PDA

View Full Version : இன்று பாரதியாரின் பிறந்தநாள் !



franklinraja
11-12-2006, 02:47 PM
இன்று பாரதியாரின் பிறந்தநாள் என்பது ஏன் யாருடய நினைவிற்கும் வரவில்லை..? :confused:

அதுவும் நான் இன்று கிளம்பும் நேரத்தில்தான் எனக்கே நினைவுக்கு வந்ததது..! :D

பாரதியின் சுவையான தகவல்களை இங்கே பதியுங்களேன்..! :rolleyes:

ஓவியா
11-12-2006, 03:39 PM
அன்மைய காலமாக மன்றத்தில் உலவும் ஒரு முக்கிய தலைபினை தொட்டு மகாகவின் ஒரு சில பாடல்கல் இங்கு பதிக்கபட்டுல்லன...காதல் புனிதமானது, தெய்வீகமானது அதனால் .காதல்...காதலி....காதலன்....


தங்களுக்கு பிடித்த வரியை தெர்வு செய்து.....பின்னூட்டத்தை போட்டு அதில் இவ்வரிகலை வர்ணிக்கவும்........
அனைவரும் கலந்து சிறப்பிக்கவும்


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம்

சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் சில..........

கண்ணம்மா - என் காதலி - 1
(காட்சி வியப்பு)
செஞ்சுருட்டி - ஏகதாளம்
ரசங்கள் : சிருங்காரம், அற்புதம்

சுட்டும் விழிச்சுடர் தான், - கண்ணம்மா!

சுட்டும் விழிச்சுடர் தான், - கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்க ளடீ! ...

சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ, - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன். ...

சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ? - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று! ...

ஓவியா
11-12-2006, 03:42 PM
கண்ணம்மா - என் காதலி - 2
(பின் வந்து நின்று கண் மறைத்தல்)
நாதநாமக்கிரியை - ஆதிதாளம்
சிருங்கார ரசம்

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபல நற் பகற்கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். ...

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்.
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்,
ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
''வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?'' என்று மொழிந்தேன். . ...

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
திருமித் தழுவி ''என்ன செய்தி சொல்'' என்றேன்;
''நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்ற நலங்கள் என்ன? பேசுதி'' என்றாள். ...

''நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்றுதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்''. ...

ஓவியா
11-12-2006, 03:45 PM
கண்ணம்மா - என் காதலி - 3
(முகத்திரை களைத்தல்)
நாதநாமக்கிரியை - ஆதிதாளம்
சிருங்கார ரசம்

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி!

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் - துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ? ...

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் - பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் - வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ட சப்பிலே - கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? ...

ஓவியா
11-12-2006, 03:48 PM
கண்ணம்மா - என் காதலி - 4
(நாணிக் கண் புதைத்தல்)
நாதநாமக்கிரியை - ஆதிதாளம்
சிருங்கார ரசம்


மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை

மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை - இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ? - இங்கு
செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ ?
வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன் - நின்றன்
மதங்கண்டு துகிலினை வரிதுரிந்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? - எனக்
கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா! ...

கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? - கன்னங்
கன்றிச் சிவக்கமுத்த மிட்ட தில்லையோ!
அன்னிய மகாநம்முள் எண்ணுவதில்லை - இரண்
டாவிவயுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? - துகில்
பறித்தவள் கைப்பறிக்கப் பயங்கொள்வனோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? - கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ? ...

நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் - சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் - தம்முள்
பன்னி உபசரணை பேசுவ துண்டோ ?
நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே - விண்ணை
நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகிளையச் சோதி கவ்வுங்கால் - அவை
முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? ...

சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திடேன்; - அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்து உறவன்றடீ! - மிக
நெடும்பண்டைக் காலமுதற் சேர்ந்து வந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை, - அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;
ஊற்றுமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோ ன்- கண்ணன்
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்கு நான். ...

முன்னை மிகப்பழமை இரணியனாம் - எந்தை
மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன் - ஒளிப்
பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர்காண்; - அவர்
சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; - இதில்
ஏதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே? ...

ஓவியா
11-12-2006, 03:51 PM
கண்ணம்மா - என் காதலி - 5
(குறிப்பிடம் தவறியது)
செஞ்சுருட்டி - ஆதி தாளம்
சிருங்கார ரசம்

தீர்த்தக் கரையினிலே

தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
பாவை தெரியு தடீ! ...

மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
நகரத் துழலுவதோ? ...

கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான்
அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள் - எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள். ...

கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே,
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி! ...

