PDA

View Full Version : ஒரு நகைச்சுவை



gayathri.jagannathan
29-12-2006, 11:02 AM
ஒரு நகைச்சுவை கதை...

ஒரு கல்லூரி மாணவன், அவனது அட்டவனையில் 2 மணி நேரம் எஞ்சி இருப்பதைக் கண்டு மிஞ்சியிருந்த வன விலங்கியல் பாடத்தை தேர்ந்து எடுத்தான்

இரு வாரங்களாக பாடம் நடந்தது நமது மாணவனும் ரொம்ப அக்கறையாக படித்ததான்... கடைசியில் தேர்வு நாளும் வந்தது... ஆசிரியர் வினாத்தாளை விநியோகம் செய்தார்...

அதை வாங்கி பார்த்தான் நம் மாணவன்.... ஒரே அதிர்ச்சி.... வினாத்தாளில் ஒரு கட்டம் இருந்தது அதற்குள் சில பறவைகளின் கால்கள் வரையப்பட்டிருந்தன... அதைக்கொண்டு பறவையை இனம் கண்டுபிடிக்கும்படி கேள்வி இருந்தது

நமது மாணவனுக்கு பதில் தெரியவில்லை..... நிமிடத்துக்கு நிமிடம் ஆத்திரம் தலைக்கேறியது

நேராக ஆசிரியரிடம் சென்று விடைத்தாளை வீசி மேஜையில் எறிந்து விட்டு " இதைப்போல ஒரு மோசமான பரீட்சையை நான் எழுதியதே இல்லை" என்று...

ஆசிரியர் அதை பார்த்து விட்டு நம் மாணவனிடம் சொன்னார் " தம்பி.... நீ ஒரு பதிலுமே எழுதவில்லை... நீ கண்டிப்பாக பெயில் தான்... சரி உனது பெயரை சொல் பார்ப்போம்" என்றார்...

நமது மாணவன் உடனே தான் அணிந்திருந்த பேண்டை முட்டிக்கு மேல் உயர்த்தி விட்டு காலை ஆசிரியரிடம் காட்டி " இப்போது நீங்கள் கண்டுபிடியுங்கள்" என்றான்

ஆதவா
29-12-2006, 12:00 PM
கடை வரிகள் எனக்கு புரியவில்லை தோழி

leomohan
29-12-2006, 12:08 PM
ஹா ஹா. ரசித்தேன்.

ஆதவா, காலை பார்த்து எப்படி பேர் சொல்வது என்பதையே பூடகமாக ஆசிரியருக்கு மாணவன் நக்கலாக பதில் சொல்லியிருக்கிறார்.

ஆதவா
29-12-2006, 12:38 PM
ஹா ஹா. ரசித்தேன்.

ஆதவா, காலை பார்த்து எப்படி பேர் சொல்வது என்பதையே பூடகமாக ஆசிரியருக்கு மாணவன் நக்கலாக பதில் சொல்லியிருக்கிறார்.

இருந்தாலும் எனக்கு ஏதோ உதைப்பதுபோலத் தோணுகிறது...

lenram80
29-12-2006, 12:43 PM
Gayathri,
Haa..Haa...Haa...Good joke..

இளசு
29-12-2006, 09:09 PM
ஹாஹ்ஹ்ஹா

நக்கல்(கால்) மாணவன்.. நல்ல நகைச்சுவை..

நன்றி காயத்ரி..

kavitha
30-12-2006, 06:54 AM
:)) நல்ல நகைச்சுவை!

மன்மதன்
30-12-2006, 09:24 AM
சபாஷ்...சரியான போட்டி..

arun
08-01-2007, 10:09 AM
ஆசிரியருக்கு மண்ட காஞ்சு போய் இருக்குமே? சூப்பரா மடக்கிட்டான் பாருங்க பையன்?

பென்ஸ்
08-01-2007, 04:37 PM
காயத்ரி....
அந்த மாணவன் பெயர் தெரியுமா..????
இதே இதை புதிரோ புதிர் பக்கதில் பத்து இருந்தா மன்மதன், செல்வன்,அறிஞர், ஓவியா என்று ஒரு கூட்டமே போட்டி போட்டு பதில் சொல்லும்....

பரம்ஸ் மற்ரும் சிலர் தன் பெயரை சொல்ல விருப்பபடாமல் அமைதியா இருந்திடுவார்கள்..

franklinraja
09-01-2007, 07:35 AM
படம் பார்த்து கதை சொல்வதைப் பார்த்திருக்கிறொம்...

காலைப் பார்த்து பெயர் கேட்டால்..!

அதான் மாணவன், வாத்தியார் காலையே வாரிட்டான்..!

(சிரிப்புன்னு வந்துட்டா logic-கெல்லாம் பார்க்கப்பிடாது, சரியா..!) :D

Mathu
09-01-2007, 08:25 AM
காயத்ரி....
அந்த மாணவன் பெயர் தெரியுமா..????
இதே இதை புதிரோ புதிர் பக்கதில் பத்து இருந்தா மன்மதன், செல்வன்,அறிஞர், ஓவியா என்று ஒரு கூட்டமே போட்டி போட்டு பதில் சொல்லும்....

பரம்ஸ் மற்ரும் சிலர் தன் பெயரை சொல்ல விருப்பபடாமல் அமைதியா இருந்திடுவார்கள்..

;) ;) :) :D மம்முதா... இங்க கொஞ்சம் பாரு....!

மன்மதன்
10-01-2007, 04:49 AM
;) ;) :) :D மம்முதா... இங்க கொஞ்சம் பாரு....!

ஆகா என்ன என்னை மட்டும் கூப்பிடுறீங்க. அறிஞர் , செல்வன் , ஓவியா, பரம்ஸ் எல்லாத்தையும் கூப்பிடுங்க... :rolleyes::rolleyes:

பென்ஸ்
10-01-2007, 03:14 PM
ஆகா என்ன என்னை மட்டும் கூப்பிடுறீங்க. அறிஞர் , செல்வன் , ஓவியா, பரம்ஸ் எல்லாத்தையும் கூப்பிடுங்க... :rolleyes::rolleyes:

குதிருக்குள்ள யாருமில்லையா மன்மதா??? :D :D :D :D

அறிஞர்
10-01-2007, 04:10 PM
நல்ல சிரிப்பு.. கால் பார்த்து ஆள் கண்டுபிடி..... விளையாட்டு...
-----