gayathri.jagannathan
10-01-2007, 03:02 AM
அவசரமாக எனக்கு இரண்டு நாள் லீவு தேவைப்பட்டது...
பணியிடத்தில் எனக்கு வேலை பளு அதிகம்......
நேராப் போயி லீவு கேட்டா பாஸ் கண்டிப்பா லீவு குடுக்கமாட்டார்... என்ன பண்றது....???
"ஆங் ஒரு ஐடியா...ஏதாவது கிறுக்குத்தனமான வேலை பண்ணினா பாஸ் அதை பாத்துட்டு... இந்த பயலுக்கு வேலை பளு காரணமா மன அழுத்தம் ஜாஸ்தியா போச்சு.. ரெண்டு நாள் லீவு குடுத்துட்டு அப்பறமா வேலை வாங்கலாம்னு நெனைப்பாரு இல்லயா?... அதனால என்ன பண்ணலாம்னு" யோசிக்கறேன்....
"அடடா அதுக்கும் ஒரு வழி கண்டு பிடிச்சிட்டேன்... சபாஷ் டா டேய்.. உன் மூளையே (!!!) மூளை..." என்னை நானே தட்டி கொடுத்துக்கொண்டு...
மறுநாள் காலை உத்தரத்தில இருக்கும்ல பல்ப், அத கழட்டி எறிஞ்சுட்டு அந்த எடத்துல நான் தொங்க ஆரம்பிச்சேன்...
கொஞ்சம் வினோதமா சத்தம் கூட போட்டேன்...
எனக்கு அடுத்த காபினில் வேலை பார்க்கும் தோழி அதிசயித்து பார்த்து கேட்டாள் " என்னடா ஆச்சு உனக்கு?!!"... நான் அவளிடம் எனது திட்டத்தை கூறினேன்...
வந்தார் பாஸ் என்னை பார்த்தார்...
அவர் கண்களில் ஆச்சரியம் + குழப்பம்..
என்னிடம் கேட்டார்... " பயலே ஏண்டா இப்படி தொங்கர?"
அங்க தான் நீங்க ஐயாவோட புத்திசாலித்தனத்த நோட் பண்ணனும்... நான் சொன்னேன்.. " உங்களுக்கு தெரியலையா பாஸ், நான் ஒரு லைட் பல்ப்...!!!"
நான் நினைச்சா மாதிரியே... அவர் எனக்கு ரெண்டு நாள் லீவு குடுத்து " தம்பி போயி நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு வாப்பா ... அப்புறமா வேலை பாக்கலாம்னு" சொல்லிட்டாரு....
கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு ன்னு பாடிக்கிட்டே (மனசுக்குள்ள தான் :D :D !!) போறேன்... என் பின்னாடியே என்னோட பக்கத்து காபின் தோழியும் வந்துட்டா...
பாஸ் அவளை பார்த்து கேட்டார் "நீ எங்கம்மா போற?"
அதுக்கு அவ சொன்னா... " சாரி சார்!! என்னால இருட்டுல வேலை பார்க்க முடியாது !!"ன்னு சொல்லிட்டு நடையை கட்டிட்டா..... :angry:
பணியிடத்தில் எனக்கு வேலை பளு அதிகம்......
நேராப் போயி லீவு கேட்டா பாஸ் கண்டிப்பா லீவு குடுக்கமாட்டார்... என்ன பண்றது....???
"ஆங் ஒரு ஐடியா...ஏதாவது கிறுக்குத்தனமான வேலை பண்ணினா பாஸ் அதை பாத்துட்டு... இந்த பயலுக்கு வேலை பளு காரணமா மன அழுத்தம் ஜாஸ்தியா போச்சு.. ரெண்டு நாள் லீவு குடுத்துட்டு அப்பறமா வேலை வாங்கலாம்னு நெனைப்பாரு இல்லயா?... அதனால என்ன பண்ணலாம்னு" யோசிக்கறேன்....
"அடடா அதுக்கும் ஒரு வழி கண்டு பிடிச்சிட்டேன்... சபாஷ் டா டேய்.. உன் மூளையே (!!!) மூளை..." என்னை நானே தட்டி கொடுத்துக்கொண்டு...
மறுநாள் காலை உத்தரத்தில இருக்கும்ல பல்ப், அத கழட்டி எறிஞ்சுட்டு அந்த எடத்துல நான் தொங்க ஆரம்பிச்சேன்...
கொஞ்சம் வினோதமா சத்தம் கூட போட்டேன்...
எனக்கு அடுத்த காபினில் வேலை பார்க்கும் தோழி அதிசயித்து பார்த்து கேட்டாள் " என்னடா ஆச்சு உனக்கு?!!"... நான் அவளிடம் எனது திட்டத்தை கூறினேன்...
வந்தார் பாஸ் என்னை பார்த்தார்...
அவர் கண்களில் ஆச்சரியம் + குழப்பம்..
என்னிடம் கேட்டார்... " பயலே ஏண்டா இப்படி தொங்கர?"
அங்க தான் நீங்க ஐயாவோட புத்திசாலித்தனத்த நோட் பண்ணனும்... நான் சொன்னேன்.. " உங்களுக்கு தெரியலையா பாஸ், நான் ஒரு லைட் பல்ப்...!!!"
நான் நினைச்சா மாதிரியே... அவர் எனக்கு ரெண்டு நாள் லீவு குடுத்து " தம்பி போயி நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு வாப்பா ... அப்புறமா வேலை பாக்கலாம்னு" சொல்லிட்டாரு....
கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு ன்னு பாடிக்கிட்டே (மனசுக்குள்ள தான் :D :D !!) போறேன்... என் பின்னாடியே என்னோட பக்கத்து காபின் தோழியும் வந்துட்டா...
பாஸ் அவளை பார்த்து கேட்டார் "நீ எங்கம்மா போற?"
அதுக்கு அவ சொன்னா... " சாரி சார்!! என்னால இருட்டுல வேலை பார்க்க முடியாது !!"ன்னு சொல்லிட்டு நடையை கட்டிட்டா..... :angry: