா இந்தியாவை நேசிப்போமா.. நம்ம ஆள் 4,4ஆக அடிக்கும் போது நாற்காலியில் ஏறி நின்று ஆட்டம் போட்டோம் ... (பல சமயங்களில் கேமராவை நோக்கிதான்..:D) அது எல்லாம் 26 ஓவரில் காலி. அப்புறம் வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங் பண்ணும் போது முதல் பந்தில் கேல் ஆட்டம் இழந்தபோது தூக்கம் கலைந்தது. அதே உற்சாகம். அத்துடன் நம்ம ஆட்கள், அதான் வீரர்கள் (விதியேன்னு அப்படித்தான் அழைக்கவேண்டியிருக்கிறது:rolleyes:) நல்லா சாப்பிட்டு வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன், மூளை சரியா வேலை செய்யாம , அல்லது 2 மேட்ச்தான் ஜெயிச்சிட்டோமே, போனா போவுது என்று இந்த மேட்சை தாரை வார்த்து கொடுத்தனர்.
கண்டிப்பாக இது ஜெயிக்க வேண்டிய மேட்ச். ஸ்ரீசாந்த் தன் பௌலிங்கை மறந்து போயி விக்கெட் கீப்பரை விடவும் அகலமாக பந்து போட்டு 5,5 ரன்களாக கொடுத்தும், அவரையே தொடர்ந்து திசை (End) மாத்தாமல் கொடுத்தது, கங்குலி அல்லது தோனி மற்றும் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்த மேட்ச் ஆடியதற்கும் விளைவாகவே இந்த தோல்வியை கருதுகிறேன்..
மற்றபடி வெஸ்ட் இண்டீஸ் அடித்த ஒவ்வொரு ரன்னுக்கும் அதாவது பவுண்டரி, சிக்ஸர்களுக்கு நம்ம ஆடியன்ஸ் கைதட்டி உற்சாகமூட்டினர். சாமுவேல் 98ல் அவுட் ஆகி போகும் போது எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். லாராவுக்கு சென்னை ரசிகர்கள் அதிகம். கடைசியில் இந்தியா இழுவை போட்ட போதுகூட 'அடச்சே சீக்கிரம் முடிங்கப்பா..வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்கட்டும்' என்ற கமெண்டை கேட்க முடிந்தது. கடைசியில் கண்ட்ரோல் பண்ணுகிறோம் பேர்வழி என்று இந்தியா பண்ணியது கோமாளித்தனமானது. அதை முன்னாடியே பண்ணினால் என்னாவாம்?
சரி மேட்சை விடுவோம்.. சில சுவாரஸ்யங்களை பார்ப்போம்..
முதல் சுவாரஸ்யம் , என் கூட வந்து நன்றாக கமெண்ட் அடித்த நண்பர் பூ. அடுத்து, எங்களுக்கு இரண்டு வரிசை அதாவது முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு நபர் சரியான கிரிக்கெட் பைத்தியம். அந்த பக்கம் ஃபீல்டிங் நின்ற அனைத்து வீரர்களும் அந்த நபரை (ஒரு 25 வயது இருக்கலாம்) கொலைவெறியுடன் பார்த்துவிட்டுதான் சென்றார்கள். சச்சின் உள்பட. ஏன் என்று 'பூ' விளக்கினால் நன்றாக இருக்கும்.
அப்புறம், மைதானத்தில் ஆடியன்ஸை கவர் பண்ணுவதற்கு காமிரா ஒண்ணே ஒண்ணு. அது முதலில் எங்கள் பக்கம் இருந்தது, எங்கள் பக்கம் இருந்தவரை எங்களுக்கு 20 இருக்கைகள் தள்ளி ரோஜாக்கூட்டம் ஒன்று இருந்தது, அந்த ஜொள்பாண்டி கேமராமேன் எப்ப பார்த்தாலும் அந்த ரோ.கூ வையே கவர் பண்ணிக்கிட்டு இருந்தாப்ல. அதுல 'பூ'வுக்கு ரொம்ப கோபம். (நாம கவர் பண்ண முடியலேன்னு கூட இருக்கலாம் :rolleyes:)
அலை ஏற்படுத்துவதில் சென்னை ரசிகர்களுக்கு முதலிடம் தரலாம். நன்றாக என்ஜாய் பண்ணினோம்.
கேண்டீன் கொள்ளை லாபத்தில் இயங்கியது. இரண்டு சின்ன சைஸ் சப்பாத்தி (ஒண்ணரைதான் இருந்தது 30ரூ, நாலு சமோசா 30ரூ...)
மேட்ச் பார்க்க ஒரு வி.ஐ.பி குடும்பத்துடன் வந்திருந்தார். அவர் படம் இணைத்துள்ளேன்.
http://img.photobucket.com/albums/v372/manmathan/Image020.jpg
http://img.photobucket.com/albums/v372/manmathan/Image019.jpg
வீடியோ இங்கே (http://smg.photobucket.com/albums/v372/manmathan/?action=view¤t=Video003.flv)
மற்ற விசயங்களை பூவிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும்..:D:D
(சென்ற வருடம் நான், சேரன், பூ மேட்ச் பார்க்க போனோம். மழை பார்த்து வந்தோம். இந்த தடவை மேட்ச் பார்த்தோம். ரசித்தோம். வருடத்திற்கு இரண்டு மேட்சாவது நடத்தினால் நன்றாக இருக்கும்..;);))