PDA

View Full Version : ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..!



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11

ராஜா
30-11-2006, 01:29 PM
விடாக் கண்டன்..கொடாக் கண்டி..

--------------------------------------------------------------------------------

ஒரு அழகான பொண்ணை ரொம்ப நாளா கணக்குப் பண்ணிகிட்டுருந்த பையன் ஒருத்தன், ஒரு விருந்துல சந்திச்சான்.. எப்படியும் அடைப்புக்குறி போட்டுறணும்ன்னு முடிவு பண்ணி, அவள்கிட்டே போயி கடலை போட ஆரம்பிச்சான்.. அவள் வெட்டிக்கிட்டே இருந்தா.. இவனுடைய மனந்தளரா முயற்சிகளும்.. அவளுடைய மூக்குடைப்புகளும்..

அவன் ; நான் ஒரு புகைப்பட நிபுணர்.. உங்கள் முகம் போல அழகான முகத்தை நான் பார்த்ததே இல்லை.
இவள் ; நான் முகச் சீரமைப்பு நிபுணர்.. உங்கள் முகம் போல நிறைய முகங்களை பார்த்திருக்கிறேன்..!

அவன் ; இதற்கு முன் நாம் எங்கோ சந்தித்திருக்கிறோம் இல்லையா..?
இவள் ; ஆமாம்.. அன்றிலிருந்து நான் அங்கு போவதையே நிறுத்திவிட்டேன்..!

அவன் ; என் வாழ்க்கையில் இவ்வளவு நாளாக உங்களை எப்படி சந்திக்காமல் இருந்தேன்.?
அவள் ; கண்ணுல படாம இருக்க நான் பட்ட பாடு எனக்குதானே தெரியும்..!

அவன் ; பிரம்மன் முழுத்திறமையையும் காட்டி உங்களை உருவாக்கி இருக்கிறான்..
இவள் ; இருக்கலாம்.. அடுத்ததாக படைத்தது உங்களையா..?

அவன் ; வரும் சனிக்கிழமை நாம் எங்காவது வெளியில் போகலாமா..?
இவள் ; மன்னிக்கவும்.. சனிக்கிழமை மாலையில் எனக்கு தலைவலி வந்து விடும்..!!

அவன் ; உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா..?
இவள் ; வேண்டாம்.. அந்தப் பேரை நீங்க வச்சுக்கிட்டா நல்லா இருக்காது..!

அவன் ; நாம இப்போ சந்திச்சுக்கிட்டது பூர்வ ஜென்ம புண்ணியம்தான் இல்லையா..?
இவள் ; என் கஷ்ட காலமாகவோ, பூர்வ ஜென்ம பாவமாகவோ கூட இருக்கலாம்..!

அவன் ; உங்க பக்கத்து இருக்கை காலியாத்தானே இருக்கு..?
இவள் ; ஆமாம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் உக்காந்து இருக்கறதும் காலியாகப் போகுது..!

அவன் ; உன் மனசுல இருக்கறத தயங்காம என்கிட்டே சொல்லலாம்..
இவள் ; அப்படியா.. இடத்தை காலி பண்ணு..!

அவன் ; உன்னை சந்தோஷமா வச்சுப்பேன்..
இவள் ; ஏன்.. கிளம்பப் போறியா..?

அவன் ; நான் உன்கிட்டே என்னை கல்யாணம் பண்ணிக்கோ' ன்னு சொன்னா நீ என்ன சொல்லுவே..?
இவள் ; ஒண்ணும் சொல்ல மாட்டேன்.. நான் ஜோக் கேட்டு சிரிக்கறப்போ என்னால பேச முடியாது..!

அவன் ; உன் அழகு என் மனச கலக்குது..

இவள் ; உன் பர்சனாலிட்டி என் வயித்த கலக்குது..!

அவன் ; என்னைப் பார்த்து அன்பா ஒரு தடவையோ ரெண்டு தடவையோ சிரிச்சியா இல்லையா..?

இவள் ; ஒரு தடவை தான்.. நான் எந்த தப்பையும் ரெண்டாவது முறை செய்யறதே இல்லை..!!

அவன் ; உனக்காக இந்த உலகத்தின் மூலைக்கு கூட போவேன்..

இவள் ; அங்கேயே இருந்துடு.. திரும்ப வந்துராதே..!!!

ராஜா
30-11-2006, 01:32 PM
மின்னஞ்சல் முக"ரவி" மாறினால்..

--------------------------------------------------------------------------------

ஒரு முறை ஒருவன் மனைவியை முதன் முதலாகப் பிரிந்து வெளியூர் சென்றான்.. போய்ச்சேர்ந்ததும் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.. ஆனால் அதிக ஆ.கோ. வில் ஒரு எழுத்து மாற்றி (சேருமிட முகவரியை) அடித்து விட்டான்..!

வேறோறிடத்தில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவி, இறுதிச் சடங்குகள் அப்போதுதான் முடிவடைந்த நிலையில் தனக்கு வந்திருக்கும் ஆறுதல் செய்திகளைப் படிப்பதற்காக தன் உள் பெட்டியைத் திறந்தாள்..சிறிது நேரத்தில்..

" சக்கரம்" என்று கத்தியவாறு மயங்கி விழுந்து விட்டாள்.. உறவினர்கள் வந்து பார்த்த போது கணிணி திரையில் இவ்வாறு செய்தி ஒளிர்ந்து கொண்டிருந்த்தது..!

TO ----------என் அன்பான ம்னைவி

SUBJECT------ வந்து சேர்ந்துவிட்டேன்..

TIME---------- மர்ச்சுவரி 32/ 2000 ... 9.00 pm.

அன்பே..

அதற்குள் செய்தி அனுப்பியது கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்.. என்னுடைய பயணம் அற்புதமாக இருந்த்து. இங்கே கணிணிகளும் இணையத் தொடர்பும் உள்ளது.இங்கே எனக்கு வசதியான அறை ஒதுக்கி இருக்கிறார்கள்.

அப்புறம் உன்னை இங்கு அழைத்து வருவதற்கு கூட ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. நாளையோ அல்லது மறுநாளோ நீயும் இங்கே வந்து விடலாம். உன் பயணமும் அட்டகாசமாய் இருக்கும்.

உன் வரவை எதிர் நோக்கி..

உன்னை ஒரு கணமும் விட்டகலா அன்புக் கணவன்

ராஜா
30-11-2006, 01:33 PM
சில நிரந்தர விதிகள்..

எதுக்காவது வரிசையிலே நிக்கிறோம்ன்னு வச்சுக்கங்க.. நாம் நிக்கிற வரிசை மட்டும் நகரவே நகராது.. மத்த வரிசையெல்லாம் கிடு கிடுன்னு கரையும்.. கவனிச்சிருக்கீங்களா..?

தப்பா நம்பர் அடிச்சு போன் பண்ணினோம்ன்னு வைங்க.. எங்கேஜ்டா இருக்காது.. தப்பு நம்பர் எதிராளி தொடர்பு எல்லைக்குள்ளேயே இருப்பான்.. லொடக்குன்னு 2 ரூபா காலியாயிடும்..!

பைக்கையோ காரையோ தெரிஞ்சவரைக்கும் ரிப்பேர் பார்த்துட்டு, கையை ஆயிலாவோ, கிரீஸாவோ வச்சுருக்கோம்ன்னு வைங்க.. அப்பத்தான் மூக்கு அரிக்கும்.. உண்டா இல்லையா..?

உங்க முதலாளி ஏன் லேட் ன்னு கேட்டு வண்டி பஞ்சர் ன்னு சொல்லி சமாளிச்சுடுவீங்க.. சோதனையா மறுநாள் உண்மையாவே பஞ்சர் ஆகி முதலாளிக்கிட்டே பேய் முழி முழிச்சுருக்கீங்களா இல்லையா..?

வீட்டை பூட்டிட்டு வெளிலே கெளம்பும்போது தொலைபேசி ஒலிக்கும்.. திறந்து உள்ளே வர்றதுக்குள்ள நின்னு போயிடும்..

ஒரு முக்கியமான ஆளு அவங்கூட சேராதே ன்னு சொல்லியிருப்பாங்க. நீங்களும் சின்சியரா சரின்னுருப்பீங்க.. மறுநாளே அவ்னோட சுத்தறத அந்த முக்கியமானவங்க பாத்துடுவாங்க.. வாசஸ்தவம் தானே..?

ஒரு மேஜிக்'கையோ, இல்லே வேறே எதாவது வித்தையையோ கத்துட்டு வந்துருப்பீங்க. ஒரு ஆள அசத்தணும்ன்னு அதை செஞ்சு காமிக்கறப்போ சொதப்பிடும்.. அவங்க போனப்புறம் ஒரு தடவை செஞ்சு பார்ப்பீங்க.. கரெக்டா வரும்.. அப்படி நொந்து நூலாயிருக்கீங்களா இல்லையா..?

கொட்டாவி விட்டுட்டு வெட்டியா உக்காந்து இருப்பீங்க.. ஒரு வேலையும் இருக்காது.. ஒரு டீ சாப்பிடலாம்ன்னு கப்பை கையிலே எடுப்பீங்க.. உடனே ஒரு வேலை வானத்துலேருந்து குதிக்கும்.. சூடா அந்த டீயை குடிக்க விடாமப் பண்ணிடும்.. அனுபவிச்சுருக்கீங்களா..?

ராஜா
30-11-2006, 01:35 PM
ஒரு ஜவுளிக் கடையில் மனைவிகளை தொலைத்துவிட்ட இரு கணவன்மார்..

கணவன் 1 ; உங்க மனைவி எப்படி இருப்பாங்க..?

கணவன் 2 ; சிவப்பா, உயரமா, திரிஷா மாதிரி.. ஆமாம் உங்க வீட்டம்மா எப்படி இருப்பாங்க..?

கணவன் 1 ; அந்தக் கழுதை எப்படி இருந்தா என்ன்? வா.. உன் பொண்டாட்டியை தேடுவோம்..!!!
__________________

ராஜா
30-11-2006, 01:37 PM
ATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்.
************************************
1. காரை நிறுத்துவான்.
2. இயந்திரத்தில் அட்டையை செருகுவான்.
3. குறியீட்டு எண்ணை அழுத்துவான்.
4. பணத்தையும் அட்டையையும் சேகரிப்பான்.
5. காரைக் கிளப்புவான்.

ATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் பெண்.
**************************************
1. காரை நிறுத்துவாள்.
2. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
3. ஓடிக்கொண்டிருக்கும் எஞ்சினை ஆஃப் செய்வாள்.
4. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
5. இயந்திரத்தை அணுகுவாள்.
6. கைப்பையில் அட்டையை தேடுவாள்.
7. அட்டையை செருகுவாள்.
8. குறியீட்டு எண்ணை அழுத்துவாள்.
9. அழுத்திய எண்களை ரத்து செய்வாள்.
10. கைப்பையில் எண் குறிப்பை தேடுவாள்.
11. மீண்டும் அட்டையை செருகுவாள்.
12. குறிப்பைப் பார்த்து எண் அழுத்துவாள்.
13. பணத்தை சேகரிப்பாள்.
14. காருக்கு திரும்புவாள்.
15. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
16. காரை ஸ்டார்ட் செய்வாள்.
17. ஆஃப் செய்வாள்.
18. இறங்கி ஒடுவாள்.
19. இயந்திரத்தில் இருந்து அட்டையை பிடுங்குவாள்.
20. காருக்கு வருவாள்.
22. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
23. ஸ்டார்ட் செய்வாள்.
24. 1 கிலோ மீட்டர் ஓட்டுவாள்.
25. ஹாண்ட் ப்ரேக்கை எடுத்து விடுவாள்

ராஜா
30-11-2006, 01:38 PM
சந்திரமுகி படப்பிடிப்பு ஒரு காட்டில் நடந்தது. அப்போது இரு காட்டுமிராண்டிகள் அவ்வழியே வந்தனர். தகப்பனும் மகனுமான அவர்கள் மிகுந்த பசியுடன் இருந்தனர்.. அப்போது அங்கு ரஜினி வந்தார்..

மகன் ; அப்பா இதைப் புடிச்சுட்டு வர்றேன் திம்போமா..?

அப்பா ; வேணாம்டா.. ஒரே எலும்பா இருக்கும்.. பல்லு உடைஞ்சுடும்..

பின்னர் பிரபு அங்கு வர...

மகன் ; இது நல்லா புஷ்டியா இருக்குப்பா.. புடிச்சுட்டு வரவா..?

அப்பா ; வேணாம்டா.. ஒரெ கொழுப்பு.. அப்புறம் ஹார்ட் அட்டாக் வந்துடும்..!

பின்னர் ஜோதிகா வருவதைப் பார்த்ததும்..

மகன் ; அப்பா.. இது 'நச்' பிகருப்பா.. இதை புடிச்சு சாப்பிடுவோமா..?

அப்பா ; புடிச்சுட்டு வா.. ஆனா சாப்பிட வேண்டாம்..

மகன் ; அப்போ இன்னிக்கு நாம சாப்பிட என்ன செய்யறது..?

அப்பா ; உங்க அம்மாவை காலி பண்ணிடுவோம்..!!!

ராஜா
30-11-2006, 01:45 PM
ஒரு ஊரில் ஒரு சைவ காதலனும் சைவ காதலியும் இருந்தார்கள்..

காதலி எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறி நின்றாள்..

65 கி.

குதி உயர் காலணியை அகற்றினாள்..

63 கி.

துப்பட்டாவை காதலனிடம் கொடுத்தாள்....

62 கி.

அத்துடன் கையில் இருந்த சில்லறை தீர்ந்தபடியால் அடுத்து என்ன செய்வதென்றறியாமல் நின்ற போது.. காதலன் சொன்னான்...

கவலைப்படாதே.. அன்பே.. என்கிட்ட 25 நாணயங்கள் இருக்கின்றன...!!!

ராஜா
30-11-2006, 01:48 PM
பக்தன் ; கடவுளே..! நான் திருமணம் செஞ்சுக்கலாம்ன்னு இருக்கேன்.. எப்படிப்பட்ட பொண்ணை தேர்ந்தெடுக்கணும்..?

கடவுள் ; நல்லா அழகானவளா இருக்கணும்.

நல்லா சமைக்கத் தெரிஞ்சவளா இருக்கணும்..

பணக்காரியா இருக்கணும்.. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.. மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்காம இருக்கணும்...!!!

ராஜா
30-11-2006, 01:52 PM
அட்லாண்டிக் கடலில்.. யு.எஸ். கடற்படை கப்பலின் தலைவர் வானொலி மூலம் விடுக்கும் எச்சரிக்கை..

எதிரில் தெரியும் விளக்குக்கு சொந்தமானது எதுவாக இருந்தாலும் சரி.. உடனே 15 டிகிரி வலப்பக்கம் விலக்கி செலுத்துங்கள்..

கப்பல் தலைவர் அவர்களே.. தயவு செய்து தங்கள் கப்பலை 15 டிகிரி இடப்பக்கம் திருப்பி செலுத்தினால் விபத்தை தவிர்க்கலாம்..

என்ன..? அமெரிக்காவின் போர்க்கப்பல் இது.. உனக்கு உத்தரவிடுகிறேன்.. உடனே வலப்பக்கம் திருப்பு..

எவராக இருந்தால் என்ன.. ? விலகுவது எங்களால் முடியாத காரியம்.. அறிவுடன் செயல்படுங்கள்.. திசையை மாற்றுங்கள்.. அதுவும் உடனே...!!

என்ன.. எங்களுக்கே ஆணையிடுகிறாயா.. ? உலகின் பெரும் வல்லரசு நாட்டின் விமானம் தாங்கிக் கப்பலின் தலைவன் கடைசி முறையாக எச்சரிக்கிறேன்.. உடனடியாக விலகு..

அட முட்டாளே..! இது லைட் ஹவுஸ்.. !!!!

ராஜா
30-11-2006, 02:08 PM
புதிதாக மணம் செய்துகொண்ட இணை.. உணவகத்தில்... அடுத்த மேசையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனையே புதுப்பெண் பார்த்துக் கொண்டிருந்தாள்..