ஓவியா
11-12-2006, 03:53 PM
கண்ணம்மா - என் காதலி - 6
யோகம்

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
(வீணையடி நீ யெனக்கு)

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! ...

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! ...

வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே கண்ணம்மா! ...

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! ...

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணு மொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! . ...

காதலடி நீ யெனக்குக் காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! . ...

நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! ...

தரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! ...

பாரதி
11-12-2006, 04:47 PM
எனக்கு மிகவும் பிடித்தமான சில பாடல்களை இங்கே தந்து, பாரதியாரை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி ஓவியா.

mgandhi
11-12-2006, 04:59 PM
மூண்டாசு கவிங்கன் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி

ஓவியா
11-12-2006, 05:04 PM
எனக்கு மிகவும் பிடித்தமான சில பாடல்களை இங்கே தந்து, பாரதியாரை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி ஓவியா.

பாரதி அண்ணா,
மகாகவின் பாடலில் தங்களுக்கு பிடித்த, எதாவது ஒரு கவிதையின் வரிக்கு விமர்சனம் எழுதினால் நாங்கள் சந்தோஷப்படுவோம்....:D



மூண்டாசு கவிங்கன் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி

நண்பரே,
நீங்களும் தான்

பாரதி
11-12-2006, 05:13 PM
தனித்தனியே பாரதியாரின் கவிதைகளை ரசிக்கத்தான் முடியுமே தவிர விமர்சிக்கும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை.

இயற்கையை அவர் வர்ணித்து ஒப்பிடும் பல இடங்கள் மிகவும் ஆச்சரியப்படுத்தும். மேலும் ஒன்று அவர் பாடல்கள் பல இராகங்களில் பாடப்பெற்றும் எல்லாமே நம்மை கவர்ந்திழுக்கும்.

வாழ்க நீ எம்மான் - பாடிய பாரதியாருக்கு
வாழ்க நீ பாரதி.

அறிஞர்
11-12-2006, 06:47 PM
பாரதியின் பாடல்கள் என்றும் அழியாதவை.......

சிறு வயதில் எட்டையபுரம் சென்று அவர் இருந்த இடத்தை பார்த்துள்ளேன்.

rajeshkrv
12-12-2006, 12:24 AM
பாரதியாரின் பல பாடல்கள் அர்த்தம் பொதிந்தவை
அவற்றுள் சில
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன் ..
--------------

காற்றுவெளியிடை கண்ணம்மா நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன்....
எந்தான் நாவினிலே அமுதூறுதே கண்ணம்மாவென்ற பேர் சொல்லும் போதினிலே
----------

கேளடா மானிடவா என்னில் கீழோர் மேலோர் இல்லை
------

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
--------

வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யுமொலியிருப்பாள்
-----------------

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
-------------

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

இவை சில துளிகள் தாம்..
பல அறிஞர்கள் இங்கே உள்ளனர் அவர்கள் இன்னும் கூறுவார்கள்

meera
12-12-2006, 07:29 AM
பாரதியின் பாடல்களை அழகாய் தொகுத்து தந்தமைக்கு நன்றி ஓவியா.

இராசகுமாரன்
12-12-2006, 11:33 AM
ஆறு பாடல்களுடன் அறுசுவையாக பாரதியார் பிறந்தவிழா கொண்டாட்டமா! வாழ்த்துக்கள்..!!

பிறந்த நாளை நினைவு கூர்ந்த ராஜாவுக்கு நன்றி..!!
பாடல்களை நினைவு கூர்ந்த ஓவியாவுக்கும் நன்றி..!!!

franklinraja
12-12-2006, 12:37 PM
"காக்கை சிறகினிலே நந்தலாலா..." - பாடலையும் நினைவுகூர்வோம்..!

mukilan
12-12-2006, 02:41 PM
பாரதியின் பாடல் களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் இரண்டு. எனக்கு ஒவ்வொரு சொந்த நிகழ்வின் போதும் மனதில் உறுதியளிக்கும் பாடல்கள் அவை. இப்பொழுதும் சோர்ந்து உட்கார்ந்திருந்தாலோ அல்லது மனதில் ஏதேனும் குழப்பம் என்றாலோ பாரதியின் இந்த இரு பாடல்களைப் படித்தால் போதும். மனதில் தைரியம் வரும். உங்களுக்காக இங்கே.

சென்றதினி மீளாது மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா

தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக வுழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக் கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ !

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவை நேரே இன்றெனெக்கு நீ தருவாய்
என்னை ஒரு புதிய உயிராக்கி
மனதை மிக தெளிவுரச் செய்து
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்

gragavan
12-12-2006, 02:51 PM
பாரதியை மறந்தோமா! வருத்தமே. ஆயினும் ராஜாவின் நினைவூட்டலும் ஓவியா எடுத்திட்ட கவிகளும் இருக்கையில் மறவோம் மறவோம் எனக்கூவுவோம்.

