Narathar
19-01-2007, 02:10 AM
விமானம் தரையை தொட இன்னும் இரண்டு மணித்தியாளங்கள் இருப்பதாய் கொஞ்சும் ஆங்கிலத்தில் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.... இன்னும் இரண்டு மணித்தியாளத்தில் நான் தாயகத்தில், நினைக்கவே இனிமையாக இருந்தது. ஆனால் மனதுக்குள் ஏதோ ஒன்று நெருடியது... அது என்ன? என்பதை என்னால் ஊகிக்க முடியாதிருந்தாலும், உள் மனது அது சுருதியின் நினைப்புத்தான் என்று அடித்துச்சொன்னது.
சுருதி அவள் நினைவுகள் என்னை இரண்டு மணித்தியாளத்துக்கு முன்னதாகவே இலங்கைக்கு கொண்டுபோனது..... நினைவலைகளை திருப்பிப்போட்டு பார்க்கின்றேன்....... சுருதியோடு நான் கடலோரத்தில் கபடமில்லாமல் கொஞ்சி விளையாடிய அந்த குழந்தைப்பராயம், பள்ளியில் ஒன்றாய் படித்த பள்ளிப்பருவம், சுருதிக்கு காதல் கடிதம் கொடுத்தவனை புரட்டி எடுத்த விடலைப்பருவம், என்று ஒவ்வொன்றாய் மனதில் நிழலாடியது.....
ஆனால் அந்த இளமைப்பருவம் மட்டும் ஏன் அவ்வளவு கசப்பாய் போனது நான் அறியேன். யார் செய்த பாவமது சுருதியா? இல்லை நானா? இல்லை காலத்தின் கோலமா? இன்னும் விடைதெரியாத கேல்வியது. கன்னத்தின் ஓரத்தில் வெள்ளி மயிர்கள் மின்ன ஆரம்பித்திருந்தும் இன்னும் அந்த கேள்விக்கு மட்டும் என்னால் விடை காண முடியவில்லை...
ஏலெவல் (A/L) வரையில் ஒன்றாக படித்த அவளுக்கும் எனக்கும் என்ன ஒரு புரிந்துணர்வு? நான் ஒரு பக்கம் திரும்பினாலும் நான் ஏன் திரும்பினேன் என்பதை துள்ளிய்யமாக சொல்வாள் சுருதி.
ஏ லெவல் காலத்தில் சிங்கள மீடியத்தில் படித்த சுசித்ராவை நான் காதலிக்கின்றேன் என்ற போது அவள் எதிர்த்ததை பார்க்க வேண்டுமே? இந்த காதல் விபரம் என் வீட்டில் தெரிந்தால் அப்பா கூட அந்த அளவு ஆட்டம் போடமாட்டார், ஆவேசப்பட மாட்டார். ஆனால் சுருதி கிட்டத்தட்ட பத்ரகாளியாகவே மறிவிட்டாள்.
அவள் எதிர்ப்பை பார்த்த நண்பர்கள் அவள் என்னை காதலிப்பதாக சொன்னார்கள். என்னால் நம்ப முடியவில்லை. சின்னவயதிலிருந்தே ஒன்றாக பழகிய சுருதிக்கு அப்படி ஒரு நினைப்பு வராது என்று நினைத்தேன்....... நான் எப்போது சரியாக நினைத்தேன் அந்த நினைப்பு சரியாவதற்கு?
சுருதியை உயிருக்கு உயிராக காதலித்தான் என் சக மாணவன் அஸ்மி.... என்னிடம் வந்து நீ சுருதியை காதலிக்கின்றாயா? என்று கேட்ட விதமாகட்டும். இல்லையென்றவுடன் என்னை கட்டித்தலுவி தன் சந்தோசத்தை வெளிப்படுத்திய விதத்திலாகட்டும் எனக்கு அவன் காதல் நன்றாகவே புரிந்தது..... ஆனால் சுருதிக்கு புரியவில்லை. புரியவில்லையா? இல்லை புரிந்தும் புரியாதவளாய் இருந்தாளா? அவளுக்குத்தான் தெரியும்.
அவள் மறுப்பை தாங்க முடியாத அஸ்மி என்னிடம் வந்து அழுததையும், அவள் உன்னைத்தான் காதலிக்கின்றாள் என்று அடித்துச்சொன்னதையும் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.
