mukilan
21-12-2006, 05:59 AM
நிஜமாதான் சொல்றீங்களாப்பா!..... சந்தேகத்துடனே அவன் கண்களை உற்று நோக்கினாள் திவ்யா.
ஆமா! திவ்யா! என்னை மன்னிச்சுடு! நான் செஞ்சது எல்லாம் தப்பு அப்படின்னு உன்கிட்ட மன்னிப்பு கேட்கறதுக்காக சொல்லலை. நீ இப்படி ஒன்னைப் பண்ணிட்டு வந்து என் கிட்ட சொல்லி இருந்தா அதை நான் எப்படி எடுத்துப்பேன்னும் எனக்குத் தெரியாது. ஆனா உன்னளவுக்கு அமைதியா கேட்டுக் கிட்டு உட்கார்ந்து கிட்டு இருக்க மாட்டேன். இதுக்குக் காரணம் நான் ஆம்பளைன்னு திமிர் இல்லை. உன்னளவுக்கு என் மனசு பக்குவப் படலை திவ்யா. என்னைப் புரிஞ்சுக்கோ! அரவிந்த் அடுக்கிக் கொண்டே போக திவ்யாவின் முகம் கலவரப் பட்டுக் கொண்டே போனது!
அமைதியாக கடலில் எழும் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா! அவன் நினைவலைகளும் கடலலைகள் போல எழுந்து அடங்கின.
ரொம்பப் பிடிக்குமா? திவ்யா மெளனம் கலைத்தாள்.
ஹ்ம்ம்
அவங்களுக்குமா?
ஆமா
அப்புறம் ஏம்பா! என்னாச்சு?
வீட்ல ஒத்துக்கலை திவ்யா! வேற இனம்! பொருளாதார நெருக்கடி! வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடாம காலேஜ்ல அப்பா காசில படிச்சப்போ இதெல்லாம் தெரியலை. வெளியே வந்து ஒரு வருசமா வேலை கிடைக்கலை. ஏறு வெயில் எப்படி நேரம் ஆக ஆகச் சுடும், அப்படிச் சுரீர்னு நிதர்சனம் சுட ஆரம்பிச்சிருச்சு திவ்யா! பொண்ணுக்கு வயசாகிட்டே போறதுன்னு அவங்க வீட்ல சொந்தத்ல மாப்பிள்ளையைப் பார்த்து கட்டி வச்சிட்டாங்க.
அவங்க ஒண்ணுமே சொல்லலையா?
போராடினோம் திவ்யா! முடியலை. ப்ச்ச்ச்! வாழ்க்கையோட சவால்கட்கு முன்னால் காதல் ஜஸ்ட் இல்யூஷன் தானே!
அதுக்கப் புறம் பார்த்தீங்களா?
இல்லை! கல்யாணம் முடிஞ்ச கையோட யு.எஸ். போயிட்டதா கேள்விப்பட்டேன். அவளுக்கு கல்யாணம் முடிஞ்சதுக்கப் புறம் நான் படிச்ச காலேஜ் பக்கமே போகலை! அவமானம். காதல் தோல்வி, வேலை கிடைக்கலை! டிபெண்டண்ட் சன் வேற! கண்கள் அவனையறியாமலே கலங்கின!
சாரிப்பா! மனசுக்கு கஸ்டமாயிருக்கு!
பரவாயில்லை! திவ்யா. காலம் தான் எல்லாக் காயத்துக்கும் நல்ல மருந்தாச்சே!
அப்போ அவங்க நினைப்பே இப்ப உங்களுக்கு வராதா??
எப்போவாவது வர்றது உண்டு அதோ அந்த அலைகள் போல! எழும்! விழும்!. முதல் தடவை கடலைப் பார்த்தால் இருக்கிற எக்சைட்மெண்ட் கொஞ்ச நாள்ல போயிறதில்லையா? அது போலத்தான் எல்லாம் அடங்கிப் போயாச்சு! இப்போவும் நல்லா யோசிச்சுக்கோ திவ்யா! நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க முழு மனசோட சம்மதிக்கறியா?
எஸ்! அரவிந்த். ஜஸ்ட் பீ பிராக்டிகல். யார் லவ் பண்ணலை சொல்லுங்க! எனக்கு உங்க மேல காதல் வந்திச்சு. உங்ககிட்ட காதலை சொல்லாம இப்போ உங்களைக் கல்யாணம் பண்ணிக்காம நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணினா அது தப்பா?
அது வேற இது வேற திவ்யா!
சரி விடுங்கப்பா! முடிஞ்சு போனதைப் பத்தி பேசி என்ன ஆகப் போறது. கிளம்புங்க அரவிந்த் போகலாம்.