கணவன் ; ஏன் டார்லிங்.. அவரை உனக்கு முன்பே தெரியுமா..?

மனைவி ; ஆம் உயிரே.. என் முன்னாள் கணவன்.. 2 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் பிரிந்து விட்டோம் .. அதிலிருந்து இப்படி ஆகிவிட்டார்..

கணவன் ; என்னதான் சந்தோஷத்தை கொண்டாடுகிறார் என்றாலும் ரெண்டு வருஷம் கொஞ்சம் ஓவர் தான்.. இல்லியா அன்பே..?

மனைவி ; ?????????????????????????????

ஓவியா
30-11-2006, 05:13 PM
ராஜா அண்ணா.... சும்மா தூள்பன்னரீங்க...........:D

அதுவும் அந்த
ஆTM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்./பெண்....:D

அண்ணா,
நீங்க இனைக்கு என்னை நல்லா மாட்டிவுட்டுட்டீங்க :cool:
சிரித்து சிரித்து எதிரில் உல்ல ஒருவனை சிறையிலிட்டேன்.....:eek:


---------------------------------------------------------
பல்கலைகலகத்திலே உட்கார்ந்து இதை படித்தேன்,
எதிரில் உல்ல ஒருவன் போகும் பொழுது மேடம் நீங்க இங்க படிக்க வந்துல்லீர்கல்,
நீங்க படிக்கலனாலும் பரவாயில்லை ...என்னையாவது படிக்கவுடுங்க......
சிரித்து சிரித்து என்னை மய****னு சொன்னான்.... :D
:eek:

இளசு
30-11-2006, 07:27 PM
கலக்கல்..ராஜா..!

அடைப்புக்குறி விடாக்கண்டனும்
முகரவியும் போர்க்கப்பலும் வாய்விட்டு சிரிக்கவைத்தன.

ஏடிஎம் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

மதி
01-12-2006, 02:25 AM
ராஜா அண்ணா.... சும்மா தூள்பன்னரீங்க...........:D

அதுவும் அந்த
ஆTM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்./பெண்....:D

அண்ணா,
நீங்க இனைக்கு என்னை நல்லா மாட்டிவுட்டுட்டீங்க :cool:
சிரித்து சிரித்து எதிரில் உல்ல ஒருவனை சிறையிலிட்டேன்.....:eek:


---------------------------------------------------------
பல்கலைகலகத்திலே உட்கார்ந்து இதை படித்தேன்,
எதிரில் உல்ல ஒருவன் போகும் பொழுது மேடம் நீங்க இங்க படிக்க வந்துல்லீர்கல்,
நீங்க படிக்கலனாலும் பரவாயில்லை ...என்னையாவது படிக்கவுடுங்க......
சிரித்து சிரித்து என்னை மய****னு சொன்னான்.... :D
:eek:
அக்கா..
என்ன இது...? உங்க ஏரியாவுல இருக்கவங்க எல்லாம் பைத்தியம் புடிச்சு அலையபோறாங்க..பாத்து...

pradeepkt
01-12-2006, 05:28 AM
ராஜா கலக்கிட்டீங்க போங்க.
இன்னைக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங்ல கொடுக்க வேண்டிய அறிக்கையின் கீழே இந்த மதி ஜோக்கு (அதான் பொம்பளப் புள்ளைகிட்ட வழிஞ்சது) சில பகுதிகளை மொழிபெயர்த்துச் சேர்த்தேன்.

பயங்கர சீரியசா மட்டுமே இருக்க வேண்டிய மீட்டிங் கொஞ்சம் சிரியசாவும் ஆகிருச்சு :) நன்றி!

மதி
01-12-2006, 06:06 AM
ராஜா கலக்கிட்டீங்க போங்க.
இன்னைக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங்ல கொடுக்க வேண்டிய அறிக்கையின் கீழே இந்த மதி ஜோக்கு (அதான் பொம்பளப் புள்ளைகிட்ட வழிஞ்சது) சில பகுதிகளை மொழிபெயர்த்துச் சேர்த்தேன்.

பயங்கர சீரியசா மட்டுமே இருக்க வேண்டிய மீட்டிங் கொஞ்சம் சிரியசாவும் ஆகிருச்சு :) நன்றி!
இது எப்ப நடந்தது..எனக்குத் தெரியாம..?
ஆனா என் ஸ்டைல் இது இல்ல....:D :D :D :D

அறிஞர்
01-12-2006, 03:33 PM
கலக்கிட்டிங்க.. ராஜா.. எல்லாம் ரசிக்கும் படியாக இருந்தது.

ஒரு சிலவற்றை முன்பு படித்துள்ளேன்....

இன்னும் கலக்குங்க... தொடர்ந்து படிக்க காத்திருக்கிறோம்.

pradeepkt
02-12-2006, 01:35 PM
இது எப்ப நடந்தது..எனக்குத் தெரியாம..?
ஆனா என் ஸ்டைல் இது இல்ல....:D :D :D :D
தம்பி... இது ஸ்டைலே இல்லை... :D :D

மதி
04-12-2006, 01:08 AM
என்னவோ போங்க சிலருக்கு வயசாயிட்டே வருதுன்னு தெரியுது..

guna
04-12-2006, 01:45 AM
ராஜா அண்ணா.... சும்மா தூள்பன்னரீங்க...........:D

அதுவும் அந்த
ஆTM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்./பெண்....:D

அண்ணா,
நீங்க இனைக்கு என்னை நல்லா மாட்டிவுட்டுட்டீங்க :cool:
சிரித்து சிரித்து எதிரில் உல்ல ஒருவனை சிறையிலிட்டேன்.....:eek:


---------------------------------------------------------
பல்கலைகலகத்திலே உட்கார்ந்து இதை படித்தேன்,
எதிரில் உல்ல ஒருவன் போகும் பொழுது மேடம் நீங்க இங்க படிக்க வந்துல்லீர்கல்,
நீங்க படிக்கலனாலும் பரவாயில்லை ...என்னையாவது படிக்கவுடுங்க......
சிரித்து சிரித்து என்னை மய****னு சொன்னான்.... :D
:eek:

சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்..
கண்ணம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
னினைக்க நினைக்க நெஞில் நிறைந்து விட்டாய்...

ஓவியா, சிரிச்சி சிரிச்சி சிரீயசா எதிலயாச்சும் மாட்டிக்காதீங்க..:eek:

ராஜா
04-12-2006, 04:55 AM
ஒரு பெரிய மனிதரின் இறுதிச் சடங்கு. சவப்பெட்டி இறுதி யாத்திரைக்கு தயாராக இருக்க, அங்கு வந்திருந்த மந்திரி தன் நண்பரின் நற்குணங்களைப் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்..

"மறைந்த நண்பர் கற்பில் ராமன். எவ்வித தீயப் பழக்கங்களும் அண்டாமல் நெருப்பாய் வாழ்ந்தவர். ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து உயிர் நீத்தவர்... "

இறந்தவரின் மனைவி தன் மகனை அழைத்து, " சென்கல்வராயா, சவப் பெட்டிக்குள்ள இருக்கறது உங்க அப்பாவா இல்ல வேற யாராவதான்னு கொஞ்சம் பாரு..".

ராஜா
04-12-2006, 04:56 AM
டாக்டர் சர்தார் புது மருத்துவமனை திறந்தார்.. ஆனால் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்த போது தச்சர், பெயிண்டர் எல்லோரையும் கடுமையாக திட்டவே.. தங்கள் கைவரிசையை காட்டிவிட்டார்கள்.

மூட்டு வைத்தியரின் அறைக்கதவு ஒரு கீல் இல்லாமல் இருந்தது.

காது டாக்டரின் அழைப்பு மணி வேலை செய்யவில்லை,,

சிறுநீரக மருத்துவர் அறையில் உள்ள டாய்லெட்டில் கதவே இல்லை..

கண் டாக்டர் அறைக்கதவில் கண்ணாடி இல்லை.. சாவித் துவாரமும் இல்லை..

முத்தாய்ப்பாக..டாக்டர் . சர்தார்.. psychotherapist என்பதை இவ்வாறு எழுதிச் சென்றுவிட்டனர்..

Dr. SARDAR...
Pscho The Rapist.

ராஜா
04-12-2006, 04:59 AM
ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள்.." ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?

ஃபாதர் சொன்னார்.." என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்."

அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.

பாதிரியார் பெருமையுடன், "என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார்" என்றார்.

அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, "அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?" என பாடின.

தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!!

ராஜா
04-12-2006, 05:02 AM
வேகமாக வாகனம் ஓட்டிய வழக்குக்காக ஒரு ஆசிரியர் நீதிமன்றம் வந்தார். மிகவும் தாமதமானதால் நடுவரை வேண்டினார்.

"அய்யா நான் ஒரு ஆசிரியன். பள்ளிக்கு மிகவும் தாமதமாவதால் தயவு செய்து என் வழக்கை முதலில் விசாரிக்க வேண்டுகிறேன்.."

மிகுந்த ஆர்வம் கொண்ட நடுவர், " நீங்கள் ஒரு ஆசிரியரா..!" எனக்கேட்டு, தன் நினைவுகளை பின்னோக்கி ஓடவிட்டார். பின் ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக, "நல்லது ஆசிரியரே.. கூண்டில் ஏறி நின்று, 500 முறை 'நான் வேகமாக வாகனம் செலுத்த மாட்டேன்' என எழுதிக்கொடுத்துவிட்டு நீங்கள் போகலாம்...!!".

ராஜா
04-12-2006, 05:04 AM
டேனியல் ; பிள்ளைகளே.. இன்னைக்கு கணக்குப் பாடம்..
1,2,3 கத்துத் தரப்போறேன்..

சின்னா ; எனக்கு தெரியும் சார்.. எங்கப்பா கத்துக் குடுத்திருக்காங்க..!

டேனி ; வெரி குட்.. 3 க்கு அப்புறம் என்ன சொல்லு..?

சின்னா ; 4 சார்.

டேனி ; 8 க்கு முன் என்ன வரும்..?

சின்னா ; 7 சார்.. எங்கப்பா கத்துக் கொடுத்திருக்காங்க..!

டேனி ; எல்லா அப்பாவும் இப்படி இருந்தா எங்களுக்கு வேலையே இல்லே.. 10 க்கு மேலே சொல்லு பார்ப்போம்..

சின்னா ; ஜாக், குயின், கிங், ஆஸ்.. எங்கப்பா சொல்லி குடுத்துருக்காங்க...!!!!

ராஜா
04-12-2006, 05:06 AM
ஒரு ஆசிரியை புதிதாக அந்தப் பள்ளியில் சேர்ந்தாள்..

முதன் முதலாக வகுப்பு எடுக்க ஒரு விவகாரமான் பிரிவுக்கு போக நேர்ந்தது. மாணவர்களுடன் ஒரு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள எண்ணி....

ஆசி ; மாணவ மணிகளே.. உங்கள் பெயரையும் பொழுது போக்கையும் ஒவ்வொருவராகச் சொல்லுங்கள் பார்க்கலாம்..

மா..1 ; நான் சுரேஷ்.. என் வீட்டுக்கு அருகில் ஒரு நீச்சல் குளம் உள்ளது. அதில் பந்து வைத்துக்கொண்டு விளையாடுவது என் பொழுதுபோக்கு//

ஆசி ; உடலுக்கு ஆரோக்கியம்... நல்ல பழக்கம்.. அடுத்து..

மா..2 ; நான் ரமேஷ்.. பந்துடன் நீரில் விளையாடுவேன்..

ஆசீ ; பரவாயில்லையே.. சுரேஷ் போலவே உனக்கும் பந்து விளையாட்டு தான் பிடிக்குமா..? அடுத்து..

மா...3 ; நான் மகேஷ்.. தண்ணீரில் பந்தோடு விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..!

ஆசி ; என்னதான் நண்பர்கள் என்றாலும் எல்லொரும் ஒரே மாதிரியா..? சரி.. மாணவிகளே.. நீங்கள் சொல்லுங்கள்...

மாணவி 1 ; நான் என் வீட்டருகே உள்ள நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் குளிப்பேன்.

ஆசி ; ( வெறுத்துப் போனவளாக..) முதலில் உன் பெயரைச் சொல்..

மாணவி 1 ; மங்காத்தா மார்க்க"பந்து"...!!!

அறிஞர்
05-12-2006, 04:46 PM
முத்தாய்ப்பாக..டாக்டர் . சர்தார்.. psychotherapist என்பதை இவ்வாறு எழுதிச் சென்றுவிட்டனர்..

Dr. SARDAR...
Pscho The Rapist. இதுக்கு தான், சர்தார் ராஜாக்கிட்ட வந்து எப்படி நடந்துக்க வேண்டும் கத்துக்கனும்..

அருமை ராஜா

அறிஞர்
05-12-2006, 04:47 PM
தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!! பெண் என்றாலே வில்லங்கம் தான்.... என பாதிரியாருக்கு தெரியாதா??????????
:rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
05-12-2006, 04:49 PM
பின் ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக, "நல்லது ஆசிரியரே.. கூண்டில் ஏறி நின்று, 500 முறை 'நான் வேகமாக வாகனம் செலுத்த மாட்டேன்' என எழுதிக்கொடுத்துவிட்டு நீங்கள் போகலாம்...!!". ஆசியரை பழி வாங்க நடுவருக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம்... :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
05-12-2006, 04:50 PM
டேனி ; எல்லா அப்பாவும் இப்படி இருந்தா எங்களுக்கு வேலையே இல்லே.. 10 க்கு மேலே சொல்லு பார்ப்போம்..

சின்னா ; ஜாக், குயின், கிங், ஆஸ்.. எங்கப்பா சொல்லி குடுத்துருக்காங்க...!!!!
பிள்ளைங்களுக்கு எளிய முறையில கற்று கொடுத்திருக்கிறார் அப்பா.... சூதாட்டத்தில் சிறந்து வருவான் சின்னா?????????

அறிஞர்
05-12-2006, 04:52 PM
இறந்தவரின் மனைவி தன் மகனை அழைத்து, " சென்கல்வராயா, சவப் பெட்டிக்குள்ள இருக்கறது உங்க அப்பாவா இல்ல வேற யாராவதான்னு கொஞ்சம் பாரு..".
நல்ல சந்தேகம் தான்....... ஒன்றாக வாழ்த்தவருக்கு தானே உண்மை தெரியும்.

ராஜா
06-12-2006, 02:44 PM
ஏது.. அறிஞரே... என்னுடைய நகைச்சுவையை உங்க பின்னூட்டம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுடும் போலருக்கே...!!!

ராஜா
06-12-2006, 02:58 PM
புதிதாக மணமான் கணவன் -மனைவி இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஒருவர் மற்றவருடைய அலமாரியை திறந்து பார்ப்பதில்லை என்று.

30 ஆண்டுகள் உருண்டோடின..

ஒருநாள் மனைவி தன்னுடைய அலமாரியை சுத்தம் செய்யும் போது ஒரு மூலையில் 3 புளியங்கொட்டைகளும், சில்லறையாக 500 ரூபாய்க்கு நோட்டுகளும் இருந்தன.

ஆச்சர்யம் அடைந்த மனைவி தன் கணவனிடம் இது குறித்து கேட்டாள். கணவன் சொன்னான்..

" அன்பே என்னை மன்னித்துவிடு.. ஒவ்வொருமுறை திருட்டுத்தனமாக உன் அலமாரியைத் திறக்கும்போதும் ஒரு புளியங்கொட்டையை போட்டு வைப்பேன்.."

" பரவாயில்லை உயிரே..! 30 வருடங்களில் மூன்றே மூன்று புளியங்கொட்டைகள் தானே.. அது என்ன பத்தும் ஐம்பதுமாக ரூபாய் நோட்டுகள்..?"

" புளியங்கொட்டைகள் சேர சேர கடையில் விற்று காசாக்கிவிடுவேன் கண்ணே..!"

????????????????????????????

