lenram80
25-12-2006, 08:56 PM
அட, இங்கே பாருங்கள்!
சத்தமே இல்லாமல் தீபாவளி
ஒவ்வொரு நாளும் கொண்டாடப்படுகிறது!
பொதுவாக கோயில்களில் தான் திருவிழா நடக்கும்!
இங்கே பாருங்கள்! கணிப்பொறிக்குள் தமிழுக்காகத் திருவிழா!
முல்லை, மல்லி,ரோஜா, கதம்பம், தாமரை, குறிஞ்சி
என அத்தனை பூக்களும் ஒன்றாக பூக்கின்றன!
இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்கிறீர்களா?
பூப்பது நிலத்திலோ, குளத்திலோ அல்ல! தமிழ் கடலில்!
வருடத்தில் ஓரேஒரு நாள் பிறந்தநாள் கொண்டாடுவதற்கே
மகிழ்கிறோமே நாம்!
இங்கே ஒவ்வொரு பதிவின் போதும்
தமிழ் அதன் பிறந்த நாளை கொண்டாடுகிறதே!
அது எவ்வளவு சந்தோஷம் கொள்கிறதோ? யார் கண்டார்?
ஏ ஐசக் நியூட்டனே!
கல்லரையில் காலம் கடத்தியது போதும்!
எழுந்து வா! விளக்கம் கொடு!
கீழ் நோக்கி இழுத்தால், அது புவியீர்ப்பு விசை!
இது என்ன விசை? இப்படி எங்களை இழுக்கிறதே?
'தயவுசெய்து இங்கு பூக்களைப் பறியுங்கள்!
இதன் கனிகளை ருசியுங்கள்!'
இப்படி ஒரு அறிவிப்பு இந்த பூங்காவில் மட்டுமே!
இந்தியாவில் இருப்பதனால் இப்படியா?
தினமும் பதிவுக் குழந்தைகளை
மளமளவென பெற்றுக் கொண்டேயிருக்கிறதே!
மற்ற வலைகளில் தமிழ் தந்திரத்தால் மாட்டுகிறது!
இந்த வலையில் மட்டும் தான், தமிழ் தானே வந்து மாட்டுகிறது!
ஒரே கல்லில் இரு மாங்காய்!
அதுவும் சில சமயங்களில்! - இது மற்ற வலை மரங்களில் பதிவுகளாய்!
ஒரு கல்லுக்கே
கொட்டோவென கொட்டுவது இந்த வலை மரத்தில் தான், பதில் பதிவுகளாய்!
மற்றவைகள், உதிரி வெடி! திரியை பற்ற வைத்தால், ஒரே ஒரு சத்தம் தான்!
இது சரவெடி! திரியை பற்ற வைத்தால், சத்தம் பல சந்ததிக்குக் கேட்கின்றது!
இந்த தமிழ் மன்றம்,
உலகத் தமிழர்களை இணைக்கும் ஒரு அர்த்தமுள்ள தொப்புள் கொடி!
தமிழன் கவலை கலைந்து ஆனந்த உறக்கம் கொள்ள அருமையான தொட்டில் மடி!
இதனால் பரவட்டும் இனி தமிழ் ஒளி!
ஆனந்தத்தில் இனி துள்ளிக் களி!
நமக்கு இல்லாத உரிமையா?
பாராட்ட நினைத்தால், இதன் தோளில் தட்டுவோம்!
தவறெனப் பட்டால், இதன் தலையில் குட்டுவோம்!
தமிழின் மணம் பரப்ப, புறப்பட்ட கணிப்பொறித் தோழி!
பயணம் நல்லபடி தொடர்ந்து, பல்லாண்டு வாழி!
வாழ்த்துக்களுடன் - லெனின் -
சத்தமே இல்லாமல் தீபாவளி
ஒவ்வொரு நாளும் கொண்டாடப்படுகிறது!
பொதுவாக கோயில்களில் தான் திருவிழா நடக்கும்!
இங்கே பாருங்கள்! கணிப்பொறிக்குள் தமிழுக்காகத் திருவிழா!
முல்லை, மல்லி,ரோஜா, கதம்பம், தாமரை, குறிஞ்சி
என அத்தனை பூக்களும் ஒன்றாக பூக்கின்றன!
இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்கிறீர்களா?
பூப்பது நிலத்திலோ, குளத்திலோ அல்ல! தமிழ் கடலில்!
வருடத்தில் ஓரேஒரு நாள் பிறந்தநாள் கொண்டாடுவதற்கே
மகிழ்கிறோமே நாம்!
இங்கே ஒவ்வொரு பதிவின் போதும்
தமிழ் அதன் பிறந்த நாளை கொண்டாடுகிறதே!
அது எவ்வளவு சந்தோஷம் கொள்கிறதோ? யார் கண்டார்?
ஏ ஐசக் நியூட்டனே!
கல்லரையில் காலம் கடத்தியது போதும்!
எழுந்து வா! விளக்கம் கொடு!
கீழ் நோக்கி இழுத்தால், அது புவியீர்ப்பு விசை!
இது என்ன விசை? இப்படி எங்களை இழுக்கிறதே?
'தயவுசெய்து இங்கு பூக்களைப் பறியுங்கள்!
இதன் கனிகளை ருசியுங்கள்!'
இப்படி ஒரு அறிவிப்பு இந்த பூங்காவில் மட்டுமே!
இந்தியாவில் இருப்பதனால் இப்படியா?
தினமும் பதிவுக் குழந்தைகளை
மளமளவென பெற்றுக் கொண்டேயிருக்கிறதே!
மற்ற வலைகளில் தமிழ் தந்திரத்தால் மாட்டுகிறது!
இந்த வலையில் மட்டும் தான், தமிழ் தானே வந்து மாட்டுகிறது!
ஒரே கல்லில் இரு மாங்காய்!
அதுவும் சில சமயங்களில்! - இது மற்ற வலை மரங்களில் பதிவுகளாய்!
ஒரு கல்லுக்கே
கொட்டோவென கொட்டுவது இந்த வலை மரத்தில் தான், பதில் பதிவுகளாய்!
மற்றவைகள், உதிரி வெடி! திரியை பற்ற வைத்தால், ஒரே ஒரு சத்தம் தான்!
இது சரவெடி! திரியை பற்ற வைத்தால், சத்தம் பல சந்ததிக்குக் கேட்கின்றது!
இந்த தமிழ் மன்றம்,
உலகத் தமிழர்களை இணைக்கும் ஒரு அர்த்தமுள்ள தொப்புள் கொடி!
தமிழன் கவலை கலைந்து ஆனந்த உறக்கம் கொள்ள அருமையான தொட்டில் மடி!
இதனால் பரவட்டும் இனி தமிழ் ஒளி!
ஆனந்தத்தில் இனி துள்ளிக் களி!
நமக்கு இல்லாத உரிமையா?
பாராட்ட நினைத்தால், இதன் தோளில் தட்டுவோம்!
தவறெனப் பட்டால், இதன் தலையில் குட்டுவோம்!
தமிழின் மணம் பரப்ப, புறப்பட்ட கணிப்பொறித் தோழி!
பயணம் நல்லபடி தொடர்ந்து, பல்லாண்டு வாழி!
வாழ்த்துக்களுடன் - லெனின் -