mgandhi
06-12-2006, 05:27 PM
சென்னை உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் ஆங்கில மொழியே வழக்கு மொழியாக இருந்து வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 348 (1) பிரிவின் படி, உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஆங்கில மொழியிலேயே அனைத்து நடவடிக்கைகளும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 348 (2) உடன் இணைந்த 1963 ஆம் ஆண்டு ஆட்சிமொழி சட்டப் பிரிவு 7ன் படி, உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மாநில ஆட்சி மொழியிலேயே நடத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நமது மாநிலத்தில் தமிழிலேயே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 348 (2) உடன் இணைந்த 1963 ஆம் ஆண்டு ஆட்சிமொழி சட்டப் பிரிவு 7ன் படி, சென்னை உயர் நீதிமன்றம், மாநில தீர்ப்பாயங்கள் ஆகியவற்றின் அனைத்து நடவடிக்கைகளிலும் நமது மாநில ஆட்சி மொழியாகிய தமிழை அறிமுகப்படுத்திட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
நமது மாநிலத்தில் தமிழிலேயே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 348 (2) உடன் இணைந்த 1963 ஆம் ஆண்டு ஆட்சிமொழி சட்டப் பிரிவு 7ன் படி, சென்னை உயர் நீதிமன்றம், மாநில தீர்ப்பாயங்கள் ஆகியவற்றின் அனைத்து நடவடிக்கைகளிலும் நமது மாநில ஆட்சி மொழியாகிய தமிழை அறிமுகப்படுத்திட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.