lenram80
30-12-2006, 11:02 PM
உன்னை நம்பியர்கள் கெடுவதில்லையாமே!
நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கிறோம்
மகிழ்வூருக்கு அழைத்துச் செல்வாய் என்று!
உன்னிடம் கேட்டால் இல்லை என்று சொல்லமாட்டியாமே!
நிறைய கேட்க வேண்டும் என்று தான் ஆசை!
ஏதோ, இப்போதைக்கு இவ்வளவு தான்!
உலகம் அழியும் வரை உயிரைக் கொடு!
உயிருள்ளவரை ஒழுக்கத்தைக் கொடு!
கடைசி வரை பார்க்கின்ற கண்ணைக் கொடு!
சிரிப்பையே கேட்கின்ற செவியைக் கொடு!
பிறரைப் புண்படுத்தாத பேச்சைக் கொடு!
பூ இதழைத் திறந்தாலே புன்சிரிப்பைக் கொடு!
பாடையிலே போகும் வரை பணிவைக் கொடு!
எதிர்மறை எண்ணமே என்றும் இல்லாத
இளமையான மனத்தைக் கொடு!
என் கண்ணுக்கு அழகான காதலியைக் கொடு!
அவளை கடைசி வரை காதலிக்கும் கணிவைக் கொடு!
பிறர்மனை நோக்காத பேராண்மை கொடு!
அடுத்த பெண்களைப் பார்ததால் அக்காள் நினைவைக் கொடு!
நன்றியை ரசிக்கும் நயத்தைக் கொடு!
உதவவே பிறந்தேன் என உத்திரவாதம் கொடு!
பிழையைப் பொறுக்கும் பெருந்தன்மை கொடு!
பிறரைப் போற்றுகின்ற பெருமணம் கொடு!
விபத்தே இல்லாத வெளியூர் பயணம் கொடு!
பொறாமைப் படாத புத்தியைக் கொடு!
கம்பீரத்தைக் கொடுக்கும் காலையைக் கொடு!
விறுவிறுப்புடன் செய்யும் வேலையைக் கொடு!
உலகத்து நூல்களை எல்லாம் ஒரே இரவில் கற்றுக் கொடு!
எனக்கு மட்டும்,
கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு என சொல்லிக் கொடு!
மகிழ்வாய் வாழும் மக்களைக் கொடு!
சச்சரவே இல்லாத சாலைகளைக் கொடு!
பாலைகளில் எல்லாம் சோலைகளைக் கொடு!
மேற்சொன்ன வேண்டுதல்களை நிறைவேற்று முதலில்!
பிறகு நீ கேட்ட மாதிரியே
2008 என்ற புதுக் குழந்தையை
டிசம்பர் 31-ல் திருடித் தருகிறேன்!
நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கிறோம்
மகிழ்வூருக்கு அழைத்துச் செல்வாய் என்று!
உன்னிடம் கேட்டால் இல்லை என்று சொல்லமாட்டியாமே!
நிறைய கேட்க வேண்டும் என்று தான் ஆசை!
ஏதோ, இப்போதைக்கு இவ்வளவு தான்!
உலகம் அழியும் வரை உயிரைக் கொடு!
உயிருள்ளவரை ஒழுக்கத்தைக் கொடு!
கடைசி வரை பார்க்கின்ற கண்ணைக் கொடு!
சிரிப்பையே கேட்கின்ற செவியைக் கொடு!
பிறரைப் புண்படுத்தாத பேச்சைக் கொடு!
பூ இதழைத் திறந்தாலே புன்சிரிப்பைக் கொடு!
பாடையிலே போகும் வரை பணிவைக் கொடு!
எதிர்மறை எண்ணமே என்றும் இல்லாத
இளமையான மனத்தைக் கொடு!
என் கண்ணுக்கு அழகான காதலியைக் கொடு!
அவளை கடைசி வரை காதலிக்கும் கணிவைக் கொடு!
பிறர்மனை நோக்காத பேராண்மை கொடு!
அடுத்த பெண்களைப் பார்ததால் அக்காள் நினைவைக் கொடு!
நன்றியை ரசிக்கும் நயத்தைக் கொடு!
உதவவே பிறந்தேன் என உத்திரவாதம் கொடு!
பிழையைப் பொறுக்கும் பெருந்தன்மை கொடு!
பிறரைப் போற்றுகின்ற பெருமணம் கொடு!
விபத்தே இல்லாத வெளியூர் பயணம் கொடு!
பொறாமைப் படாத புத்தியைக் கொடு!
கம்பீரத்தைக் கொடுக்கும் காலையைக் கொடு!
விறுவிறுப்புடன் செய்யும் வேலையைக் கொடு!
உலகத்து நூல்களை எல்லாம் ஒரே இரவில் கற்றுக் கொடு!
எனக்கு மட்டும்,
கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு என சொல்லிக் கொடு!
மகிழ்வாய் வாழும் மக்களைக் கொடு!
சச்சரவே இல்லாத சாலைகளைக் கொடு!
பாலைகளில் எல்லாம் சோலைகளைக் கொடு!
மேற்சொன்ன வேண்டுதல்களை நிறைவேற்று முதலில்!
பிறகு நீ கேட்ட மாதிரியே
2008 என்ற புதுக் குழந்தையை
டிசம்பர் 31-ல் திருடித் தருகிறேன்!