gandhi
15-12-2006, 09:21 AM
அன்பின் ஆதியில் அன்னையின் உறவு,
பசியறியும் முன்பே பாலூட்டினாள்..
தூங்கத்துவங்கும் முன்பே தாலாட்டினாள்..
துயருறு முன்பே தலையணையாய்
தன் மடி தந்தாள்..
கண்கலங்கும் முன்பே
தன் கண்ணீரையும் தந்தாள்..
இத்தனையும் அறிந்தல்லோ...
அன்னை எனும் உறவை
உயர்வாய் சொல்கிறோம்..........
உணரும்போது ஒரு உறுத்தல் உள்ளே;
இருந்தும்
காரணம் அறியா உறவொன்று உண்டோ?
ஆம்..
அவள் என்மேல் காட்டும் அன்பிற்கு காரணம் இல்லையே!
பசியறியும் முன்பே பாலூட்டினாள்..
தூங்கத்துவங்கும் முன்பே தாலாட்டினாள்..
துயருறு முன்பே தலையணையாய்
தன் மடி தந்தாள்..
கண்கலங்கும் முன்பே
தன் கண்ணீரையும் தந்தாள்..
இத்தனையும் அறிந்தல்லோ...
அன்னை எனும் உறவை
உயர்வாய் சொல்கிறோம்..........
உணரும்போது ஒரு உறுத்தல் உள்ளே;
இருந்தும்
காரணம் அறியா உறவொன்று உண்டோ?
ஆம்..
அவள் என்மேல் காட்டும் அன்பிற்கு காரணம் இல்லையே!