mgandhi
01-12-2006, 06:08 PM
1.3 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை
"நாடு முழுவதும் ஆறிலிருந்து 14 வயதிற்குட்பட்ட 1.3 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை'', என பார்லிமென்ட்டில் தெரிவிக்கப்பட்டது. லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது மனிதவள மேம்பாட்டு இணை அமைச்சர் ஏ.பாத்மி கூறியதாவது:
மத்திய அரசின் சார்பில் நாட்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து அறிவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், கடந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் ஆறிலிருந்து 14 வயதிற்குட்பட்ட 1.34 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பீகார் மாநலத்தில் 31.7 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை.இதற்கு அடுத்தபடியாக உ.பி.,யில் 29.9 லட்சம் குழந்தைகளும், மேற்கு வங்கத்தில் 12.1 லட்சம் குழந்தைகளும் பள்ளிக்கு செல்லவில்லை. ம.பி.,யில் 10.8 லட்சம் குழந்தைகளும், ராஜஸ்தானில் 7.9 லட்சம் குழந்தைகளும் பள்ளி செல்லவில்லை. நடப்பு 2006&07ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.11 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டது.
"நாடு முழுவதும் ஆறிலிருந்து 14 வயதிற்குட்பட்ட 1.3 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை'', என பார்லிமென்ட்டில் தெரிவிக்கப்பட்டது. லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது மனிதவள மேம்பாட்டு இணை அமைச்சர் ஏ.பாத்மி கூறியதாவது:
மத்திய அரசின் சார்பில் நாட்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து அறிவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், கடந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் ஆறிலிருந்து 14 வயதிற்குட்பட்ட 1.34 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பீகார் மாநலத்தில் 31.7 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை.இதற்கு அடுத்தபடியாக உ.பி.,யில் 29.9 லட்சம் குழந்தைகளும், மேற்கு வங்கத்தில் 12.1 லட்சம் குழந்தைகளும் பள்ளிக்கு செல்லவில்லை. ம.பி.,யில் 10.8 லட்சம் குழந்தைகளும், ராஜஸ்தானில் 7.9 லட்சம் குழந்தைகளும் பள்ளி செல்லவில்லை. நடப்பு 2006&07ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.11 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டது.