ஆனால் அவளிடம் என்னை காதலிக்கின்றாயா என்று முகத்தைப்பார்த்து கேட்க பயம். அப்படி அவள் என்னை காதலிக்கின்றாள் என்றால்? நினைக்க எனக்கு ஏதோ போல் இருந்தது. ஆனால் அது சரிய தவறா என்று அப்போது புரியவில்லை. ஏன் இப்போதும் தான்.
ஒடு நாள் பேச்சு வாக்கில் அவளிடம் அஸ்மியைப்பற்றி கேட்டேன்....... அவன் காதலை ஏன் நிராகரித்தாய்? என்று கேட்டேன். கண்கள் சிவக்க என்னை ஒரு பார்வை பார்த்தாள், ஒருவாரம் அவள் முகத்தைக்கூட பார்க்க முடியாமல் வெட்கி தலை குனிந்து போனேன்.... என்ன மாயமோ மந்திரமோ ஊருக்கெல்லாம் சட்டாம் பிள்ளையாக நாட்டாமை செய்து கொண்டிருந்த நான் சுருதியின் ஒரு பார்வைக்குள் அடங்கிப்போனேன்....... ஆனால் அது காதலா?
நண்பர்கள் கேலி பேசுவதும் வீட்டில் சாடை பேசுவதும் அதிகமானது. இல்லை எனக்கும் சுருதிக்கும் அப்படி ஒன்றும் இல்லை என்று மனது சொன்னதே தவிர அதையே உரத்துச்சொல்ல உதடு தயாராக இருக்கவில்லை.
"உலகம் ஆயிரம் சொல்லிட்டு போகட்டும் உனக்கு தெரியும் நான் யாரென்று"
என்று சுருதி சொன்னதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. பிடிபடவும் இல்லை. வழமை போல காலத்தின் கைகளில் எங்கள் உறவுக்கு அர்த்தம் சொல்லும் கடமையை விட்டுவிட்டேன்......
"இன்னும் ஏதாவது குடிக்கப்போகின்றீர்களா?"
என்னும் கொஞ்சும் ஆங்கில குரல் என்னை மறுபடியும் விமானத்துக்கு இட்டு வந்தது. பத்து மணித்தியாளங்களாக பறந்து கொண்டிருக்கின்றேன்.. இருக்கையில் சாய்ந்து அமர்ந்து
" ஒன்றும் வேண்டாம்"
என்று புன்னகையாலேயே பதில் சொல்லிவிட்டு கண்களை மூடிய போது ரஜினி என் கண்ணுக்குள் வந்தாள். அவளுக்கும் என்னோடு இலங்கை வர விருப்பம்தான் என்றாலும் மூத்தவளின் பள்ளிப்படிப்பு பாதிக்கப்படுமே என்று சொல்லி என்னை விமான நிலையம் வரை வந்து வழியனுப்பிவைத்து விட்டு
" பீ குட்"
என்று கண்ணடித்து விடை தந்துவிட்டுப்போனாள். அன்னிய நாட்டுக்கலாச்சாரத்தில் வளர்ந்திருந்தாலும் தாய் மண்ணின் மண் வாசம் போகாத மனைவியவள். புரிந்துணர்வென்றால் என்ன என்பதை எனக்கு உணர்த்தியவள்.
நான் இந்த நாட்டில் வந்து தனிமையில் கஷ்டப்படும் போது இறைவனால் எனக்காகவே அனுப்பப்பட்ட தேவதை போன்று வந்து நின்று, நான் கேட்காமலே என் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த தேவதை அவள். அந்தக்காலங்களில் எதையோ பரிகொடுத்தவன் போல நிற்கும் என் கோலத்தைப்பார்த்து எனக்கு ஆறுதலாய் இருந்தவளும் அவள்தான்.
அவள் பரிவும் பாசமும் என்னை அவள் பால் ஈர்த்தது. இன்று நாங்கள் கணவன் மனைவி என்றாகி இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோருமாகிவிட்டோம்...... மனைவி அமைவதெல்லாம் இறவன் கொடுத்த வரம். எனக்கு அந்த வகையில் இறைவன் நல்ல வரத்தைத்தான் கொடுத்திருந்தான்.
கணவன் அமைவதெல்லாம்? சுருதிக்கு நிகழ்ந்ததை நினைக்கும் போது என் மனதின் பாரம் இன்னும் அதிகமானது........
