rambal
29-04-2003, 06:40 PM
நீ மட்டும் எங்கே?
இன்று
கண்ணிவெடிகள்
அகற்றப்பட்டு சாலைகள்
எல்லாம்
பேறுகாலம் முடிந்த தாயாய்..
துப்பாக்கி ஓசைகள்
நிறுத்தப்பட்டு
புல்லாங்குழல்
ஊதுவதற்கு முகூர்த்தம்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..
அவர்கள் கூட
சமரசத்திற்கு
ஒத்துக் கொண்டார்கள்..
முகத்திற்கு முன்
துப்பாக்கி தூக்கியவர் எல்லாம்
இன்று வெட்கமில்லாமல் புன்னகை
ஒட்டி உலா வருகின்றனர்..
செத்துப் போன உன்
கூட்டாளிகள் எல்லாம்
வீரமரணம் அடைந்ததாக
அறிவிக்கப்பட்டு
போராளியாக.. தியாகியாக..
எல்லாம் கூடி
வருகிறது..
இனி குண்டுச் சத்தங்களும்
அழுகை சத்தங்களும் இருக்கா..
பங்கர்கள் அனேகமாக
ஒளிந்துபிடித்து விளையாட உதவும்..
பெண்டுகளும் பிள்ளைகளும்
இனி மகிழ்ச்சியாக..
இருப்பின் நிலையில்
அமைதியாய்..
தேசம் விட்டு தேசம் அகதியாய்
திரிய வேண்டியிருக்கா..
அடி பட்ட இடத்திற்கு மருந்தாய்
வைத்த இந்த மண் நம்முடய..
ஏலேலோ பாடி உன் குரல் கலந்த
வீசும் காற்றும் நம்முடைய..
இந்தக் குருவிகளும்
பட்டாமூச்சிகளும் கூட..
இனி பீரங்கிகளுக்குக் கூட
வேலையிருக்கா..
இந்த தருணத்திற்காகத்தானே..
நட்பு, குடும்பம், பிள்ளை
வேண்டாம் என்று
ஓடிப் போனாயே..
இப்போது
நீ மட்டும் எங்கே நண்பனே?
இன்று
கண்ணிவெடிகள்
அகற்றப்பட்டு சாலைகள்
எல்லாம்
பேறுகாலம் முடிந்த தாயாய்..
துப்பாக்கி ஓசைகள்
நிறுத்தப்பட்டு
புல்லாங்குழல்
ஊதுவதற்கு முகூர்த்தம்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..
அவர்கள் கூட
சமரசத்திற்கு
ஒத்துக் கொண்டார்கள்..
முகத்திற்கு முன்
துப்பாக்கி தூக்கியவர் எல்லாம்
இன்று வெட்கமில்லாமல் புன்னகை
ஒட்டி உலா வருகின்றனர்..
செத்துப் போன உன்
கூட்டாளிகள் எல்லாம்
வீரமரணம் அடைந்ததாக
அறிவிக்கப்பட்டு
போராளியாக.. தியாகியாக..
எல்லாம் கூடி
வருகிறது..
இனி குண்டுச் சத்தங்களும்
அழுகை சத்தங்களும் இருக்கா..
பங்கர்கள் அனேகமாக
ஒளிந்துபிடித்து விளையாட உதவும்..
பெண்டுகளும் பிள்ளைகளும்
இனி மகிழ்ச்சியாக..
இருப்பின் நிலையில்
அமைதியாய்..
தேசம் விட்டு தேசம் அகதியாய்
திரிய வேண்டியிருக்கா..
அடி பட்ட இடத்திற்கு மருந்தாய்
வைத்த இந்த மண் நம்முடய..
ஏலேலோ பாடி உன் குரல் கலந்த
வீசும் காற்றும் நம்முடைய..
இந்தக் குருவிகளும்
பட்டாமூச்சிகளும் கூட..
இனி பீரங்கிகளுக்குக் கூட
வேலையிருக்கா..
இந்த தருணத்திற்காகத்தானே..
நட்பு, குடும்பம், பிள்ளை
வேண்டாம் என்று
ஓடிப் போனாயே..
இப்போது
நீ மட்டும் எங்கே நண்பனே?