lenram80
25-12-2006, 01:18 PM
முத்தங்களே! அன்பின் உச்சங்களே!
உதடுகள் கொண்டாடும் தீபாவளிகளே!
இதழ்கள் பரிமாறும் இன்சுவை விருந்துகளே!
பூ இதழ்கள் கொளுத்திப் போடும் மத்தாப்புக்களே!
உதடுகள் செதுக்கும் உருவமில்லா சிற்பங்களே!
இதழ்கள் எழுதும் எழுத்தில்லா இதிகாசங்களே!
ஆசை மனிதனின் அன்பு பாஷைகளே!
அடி மன அன்பின் அளவுகோல்களே!
ஒவ்வொரு முறை முத்தமிடும் போதும்
உதடுகள் ஒட்டடை அடிக்கப்படுகின்றன!
கோபுர உதடுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகின்றன!
அலை, அணு, அனல் இல்லாமல் - மின்சார உற்பத்தி வேண்டுமா?
செலவே இல்லாமல் சின்ன அணுகுண்டின் அதிர்வு வேண்டுமா?
சத்தமே இல்லாமல் யுத்தம் - எப்படி நடக்கும் என்கிறாயா?
வா! வந்து முத்தமிடு!
இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கரிப்பு, காரிப்பு, கசப்பு
ஆறிலும் அடங்காத அதிசய சுவை வேண்டுமா?
வா! வந்து முத்தமிடு!
உன்னைச் சுற்றி பூமி சுற்ற வேண்டுமா?
நின்ற பொருள் அசையவும்,
அசையும் பொருள் நிற்கவும் - செய்த
சிவ பெருமான் நீயாக வேண்டுமா?
வா! வந்து முத்தமிடு!
முகத்தில் மட்டும் மழை பொழிய வேண்டுமா?
உணவே இல்லாமல் உயிர் வாழ வேண்டுமா?
உயிர் என்ற மலையின் உச்சி தொட வேண்டுமா?
வா! வந்து முத்தமிடு!
இறுதியாய்,
மரமாய், மலையாய், மலராய் பிறக்காமல்
மனிதனாய் பிறந்ததற்கேனும்
வா! வந்து முத்தமிடு!
கொஞ்சம் பொறு!
நீங்கள் இருவரும் முத்தத்தை ஆரம்பிப்பதற்கு முன்,
ஒரு முன்னறிவிப்பு!
உதடுகள் உராய்ந்து தீப்பொறி பறந்தால்,
கவலையை விடு!
இருக்கவே இருக்கிறது தீயணைப்புத்துறை!
இதுவரை இந்த அனுபவம் இல்லாத நானே
இப்படி எழுதுகிறேன் என்றால்,
அனுபவித்த அதிஷ்டசாலிகளே!
கன்னித் தமிழில் காவியம் படைக்க
தலைப்பு இதோ தந்துவிட்டேன்!!!
-லெனின்-
உதடுகள் கொண்டாடும் தீபாவளிகளே!
இதழ்கள் பரிமாறும் இன்சுவை விருந்துகளே!
பூ இதழ்கள் கொளுத்திப் போடும் மத்தாப்புக்களே!
உதடுகள் செதுக்கும் உருவமில்லா சிற்பங்களே!
இதழ்கள் எழுதும் எழுத்தில்லா இதிகாசங்களே!
ஆசை மனிதனின் அன்பு பாஷைகளே!
அடி மன அன்பின் அளவுகோல்களே!
ஒவ்வொரு முறை முத்தமிடும் போதும்
உதடுகள் ஒட்டடை அடிக்கப்படுகின்றன!
கோபுர உதடுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகின்றன!
அலை, அணு, அனல் இல்லாமல் - மின்சார உற்பத்தி வேண்டுமா?
செலவே இல்லாமல் சின்ன அணுகுண்டின் அதிர்வு வேண்டுமா?
சத்தமே இல்லாமல் யுத்தம் - எப்படி நடக்கும் என்கிறாயா?
வா! வந்து முத்தமிடு!
இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கரிப்பு, காரிப்பு, கசப்பு
ஆறிலும் அடங்காத அதிசய சுவை வேண்டுமா?
வா! வந்து முத்தமிடு!
உன்னைச் சுற்றி பூமி சுற்ற வேண்டுமா?
நின்ற பொருள் அசையவும்,
அசையும் பொருள் நிற்கவும் - செய்த
சிவ பெருமான் நீயாக வேண்டுமா?
வா! வந்து முத்தமிடு!
முகத்தில் மட்டும் மழை பொழிய வேண்டுமா?
உணவே இல்லாமல் உயிர் வாழ வேண்டுமா?
உயிர் என்ற மலையின் உச்சி தொட வேண்டுமா?
வா! வந்து முத்தமிடு!
இறுதியாய்,
மரமாய், மலையாய், மலராய் பிறக்காமல்
மனிதனாய் பிறந்ததற்கேனும்
வா! வந்து முத்தமிடு!
கொஞ்சம் பொறு!
நீங்கள் இருவரும் முத்தத்தை ஆரம்பிப்பதற்கு முன்,
ஒரு முன்னறிவிப்பு!
உதடுகள் உராய்ந்து தீப்பொறி பறந்தால்,
கவலையை விடு!
இருக்கவே இருக்கிறது தீயணைப்புத்துறை!
இதுவரை இந்த அனுபவம் இல்லாத நானே
இப்படி எழுதுகிறேன் என்றால்,
அனுபவித்த அதிஷ்டசாலிகளே!
கன்னித் தமிழில் காவியம் படைக்க
தலைப்பு இதோ தந்துவிட்டேன்!!!
-லெனின்-