ஆடைகளில் ஒட்டிக் கொண்டிருந்த மணல் துகள்களை தட்டி விட்டுக் கொண்டே எழுந்தான் அரவிந்த்.
ச்சே! பழைய நினைவுகளும் இது போல ஈசியா விழுந்திட்டா எவ்ளோ நல்லா இருக்கும்.
ரம்யாவுடனான காதல் நினைவுகள் வந்து வதைத்தன!
அவனுக்குப் பிடித்த கவிதைகளும், அவளுக்குப் பிடித்த பாலகுமாரனும் இருவருக்கும் பிடித்த பாரதியும் அவர்கட்குப் பிடித்துப் போயினர்.
ஹே! உனக்கு மகிழம் பூ வாசனை பிடிக்குமா?
ஹ்ம்ம்ம்! உனக்குப் பிடிச்சிருக்கா?
அதனால தான் கேட்கறேன்!
(எண்ணக் குதிரைகளின் ஓட்டம் அதி வேகமாய்!)
ஹே! அரவிந்த் என்னாச்சுப்பா! என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க! காரில் ஏறி இன்னமும் ஸ்டார்ட் செய்யாமல் அமர்ந்திருந்த
தன்னை திவ்யா உலுக்கிய பின் தான் நிஜவுலகிற்கு வந்தான் அரவிந்த்.
ஒண்ணுமில்லை திவ்யா!
ஹே! பீலிங்ஸா
ச்சே! ச்சே! நான் அதெல்லாம் மறந்தாச்சு திவ்யா!
ஒரு சுபயோக சுபதினத்தில் திவ்யா, மிஸஸ். அரவிந்தும் ஆகிப் போனாள்.காதல் தோல்விக்குப் பின் அவர்கள் இருவருக்கும் பிடித்தவை அரவிந்த் ஒதுக்கியே வைத்திருந்தான். ரம்யாவை மறந்து நாட்களாகி விட்டிருந்தன. ரம்யாவின் நினைவுகளே இப்பொழுது வருவதில்லை. அவர்களின் வாழ்க்கை வசந்தமாகத்தான் போனது!
மழைக்காலம் வரும் வரை. சில்லென்ற அடித்த காற்று எங்கோ பூத்திருந்த மகிழம் பூ வாசனையை கொண்டு வந்து சேர்த்தது. ரம்யாவையும் சேர்த்துத்தான்.
சில வாசனைகள் மனதோடு ஒட்டியே இருக்கும். நுகராமலே உணரும்படி!
ஆமா! திவ்யா! என்னை மன்னிச்சுடு! நான் செஞ்சது எல்லாம் தப்பு அப்படின்னு உன்கிட்ட மன்னிப்பு கேட்கறதுக்காக சொல்லலை. நீ இப்படி ஒன்னைப் பண்ணிட்டு வந்து என் கிட்ட சொல்லி இருந்தா அதை நான் எப்படி எடுத்துப்பேன்னும் எனக்குத் தெரியாது. ஆனா உன்னளவுக்கு அமைதியா கேட்டுக் கிட்டு உட்கார்ந்து கிட்டு இருக்க மாட்டேன். இதுக்குக் காரணம் நான் ஆம்பளைன்னு திமிர் இல்லை. உன்னளவுக்கு என் மனசு பக்குவப் படலை திவ்யா. என்னைப் புரிஞ்சுக்கோ! அரவிந்த் அடுக்கிக் கொண்டே போக திவ்யாவின் முகம் கலவரப் பட்டுக் கொண்டே போனது!
அமைதியாக கடலில் எழும் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா! அவன் நினைவலைகளும் கடலலைகள் போல எழுந்து அடங்கின.
ரொம்பப் பிடிக்குமா? திவ்யா மெளனம் கலைத்தாள்.
ஹ்ம்ம்
அவங்களுக்குமா?
ஆமா
அப்புறம் ஏம்பா! என்னாச்சு?
வீட்ல ஒத்துக்கலை திவ்யா! வேற இனம்! பொருளாதார நெருக்கடி! வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடாம காலேஜ்ல அப்பா காசில படிச்சப்போ இதெல்லாம் தெரியலை. வெளியே வந்து ஒரு வருசமா வேலை கிடைக்கலை. ஏறு வெயில் எப்படி நேரம் ஆக ஆகச் சுடும், அப்படிச் சுரீர்னு நிதர்சனம் சுட ஆரம்பிச்சிருச்சு திவ்யா! பொண்ணுக்கு வயசாகிட்டே போறதுன்னு அவங்க வீட்ல சொந்தத்ல மாப்பிள்ளையைப் பார்த்து கட்டி வச்சிட்டாங்க.
அவங்க ஒண்ணுமே சொல்லலையா?