ராஜா
06-12-2006, 03:02 PM
ஒரு ஊரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது.. பின்னர் ஊர் தலைவரும் கணக்கெடுப்பவரும் இவ்வாறு பேசிக்கொண்டனர்..

கணக்கு ; தலைவரே.. கணக்கு ஒத்து வரலையே.. 1000 பேர் இருக்காங்க..5 வருஷம் முந்தியும் இதே 1000 பேர்தான் இருந்தாங்க..!

தலை ; அப்ப சரிதான்..!

கணக்கு ; எப்படி சரியாகும்.? ஒரு குழந்தை கூடவா பொறக்கல்லே இவ்வளவு நாளா..?

தலை ; பொறந்துச்சு.. ஆனா ஒவ்வொரு குழந்தை பொறந்த உடனே ஒரு விடலைப் பய ஊரை விட்டு ஓடிப் போயிடுவான்...!!!

ராஜா
06-12-2006, 03:02 PM
ஒரு நடிகை..

18 வயசுக்காரியா இருந்தா கால் பந்து மாதிரி.. 22 பய தொரத்திக்கிட்டு திரிவான்..

24 வயசாயிட்டா... கூடை பந்து மாதிரி... 10 பய இழுத்துக்கிட்டு திரிவான்..

30 வயசாயிட்டா.. கோல்ஃப் பந்து மாதிரி.. ஒரே ஒரு ஆள்தான் வச்சு விளையாடிட்டு இருப்பாரு..

35 வயசுக்கு மேலே ஆயிடுச்சுன்னு வச்சுக்கங்க... டென்னிஸ் பந்து மாதிரி.. இவன் அவன்கிட்டே தள்ளி விடுவான்.. அவன் இவன்கிட்டே அடிச்சு விரட்டுவான்..!!

ராஜா
06-12-2006, 03:03 PM
புஷ், மன் மோகன் சிங் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்..

சிங் ; அடுத்த வருடம் சந்திரனுக்கு ஆள் அனுப்பப் போகிறோம்..

புஷ் ; நாங்கள் ஏற்கனவே அனுப்பி விட்டோம்..

சிங் ; நாங்கள் 100 பேரை அனுப்பப் போகிறோம்..

புஷ் ; அடேயப்பா.. அவ்வ்ளவு பேரா..? யார்..யார்..?

சிங் ; பிற்பட்டோர் 27 பேர்.
மிக பிற்பட்டோர்---17 பேர்
பெண்கள் ----------33 பேர்.
விளையாட்டு வீரர்-- 2 பேர்.
போர் விதவை------ 1 பேர்
சுனாமி பாதிப்பு------ 5 பேர்
பயங்கரவாத பாதிப்பு 5 பேர்
ஊனமுற்றோர்------- 5 பேர்.
அரசியல்வாதிகள்-----4 பேர்.. இடம் இருந்தால்..
விண்வெளி வீரர்-----1 பேர்.

ராஜா
06-12-2006, 03:04 PM
மஹான் சீடரிடம்..

மகனே... (?) எந்த தேவியின் பிரசாதம் மகிமை வாய்ந்தது தெரியுமா..?

தெரியும் குருவே... ராப்ரி "தேவியின்" லாலு "பிரசாதம்...!".

ராஜா
06-12-2006, 03:06 PM
ஆசிரியர் ; கவலை , மனக்குழப்பம், போனால் போகட்டும் என்ற மன நிலை.. இவை மூன்றுக்கும் விளக்கம் சொல்ல முடியுமா..?

சின்னா ; முடியும் சார்..

உங்க மனைவியை பிரசவத்துக்காக மருத்துவ மனையில் சேர்த்திருந்தீங்கன்னா நல்லபடியா ஆகணுமேன்னு கவலையா இருப்பீங்க..

காதலியை சேர்த்திருந்தீங்கன்னா நாமதானான்னு மனக்குழப்பத்திலே இருப்பீங்க.

ரெண்டு பேரையும் ஒரே நேரத்திலே ஒரே மருத்துவ மனையிலே சேர்க்கறாப்பல ஆயிருச்சுன்னா, தலைக்கு மேல் ஜான் என்ன.. முழம் என்ன.. போனால் போகட்டும் போடாங்கற முடிவுக்கு வந்துடுவீங்க..!!!

ராஜா
06-12-2006, 03:07 PM
ஆசிரியர்: மகாபாரதம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே, வாசுதேவன், தேவகிக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்துக் கொண்ட கம்சன், தனது தங்கை என்றும் பாராமல், தேவகி மற்றும் கண்வன் வாசுதேவனை சிறையில் அடைத்தான். முதல் குழந்தை பிறந்த போது, அக்குழந்தையை விஷம் வைத்து கொன்றான், பின் சிறிது காலம் கழித்து இரண்டாம் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தையை கூரிய வாளின் உதவியோடு கொன்றான். மூன்றாவது குழந்தையை...

மாணவன்: சார் ஒரு சந்தேகம்..

ஆசிரியர்:என்ன சந்தேகம்?

மாணவன்: 8வது குழந்தை பிறந்தால் ஆபத்து என்று தெரிந்திருந்தும், வாசுதேவன், தேவகியை ஏன் ஒரே சிறை அறையில் கம்சன் அடைத்து வைத்தான்?

ஆசிரியர்: .....?

அறிஞர்
06-12-2006, 05:09 PM
ஏது.. அறிஞரே... என்னுடைய நகைச்சுவையை உங்க பின்னூட்டம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுடும் போலருக்கே...!!!
நினைச்சதை சொல்லிருனும் இல்லையா... என்ன நம்ம மக்க யாரும் இதை படிக்கலையா...

எனக்கு உங்க கையொப்பத்தை (வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை)பார்த்து ஒரு சந்தேகம் வருது..... நீங்க புத்திசாலியா........ இல்லையான்னு. :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
06-12-2006, 05:12 PM
" புளியங்கொட்டைகள் சேர சேர கடையில் விற்று காசாக்கிவிடுவேன் கண்ணே..!"

????????????????????????????
அப்பாவி மனைவி.....

புளியங்கொட்டை வியாபாரம் பண்ணினது நீங்க தானா ராஜா....:confused: :confused: :confused: :confused: :confused:

மன்மதன்
07-12-2006, 10:45 AM
படித்தேன் .. ரசித்தேன். ஒரு சில ஏற்கனவே படித்திருந்தாலும் மத்ததெல்லாம் புதுசு ராஜா புதுசு. கலக்குங்க..

அறிஞர்
08-12-2006, 01:58 PM
தலை ; பொறந்துச்சு.. ஆனா ஒவ்வொரு குழந்தை பொறந்த உடனே ஒரு விடலைப் பய ஊரை விட்டு ஓடிப் போயிடுவான்...!!!
நல்ல ஊருப்பா.. விடலை பையன்கள் குறைந்தால் கிழடுகளுக்கு கொண்டாட்டம் தான்.:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
08-12-2006, 01:59 PM
ஒரு நடிகை.. ..!!
உண்மை தத்துவமா.... ஹாலிவுட்டில் நடிகை உள்ளே வரும் வயதே.... அதிகம்... :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
08-12-2006, 02:00 PM
சிங் ; பிற்பட்டோர் 27 பேர்.
மிக பிற்பட்டோர்---17 பேர்
பெண்கள் ----------33 பேர்.
விளையாட்டு வீரர்-- 2 பேர்.
போர் விதவை------ 1 பேர்
சுனாமி பாதிப்பு------ 5 பேர்
பயங்கரவாத பாதிப்பு 5 பேர்
ஊனமுற்றோர்------- 5 பேர்.
அரசியல்வாதிகள்-----4 பேர்.. இடம் இருந்தால்..
விண்வெளி வீரர்-----1 பேர்.
ஜனநாயக நாட்டின் பொறுப்பான பிரதமர்....

அறிஞர்
08-12-2006, 02:01 PM
தெரியும் குருவே... ராப்ரி "தேவியின்" லாலு "பிரசாதம்...!".
உண்மையில் இரயில்வே துறைக்கு லாலு வரபிரசாதம் தான்.. :eek: :eek: :eek:

அறிஞர்
08-12-2006, 02:03 PM
ரெண்டு பேரையும் ஒரே நேரத்திலே ஒரே மருத்துவ மனையிலே சேர்க்கறாப்பல ஆயிருச்சுன்னா, தலைக்கு மேல் ஜான் என்ன.. முழம் என்ன.. போனால் போகட்டும் போடாங்கற முடிவுக்கு வந்துடுவீங்க..!!!
ஆஹா அனுபவஸ்தர்.. ராஜா. பேசுகிறார்... வந்து கேளுங்கப்பா... உபயோகமாக இருக்கும்...

அறிஞர்
08-12-2006, 02:05 PM
மாணவன்: 8வது குழந்தை பிறந்தால் ஆபத்து என்று தெரிந்திருந்தும், வாசுதேவன், தேவகியை ஏன் ஒரே சிறை அறையில் கம்சன் அடைத்து வைத்தான்?

ஆசிரியர்: .....? உண்மையான சந்தேகம்.. தான்... :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

ராஜா
13-12-2006, 03:06 AM
புத்தாண்டு சிறப்பு விற்பனை..வாய்ப்பை நழுவ விடாதீர்.சாதா'ஸ் துணிக்கடை.

உலகிலேயே பெரிய துணிக்கடையாக உருவெடுக்க இருப்பதால்.. லாப நோக்கம் இல்லாமல் அடக்க விலையிலும் ஐம்பது சதவீத தள்ளுபடி. மக்கள் கூட்டம் அலைமோதும் அதிசயம். தன் திருமணத்துக்கும், எதிர் காலப் பேரப் பிள்ளைகளுக்கும் இப்போதே துணி வாங்கும் புத்திசாலித்தனம். ஊரெங்கும் இதே பேச்சு.. சாதாஸ் துணி சட்டித்துணி ஆச்சு..!!
__________________________________________________________________

சாதாஸ் துணிக்கடை பங்கு வெளியீடு துவக்கம்.. பங்குதாரர்களுக்கு அதிக பட்ச டிவிடெண்ட் உத்தரவாதம்.. உடனே முந்துங்கள்...!
__________________________________________________________________

ராஜா
13-12-2006, 03:09 AM
புத்தாண்டு சிறப்பு விற்பனை..வாய்ப்பை நழுவ விடாதீர்.நாய்கள் சிறப்பு விற்பனை..

மிகக் குறைந்த விலையில் வீட்டு நாய்கள்... இரவில் குரைத்து உங்கள் தூக்கத்தை கெடுக்காது.. நீங்கள் காலையில் எழுப்பும் வரை தூங்கக் கூடியது..

எந்த உணவு கொடுத்தாலும் தின்னும்.. குழந்தைகள் என்றால் கொள்ளை விருப்பம்..

காட்டு ராணி வீட்டுப் பிராணி விற்பனை நிலையம்.
____________________________________________________

மாமியாரைக் கடிக்க பயிற்சி பெற்ற நாய்கள் விற்பனை முன்பதிவு முடிந்து விட்டது

ராஜா
13-12-2006, 03:10 AM
புத்தாண்டு சிறப்பு விற்பனை..வாய்ப்பை நழுவ விடாதீர்.

அக்கப்போர் கார்ஸ். எங்களிடம் வாங்கும் கார்களுக்கு இலவசமாக கயிறு தருகிறோம்.
ஒருமுறை எங்களிடம் கார் வாங்கிப் பாருங்கள்.. அப்புறம் நீங்கள் வேறு "எங்குமே" போக மாட்டீர்கள்..!!!

புத்தாண்டு சிறப்பு சலுகை ; 1 முதல் 3 தேதிகளில் வாங்கும் கார்களுக்கு ஆயுட்கால தள்ளி விடும் சேவை இலவசம்.
_________________________________________________________

வேறு எங்கும் சென்று ஏமாறாதீர்கள்.. முதலில் எங்களிடம் வாருங்கள்..!!

ராஜா
13-12-2006, 03:12 AM
புத்தாண்டு சிறப்பு சலுகை..வாய்ப்பை நழுவ விடாதீர்.

கம்சன் குழந்தைகள் பராமரிப்பு நிலையம்.

அலுவலகம் செல்லும் தாய்மார்களே..! ஊர் சுற்றும் தந்தைமார்களே..!

உங்களுக்கு ஒரு நற்செய்தி. உங்கள் குழந்தைகளை காலை முதல் மாலை வரை நாங்கள் கண்ணும் கடுப்புமாய் கவனித்துக் கொள்கிறோம்..

அன்பான ஆயாக்கள்.. உடனடி ஆம்புலன்ஸ் வசதி.!!!

குழந்தைகள் விளையாட ஏற்பாடு.. கார்ட்டூன் சீட்டுக் கட்டுகள்..!!!

சென்னை குப்பத்து பாஷை இலவசமாக கற்றுத் தருகிறோம்..!
___________________________________________________________
முதல் 25 குழந்தைகளுக்கு லாக்-அப்பில் காவலர்களை சமாளிக்கும் வித்தை போதிக்கப்படுகிறது.

ராஜா
13-12-2006, 03:13 AM
புத்தாண்டு சிறப்பு விற்பனை..வாய்ப்பை நழுவ விடாதீர்.ரூ.

217. 25 க்கு 27 இலவச பொருள்கள்..

1. பலாப்பழ தோலில் பஜ்ஜி தயாரிக்கும் இயந்திரம்.

2. பச்சை மிளகாய் அல்வா பாக்கெட்.

3. மாமியார் தொட்டால் ஷாக் அடிக்கும் ரேடியோ.

4. இரண்டு இறக்கை விசிறி..( பனை தொழிலாளர்கள் தயாரிப்பு.)

5. இரு சக்கர தள்ளு வண்டி..( பனை தொழிலாளர்கள் தயாரிப்பு.)

6. ஸ்கேட்டிங், ஜிம்னாஸ்டிக் பயிற்சி முறை.( பழம் உள்ளடங்கியது)

7. இருமும் தொல்லையையும், சளி பிரச்னையையும் உண்டாக்கும் இடத்தை இறுக்கி பிடிக்கும் மூன்று முழ உத்தர தொங்கி.

மற்றும் 20 நாய் விரட்டிகள்.
__________________________________________________________
இந்த விளம்பரத்தை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு கீழ்ப்பாக்கத்தில் இலவச அனுமதி கூப்பன்.

வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு வல்லவன் பட டிக்கட்டும், பழைய வாடிக்கையாளர்களுக்கு தர்மபுரி பட டிக்கட்டும் இலவசம்.

ராஜா
13-12-2006, 03:15 AM
புத்தாண்டு சிறப்பு விற்பனை..வாய்ப்பை நழுவ விடாதீர்.

அமீனா அபார்ட்மெண்ட்ஸ்..

மாதம் 1234 வீதம் 4321 மாதங்கள் செலுத்தி வாருங்கள்..!

சென்னைக்கு மிக அருகில் சீட்டட் வீட்டடி மனைகளை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்..

மனையின் சிறப்பம்சங்கள்..

கூப்பிடு தூரத்தில் கோவையும் திரும்பி பார்த்தால் திருச்சியும் மிக அருகில் அமையப்பெற்ற மனைகள்.

10 நிமிட ஹெலிகாப்டர் பயண தூரத்தில் பல்லாவரம்.

123456789 அடி ஆழத்தில் அருமையான அமெரிக்க குடிநீர்..

மனை தொடர்பான விவாதங்களுக்கும் சந்தேகங்களுக்கும் அருகில் உள்ள மதுரை உயர்நீதி மன்றக் கிளையிலேயே தீர்வு காண வசதி.
--------------------------------------------------------------------------
, அபூர்வ ஊர்வன வகைகள் பண்ணை, படகு குழாம், நீர் விளையாட்டுகள்..முதலிய வசதிகள் வருடத்துக்கு 2 மாதம் இலவசம்.

ராஜா
13-12-2006, 03:18 AM
புத்தாண்டு சிறப்பு திரைப்படம்..காண (த)வராதீர்கள்..!

லிட்டில் 'டூப்'பர் ஸ்டார் வம்பு பாடி, ஆடி, ஓடி, இயக்கி, மயக்கி, கலக்கி, நசுக்கி நடிக்கும்...