( தொடரும் )
அன்பர்களே........
நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு கிடைத்த ஓய்வு ஒரு கதை எழுத தூண்டியது.... பாதி எழுதிவிட்டேன் மீதி உங்கள் விமர்சனத்தில் தான் இருக்கின்றது.
என்ன தொடரட்டுமா? இல்லை இதுவே போதுமா?
சுருதி அவள் நினைவுகள் என்னை இரண்டு மணித்தியாளத்துக்கு முன்னதாகவே இலங்கைக்கு கொண்டுபோனது..... நினைவலைகளை திருப்பிப்போட்டு பார்க்கின்றேன்....... சுருதியோடு நான் கடலோரத்தில் கபடமில்லாமல் கொஞ்சி விளையாடிய அந்த குழந்தைப்பராயம், பள்ளியில் ஒன்றாய் படித்த பள்ளிப்பருவம், சுருதிக்கு காதல் கடிதம் கொடுத்தவனை புரட்டி எடுத்த விடலைப்பருவம், என்று ஒவ்வொன்றாய் மனதில் நிழலாடியது.....
ஆனால் அந்த இளமைப்பருவம் மட்டும் ஏன் அவ்வளவு கசப்பாய் போனது நான் அறியேன். யார் செய்த பாவமது சுருதியா? இல்லை நானா? இல்லை காலத்தின் கோலமா? இன்னும் விடைதெரியாத கேல்வியது. கன்னத்தின் ஓரத்தில் வெள்ளி மயிர்கள் மின்ன ஆரம்பித்திருந்தும் இன்னும் அந்த கேள்விக்கு மட்டும் என்னால் விடை காண முடியவில்லை...
ஏலெவல் (A/L) வரையில் ஒன்றாக படித்த அவளுக்கும் எனக்கும் என்ன ஒரு புரிந்துணர்வு? நான் ஒரு பக்கம் திரும்பினாலும் நான் ஏன் திரும்பினேன் என்பதை துள்ளிய்யமாக சொல்வாள் சுருதி.
ஏ லெவல் காலத்தில் சிங்கள மீடியத்தில் படித்த சுசித்ராவை நான் காதலிக்கின்றேன் என்ற போது அவள் எதிர்த்ததை பார்க்க வேண்டுமே? இந்த காதல் விபரம் என் வீட்டில் தெரிந்தால் அப்பா கூட அந்த அளவு ஆட்டம் போடமாட்டார், ஆவேசப்பட மாட்டார். ஆனால் சுருதி கிட்டத்தட்ட பத்ரகாளியாகவே மறிவிட்டாள்.
அவள் எதிர்ப்பை பார்த்த நண்பர்கள் அவள் என்னை காதலிப்பதாக சொன்னார்கள். என்னால் நம்ப முடியவில்லை. சின்னவயதிலிருந்தே ஒன்றாக பழகிய சுருதிக்கு அப்படி ஒரு நினைப்பு வராது என்று நினைத்தேன்....... நான் எப்போது சரியாக நினைத்தேன் அந்த நினைப்பு சரியாவதற்கு?
சுருதியை உயிருக்கு உயிராக காதலித்தான் என் சக மாணவன் அஸ்மி.... என்னிடம் வந்து நீ சுருதியை காதலிக்கின்றாயா? என்று கேட்ட விதமாகட்டும். இல்லையென்றவுடன் என்னை கட்டித்தலுவி தன் சந்தோசத்தை வெளிப்படுத்திய விதத்திலாகட்டும் எனக்கு அவன் காதல் நன்றாகவே புரிந்தது..... ஆனால் சுருதிக்கு புரியவில்லை. புரியவில்லையா? இல்லை புரிந்தும் புரியாதவளாய் இருந்தாளா? அவளுக்குத்தான் தெரியும்.
அவள் மறுப்பை தாங்க முடியாத அஸ்மி என்னிடம் வந்து அழுததையும், அவள் உன்னைத்தான் காதலிக்கின்றாள் என்று அடித்துச்சொன்னதையும் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.
ஆனால் அவளிடம் என்னை காதலிக்கின்றாயா என்று முகத்தைப்பார்த்து கேட்க பயம். அப்படி அவள் என்னை காதலிக்கின்றாள் என்றால்? நினைக்க எனக்கு ஏதோ போல் இருந்தது. ஆனால் அது சரிய தவறா என்று அப்போது புரியவில்லை. ஏன் இப்போதும் தான்.
