View Full Version : எங்கே என்னைக் காணவில்லை.....
நம்பிகோபாலன்
19-12-2006, 07:53 PM
எங்கே என்னைக் காணவில்லை?
என்னைத் தொலைத்து
காதலை வாங்கினேன்
விற்றுச் சென்றவள் அவள்
எங்கே என்னைக் காணவில்லை.....?
தொடரும்......
தொடருங்கள்..
உங்களை நீங்களே (மீண்டும் கண்டுபிடித்து)
காணும் வரை..
-----------------------
நம்பி அவர்களே:
ke - கெ
kee - கே
தொடர்ந்து எழுதுங்கள்..
தட்டச்சு தவறின்றி வந்துவிடும்...
உங்களை தொலைத்து..
பண்டமாற்றம் முறையில் காதலை வாங்கியாச்சு..
இப்போ விற்றவளை தேடர்து..
காதலையும் காதலியையும் மீட்கவா?
உங்களை மீட்கவா?
இல்லை தேடி பிடிச்சு மீண்டும் தொலையவா?
எது எப்படியோ நம்பி , அழகான உங்கள் கவிதைகள் தொடர வாழ்த்துக்கள்...
குணா
meera
20-12-2006, 05:53 AM
நம்பி,
அழகான கவிதை. தொடருங்கள்.
ஆமா,அவள் காதலை விட்டு சென்றாளா?விற்று சென்றாளா?
(செல்வா அண்ணா,ஓடிவாங்க ஓடிவாங்க உங்க பயிற்சி தங்கைக்கு வேலை செய்யுது:D :D :D )
ஷீ-நிசி
20-12-2006, 06:00 AM
நம்பி விற்றாளா தன் காதலை....
நம்பியையே விற்றுவிட்டாளா?!
எங்கே என்னைக் காணவில்லை?
என்னைத் தொலைத்து
காதலை வாங்கினேன்
விற்றுச் சென்றவள் அவள்
எங்கே என்னைக் காணவில்லை.....?
தொடரும்......
நண்பரே கவிதை இடிக்குதே,,, எனக்கு புரியல.
அல்லிராணி
20-12-2006, 03:38 PM
எங்கே என்னைக் காணவில்லை?
என்னைத் தொலைத்து
காதலை வாங்கினேன்
விற்றுச் சென்றவள் அவள்
எங்கே என்னைக் காணவில்லை.....?
தொடரும்......
எங்க ஊர்ல காசைத் தொலைச்சுட்டா ஒண்ணே ஒண்ணு வாங்கலாம்
கடன்..
அதான் சொன்னீங்களே தொலைச்சுட்டீங்கன்னு.. அப்புறம் தேடித்தானே ஆகணும்..
தொடரும் தேடல்களில் தொடக்கம் தொலைத்தல்..
நம்பிகோபாலன்
20-12-2006, 03:45 PM
காதலி காதலை விற்று சென்றாலும் விட்டு சென்றாலும் வலியை அனுபவிக்கறது மட்டும் காதலனே
அல்லிராணி
20-12-2006, 03:56 PM
காதலி காதலை விற்று சென்றாலும் விட்டு சென்றாலும் வலியை அனுபவிக்கறது மட்டும் காதலனே
காதலை விட்டு
காதலை விற்று
காதலியை விற்று
வலிய (வலியை அல்ல)
அனுபவிப்பவன்
காதலனே
கண்மையால் கரை கட்டி
கண்ணீரைத் தேக்குமவள்
கண்களை உற்றுப்பார் புரியும்
நம்பிகோபாலன்
20-12-2006, 04:12 PM
கண்ணேருடன் கேட்டதால்தான் காதலியிடம் தந்தேன் என் காதலை
அல்லிராணி
20-12-2006, 04:15 PM
கண்ணேருடன் கேட்டதால்தான் காதலியிடம் தந்தேன் என் காதலை
கண்ணீருக்கு விற்கப்பட்ட காதல்!!
யோசித்துதான் இருப்பாள்
உலகில் நிறையப் பெண்கள்
அழுதுகொண்டுதானே இருக்கிறார்கள் என்று
பென்ஸ்
20-12-2006, 05:36 PM
அட யாராவது இந்த கவிதையை விளக்குங்கள்....