அய்யோ சாமி பிக்சர்ஸ்.. வழங்கும்..


தப்பு இசை தென்றல் தலையிடி இசை ஒப்பாரியில்..

தமிழின் முதல் 4டி திரைப்படம்..

"உள்ளே வந்தா உதைப்பேண்டா" (anti dts).

பயங்கரமான பாடல்கள்.. கண்ணுக்கினிய வசனங்கள்.. கண்ணீர் வரவழைக்கும் காமெடி.. மனதைத் தொடும் வில்லத்தனம்..

_____________________________________________

டாய்லெட்டில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவசர நிலையை அனுசரித்து கதவு திறந்து விடப்படும்.
படத்தின் இடையில் எக்காரணத்தைக் கொண்டும் தியேட்டரை விட்டு ஓட அனுமதி கிடையாது.

ராஜா
13-12-2006, 03:21 AM
புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் .

"அய்யோ" தொலைக்காட்சி வழங்கும் அசத்தல் நிகழ்ச்சிகள்..

காலை 6.00 மங்கள இசை.
கொலைகாரன் பேட்டை குணக்கொடி குழுவினர் நாதஸ்வரம்..

காலை 7.00 சிறப்பு உதைக்கும் உத்தரப் பிரதேசம்..
விருந்தினர்.. முத்தமிழ் மொத்துநர் (மீசை) முளைக்காத சிங்கம் மாதவம்.

காலை 9.00

வெட்டி மன்றம்..நடுவர் திரு.சோளமா கேப்பையா

தலைப்பு வம்பு காதல் முறிவு..

நம்புபவர்கள் நாங்கள்.. அணித்தலைவர் ..முனைவர் சொனைகோல் பாண்டியன்
மற்றும் புளுகர் பொன்னையா, அழுகை அனிதா.

வெம்புபவர்கள் நாங்கள்அணித்தலைவர் அறுவை அரசர் அரைப் பட்டினி தாசன்.
மற்றும் கொலைப் பட்டினி குணா, முறைவாசல் முனியம்மா.

11.00 மணி.

சீலம் மிகு செயலட்சுமி..

போலிஸ் புகழ் செயலட்சுமியின் புலம்பல்கள்..

பகல் 3.00

கடலை கன்னியப்பனின் ஊமை கானா..

மாலை 5.00

உலகத் தொலைக்காட்சிகளில் ஒன்பதாவது முறையாக.. திரைக்கு வந்து இரண்டே ரீல்கள் ஒடி டப்பா ஆன சூப்பர் ஹிட் திரைப்படம்..

டண்டான் டமுக்குடா..

ராஜா
13-12-2006, 03:22 AM
புத்தாண்டுக்கு முதல்நாள்.. மனைவி சொன்னாள்..

என்னங்க.. நீங்க புத்தாண்டுக்கு வைர நெக்லேஸ் வாங்கி தர்ற மாதிரி கனவு கண்டேன்.. அதுக்கு என்னங்க அர்த்தம்..

அப்படியா.. நாளை வரை பொறு.. தெரிந்து கொள்வாய்..!

மறுநாள் ஒரு பரிசுப் பொட்டலத்துடன் கணவன் வீட்டுக்கு வந்தான்.. மனைவி எந்நாளும் போல் இல்லாமல் வாசலுக்கு வந்து வரவேற்று உபசரித்தாள்.. புரிந்து கொண்ட கணவன் புன்னகைத்தான்.. பொட்டலத்தை தந்தான்.. மனைவி மகிழ்வுடன் வாங்கி மட்டற்ற ஆவலுடன் பிரிக்க.. உள்ளே இருந்தது...

மணிமேகலை பிரசுரத்தின் ' கனவுகளின் அர்த்தங்கள்' என்னும் நூல்.

arun
13-12-2006, 04:23 AM
எப்படி ராஜா இதெல்லாம் ? சும்மா கலக்கோ கலக்குன்னு கலக்குறிங்க?

தொடர்ந்து இது போல படைப்புகளை படைக்க எனது வாழ்த்துக்கள்

அறிஞர்
13-12-2006, 02:57 PM
புத்தாண்டு சிறப்பு விற்பனை..வாய்ப்பை நழுவ விடாதீர்.சாதா'ஸ் துணிக்கடை.

__________________________________________________________________
திருச்சிக்கார ஆசாமி.. லொள்ளு தாங்கலையே...:eek: :eek:

அறிஞர்
13-12-2006, 03:01 PM
முதல் 25 குழந்தைகளுக்கு லாக்-அப்பில் காவலர்களை சமாளிக்கும் வித்தை போதிக்கப்படுகிறது. ரவுடி ரங்கா குழந்தை முதல் எல்லாரும் இங்கே தஞ்சம்.. :rolleyes: :rolleyes:

அறிஞர்
13-12-2006, 03:11 PM
மணிமேகலை பிரசுரத்தின் ' கனவுகளின் அர்த்தங்கள்' என்னும் நூல்.
ம்ம்ம்.... மனைவியின் கனவு என்றுதான் நினைவாகுமோ :rolleyes: :rolleyes:

ஓவியா
13-12-2006, 05:04 PM
அசத்தல்

நன்றி அண்ணா

ராஜா
20-12-2006, 01:17 PM
அது ஒரு விவாக ரத்து வழக்கு. மகள் 18 வயது வரை தாயிடமே வளரவேண்டும் என்றும், அதுவரை மகளின் பராமரிப்புக்காக மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கணவன் வழங்கி வரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.. அதன்படி 18 வயது நிறைவில் கடைசி தொகையை மகளிடம் கொடுத்த அப்பா சொன்னார்..

" கலா.. .. இதை உன் அம்மாவிடம் கொடு.. இதுதான் நான் தரும் கடைசி தொகை என்று நான் சொன்னதாக சொல்.. பின்னர் அவள் முகம் போகும் போக்கை பார்.. ஒரெ காமெடி்யா இருக்கும்..!"

மகள் அப்படியே செய்தாள்.. அப்பா சொன்னதையும் சொன்னாள்..

அம்மா எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் பதிலளித்தாள்...

"கலா.. அவர்ட்ட சொல்லு.. 18 வயசு வரைக்கும், தனக்கு பொறக்காத ஒரு பெண்ணுக்கு பராமரிப்பு தொகை கொடுத்ததுக்கு நான் நன்றி சொன்னேன்னு.. அப்புறம் அவர் முகம் போகும் போக்கைப் பார்.. ஒரே டிராஜடியா இருக்கும்..!"

ராஜா
20-12-2006, 01:18 PM
ஒரு ஆள் முரட்டு நாய் ஒன்ன அழைச்சுக்கிட்டு வாக்கிங் போனான்.. நாய் அத்துக்கிட்டு போனதோட இல்லாம ஒரு பொம்பளய கடிச்சு வேற வச்சுடிச்சு.. அவ தன் புருஷனை இழுத்துக்கிட்டு வந்துட்டா.. ஓங்கு தாங்கா பெரிய மீசையோட அவனைப் பாத்ததும் நாய்காரனுக்கு பேதி புடுங்கிகிச்சு.. பணத்தைக் கொடுத்து அசமடக்கிடலாம்ன்னு மெதுவா மீசைக்காரனை தனியா அழைச்சுட்டுப் போனான்..

" 1000 ரூபாய்லே இந்த விசயத்தை சமாதானமா முடிச்சுக்கலாம்ன்னு பாக்கறேன்.. நீங்க என்ன சொல்றீங்க..?"

மீசைக்காரன் நாய்க்காரனை ஏற இறங்க பார்த்துட்டு, பையில் இருந்து 1000 ரூபாயை எடுத்து கொடுத்துட்டு சொன்னான்..

" அடுத்த வாரமும் உன் நாயை அழைச்சுட்டு வா.. இன்னொரு 1000 ரூபாய் தரேன்.. என் மாமியார் வராங்க..!!!"

ராஜா
20-12-2006, 01:22 PM
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்களுக்கிடையே பெருந்தகராறு மூண்டது. கணவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் காவல்துறையும், அவர்களால் அமைதிப்படுத்த இயலாததால் துணைநிலை ராணுவமும் அழைக்கப்பட்டும் பலனில்லை. பின்னர் விவகாரம் நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்து நீதிபதியே அங்கு நேரில் வருகை தந்தார்.. ஒவ்வொரு பெண்ணும் மற்றவர்களை குற்றம்சாட்டி கூச்சலிட்டுக்கொண்டிருக்க, நீதிபதி உரத்த குரலில் அறிவித்தார்...

அம்மணிகளே.. அமைதி.. உங்கள் வழக்கை விசாரிக்கவே நான் வந்திருக்கிறேன்.. ஒவ்வொருவராக உங்கள் தரப்பு நியாயத்தை கூறுங்கள்..! முதலில் இங்குள்ளவரில் யார் வயதில் மூத்தவரோ அவர் தன் தரப்பை கூறட்டும்...!!"

அவசரமாக அனைத்து குடியிருப்பு கதவுகளும் அடைக்கப்பட, போதிய ஆதாரம் இல்லாததால் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது...!

ராஜா
20-12-2006, 01:23 PM
ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு.. எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம் மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!!

ராஜா
20-12-2006, 01:29 PM
ஒருவன் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தான். டிராபிக் போலீஸ் அவனை தடுத்து நிறுத்தியது.

கணவன்: என்ன பிரச்சனை சார்?

போலீஸ்: நீங்க 55 கிலோமீட்டர் வேகத்துல போக வேண்டிய இடத்துல 75 கிலோமீட்டர் வேகத்துல போயிருக்கீங்க..

கணவன்: இல்லை சார் நான் 65கிலோமீட்டர் வேகத்தில் தான் போனேன்.
மனைவி: என்னங்க நீங்க 80ல் தானே போனீங்க...

(கணவன் அவன் மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: உங்க வண்டியோட ஹெட்லைட் உடஞ்சிருக்கு..

கணவன்: அப்படியா. சார் நான் அதை கவனிக்கவேயில்லை...

மனைவி: என்னங்க சொல்றீங்க, அது உடைஞ்சி 4 வாரம் ஆச்சே..

(கணவன் மீண்டும் அவனது மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: நீங்க சீட்பெல்ட் போடவே இல்லை..

கணவன்: நீங்க வர்றதுக்கு முன்னாடி தான் சார் நான் அதை அவிழ்த்தேன்.

மனைவி: என்னங்க நீங்க எப்பவுமே சீட்பெல்ட் போடமாட்டீங்களே...

கணவன்: (கோபத்துடன்)நீ கொஞ்சம் வாயை மூடுறியா..

போலீஸ்: மேடம் உங்க கணவர் எப்பவும் உங்களை இப்படி தான் திட்டுவாரா?

மனைவி: எப்பவும் எல்லாம் இப்படி திட்ட மாட்டாரு. தண்ணி அடிச்சிருந்தா மட்டும் தான் இப்படி திட்டுவாரு..

போலீஸ் ; ஓ.. தண்ணி வேறே போட்டுருக்காரா..?

மனைவி ; ஓட்டுநர் உரிமம் இல்லாத டென்ஷனை மறக்க கொஞ்சம் போட்டுருக்கார்..!

போலீஸ் ; அடடா.. உரிமம் இவர்கிட்டே இல்லையா..?

மனைவி ; ஆமாங்க.. திருட்டுக் காரை ஓட்டுறதுக்கு எதுக்கு உரிமம் எல்லாம்..அப்படின்னு கேட்கிறார் சார்..!

போலீஸ் ; ஓஹோ... கார் திருட்டுக்காரா..?

மனைவி ; கொலை செஞ்சுட்டு தப்பி ஓடும்போது ஷோரூம்லே போய் புதுக்கார் வாங்க முடியுமான்னு சொன்னார்..!

கணவன் ; ஏண்டி நீ என் பொண்டாட்டியா.. இல்லே இவர் பொண்டாட்டியா..?

மனைவி ; ஏங்க..? மறந்துட்டீங்களா..? இவர் பொண்டாட்டிய கொலை பண்ணிட்டுதானே தப்பிச்சு போய்கிட்டு இருக்கீங்க..!!!

meera
21-12-2006, 06:07 AM
ஹா ஹா ஹா :D :D :D :D

mukilan
21-12-2006, 06:12 AM
நல்ல வேளை எனக்கு இன்னமும் கல்யாணம் ஆகலை. இல்லைனா சீட் பெல்ட் போடலைனு டிக்கெட் கொடுத்த அக்கா வேற என்ன என்னத்துக்கெல்லாம் டிக்கெட் கொடுத்திருப்பாங்களோ! நல்ல ரவுசுதான் ராஜா! சத்தாய்ச்சிட்டீங்க போங்க!

மதி
21-12-2006, 06:13 AM
அடடா..
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சும்மாவா சொன்னாங்க..?

நம்பிகோபாலன்
21-12-2006, 03:04 PM
என்னை மறந்து சிரிக்கிரேன்....அருமை

ஆதவா
21-12-2006, 03:21 PM
ஏற்கனவே ராஜா அண்ணன்கிட்ட 1000 ரூபாய் கேட்டேன்... இப்போ திரும்பவும் கேட்க வைக்கிறாரே!!!! அண்ணா!!!! வவுத்து வலி தாங்க முடியலீங்ணா!!!!

அறிஞர்
21-12-2006, 03:37 PM
ராஜா பொறுமையா படித்து தனித்தனியாக கருத்து கொடுக்க ஆசை....
----
பலரை சிரிக்க வைக்க இன்னும் கொடுங்கள்..

மன்மதன்
21-12-2006, 07:18 PM
எங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிற உங்களுக்கு ஏதாவது கொடுத்தே தீரணும் ராஜா .. ஏம்மா மீரா.. அந்த 43ம் நம்பர் ஜாடியை எடு :D :D

gayathri.jagannathan
22-12-2006, 05:45 AM
ராஜா... எப்படிப்பா இந்த மாதிரி நகைச்சுவையை அள்ளி விடறீங்க? கலக்கிட்டிங்க.....ரொம்ப நல்லாயிருந்தது.... அதுவம் அந்த டாக்டர் 43ம் நம்பர் ஜாடி.... கலக்கல்.....அட்டகாசம்....

ராஜா
24-12-2006, 08:23 AM
ரோட்டுல ரெண்டுபேரு கட்டிப் புரண்டு சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க.. பக்கத்துலே ஒரு சின்னப் பையன் நின்னுக்கிட்டு "அப்பா... அப்பா.." ன்னு அழுதுக்கிட்டு இருந்தான்.. அந்த வழியா போன ஒருத்தர் அந்தப் பையனை என்னவென்று விசாரித்தார்..
அப்போதும் அப்பா... அப்பா.. என்று அழுதவனை இதிலே யாருடா உங்கப்பா..? என்று கேட்டார்.. பையன் சொன்னான்..

"அதை முடிவு பண்ணத்தான் ரெண்டுபேரும் அடிச்சுக்கறாங்க...!"

ராஜா
24-12-2006, 08:27 AM
ஒருவன் மதுக்கடையில் மூக்கு முட்ட குடித்தான்.. பின்னர் வீட்டுக்கு திரும்ப நினைத்தபோது அவனால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை..குப்புற விழுந்து கிடந்தவன், "சே.. குடித்தாலே இப்படித்தான்.. இனிமேல் குடிக்கக்கூடாது..இப்போது மற்றவர்கள் கேலி செய்யுமுன் எவ்வாறாவது சுதாரித்து எழுந்து வீட்டுக்கு போகவேண்டும்.." என எண்ணியவாறே மீண்டும் எழ முயற்சித்த போது, மறுபடியும் தவறி சேற்றில் விழுந்து விட்டான். முகமெல்லாம் சேறு.. "சரி..இனி தவழ்ந்தாவது வீட்டுக்கு செல்வேன்..இனி விழுந்து மற்றவர்களின் கேலிக்கு இலக்காக மாட்டேன்.." என்று முடிவு செய்து இரவு முழுவதும் தவழ்ந்து வீட்டுக்கு வந்தவன் சோர்வு மிகுதியால் வாசல் படியிலேயே தூங்கி விட்டான்.