ஒடு நாள் பேச்சு வாக்கில் அவளிடம் அஸ்மியைப்பற்றி கேட்டேன்....... அவன் காதலை ஏன் நிராகரித்தாய்? என்று கேட்டேன். கண்கள் சிவக்க என்னை ஒரு பார்வை பார்த்தாள், ஒருவாரம் அவள் முகத்தைக்கூட பார்க்க முடியாமல் வெட்கி தலை குனிந்து போனேன்.... என்ன மாயமோ மந்திரமோ ஊருக்கெல்லாம் சட்டாம் பிள்ளையாக நாட்டாமை செய்து கொண்டிருந்த நான் சுருதியின் ஒரு பார்வைக்குள் அடங்கிப்போனேன்....... ஆனால் அது காதலா?
நண்பர்கள் கேலி பேசுவதும் வீட்டில் சாடை பேசுவதும் அதிகமானது. இல்லை எனக்கும் சுருதிக்கும் அப்படி ஒன்றும் இல்லை என்று மனது சொன்னதே தவிர அதையே உரத்துச்சொல்ல உதடு தயாராக இருக்கவில்லை.
"உலகம் ஆயிரம் சொல்லிட்டு போகட்டும் உனக்கு தெரியும் நான் யாரென்று"
என்று சுருதி சொன்னதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. பிடிபடவும் இல்லை. வழமை போல காலத்தின் கைகளில் எங்கள் உறவுக்கு அர்த்தம் சொல்லும் கடமையை விட்டுவிட்டேன்......
"இன்னும் ஏதாவது குடிக்கப்போகின்றீர்களா?"
என்னும் கொஞ்சும் ஆங்கில குரல் என்னை மறுபடியும் விமானத்துக்கு இட்டு வந்தது. பத்து மணித்தியாளங்களாக பறந்து கொண்டிருக்கின்றேன்.. இருக்கையில் சாய்ந்து அமர்ந்து
" ஒன்றும் வேண்டாம்"
என்று புன்னகையாலேயே பதில் சொல்லிவிட்டு கண்களை மூடிய போது ரஜினி என் கண்ணுக்குள் வந்தாள். அவளுக்கும் என்னோடு இலங்கை வர விருப்பம்தான் என்றாலும் மூத்தவளின் பள்ளிப்படிப்பு பாதிக்கப்படுமே என்று சொல்லி என்னை விமான நிலையம் வரை வந்து வழியனுப்பிவைத்து விட்டு
" பீ குட்"
என்று கண்ணடித்து விடை தந்துவிட்டுப்போனாள். அன்னிய நாட்டுக்கலாச்சாரத்தில் வளர்ந்திருந்தாலும் தாய் மண்ணின் மண் வாசம் போகாத மனைவியவள். புரிந்துணர்வென்றால் என்ன என்பதை எனக்கு உணர்த்தியவள்.
நான் இந்த நாட்டில் வந்து தனிமையில் கஷ்டப்படும் போது இறைவனால் எனக்காகவே அனுப்பப்பட்ட தேவதை போன்று வந்து நின்று, நான் கேட்காமலே என் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த தேவதை அவள். அந்தக்காலங்களில் எதையோ பரிகொடுத்தவன் போல நிற்கும் என் கோலத்தைப்பார்த்து எனக்கு ஆறுதலாய் இருந்தவளும் அவள்தான்.
அவள் பரிவும் பாசமும் என்னை அவள் பால் ஈர்த்தது. இன்று நாங்கள் கணவன் மனைவி என்றாகி இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோருமாகிவிட்டோம்...... மனைவி அமைவதெல்லாம் இறவன் கொடுத்த வரம். எனக்கு அந்த வகையில் இறைவன் நல்ல வரத்தைத்தான் கொடுத்திருந்தான்.
கணவன் அமைவதெல்லாம்? சுருதிக்கு நிகழ்ந்ததை நினைக்கும் போது என் மனதின் பாரம் இன்னும் அதிகமானது........
( தொடரும் )
அன்பர்களே........
நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு கிடைத்த ஓய்வு ஒரு கதை எழுத தூண்டியது.... பாதி எழுதிவிட்டேன் மீதி உங்கள் விமர்சனத்தில் தான் இருக்கின்றது.
என்ன தொடரட்டுமா? இல்லை இதுவே போதுமா?