Narathar
25-01-2007, 11:57 AM
காதலனை கறிசமைத்து விருந்துகொடுத்த பெண்ணுக்கு 11 வருடம் சிறைத்தண்டனை
( இவள் ஒரு வேளை நம்மூர் தமிழ் டெலி சீரியல்களை பார்த்திருப்பாளோ?........... வாசித்துவிட்டு செய்தி தந்த என்னை திட்ட்டாதீர்கள்!!!:D )
தனது காதலனை கறியாக்கி விருந்தினர்களுக்கு புத்தாண்டு விருந்துகொடுத்த பெண்ணிற்கு ரஷ்ய கோர்ட்டு ஒன்று 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
காதலனை கோடாரியால் கூறுபோட்டு அவனது உடலை கறியை சமைத்து நண்பர்களுக்கு புத்தாண்டு விருந்து படைத்த பெண் ஒருவர் பற்றி ரஷ்யாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரஷ்யாவின் ஸ்டெர்லி தமாக் என்ற நகரத்தை சேர்ந்த 44 வயது பெண் ஒருவர் தனது காதலனை வெட்டி கறி சமைத்து விருந்துபடைத்துள்ளார். அந்த பெண்ணிற்கு இளம் வாலிபர் ஒருவனுடன் கள்ளத்தொடர்பு இருந்துவந்தது.
அந்த வாலிபருக்கு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
தனக்கு நம்பிக்கை துரோகம் செய்த இந்த வாலிபன் மீது காதலிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. தனது வீட்டுக்கு வரும்போதெல்லாம் இதைப்பற்றியே அந்த பெண் பேசி வந்துள்ளார்.
சம்பவத்தன்று இருவரும் ஆக்ரோசமாக மோதிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பக்கத்தில் இருந்த கோடாரியால் காதலனை போட்டுத்தள்ளினார். ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த காதலனை பார்த்து பயங்கரமாக சிரித்த இந்த பெண் தலையை கொய்து காட்டுப்பகுதியில் வீசிவிட்டாள். முண்டத்தை தனித்தனியாக வெட்டி கறியாக்கி சமைத்து பின்னர் தோழிகளை அழைத்து அவர்களுக்கு விருந்து படைத்துள்ளாள்.
மனித கறியின் வாசம் தெரியாமல் இருக்க அந்த கறியை சாராயத்தில் ஊறவைத்தும் வேறு கறியுடன் கலந்தும் சமைத்துள்ளார். விருந்தினர்களும் ஜம்மன்று அதனை ருசித்து சாப்பிட்டுள்ளனர். ஒரோ ஒரு விருந்தினருக்கு மட்டும் கறி பற்றி சந்தேகம் வர இந்த கறி மட்டும் ஏன் இனிப்பாக இருக்கிறது என்று கேட்டுள்ளார். சற்று அதிர்ந்து போனாலும் அதற்கும் அந்த பெண் லாவகமாக பதில் கூறி சமாளித்துள்ளார். கறி பிரஷ்சாக இருப்பதால் இனிப்பாக உள்ளது என்று பதில் கூறியுள்ளார். கடைசிவரை அது மனித கறி என்றே ஒருவருக்கும் தெரியவில்லை. விருந்தின் முடிவில் குடிநீருக்காக விருந்தினர் ஒருவர் ப்ரிட்ஜை திறக்க குட்டு அம்பலமானது. வெட்டப்பட்ட காதலனின் கை அந்த ப்ரிட்ஜில் இருந்தது. இதனைப்பார்த்து பதறியடித்துப்போன அவர் போலீசை கூப்பிட காதலன் கறியாக்கப்பட்ட கொடூரம் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து காதலி மீது போலீசார் வழக்குத்தொடர்ந்து கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண்ணிற்கு 11 வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
( இவள் ஒரு வேளை நம்மூர் தமிழ் டெலி சீரியல்களை பார்த்திருப்பாளோ?........... வாசித்துவிட்டு செய்தி தந்த என்னை திட்ட்டாதீர்கள்!!!:D )
தனது காதலனை கறியாக்கி விருந்தினர்களுக்கு புத்தாண்டு விருந்துகொடுத்த பெண்ணிற்கு ரஷ்ய கோர்ட்டு ஒன்று 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
காதலனை கோடாரியால் கூறுபோட்டு அவனது உடலை கறியை சமைத்து நண்பர்களுக்கு புத்தாண்டு விருந்து படைத்த பெண் ஒருவர் பற்றி ரஷ்யாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரஷ்யாவின் ஸ்டெர்லி தமாக் என்ற நகரத்தை சேர்ந்த 44 வயது பெண் ஒருவர் தனது காதலனை வெட்டி கறி சமைத்து விருந்துபடைத்துள்ளார். அந்த பெண்ணிற்கு இளம் வாலிபர் ஒருவனுடன் கள்ளத்தொடர்பு இருந்துவந்தது.
அந்த வாலிபருக்கு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
தனக்கு நம்பிக்கை துரோகம் செய்த இந்த வாலிபன் மீது காதலிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. தனது வீட்டுக்கு வரும்போதெல்லாம் இதைப்பற்றியே அந்த பெண் பேசி வந்துள்ளார்.
சம்பவத்தன்று இருவரும் ஆக்ரோசமாக மோதிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பக்கத்தில் இருந்த கோடாரியால் காதலனை போட்டுத்தள்ளினார். ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த காதலனை பார்த்து பயங்கரமாக சிரித்த இந்த பெண் தலையை கொய்து காட்டுப்பகுதியில் வீசிவிட்டாள். முண்டத்தை தனித்தனியாக வெட்டி கறியாக்கி சமைத்து பின்னர் தோழிகளை அழைத்து அவர்களுக்கு விருந்து படைத்துள்ளாள்.
மனித கறியின் வாசம் தெரியாமல் இருக்க அந்த கறியை சாராயத்தில் ஊறவைத்தும் வேறு கறியுடன் கலந்தும் சமைத்துள்ளார். விருந்தினர்களும் ஜம்மன்று அதனை ருசித்து சாப்பிட்டுள்ளனர். ஒரோ ஒரு விருந்தினருக்கு மட்டும் கறி பற்றி சந்தேகம் வர இந்த கறி மட்டும் ஏன் இனிப்பாக இருக்கிறது என்று கேட்டுள்ளார். சற்று அதிர்ந்து போனாலும் அதற்கும் அந்த பெண் லாவகமாக பதில் கூறி சமாளித்துள்ளார். கறி பிரஷ்சாக இருப்பதால் இனிப்பாக உள்ளது என்று பதில் கூறியுள்ளார். கடைசிவரை அது மனித கறி என்றே ஒருவருக்கும் தெரியவில்லை. விருந்தின் முடிவில் குடிநீருக்காக விருந்தினர் ஒருவர் ப்ரிட்ஜை திறக்க குட்டு அம்பலமானது. வெட்டப்பட்ட காதலனின் கை அந்த ப்ரிட்ஜில் இருந்தது. இதனைப்பார்த்து பதறியடித்துப்போன அவர் போலீசை கூப்பிட காதலன் கறியாக்கப்பட்ட கொடூரம் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து காதலி மீது போலீசார் வழக்குத்தொடர்ந்து கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண்ணிற்கு 11 வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.