காலையில் வாசல் தெளிக்க கதவைத்திறந்த மனைவி அவன் முகத்திலும் தெளித்து எழுப்பினாள்.. கணவன் அசட்டுச் சிரிப்புடன் கண் விழிக்க.. மனைவி கேட்டாள்..

" மறுபடியும் குடிக்க போயிட்டீங்களா..?"

"அட.. எப்படி தெரியும்..?"

" சக்கர நாற்காலியை விட்டுட்டு வந்துருக்கீங்களே.. மதுக்கடையிலே தானே இருக்கு..?

ராஜா
24-12-2006, 08:32 AM
ஒரு வகுப்பில் ஆசிரியை ஆண்பால், பெண்பால் இவற்றைப் பற்றி கற்பித்துக் கொண்டிருந்தாள்.. மனித இனத்துக்கு அப்பால் ஆங்கில மொழியில் எவை எவைக்கு பாலின பாகுபாடு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தாள்.. (உங்க கலவரம் எனக்கு புரியுது மக்கா.. இதிலே அசைவமும் இல்லே... அந்தப் பய சின்னாவும் இல்லே.. நிம்மதியா தொடருங்கப்பு.. ) சூறாவளிகள், நீர் ஊர்திகள் இவற்றிற்கும் பெண்பாலிட்டு குறிப்பிடப்படுவது ஏன் என்று பாடம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மாணவன் ஒரு சந்தேகத்தை எழுப்பினான்..

" கணினி ( என் சந்தேகம் கணிணியா அல்லது கணினியா..?) ஆணா... பெண்ணா..?

ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினாள்..

மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ..

1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..

2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..

3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..

4) எந்த நேரத்துல புகையும்... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..

5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...!

மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க..

அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ...

1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..

2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..

3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்.. ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..

4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை.. ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!

ராஜா
24-12-2006, 08:42 AM
சம்பவம் ஒன்று.. விளைவுகள் இரண்டு..
___________________________________________________________________
ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம்.

உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா..
"தரோவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்.."
____________________________________________________________________
ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா...சோம்பேறி.

அவராலே செய்யமுடியலேன்னா....." நேரம் இல்லே.."
____________________________________________________________________
எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா..." முட்டாள்தனம்"

அவர் பண்ணினா.." அவரும் மனுஷந்தானே..கடவுளா..?"
--------------------------------------------------------------------
நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்"

அவர் செஞ்சா.." முன்னுதாரணம்"
--------------------------------------------------------------------
நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா.."பிடிவாதம்"

அவர் அப்படி நெனைச்சா..." கொள்கையில் உறுதி.."
--------------------------------------------------------------------
நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா.." காக்கா பிடிக்கறீங்க."

அவர் முதலாளிக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டா.." ஒத்துழைப்பு..பணிவு"
--------------------------------------------------------------------
நீங்க அலுவலக் நேரத்திலே வெளியே இருந்தா.." ஊர் சுத்தறீங்க"

அவர் இருந்தா.. " பாவம்.. நாயா அலையறார்.. மாடா உழைக்கறார்.."
--------------------------------------------------------------------
நீங்க உடம்புக்கு முடியலேன்னு ஒருநாள் லீவு போட்டா.. வேறே கம்பெனிக்கு முயற்சி பண்றீங்க"

அவர் லீவு போட்டா..ஓவரா உழைச்சு உடம்ப கெடுத்துக்கிட்டார்.."

ராஜா
24-12-2006, 10:50 AM
[b]

சின்னாவுக்கு திடீரென்று ஒரு சக்தி கிடைத்தது.. அதை வைத்து எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்தான்..

ஒரு நாள் பூனை அவனை பிராண்டிவிட்டது.. அன்று இரவு படுக்கப் போகும்போது இறைவனை இவ்வாறு வேண்டினான்..

" கடவுளே .. அன்னையைக் காப்பாற்று.. தந்தையை காப்பாற்று.. என் நாய்க்குட்டியைக் காப்பாற்று.. பூனை எக்கேடொ கெட்டுப் போகட்டும்...!"

மறுநாள் கொல்லைப் புறத்தில் பூனை செத்துக் கிடந்தது.

இன்னொரு நாள் நாய் சின்னாவின் நண்பனைக் கடித்து விட்டது. சின்னா இவ்வாறு வேண்டினான்..

" கடவுளே .. அன்னையைக் காப்பாற்று.. தந்தையை காப்பாற்று.. என் நாய்க்குட்டி எக்கேடொ கெட்டுப் போகட்டும்...!"

மறுநாள் நீங்கள் நினைப்பது போலவே நாய் "பணால்...!"

கொஞ்ச காலத்துக்கு எல்லாம் நல்லபடியாகவே போய்க் கொண்டிருந்தது. காலாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் சின்னாவை அப்பா சுளுக்கு எடுத்துவிட்டார்..

சின்னா இரவு வேண்டுதலில் தன் சக்தியைக் காட்ட, அப்பாவை திகில் ஆட்டிப் படைக்கத் தொடங்கியது.. இரவெல்லாம் தூங்கவில்லை.. வீட்டில் இருந்த தண்ணீரையெல்லாம் குடித்தும் பதற்றம் குறையவே இல்லை.. அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.." உங்களுக்கு ஒண்ணும் ஆகாது.. தூங்குங்க.." ஊஹூம்.. அவர் பைத்தியம் பிடித்தது போல திரிந்துகொண்டுதான் இருந்தார் இரவெல்லாம்..

இரக்கமற்ற அந்த இரவு ஒருவழியாக கழிந்தது.பொழுது புலர்ந்தது..என்ன ஆச்சர்யம்.. அப்பாவுக்கு ஒன்றும் ஆகவில்லை.. பகல் வெளிச்சம் மேலும் தென்பைத் தர, அப்பா கொல்லைக் கதவைத் திறந்து கிணற்றடிக்கு சென்றபோது...




























































































































பக்கத்து வீட்டுக்காரன் காம்பவுண்டு சுவரில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தான்..!

( இப்போ என்னை நல்லா திட்டியிருப்பீங்களே... போகட்டும்.. கொஞ்சம் கோபிச்சுக்காம இந்த ஜோக்கை இன்னொரு முறை படியுங்க.. போன தடவை புரியாத ஒரு விஷயம் இப்போ புரியும்..!).

ராஜா
01-01-2007, 10:42 AM
உளுந்தூர் பேட்டை மோட்டல்.. ஒரு கிழட்டு லாரி ஓட்டி சாப்பிட்டுக்கிட்டு இருந்தார்.. அப்போ 4 மோட்டார் சைக்கிள்ல ஒரு கும்பல் எங்கேயோ போயிட்டு வந்தானுங்க.. மோட்டலுக்குள்ள நுழைஞ்சவனுங்களுக்கு கிழ ட்ரைவரைப் பார்த்ததும் குஷி கெளம்பிடுச்சு..

ஒருத்தன் வழுக்கை தலையிலே ஒரு தட்டு தட்டுனான்..
இன்னொருத்தன் தான் குடிச்சுட்டு இருந்த சிகரெட் சாம்பலை ட்ரைவர் தண்ணி டம்ளர்லே ஒரு தட்டு தட்டுனான்..
மற்றொருவன் அவர் உக்காந்துருந்த நாற்காலியை ஒரு தட்டு தட்டுனான்..
பிறிதொருவன் அவர் சாப்பிட்டுட்டு இருந்த தட்டை எடுத்து அவர் தலையிலேயே தட்டிக் கவிழ்த்தான்..

ட்ரைவர் ஒண்ணுமே பேசல.. காசக் குடுத்துட்டு கிளம்பிட்டாரூ.

இந்த பசங்கள்ள ஒருத்தன் கல்லாவுல உக்காந்துருந்த பொண்ணுக்கிட்ட போயி சொன்னான்..

என்னா ஆளு இவன்.. எவ்வளவு அட்டகாசம் பண்ணினோம்..? தட்டி கேட்கவே இல்லையே..?
சரியான ஆம்பள இல்ல போலருக்கு.. ஏன் பாப்பா..?

சரியான ஆம்பளை இல்லையோ என்னமோ தெரியலே.. ஆனா சரியான ட்ரைவர் இல்ல போலருக்கு.. இப்பதான் இங்கே நின்னுட்டு இருந்த 4 புது மோட்டார் சைக்கிள தட்டி எறிஞ்சுட்டு போனார்..

நல்லா இருக்கா..? எங்க தட்டுங்க கையை..!

ராஜா
01-01-2007, 10:44 AM
கடவுள் கழுதையைப் படைத்தார்..

நீ பொதி சுமப்பாய்.. காகிதத்தால் பிழைப்பாய்.. உன் ஆயுள் 30 ஆண்டு.

கழுதை அப்படியானால் 20 ஆண்டே போதும் என்றது.

கடவுள் நாயைப் படைத்தார்..

வீட்டைக் காப்பாய்.. மனிதன் போடும் மிச்சத்தை தின்பாய்.. உன் ஆயுள் 30 ஆண்டு.

என் நாய்ப் பிழைப்புக்கு 15 ஆண்டே அதிகம் என்றது நாய்.

கடவுள் குரங்கைப் படைத்தார்..

நீ அங்கும் இங்கும் தாவுவாய்.. சேட்டைகள் செய்வாய்.. உனக்கு ஆயுள் 20 ஆண்டு.

குரங்கு 10 ஆண்டே போதும் என்றது.

கடவுள் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு மனிதனைப் படைத்தார்..

நீ புத்திசாலியாக இருப்பாய்.. அனைத்து மிருகங்களையும் அடக்கி ஆள்வாய்.. உனக்கு 20 ஆண்டுகள் ஆயுள்..

மனிதன் சொன்னான்.. எனக்கு 20 ஆண்டு போதாது.. கழுதை வேண்டாமென்ற 30 ஆண்டுகளையும், நாய் மறுத்த 15 ஆண்டுகளையும், குரங்கு ஒதுக்கிய 10 ஆண்டுகளையும் எனக்குத் தாருங்கள்..

கடவுள் மனசுக்குள் சிரித்தவாறே அப்படியே ஆகட்டும் என்றார்..

அதனால்தானோ என்னவோ.. மனிதனாக முதல் 20 ஆண்டுகள் வாழ்கிறான்..

பின்னர் குடும்பத்துக்காக பொதி சுமக்கிறான்.. அலுவலகக் காகிதத்தால் பிழைப்பு நடத்துகிறான்..

அப்புறம் ஈட்டிய செல்வங்களைக் காக்க நாய் போல சுற்றி சுற்றி வருகிறான்.. எல்லாரிடமும் வள்'ளென்று விழுகிறான்.. டாக்டர் சாப்பிட அனுமதிக்கிற மிச்ச மீதியை தின்று காலத்தை ஓட்டுகிறான்..

கடைசியாக வாழ இடம் கிடைக்காமல் மகன் வீடு, மகள் வீடு, உறவினர் வீடு, என்று தாவிக்கொண்டே இருக்கிறான்.. பேரன் பேத்திகளுக்கு விளையாட்டு காட்டி சிரிக்க வைக்கிறான்..


இதற்குத் தான் ஆசைப்பட்டாயா மனிதகுமாரா..?

ராஜா
01-01-2007, 10:46 AM
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப் பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை.. எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.." மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

ராஜா
01-01-2007, 10:48 AM
சின்னாவின் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சின்னா ஒருநாள் தன் வளர்ப்புப் பிராணியான குரங்கு குட்டி ஒன்றை அழைத்து வந்தான்.. அது செய்த அட்டகாசம் சொல்லி மாளாது.. தாவுவதும் குதிப்பதும் கண்டதையும் எடுத்து விழுங்குவதுமாக அட்டூழியம் செய்தது. திடீரென்று ஒரு கிரிக்கெட் பந்தை எடுத்து விழுங்கிவிட்டது. பையன்கள் ஆரவாரம் செய்ய டேனி வந்து விபரம் அறிந்து கத்தினார்..

"டேய் சின்னா.. உன் குரங்கை அடக்கி வைக்கப் போகிறாயா இல்லையா..?

பூப்பந்து ஆடிக்கொண்டு இருந்த சின்னா உடன் வந்து குரங்கை அழைத்து சென்றுவிட்டான்.. இருந்தாலும் பையன்கள் எல்லாம் முழு கிரிக்கெட் பந்தை விழுங்கிய குரங்கின் சாமர்த்தியத்தை ஆச்சரியமாக டேனியிடம் சொல்லி வெறுப்பேற்றினர்..

விளையாட்டுப் போட்டிக்கு முதல்நாள் அதே குரங்கை மீண்டும் சின்னா அழைத்து வந்தான்.. டேனி அந்தக் குரங்கின் நடவடிக்கையை குரோதமுடனும் அதே நேரத்தில் ஆர்வமுடனும் கண்காணித்து வந்தார்.. என்ன குற்றம் கண்டுபிடித்து இந்த குரங்கை விரட்டலாம் என்ற சிந்தனையுடன்... குரங்கு வழக்கம்போல இல்லாமல் கொஞ்சம் எச்சரிக்கையாகவே எல்லா வேலைகளையும் செய்தது. திடீரென்று ஒரு பூப்பந்தை எடுத்து தன் பின்புறத்தில் வைத்து திணித்தது.. பின் அதை எடுத்து வாயில் போட்டு விழுங்கியது..

டேனி பொறுமையிழந்து கத்தினார்.. "டேய் சின்னா.. உன் குரங்கு என்ன வேலை செய்யுது பாரு.."

சின்னா அமைதியாக சொன்னான்..

" அன்னிக்கு கிரிக்கெட் பந்தை முழுங்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டிருச்சு சார்.. அதிலேருந்து அளவு பார்க்காம எதையும் முழுங்குறதே இல்ல...!"

ராஜா
01-01-2007, 10:49 AM
டேனி ; சின்னா.. மது பழக்கம் கூடாது..

சின்னா ; அப்படியே அய்யா..!

டேனி ; மாது சிந்தனை கூடவே கூடாது..

சின்னா ; அப்படியே அய்யா..!

டேனி ; மாமிசம் ஆகாது..

சின்னா ; அப்படியே அய்யா..!

டேனி ; சூது ஆகவே ஆகாது..

சின்னா ; அப்படியே அய்யா..!

டேனி ; நாட்டுக்காக உயிரிழக்க தயங்கவே கூடாது..

சின்னா ; அதைத்தான் செஞ்சாகணும்.. அப்புறம் வெட்டியா இந்த உயிரை வச்சுக்கிட்டு என்ன செய்யறது..?

டேனி ; ???????????????????????

ராஜா
12-01-2007, 03:57 PM
பொருள்களைத் தொலைத்தவர்கள், பறிகொடுத்தவர்கள் ஆகியோருக்கு அவர்கள் உடைமைகளை கைப்பற்றி திரும்பத் தருவதை ஒரு விழாவாக காவல் துறை நடத்தியது. ஏற்கனவே புகார் கொடுத்திருந்தவர்கள் ஆனாலும், மீண்டும் ஒருமுறை அவர்கள் வாயால் தொலைந்த பொருட்களின் பட்டியலைக் கேட்டு சரிபார்த்த பின்னரே ஒப்படைத்தார்கள்.

பெறுவோர்க்கான வரிசையில் தன் கைப்பையை பறிகொடுத்த ஒரு பெண்மணியும் நின்றிருந்தாள்.. ஆனால் அவளுக்கு என்னென்ன பொருட்கள் உள்ளே இருந்தன என்று சரியாக நினைவுக்கு வரவில்லை. குழப்பத்துடன் இருந்த அவள் முறை வந்த போது சோதனையாக காவல் துறை தலைவர் முதல் அனைத்து அதிகாரிகளும் அங்கு வந்து விட்டனர்.

போதாததற்கு சன் தொ.கா. படப்பிடிப்பாளரும் வந்து விட்டார்.. அம்மணி இன்று நாம் அவமானப்படப் போவது உறுதி என்ற முடிவுடன் இருந்த போது அவள் கைப்பையும், பொருட்களும் தனியாகக் கொடுக்கப்பட்டன. வேறெந்த கேள்வியும் இல்லை.

