தமிழ் தொண்டன்
23-12-2006, 12:43 PM
ஆந்திரம் என்றால்
காரம் என்பார்கள்
இந்த ஆந்திர
குயிலிசை மட்டும்
அட எப்போது கேட்டாலும்
இனிக்கிறது
உன் குரலுக்கு
வயது நாற்பதாமே
கணக்கில் ஏன் பிழை
நீ என்றும்
எனக்கு 16 தானே.
உன் குரல் கேட்ட பின்பு
நானும் காற்றினை
காதல் கொண்டேன்
குழலை போல
உன் உருவததை பார்த்து
இகழ்பவர்கள் அய்யோ பாவம்
அவர்களுக்கு எப்படி தெரியும்
நீ குரலுடன் நடிப்புத் தொழிலையும்
சேர்த்தே சுமப்பதால் தான்
இந்த கனம் என்று
நீ என்னை தூங்க வைத்த இரவுகள்
எத்தனை என்று கணக்கிட சொன்னால்
கட்ட பொம்மன் வசனம் தான்
பதிலாய் நான் உரைப்பேன்
எத்தனை நட்சத்திரங்கள் வந்தாலும்
போனாலும் நீ மட்டும் தானே
பாடும் நிலா
நீ இல்லா அமாவாசை
இசை வானத்தை
படைக்கும் சக்தியை மட்டும்
அந்த பிரம்மன் இழந்து போகட்டும்..!
காரம் என்பார்கள்
இந்த ஆந்திர
குயிலிசை மட்டும்
அட எப்போது கேட்டாலும்
இனிக்கிறது
உன் குரலுக்கு
வயது நாற்பதாமே
கணக்கில் ஏன் பிழை
நீ என்றும்
எனக்கு 16 தானே.
உன் குரல் கேட்ட பின்பு
நானும் காற்றினை
காதல் கொண்டேன்
குழலை போல
உன் உருவததை பார்த்து
இகழ்பவர்கள் அய்யோ பாவம்
அவர்களுக்கு எப்படி தெரியும்
நீ குரலுடன் நடிப்புத் தொழிலையும்
சேர்த்தே சுமப்பதால் தான்
இந்த கனம் என்று
நீ என்னை தூங்க வைத்த இரவுகள்
எத்தனை என்று கணக்கிட சொன்னால்
கட்ட பொம்மன் வசனம் தான்
பதிலாய் நான் உரைப்பேன்
எத்தனை நட்சத்திரங்கள் வந்தாலும்
போனாலும் நீ மட்டும் தானே
பாடும் நிலா
நீ இல்லா அமாவாசை
இசை வானத்தை
படைக்கும் சக்தியை மட்டும்
அந்த பிரம்மன் இழந்து போகட்டும்..!