ஓவியா, நல்ல பாடல்களை எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். நன்று.

சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடலைத் திரையிசையில் வரலட்சுமி அவர்கள் இளையராஜா இசையில் பாடியிருக்கிறார்கள் கவரிமான் என்ற படத்திற்காக. யாருக்காவது கிடைத்தால் எனக்கும் கொடுங்கள்.

ஓவியா
12-12-2006, 05:22 PM
ஆறு பாடல்களுடன் அறுசுவையாக பாரதியார் பிறந்தவிழா கொண்டாட்டமா! வாழ்த்துக்கள்..!!

பிறந்த நாளை நினைவு கூர்ந்த ராஜாவுக்கு நன்றி..!!
பாடல்களை நினைவு கூர்ந்த ஓவியாவுக்கும் நன்றி..!!!

:eek: :eek: :eek:
அஹா நம்பர் ஓன்

நன்றி சார்



"காக்கை சிறகினிலே நந்தலாலா..." - பாடலையும் நினைவுகூர்வோம்..!

காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நிந்தன்
கரியனிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நிந்தன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் மொழியிலெல்லாம் நந்தலாலா - நிந்தன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

ஓவியா
12-12-2006, 05:27 PM
பாரதியாரின் பல பாடல்கள் அர்த்தம் பொதிந்தவை
அவற்றுள் சில
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன் ..
--------------

நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!


பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)


மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)


தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)


துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)


நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)

ஓவியா
12-12-2006, 05:40 PM
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே

மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசடி
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

ஓவியா
12-12-2006, 07:54 PM
..:cool:

எனக்கு மிகவும் பிடித்த
கவிதைகளில் ஒன்று நின்னையே ரதியென்று ....

ஒரு வரி மட்டும் கொஞ்சம் ஓவர்......
'பொன்னையே நிகர்த்த மேனி'...
கருனிர மேனிகலுக்கு இந்த பாடல் இல்லைதானே.......
பாரதியின் கனவு கண்ணமாவும் சிகப்பா அழகாதான் இருந்திருப்பாறோ.:cool: :cool: :cool: ...
வார்ண மோகம் யாரை விட்டது.....:eek:

மன்னிக்கவும் மகாகவி.....குற்றம் குற்றமேதான்

பொருந்திய கையொப்பத்துடன்
பாரதி காணாத புதுமைப்பெண்
ஓவியா

franklinraja
13-12-2006, 10:55 AM
ஒரு வரி மட்டும் கொஞ்சம் ஓவர்......[/B]
'பொன்னையே நிகர்த்த மேனி'...
கருனிர மேனிகலுக்கு இந்த பாடல் இல்லைதானே.......
பாரதியின் கனவு கண்ணமாவும் சிகப்பா அழகாதான் இருந்திருப்பாறோ.:cool: :cool: :cool: ...
வார்ண மோகம் யாரை விட்டது.....:eek:

மன்னிக்கவும் மகாகவி.....குற்றம் குற்றமேதான்

பொருந்திய கையொப்பத்துடன்
பாரதி காணாத புதுமைப்பெண்
ஓவியா

பெண்களில் ஒரு நக்கீரராய்

"குற்றம் குற்றமே" என்று உரைத்த ஓவியாவிற்கு ஒரு பூச்செண்டு..! :)

ஓவியா
13-12-2006, 02:12 PM
பெண்களில் ஒரு நக்கீரராய்
"குற்றம் குற்றமே" என்று உரைத்த ஓவியாவிற்கு ஒரு பூச்செண்டு..! :)


:D
எதோ நம்ப மனதில் தோன்றிய ஆதங்கத்தை சொல்லிட்டேன்.......:rolleyes: :rolleyes:

ஆதவா
21-12-2006, 04:57 PM
அவையோர்களே...பாரதி பிறந்தநாளன்று மன்றத்தில் நான் இணையவில்லை.... எல்லாம் கவனித்தேன்,,, எல்லா பாடல்களும் நாம் அறிந்தவையே..

பாரதி பாடிய பாடல்களில் மிக அபூர்வமான சிக்கலான மரபுப் பாடல் ஒன்று பாடியுள்ளார்.. எனக்கு மறந்தி போனது,,

முதல் வரி மட்டும் ஞாபகம்..

கவுண்டவுண்ட தெனமாரன் கணை பொழிய.

யாராவது சொல்வீர்களா மீதி வரிகளை...