எல்லாவற்றையும் உள்ளே எடுத்து வைத்துக் கொண்டு புறப்படும் போது ஆவல் மிகுதியில் கா.து. தலைவரைக் கேட்டாள்..

" அய்யா.. என்னை மட்டும் ஏன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை..?"

" அம்மணி.. டி.வி. நிருபர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்களே எதற்காகத் தெரியுமா..? ஒரு சின்னக் கைப்பையில் அரை லாரி பொருட்களை எப்படி எடுத்து வந்தீர்கள் என்று பார்க்கத்தான்.. எப்போது அவ்வளவு பொருட்களையும் உள்ளே வைத்தீர்களோ அப்போதே தெரிந்து கொண்டோம்.. நீங்கள் தான் உண்மையாக தொலைத்தவர் என்று..!"

ராஜா
12-01-2007, 03:58 PM
சுடச் சுட பிட்ஸாவை கொண்டு வந்து கொடுத்தான் அந்த இளைஞன்.
வீட்டுக்காரர் கேட்டார்..

"எவ்வளவு டிப்ஸ் வேண்டும்..?"

அய்யா.. நான் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளேன்.. இங்கு வரும்போது பழைய ஆட்கள் உங்களிடம் பைசா பெயராது என்று சொல்லி அனுப்பினார்கள்..

" அப்படியா சொன்னார்கள்..? இந்தா 100 ரூபாய்.. வைத்துக்கொள்.."

"நன்றி அய்யா.. இது நான் எழுதிக்கொண்டிருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உதவியாக இருக்கும்.."

"அப்படியா..? என்ன கட்டுரை எழுதுகிறாய்..?

" கஞ்சர்களிடம் காசைக் கைப்பற்றுவது எப்படி..!"

ராஜா
12-01-2007, 03:59 PM
ஐ.நா.சபையின் நல்லெண்ணப் பயணமாக ஒரு அமெரிக்க விவசாயி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அங்கு ஒரு ஆஸ்திரேலிய விவசாயியை சந்திக்க, அவர் தன் பெரிய கோதுமை வயலைச் சுற்றிக் காட்டினார். உடன் தங்களுக்கே உரிய அலட்டல் தன்மையுடன் அமெரிக்கர் சொன்னார்.. "

என்னுடைய பண்ணை இதைவிட நான்கு மடங்கு பெரியது..!"

அடுத்து தன் மாட்டுப் பண்ணையை ஆஸ்திரேலியர் காட்ட, அமெரிக்கர்..

" என் மாடுகளின் கொம்ம்புகள் உங்கள் மாடுகளைப் போல் இருமடங்கு பெரிதாக இருக்கும்..!"

அவர்கள் நகருக்கு திரும்பும்போது திமு திமுவென கங்காருகள் குதித்து ஓடுவதைப் பார்த்து மிரண்டு போன அமேரிக்கர் கேட்டார்..

" அவை என்ன மிருகங்கள்..?"

வாய்ப்புக்கு காத்திருந்த ஆஸ்திரேலியர் பதிலடி கொடுத்தார்...

" ஏன் உங்க நாட்டில் நீ சுண்டெலிகளைப் பார்த்ததில்லையோ..?"

ராஜா
12-01-2007, 03:59 PM
நாய் 1 ; லொள்..லொள்..

நாய் 2 ; லொள்..லொள்..

நாய் 1 ; லொள்..லொள்..

நாய் 2 ; வவ்..வவ்.. வவ்,,

நாய் 1 ; நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. எதுக்கு இப்போ பேச்சை மாத்துறே..?

ஆதவா
12-01-2007, 04:10 PM
அருமை நண்பரே!!!!

மன்மதன்
12-01-2007, 04:41 PM
அட்டகாசம்..அட்டகாசம்..வவ்..வவ்...:D :D

மதுரகன்
12-01-2007, 07:13 PM
சிரிப்பு வெடி என்பதற்கு இங்குதான் அர்த்தம் புரிந்தது நண்பரே :) :) அற்புதம்... :0 :0 :0

tamil81
13-01-2007, 07:37 PM
சில நிரந்தர விதிகள்..

எதுக்காவது வரிசையிலே நிக்கிறோம்ன்னு வச்சுக்கங்க.. நாம் நிக்கிற வரிசை மட்டும் நகரவே நகராது.. மத்த வரிசையெல்லாம் கிடு கிடுன்னு கரையும்.. கவனிச்சிருக்கீங்களா..?

தப்பா நம்பர் அடிச்சு போன் பண்ணினோம்ன்னு வைங்க.. எங்கேஜ்டா இருக்காது.. தப்பு நம்பர் எதிராளி தொடர்பு எல்லைக்குள்ளேயே இருப்பான்.. லொடக்குன்னு 2 ரூபா காலியாயிடும்..!

பைக்கையோ காரையோ தெரிஞ்சவரைக்கும் ரிப்பேர் பார்த்துட்டு, கையை ஆயிலாவோ, கிரீஸாவோ வச்சுருக்கோம்ன்னு வைங்க.. அப்பத்தான் மூக்கு அரிக்கும்.. உண்டா இல்லையா..?

உங்க முதலாளி ஏன் லேட் ன்னு கேட்டு வண்டி பஞ்சர் ன்னு சொல்லி சமாளிச்சுடுவீங்க.. சோதனையா மறுநாள் உண்மையாவே பஞ்சர் ஆகி முதலாளிக்கிட்டே பேய் முழி முழிச்சுருக்கீங்களா இல்லையா..?

வீட்டை பூட்டிட்டு வெளிலே கெளம்பும்போது தொலைபேசி ஒலிக்கும்.. திறந்து உள்ளே வர்றதுக்குள்ள நின்னு போயிடும்..

ஒரு முக்கியமான ஆளு அவங்கூட சேராதே ன்னு சொல்லியிருப்பாங்க. நீங்களும் சின்சியரா சரின்னுருப்பீங்க.. மறுநாளே அவ்னோட சுத்தறத அந்த முக்கியமானவங்க பாத்துடுவாங்க.. வாசஸ்தவம் தானே..?

ஒரு மேஜிக்'கையோ, இல்லே வேறே எதாவது வித்தையையோ கத்துட்டு வந்துருப்பீங்க. ஒரு ஆள அசத்தணும்ன்னு அதை செஞ்சு காமிக்கறப்போ சொதப்பிடும்.. அவங்க போனப்புறம் ஒரு தடவை செஞ்சு பார்ப்பீங்க.. கரெக்டா வரும்.. அப்படி நொந்து நூலாயிருக்கீங்களா இல்லையா..?

கொட்டாவி விட்டுட்டு வெட்டியா உக்காந்து இருப்பீங்க.. ஒரு வேலையும் இருக்காது.. ஒரு டீ சாப்பிடலாம்ன்னு கப்பை கையிலே எடுப்பீங்க.. உடனே ஒரு வேலை வானத்துலேருந்து குதிக்கும்.. சூடா அந்த டீயை குடிக்க விடாமப் பண்ணிடும்.. அனுபவிச்சுருக்கீங்களா..?


உண்மை உண்மை

மன்மதன்
15-01-2007, 06:56 AM
அதே அதே :D :D

Narathar
21-01-2007, 01:24 AM
நாராயணா!!!!!

எனக்கும்ட்டும்தான் இப்படின்னி நெனச்சேன் எல்லோருக்குமா?

ஓவியா
21-01-2007, 01:10 PM
ராஜா அண்ணா,

அடுத்த கடி குண்டுகளை போடவும்,

(எங்கே அண்ணாவை ஆளையே காணோம்??)

omnlog03
21-01-2007, 02:03 PM
very nice jokes

ராஜா
28-01-2007, 10:25 AM
ஒரு விற்பனைப் பிரதிநிதி. அவர் பெயர் செல்லப்பா. அவருக்கு அவசரமாக 3 நாட்கள் விடுமுறை தேவைப்பட்டது.. முதலாளியிடம் கேட்க, அவரோ செல்லப்பா அலுவலகம் தொடர்பான பயணம் ஒன்று போகவேண்டி இருப்பதாகவும் அதை முதலில் கவனிக்கும்படியும், போய்வந்த பின்னர் விடுப்பு வழங்குவதாகவும் சொன்னார்.

சரி என்று செல்லப்பா டூர் கிளம்பினார்.. போய்ச் சேர்ந்த அன்றே கடும் புயல் காற்று.. மின்சாரம் பழுது பட்டு விட்டது. சாலைத் தொடர்புகள் துண்டிக்கப் பட்டுவிட்டன. இவர் போன விஷயம் தொடர்பான வேலைகளைக் கவனிக்க இயலாது போயிற்று. முதலாளியுடன் செல்பேசியில் தொடர்பு கொண்டு, நிலைமை சீரடைய 3 நாட்கள் ஆகுமென்றும், அடுத்து என்ன செய்யலாம் எனவும் அறிவுரை கேட்டார்.. முதலாளி சொன்னார்..



" சரி.. நீ கேட்ட அந்த 3 நாள் விடுப்பை எடுத்துக் கொள்.. இன்றிலிருந்து விடுமுறை தொடங்குகிறது. பயணப் படி கிடையாது.. விடுப்பு முடிந்தவுடன் நான் சொன்ன வேலையை முடித்துவிட்டு வா...!"
__________________

ராஜா
28-01-2007, 10:27 AM
ஒருநாள் நள்ளிரவில்..

ஒரு மருத்துவர் வீட்டின் படுக்கையறையில் உள்ள குளிர் சாதன இயந்திரம் பழுது பட்டு விட்டது. மருத்துவரால் தூங்க இயலவில்லை. உடனே தனக்கு பழக்கமான கம்மியர் (மெக்கானிக்) ஒருவருக்கு தொலைபேசினார்.

பாதித் தூக்கத்தில் எழுந்த கம்மியர், "காலையில் பார்த்துக் கொள்ளலாமே அய்யா.." என்றார். வெகுண்டு போன மருத்துவர், உங்களுக்கு ஒரு அவசரம் என்றால் பாதி ராத்திரியில் என்னை எழுப்பி மருந்து கேட்பீர்கள்.. எனக்கு மட்டும் உதவக் கூடாதா..?" என்று சூடாகக் கேட்டார்.

எதிர் முனையில் சில வினாடிகள் நிசப்தம்.. பின்னர் கம்மியர் சொன்னார்...

" அய்யா.. இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு ஆஸ்பிரின் மாத்திரையைப் போடுங்கள்.. வெந்நீர் குடிக்க கொடுங்கள்.. சரியாகவில்லை என்றால் காலையில் அழைத்து வாருங்கள்..!
__________________

ராஜா
28-01-2007, 10:27 AM
வீட்டுக்கார'னு'ம் பிச்சைக்கார'ரு'ம்..

ஏம்பா உனக்கு 5 ரூபாய் போட்டா என்ன பண்ணுவே..?

வாயார வாழ்த்துவோம் சாமி..

25 பைசா போட்டா..?

எங்க செலவுல திருவோடு வாங்கித் தருவோம்....!
__________________

ராஜா
28-01-2007, 10:28 AM
உணவு விடுதியில் காதலனும் காதலியும்...

காதலன் ; அன்பே.. நாம் இருவரும் ஒன்றறக் கலந்து விட்டோம் கண்ணே..!

காதலி ; அந்தக் கதையே வேணாம்.. ஒழுங்கா ரெண்டு ரவா தோசைக்கு ஆர்டர் கொடுங்க.. கஞ்சப் பிசிநாறி...!

ராஜா
28-01-2007, 10:29 AM
கணவனும் மனைவியும்..

அன்பே.. உண்மையில் நீங்கள் என் மீது உயிரை வைத்திருக்கிறீர்களா..?

ஆமாம்.. அதில் சந்தேகம் வேறா..?

நான் இறந்தால் அழுவீர்களா..?

கண்டிப்பாக...

எங்கே.. அழுது காட்டுங்கள்..

லேடீஸ் ஃபர்ஸ்ட்...!
__________________

ராஜா
28-01-2007, 10:29 AM
அமெரிக்காவைச் சுற்றிப்பார்க்க ஒரு ரஷ்யர் வந்தார். ஒரு வழிகாட்டி அமெரிக்கப் பெருமைகளை சொல்லி ரஷ்யரை வெறுப்பேற்றிக் கொண்டே இருந்தான்.. கடைசியாக வெள்ளை மாளிகைக்கு வந்தார்கள்..

வழிகாட்டி ; இது எங்கள் அதிபரின் இருப்பிடம். இங்கு நின்று "புஷ் ஒரு கழுதை..!" என்று நாங்கள் சொல்லலாம்.. அந்த அளவுக்கு எங்கள் சனநாயகம் உயர்வானது.. உங்களால் உங்கள் நாட்டில் உங்கள் அதிபர் மாளிகையில் இவ்வாறு சொல்ல முடியுமா..?

ரஷ்யர் ; ஓ..சொல்லலாமே.. கிரெம்ளின் மாளிகை முன்பு நின்று "அமெரிக்க அதிபர் புஷ் ஒரு கழுதை" என்று சொன்னால் எல்லோரும் வரவேற்கவே செய்வார்கள்...!
__________________

ராஜா
28-01-2007, 10:31 AM
ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார். வழிகாட்டியிடம் பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.

அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை கொடுத்து 'காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி பேரை சொல்லிட்டு போவோம்...!
__________________

ராஜா
28-01-2007, 10:31 AM
ஏன் தாத்தா.. காந்தி நல்லவர் தானே..?

ஆமாம்.

நேர்மையாளர் தானே..?

ஆமாம்.

திருட்டு, ஏமாற்று இதெல்லாம் செய்ய மாட்டார் தானே..?

ஆமாண்டா. ஏன் இதெல்லாம் கேட்கிறே..?

அப்புறம் ஏன் அவர் பிறந்த நாளுக்கு வங்கிகளை மூடி வைக்கிறாங்க..?
__________________

ராஜா
28-01-2007, 10:32 AM
மின் தூக்கியில் (லிஃப்ட்) கணவனும் மனைவியும்.. கணவன் ஒரு அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க, திடீரென்று அழகி அவனை அறைந்தாள். கணவன் அதிர்ச்சியடைந்து "ஏன் இப்ப அறைஞ்சே..?" என, " எதுக்கு என் இடுப்பைக் கிள்ளினே..?" என்றாள். கணவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே என்று அவமானம் வேறு.

மின் தூக்கி நின்று எல்லோரும் வெளியேற, மனைவி சொன்னாள்..

"அதையே யோசிச்சுட்டு இருக்காதீங்க.. நாந்தான் அவளைக் கிள்ளினேன்..!"

ராஜா
28-01-2007, 10:32 AM
பெண்கள் புள்ளிவிபரப் புலிகள்.. கணித மேதைகள்..

தன் வயதில் 7 அல்லது 8 ஆண்டுகளைக் குறைப்பார்கள்..

தோழியின் வயதில் 5 அல்லது 6 வருடத்தை கூட்டி நிவர்த்தி செய்வார்கள்.

தன் புதுப் புடவைக்கு விலையை இரட்டிப்பாக்குவார்கள்..

அடுத்தவளின் புடவையின் மதிப்பை பாதியாக்குவார்கள்..

கணவரின் ஏவலர் வேலையை "இவரில்லாமல் எதுவும் நடக்காது" என்ற வகையில் உயர்த்துவார்கள்..

எதிரியின் கணவர் முதலாளியாக இருந்தால் கூட " என் கணவர் கதவைத் திறந்து அனுமதித்தால்தான் அவர் உள்ளேயே நுழைய முடியும்" என்னும் வகையில் தாழ்த்துவார்கள்.

என்றாலும் நல்லவர்கள்.. (இன்னும் இருக்கு..).
__________________

ராஜா
28-01-2007, 10:33 AM
[B][பியூலாஸ்ரீ ; நேத்து படத்துல நான் சாகற காட்சியில என் நடிப்பைப் பார்த்துட்டு என் கணவர் அழுதுட்டார்டி..