போராடினோம் திவ்யா! முடியலை. ப்ச்ச்ச்! வாழ்க்கையோட சவால்கட்கு முன்னால் காதல் ஜஸ்ட் இல்யூஷன் தானே!
அதுக்கப் புறம் பார்த்தீங்களா?
இல்லை! கல்யாணம் முடிஞ்ச கையோட யு.எஸ். போயிட்டதா கேள்விப்பட்டேன். அவளுக்கு கல்யாணம் முடிஞ்சதுக்கப் புறம் நான் படிச்ச காலேஜ் பக்கமே போகலை! அவமானம். காதல் தோல்வி, வேலை கிடைக்கலை! டிபெண்டண்ட் சன் வேற! கண்கள் அவனையறியாமலே கலங்கின!
சாரிப்பா! மனசுக்கு கஸ்டமாயிருக்கு!
பரவாயில்லை! திவ்யா. காலம் தான் எல்லாக் காயத்துக்கும் நல்ல மருந்தாச்சே!
அப்போ அவங்க நினைப்பே இப்ப உங்களுக்கு வராதா??
எப்போவாவது வர்றது உண்டு அதோ அந்த அலைகள் போல! எழும்! விழும்!. முதல் தடவை கடலைப் பார்த்தால் இருக்கிற எக்சைட்மெண்ட் கொஞ்ச நாள்ல போயிறதில்லையா? அது போலத்தான் எல்லாம் அடங்கிப் போயாச்சு! இப்போவும் நல்லா யோசிச்சுக்கோ திவ்யா! நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க முழு மனசோட சம்மதிக்கறியா?
எஸ்! அரவிந்த். ஜஸ்ட் பீ பிராக்டிகல். யார் லவ் பண்ணலை சொல்லுங்க! எனக்கு உங்க மேல காதல் வந்திச்சு. உங்ககிட்ட காதலை சொல்லாம இப்போ உங்களைக் கல்யாணம் பண்ணிக்காம நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணினா அது தப்பா?
அது வேற இது வேற திவ்யா!
சரி விடுங்கப்பா! முடிஞ்சு போனதைப் பத்தி பேசி என்ன ஆகப் போறது. கிளம்புங்க அரவிந்த் போகலாம்.
ஆடைகளில் ஒட்டிக் கொண்டிருந்த மணல் துகள்களை தட்டி விட்டுக் கொண்டே எழுந்தான் அரவிந்த்.
ச்சே! பழைய நினைவுகளும் இது போல ஈசியா விழுந்திட்டா எவ்ளோ நல்லா இருக்கும்.
ரம்யாவுடனான காதல் நினைவுகள் வந்து வதைத்தன!
அவனுக்குப் பிடித்த கவிதைகளும், அவளுக்குப் பிடித்த பாலகுமாரனும் இருவருக்கும் பிடித்த பாரதியும் அவர்கட்குப் பிடித்துப் போயினர்.
ஹே! உனக்கு மகிழம் பூ வாசனை பிடிக்குமா?
ஹ்ம்ம்ம்! உனக்குப் பிடிச்சிருக்கா?
அதனால தான் கேட்கறேன்!
(எண்ணக் குதிரைகளின் ஓட்டம் அதி வேகமாய்!)
ஹே! அரவிந்த் என்னாச்சுப்பா! என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க! காரில் ஏறி இன்னமும் ஸ்டார்ட் செய்யாமல் அமர்ந்திருந்த
தன்னை திவ்யா உலுக்கிய பின் தான் நிஜவுலகிற்கு வந்தான் அரவிந்த்.
ஒண்ணுமில்லை திவ்யா!
ஹே! பீலிங்ஸா
ச்சே! ச்சே! நான் அதெல்லாம் மறந்தாச்சு திவ்யா!
ஒரு சுபயோக சுபதினத்தில் திவ்யா, மிஸஸ். அரவிந்தும் ஆகிப் போனாள்.காதல் தோல்விக்குப் பின் அவர்கள் இருவருக்கும் பிடித்தவை அரவிந்த் ஒதுக்கியே வைத்திருந்தான். ரம்யாவை மறந்து நாட்களாகி விட்டிருந்தன. ரம்யாவின் நினைவுகளே இப்பொழுது வருவதில்லை. அவர்களின் வாழ்க்கை வசந்தமாகத்தான் போனது!
மழைக்காலம் வரும் வரை. சில்லென்ற அடித்த காற்று எங்கோ பூத்திருந்த மகிழம் பூ வாசனையை கொண்டு வந்து சேர்த்தது. ரம்யாவையும் சேர்த்துத்தான்.
சில வாசனைகள் மனதோடு ஒட்டியே இருக்கும். நுகராமலே உணரும்படி!