தோழி ; நடிப்பைப் பார்த்தா.. இல்லே நடிப்பு தானேன்னா..?
__________________/B]

leomohan
28-01-2007, 10:33 AM
வீட்டுக்கார'னு'ம் பிச்சைக்கார'ரு'ம்..

ஏம்பா உனக்கு 5 ரூபாய் போட்டா என்ன பண்ணுவே..?

வாயார வாழ்த்துவோம் சாமி..

25 பைசா போட்டா..?

எங்க செலவுல திருவோடு வாங்கித் தருவோம்....!
__________________

ஓ அந்த நிலைமக்கு வந்துட்டாங்களா. 25 பைசாவை நிறுத்த சொல்லவேண்டியதுதான் அரசாங்கத்திடம்.

ராஜா
28-01-2007, 10:33 AM
அது ஒரு பெரிய மருத்துவமனை. பயிற்சி செவிலியர்களுக்கு தலைமை நர்ஸ் பாடம் எடுத்தாள்..

இது அபாயகரமான நோயாளிகள் வார்டு.. நீங்க எல்லாம் கவனமா இருக்கணும்..

ஏன் மேடம் ? நோயாளிகள் கடுமையா பாதிக்கப் பட்டுருக்காங்களா..?

இல்லே.. நல்லா குணமடைஞ்ச நோயாளிகள் உள்ள வார்டு.. அதான் சொன்னேன்..!
__________________

ராஜா
28-01-2007, 10:36 AM
அமைச்சரின் மனைவி தன் மோதிரம் காணவில்லை என புகார் செய்தார்.. அரை மணி நேரத்தில் 10 பேர்களை காவல் துறை கைது செய்தது. 6 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள். 4 பேரிடமிருந்து பொருள் கைப்பற்றப் பட்டது.

அமைச்சரின் மனைவி போன் செய்தார்.. மோதிரம் குளியலறையில் இருப்பதாக...!
________________________________________________________________

தங்கையே ஓவியா..!

இந்தக் கடி போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..?

ஓவியா
28-01-2007, 10:43 AM
அண்ண நீங்கள் வெடியை அள்ளி வீசுங்க, நாங்க படிச்சு படிச்சு சிரிக்குறோம்

எல்லாமே சூப்பர்

அதுவும் அந்த பெண்கள் புள்ளிவிபரப் புலிகள்.. கணித மேதைகள்..

செம்ம தூள்

ஷீ-நிசி
28-01-2007, 10:47 AM
சரமாரி வெடிகள்.. ஒன்று கூட வெடிக்காமல் போகவில்லை... தொடருங்கள் நண்பரே!

ராஜா
28-01-2007, 10:55 AM
நன்றி ஷீ நிசியாரே..!

ராஜா
28-01-2007, 11:01 AM
ஓ அந்த நிலைமக்கு வந்துட்டாங்களா. 25 பைசாவை நிறுத்த சொல்லவேண்டியதுதான் அரசாங்கத்திடம்.


நன்றி மோகன் அண்ணா..!

ராஜா.. [இளம்புயல்\

மனோஜ்
28-01-2007, 12:22 PM
அறுமையான ஜோக்ஸ்
நன்றி ராஜா

மதுரகன்
28-01-2007, 05:02 PM
அமெரிக்காவைச் சுற்றிப்பார்க்க ஒரு ரஷ்யர் வந்தார். ஒரு வழிகாட்டி அமெரிக்கப் பெருமைகளை சொல்லி ரஷ்யரை வெறுப்பேற்றிக் கொண்டே இருந்தான்.. கடைசியாக வெள்ளை மாளிகைக்கு வந்தார்கள்..

வழிகாட்டி ; இது எங்கள் அதிபரின் இருப்பிடம். இங்கு நின்று "புஷ் ஒரு கழுதை..!" என்று நாங்கள் சொல்லலாம்.. அந்த அளவுக்கு எங்கள் சனநாயகம் உயர்வானது.. உங்களால் உங்கள் நாட்டில் உங்கள் அதிபர் மாளிகையில் இவ்வாறு சொல்ல முடியுமா..?

ரஷ்யர் ; ஓ..சொல்லலாமே.. கிரெம்ளின் மாளிகை முன்பு நின்று "அமெரிக்க அதிபர் புஷ் ஒரு கழுதை" என்று சொன்னால் எல்லோரும் வரவேற்கவே செய்வார்கள்...!
__________________

அற்புதம் ராஜா தற்பொழுதுதான் நகைச்சுவை பக்கத்திற்குள் நுழைந்தேன்
உங்கள் ரசிகராகி விட்டேன்..
சிரிப்பினை விரும்பாத மனிதருமுண்டோ...

pradeepkt
29-01-2007, 01:00 PM
ராஜா,
முதல் வேலையா அந்த ஆர்க்கூட் குழுமத்தில் இணைந்து விட்டேன்.
கலக்கிப் போட்டீங்க சார்!!!

அறிஞர்
29-01-2007, 02:20 PM
ராஜாவின் லொள்ளுகள் இன்னும் தொடரட்டும்...

ஆர்கூட்டில் வரும் எல்லா சிரிப்புக்களை இங்கும் தொடர்ந்து கொடுங்கள்.. அன்பரே..

மன்மதன்
29-01-2007, 07:08 PM
ஆஹா.. அனைத்துமே கலக்கல்ஸ்..

லேடிஸ் ஃபர்ஸ்ட் .. குளிர்சாதன பெட்டிக்கு ஆஸ்பிரின்.. என்று தனித்தனியாக பாராட்டாமல் அனைத்து சிரிப்புமே சூப்பர்மா..........

ராஜா
01-02-2007, 07:41 AM
ராஜா,
முதல் வேலையா அந்த ஆர்க்கூட் குழுமத்தில் இணைந்து விட்டேன்.
கலக்கிப் போட்டீங்க சார்!!!

நன்றி பிரதீப்..!

ராஜா
01-02-2007, 07:43 AM
நல்லவேளைப்பா.. மைக்ரோசாஃப்ட் கார் விற்பனை செய்யலே..
ஒருவேளை கார் தயார் பண்ணியிருந்தா, அது..

1.ஒவ்வொரு தடவையும் ஸ்பேர் பார்ட்ஸ் மாத்தி மாத்தி தயார் பண்ணி அதுக்கு தகுந்த காரை அப்பப்போ வாங்க சொல்லுவாங்க.

2.நல்ல மேட்டுல ஏறிக்கிட்டு இருக்கும்போது திடீர்ன்னு ரிப்பேர் ஆயி நின்னுரும். போன் பண்ணி சொன்னா, மறுபடி ஸ்டார்ட் (Re-start)பண்ணுங்கம்பாங்க. ஏன்னு கேட்டா காரணம் அவங்களுக்கே தெரியாது.

4.அப்படியும் சரியா வரலியேன்னா, எஞ்சினைக் கழட்டிட்டு மாட்டுங்க (Re-install) சரியாயிடும்ன்னு சொல்வாங்க.

5.திடீர்ன்னு ஒரு மாடல் கண்டுபிடிப்பாங்க. பெட்ரோல் வேண்டாம்.. இருமடங்கு வேகம்..ஒட்டும் களைப்பு பாதியா குறையும்ன்னு சொல்லிட்டு வெறும் 5 % சாலைகள்ல தான் ஓட்ட முடியும்பாங்க.

6.மக்களும் மைக்ரோசாஃப்ட்ன்கிற பேரைப் பார்த்து மயங்கிடுவாங்க. இதைவிட நல்ல கார் மார்க்கெட்ல கிடைக்கும்ங்கிறதையே மறந்துடுவாங்க.

7.இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்னன்னா அவசரமா சடன் பிரேக் போட நெனைச்சிங்கன்னா, "உண்மையிலேயே பிரேக் போட விரும்புகிறீர்களா..?" ன்னு புத்திசாலித்தனமா ஒரு கேள்வி கேட்கும்..!
__________________

ராஜா
01-02-2007, 07:45 AM
முதல் முதல்ல பசு மாட்டு மடியப் பிடிச்சு அமுக்கினா பால் கிடைக்கும்ன்னு யோசிச்சவர் யாரா இருக்கும்..?

அதைப் பார்த்துட்டு கழுதைகிட்ட முயற்சி செஞ்சவர் கதி என்னவா இருக்கும்..?

அரளிக் கொட்டை விஷம்ன்னு தெரிய வச்ச தியாகிக்கு தாமிரப் பத்திரம் கொடுத்தோமா..?

என்னென்னவோ கண்டுபிடிக்கிற ஜப்பான் காரன் ஓட்டைப் படகு ஏன் இன்னும் கண்டுபிடிக்கல..?

50/50 விதி சொல்லுது ஒரு செயலைப் புதுசா செய்யும்போது 50% தப்பாகவோ 50% சரியாகவோ வாய்ப்பு இருக்குன்னு.ஆனா நமக்கு மட்டும் 90% தப்பாவே போகுதே எப்படி..?

பேட்டரி லைட்.. அவசரத்துல உபயோகப்படுவதற்கா இல்லே வீணாப்போன பேட்டரி கட்டைகளை வச்சுக்கறதுக்கா..?

தப்பு செஞ்சா அபராதம் கட்டணும்.. உண்மையா நடந்தீங்கன்னா வரி கட்டணும்.. எப்படி வசதி..?

சினிமா தியேட்டர் விதி ; முனை சீட்டுக் காரங்க எல்லாம் முன்னாலேயே வந்து உக்காந்துடுவாங்க.. ஆனா சுவத்தை ஒட்டி சீட்டுக்காரங்க தாமதமாவே வருவாங்க.. அதும் ஒவ்வொருத்தரா..!

நம்ம மாமா பொண்ணு அத்தை பொண்ணெல்லாம் அட்டு ஃபிகரா இருக்கும்.. ஆனா நண்பனோட முறைப்பொண்ணுங்க எல்லாம் நச்ச்' ஃபிகரா இருக்கும்.. நொந்துருக்கீங்களா..?

ராஜா
01-02-2007, 07:47 AM
நீங்களோ நானோ ஒரு ஆரஞ்சுப் பழத்தை இன்னொருத்தருக்குக் கொடுக்கணும்ன்னா சிரிச்சுக்கிட்டே கொடுப்போம்.. அவரும் சிரிச்சுக்கிட்டே வாங்கிப்பாரு.. ஆனா ஒரு வழக்கறிஞர் கொடுத்தா எப்படிக் கொடுப்பார்ன்னு ஒரு சின்னக் கற்பனை...

நாளது ##ம் வருடம் ##ம் நாள் சென்னை வியாசர்பாடி, கொள்ளைக்காரன் பேட்டை, அரிவாள் தூக்கித் தெரு, 13ம் எண் விலாசத்தில் வசிக்கும் தமுக்கடிச்சான் மகன் டமாரம் கொட்டி ஆகிய நான், மேற்படி ஊரில் அதே தெருவில் 14 ம் எண் வீட்டில் வாடகை கொடுக்காமல் குடியிருந்து வரும் ஈயடிச்சான் மகன் கொசு கடிச்சான் அவர்களுக்கு, என்னால் கோயம்பேட்டில் அழு'கிய மணவாளன் கடையில் கடனுக்கு வாங்கப்பட்டிருக்கும் சிட்ரஸ் ஆரண்டியம் என்ற உயிரியல் பெயரும் கொடை ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு என்ற சாதாரணப் பெயர்களையும் கொண்ட இப்பழத்தைக் கொடுப்பதோடு மட்டுமல்லாது, இதன் பேரில் எனக்கிருக்கும் உரிமை, சொந்தம், பாத்தியம்,ஆதாயம் ஆகியவற்றையும் உங்கள் அனைவர் முன்னிலையில், என் சுய புத்தியோடும், முழு மனதோடும், எவ்வித நெருக்குதலுக்கு ஆளாகாமலும், மனமுவந்து அளிக்கிறேன்.
இதை இவர், உடனடியாகவோ அல்லது தான் விரும்பும் போதோ, தனக்காகவோ அல்லது பிறர்க்காகவோ பயன்படுத்தலாம். இதைக் கடித்துத் தின்னவோ, உறித்துத் தின்னவோ, கொட்டையுடனோ அல்லது அவற்றை அகற்றிவிட்டோ தின்னவோ எவ்வித தடையுமில்லை.
இந்தப் பழத்தை நம்மில் இரண்டாவது நபரானவர், அப்படியே ஒரே தடவையிலோ அன்றிப் பகுதியாகவோ, சுளையாகவோ, அல்லது சாறு பிழிந்தோ சுவைக்க உரிமை பெற்றவர் ஆகிறார்.இதன் தோலைத் தின்னவோ தூக்கி எறியவோ அல்லது கண்ணில் பீய்ச்சிக்கொண்டு கத்தவோ பாத்தியப் பட்டவராகிறார்.
இதன் விதைகளைப் பயிராக்க இவருக்கு நான் உரிமையளித்திருப்பதால் இதைப் பயிராக்கி அந்த மரத்திலிருந்து கிடைக்கும் பழங்களை இவரோ இவரது வம்சாவளியினரோ சர்வ சுதந்திரமாக விற்பனை செய்யவோ இலவசமாக வழங்கவோ, தூக்கி எறியவோ யாதொரு இடர்ப்பாடும் இல்லை.. அந்த ஆரஞ்சு மரத்தை வெட்டி விறகாகவோ அல்லது...

என்னங்க..நில்லுங்க.. ஏன் இப்படி ஓடறீங்க.. சொன்னாக் கேளுங்க நில்லுங்க..!
__________________

ராஜா
01-02-2007, 07:55 AM
பேப்பரில் ஒரு விளம்பரம்..
புத்தம் புது ஸ்கார்ப்பியோ வாகனம் விலை ரூ 10000

பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ்வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை. ஒருவர் மட்டும் வந்தால் மலை என்ற முடிவோடு அணுகினார். விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள்.
ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது.வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது.
பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்..

"அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?"

அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள்..
அது அவள் கணவர் வேலைக்காரியுடன் வீட்டைவிட்டு எங்கோ ஓடும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்..

" அன்பே என்னை மன்னித்துக் கொள்..இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்கு நம் வீட்டை நீ எடுத்துக் கொள்..நானும் முனியம்மாவும் புது வாழ்க்கை துவக்க 7 லட்சம் பெறுமானமுள்ள நம் ஸ்கார்ப்பியோவை உடனடியாக என்ன விலைக்காவது விற்று பணத்தை அனுப்பு...!!!!"
__________________

ராஜா
01-02-2007, 07:59 AM
சின்னா ரொம்ப குறும்புக்காரன். அந்த ஊர்ல எந்த கலாட்டா நடந்தாலும் அவந்தான் காரணமா இருப்பான். அவன் தொல்லை தாங்காம அவன் அம்மா அப்பா பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.
ஒருநாள் அவங்க ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். எல்லாரும் அவங்க கஷ்டத்தை அவர்ட்ட சொல்லி தீர்வு கண்டாங்க. சின்னாவோட அம்மாவும் போய் சொன்னவுடன் சின்னாவை மட்டும் விட்டுட்டுப் போம்மா.. நான் புத்தி சொல்லி அனுப்பறேன்னுட்டாரு. சின்னா ஒண்ணும் புரியாம உக்காந்துருந்தான். எல்லாருக்கும் அறிவுரை சொல்லி அனுப்பிட்டு சின்னாவை கூப்பிட்ட சாமியார் கேட்டார்..

"கடவுளை அறிவாயா..?"

சின்னாவுக்கு ஒண்ணும் புரியல். தாடி, மீசை வேற பயமுறுத்துச்சு.

"கடவுள் எங்கு இருக்கிறார்.. சொல்..?"

சின்னா தொறந்த வாய் மூடாம் அவரையே பாத்துட்டு இருந்தான்..

"சொல்லப்பா.. கடவுள் எங்கே..?" இதைக் கேட்ட சாமியார் எதற்கோ சற்றுத் திரும்ப, சின்னா சிட்டய்ப் பறந்தான் வீட்டை நோக்கி..வழியில் அவன் நண்பன் அவனை நிறுத்திக் கேட்டான்..

"சாமியார் என்னடா சொன்னார்..? ஏன் இப்படி ஓடி வரே..?"

"பயங்கர சிக்கல்ல மாட்டிக்கிட்டேண்டா.. நம்மூரு சாமியைக் காணோமாம்.. அதையும் நான் தான் ஒளிச்சு வச்சுட்டேன்னு நெனைக்கிறாருடா..!"
__________________

ஷீ-நிசி
01-02-2007, 08:40 AM
உலகிலேயே மிக கடினமான செயல், அடுத்தவனை சிரிக்க வைப்பதுதான்.. நீங்கள் அதை நிறையவே சிறப்பாகவே செய்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்!

மனோஜ்
01-02-2007, 08:53 AM
ராஜா உன்மையில் சிரிக்க வைக்க நீங்க ராஜதான் நன்றி

மன்மதன்
01-02-2007, 05:40 PM
உங்கள் சிரிப்புகள் ஆரஞ்சாக தித்திக்குதே..

leomohan
01-02-2007, 05:46 PM
நச்செனும் நகைச்சுவை. சாமி-யாரு :)

ஓவியா
02-02-2007, 04:09 PM
ஆரஞ்சு பழ நகைச்சுவை....அபாரம்

நன்றி அண்ணா

ராஜா
03-02-2007, 09:12 AM
ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து [த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.

த.க.நி. ; ஜிம்மி...

ஜிம்மி ; லொள்.. லொள்..

த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]

த.க.நி. ; ஜாக்கி....

ஜாக்கி ; லொள்..லொள்..

த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியே செய்கிறது ]

த.க.நி. ; மாதவ்..

மாதவ் சிங் ; லொள்..லொள்..

த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும் புரியாது..!

ராஜா
03-02-2007, 09:13 AM
ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி. அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!

ராஜா
03-02-2007, 09:14 AM
நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ் புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.

எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..

லைசென்ஸா..? அப்படின்னா..?

அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..

ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து நீட்ட.. )

அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே.. முதல்லயே சொல்லப்படாதா..?

ராஜா
03-02-2007, 09:15 AM
நம்ம சர்தார் ஆபீஸில் இருந்து வரும்போது ஒரு சிறுவன் தன் தொப்பியை ஸ்டைலாக திருப்பிப் போட்டிருப்பதைப் பார்த்தார். இவருக்குதான் எல்லாவற்றையும் தானும் செய்யவேண்டும் என்ற ஆவல் ஆயிற்றே.. தன்னுடைய தலைப்பாகையையும் திருப்பி வைத்துக் கொண்டார். வீட்டு அருகில் வரும்போது பக்கத்து வீட்டு சர்தார் கேட்டார்..

ஓயே.. ஆபீஸுக்கு போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..?

ராஜா
03-02-2007, 09:16 AM
நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக் கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர் சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு. அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே திரும்பினார்..

நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'

சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான் என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!

ராஜா
03-02-2007, 09:17 AM
ஒரு இந்து, ஒரு முஸ்லிம், ஒரு கிறித்துவர், ஒரு சர்தார் இவர்கள் நால்வரும் நண்பர்கள்.ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது அனுமான் சாமியைப் பற்றி பேச்சு வந்தது. நால்வருமே அனுமான் தங்கள் இனத்தவர் என்று சொந்தம் கொண்டாடினார்கள். அதற்கு நியாயமான காரணத்தையும் சொன்னார்கள்.

இந்து சொன்னார் ; அனுமான் ராமருடைய தூதர், இந்துக்களால் வணங்கப் படுபவ்ர். வாயு குமாரர். அதனால் அனுமான் இந்து தான்.

முஸ்லிம் சொன்னார் ; இல்லை இல்லை.. அனுமான் எங்கள் இனத்தவர்.. ரகு குல ராமன் மானைத் தேடி போனபோது கடத்தப்பட்ட சீதாவைத் தேடிப் போன ரகுமான் இந்த அனுமான்..மலை ஏறி தேடிய சுலைமான் எங்கள் அனுமான்..

கிறித்துவர் சொன்னார் ; இல்லவே இல்லை.. சூப்பர் மேன் மாதிரி காற்றில் பறப்பார்..ஹீமான் மாதிரி சண்டை போடுவார் எங்கள் அனுமான்..

சர்தார் மாதவ் சிங் முழங்கினார் ; வாயை மூடுங்கப்பா.. எப்ப ஒருத்தர் அடுத்தவங்க பொண்டாட்டிக்காக அல்லல் பட்டு, பின்பக்கம் நெருப்பை வாங்கிக்கிட்டு அவஸ்தை பட்டாரோ.. அவர் நிச்சயம் எங்க ஆள்தான்..!
______________________________________________________________
தயவுசெய்து இதை நகைச்சுவையாக மட்டும் கொள்ளுமாறு வேண்டுகிறேன். _____________________________________________

மன்மதன்
08-02-2007, 07:06 PM
நன்றாகவே ரசித்தேன். அதுவும் டிராபிக் போலிஸ் சர்தாரிடம் லைசன்ஸ் கேட்ட ஜோக் அருமை..

(சுதந்திர போராட்ட காலத்தில் வீரத்துடன் ஆங்கிலேயர்களுடன் முதன் முதலில் சண்டை போட்டது சர்தார்கள்தான். அதனால்தான் சர்தார்களை பற்றிய ஜோக்குகளை ஆங்கிலேயர்கள் வெளியிட்டனர். அது இன்றும் தொடர்கிறது என கேள்விப்பட்டேன் உண்மையா?)

அறிஞர்
08-02-2007, 07:13 PM
த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும் புரியாது..!
நாய்க்கு சாப்பாடு வைக்க.. விண்வெளி பயணமா....

அருமை..

அறிஞர்
08-02-2007, 07:14 PM
கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!
அறிவாளி புள்ளைங்கப்பா.....

தொடரட்டும் உங்கள் லொள்ளுகள்

அறிஞர்
08-02-2007, 07:15 PM
அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே.. முதல்லயே சொல்லப்படாதா..?
நல்ல சிரிப்பு....

இது மாதிரி கண்ணாடியை தூக்கி கொண்டு போய் போலிஸிடம் தப்பிக்கொள்ளலாம் போல்

அறிஞர்
08-02-2007, 07:16 PM
சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான் என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!
எவ்வளவு பொறுப்பான சிங்க்.. வீட்டுல ரொம்ப பொறுப்பா வளர்த்து இருக்காங்க...

அறிஞர்
08-02-2007, 07:18 PM
(சுதந்திர போராட்ட காலத்தில் வீரத்துடன் ஆங்கிலேயர்களுடன் முதன் முதலில் சண்டை போட்டது சர்தார்கள்தான். அதனால்தான் சர்தார்களை பற்றிய ஜோக்குகளை ஆங்கிலேயர்கள் வெளியிட்டனர். அது இன்றும் தொடர்கிறது என கேள்விப்பட்டேன் உண்மையா?)
கூடுதல் தகவலுக்கு நன்றி நண்பா...

ராஜா
09-02-2007, 04:11 PM
ஒரு பெண்மணி அழகு நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது ஒரு அழுக்கான, தலை பிசுக்கு பிடித்த, பார்க்க அசிங்கமான பிச்சைக்காரி அவளை அணுகி பிச்சை கேட்டபோது..

பெண் ; நான் காசு கொடுத்தால் உடனே போய் உன்னை அழகுபடுத்திக் கொள்வாயா..?

பிச்சை ; மாட்டேன் அம்மா..

பெண் ; நல்ல துணிகள் வாங்கிக் கொள்வாயா..?

பிச்சை ; இல்லை அம்மா..

பெண் ; நண்பிகளுடன் கிளப்புக்கு போவாயா..?

பிச்சை ; வயிறுப் பசிக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் கொள்வேன் அம்மா.. நீங்கள் சொல்லும் எனக்கு எதுவும் தெரியாது..

பெண் ; அப்படியானால் என்னோடு என் வீட்டுக்கு சற்று வந்துவிட்டுப் போ.. ஒரு பெண்ணுக்கு அழகு நிலையம், ஷாப்பிங், க்ளப் இது எதுவுமே தெரியாதென்றால் அவள் எப்படி தோற்றமளிப்பாள் என்று என் கணவரும் பார்க்கட்டும்...!

ராஜா
09-02-2007, 04:12 PM
ஒரு செல்வந்தர் தன் இறப்புக்கு பின்னால் தன் நினைவுக்காக செலவழிக்க ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கி உயில் எழுதிவிட்டு இறந்து போனார். அவர் மனைவி அந்த நினைவு சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்யும் பொறுப்பில் இருந்தாள்.. ஒருநாள் அவள் தோழி செல்வந்தர் மனைவியைச் சந்தித்தபோது...

தோழி ; உன் கணவர் சொன்னபடி செய்து விட்டாயா..?

மனைவி ; ஓ...!

தோழி ; அறக்கட்டளை நிறுவினாயா..?

மனைவி ; இல்லை..

தோழி ; தண்ணிர் பந்தல், ஏழை மாணவர்க்கு உதவி இப்படி ஏதாவது..?

மனைவி ; அப்படி எதுவும் இல்லை...

தோழி ; பின் என்னதான் செய்தாய் அந்த ஒரு லட்ச ரூபாய்க்கு..?

மனைவி ; அவர் நினைவாக கல் ஒன்று தயார் செய்துள்ளேன்..

தோழி ; ஒரு லட்ச ரூபாய் கல்லா..? எங்கே நினைவுக்கல் எழுப்பியிருக்கிறாய்.. அவர் சமாதியிலா..?

மனைவி ; இதோ.. என் மோதிர விரலில்.. ஒரு லட்ச ரூபாய் வைரக்கல்...!

ராஜா
09-02-2007, 04:13 PM
ஒரு பெண்மணி மலைப்பாதை வழியே கார் ஓட்டிக்கொண்டு வந்தாள். அவள் புதிதாக ஓட்டக் கற்றுக்கொண்டவள் என்பதாலும், கொண்டை ஊசி வளைவுகள் மிகக் குறுகலாக இருந்தமையாலும், வண்டி தாறுமாறாக ஓடி ஒரு இடத்தில் மலைப் பாதையின் பக்கத் த்டுப்பை உடைத்துக் கொண்டு உருண்டது.

நான்கு முறை உருண்ட கார் கீழே உள்ள மலைப்பாதையில் விழுந்தது. வியப்புக்குரிய வகையில் அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் அடிபடவில்லை. காரும் தலை கீழாக கவிழாமல் சாதாரண நிலையிலேயே நின்றது. பின்னால் வந்த காரோட்டி உதவிக்கு விரைந்தார்..

"அம்மணி.. தங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே..?"

"நன்றி அய்யா.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை.. காருக்கு சேதமிருந்தாலும் ஓட்டிச் செல்லமுடியும் என்றே நினைக்கிறேன்.. கடவுள் என் பக்கம் இருந்ததால் இந்த அதிசயம் நடந்துள்ளது.."

"நல்லது அம்மணி.. இனி கவனமாக ஒட்டி வீட்டுக்கு செல்லுங்கள்.. இப்ப நடந்ததைப் பார்த்தபின் இனி கடவுள் உங்கள் பக்கம் அமர்ந்து வரமாட்டார் என்று தோன்றுகிறது...!"

அறிஞர்
09-02-2007, 04:14 PM
ஏலே ராசா.. வந்துட்டாரு... ரவுசு..பண்ண..

தொடர்ந்து கொடு ராசா...

ராஜா
09-02-2007, 04:15 PM
ஒரு மனைவி கணவனைப் பார்த்து..

என்னங்க.. என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க..?

கொசு அடிக்கிறேன்..

கொசுவா..? எத்தனை அடிச்சீங்க..?

ரெண்டு ஆண் கொசு.. மூணு பெண் கொசு..!

எப்படி ஆண் .. பொண்ணுன்னு கண்டுபிடிச்சீங்க..?

ு பீர் பாட்டில் மேல உக்காந்து இருந்தது ஆண் கொசு....ு..ு டி.வி. மேலேயும், டெலிபோன் மேலேயும் உக்காந்து இருந்தது பெண் கொசு..!

அறிஞர்
09-02-2007, 04:16 PM
பெண் ; அப்படியானால் என்னோடு என் வீட்டுக்கு சற்று வந்துவிட்டுப் போ.. ஒரு பெண்ணுக்கு அழகு நிலையம், ஷாப்பிங், க்ளப் இது எதுவுமே தெரியாதென்றால் அவள் எப்படி தோற்றமளிப்பாள் என்று என் கணவரும் பார்க்கட்டும்...! ஆஹா.. இது மாதிரி.. எல்லாரும் கிளம்பினா.. வீட்டுல ஆம்பிளைங்க பாடு.. திண்டாட்டம் தான்.

அறிஞர்
09-02-2007, 04:17 PM
மனைவி ; இதோ.. என் மோதிர விரலில்.. ஒரு லட்ச ரூபாய் வைரக்கல்...! நினைவு என்றும் நிற்கும்...
அருமை...

அறிஞர்
09-02-2007, 04:18 PM
"நல்லது அம்மணி.. இனி கவனமாக ஒட்டி வீட்டுக்கு செல்லுங்கள்.. இப்ப நடந்ததைப் பார்த்தபின் இனி கடவுள் உங்கள் பக்கம் அமர்ந்து வரமாட்டார் என்று தோன்றுகிறது...!"
கடவுளுக்கே.. டிக்கெட் கொடுத்துட்டா என்ன பண்ணுறது..

அறிஞர்
09-02-2007, 04:20 PM
ு பீர் பாட்டில் மேல உக்காந்து இருந்தது ஆண் கொசு....ு..ு டி.வி. மேலேயும், டெலிபோன் மேலேயும் உக்காந்து இருந்தது பெண் கொசு..!
ம்ம்ம்.. கொசுக்களும்.... இப்படிதானா.. :rolleyes: :rolleyes: :rolleyes:

ராஜா
09-02-2007, 04:21 PM
கணவன் ; உங்க அப்பா பெரிய ஒலிம்பிக்ஸ் ரசிகரா இருக்கலாம்.. அதுக்காக உனக்கு தங்கத்துக்கு பதிலா பித்தளை நகை போட்டு அனுப்பியிருக்காரே.. இதுக்கு என்ன அர்த்தம்..?

மனைவி ; ம்ம்ம் .. நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்..!
*******************************************************************
விஜய்காந்த் ரசிகர் ; அய்யோ தலைவா.. மோசம் போயிட்டோமே...

கேப்டன் ; என்னப்பா ஆச்சு..?

ரசிகர் ; நம்ம தர்மபுரி படத்தை "அனிமல் ப்ளானட்" சானல்ல ஒளிபரப்ப போறாங்களாம்...!
**********************************************************************
ஒருவர் தன் மனைவியை பிரசவத்திற்க்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அலுவலகம் சென்றபின் மதியம் மருத்துவமனைக்கு தொடர்பு கொன்டார்.

ஆனால் தவறாக அந்த தொலைபேசி தொடர்பு கிரிக்கெட் ஸ்டேடியத்திற்க்கு சென்றுவிட்டது.

இது தெரியாமல் இவர்: "ஸார் அங்கே நிலைமை எப்படி?" என்றார்.

அவருக்கு ஆங்கிலத்தில் வந்த பதில் கேட்டு மயங்கியே விழுந்துவிட்டார்.

இதோ அவருக்கு வந்த பதில்:

"Fine!! Three are out, we hope to have the remaining seven out by lunch. And the last one out was a duck."

ராஜா
09-02-2007, 04:23 PM
அறிஞரே..

அடுத்த ஜோக் பதியறதுக்குள்ளே அதிரடியா பின்னூட்டம் போடறீங்க..

இவ்வளவு விரைவான ரெஸ்பான்ஸ் நான் எங்கேயும் பார்த்ததில்லீங்கோ

அறிஞர்
09-02-2007, 04:23 PM
அவருக்கு ஆங்கிலத்தில் வந்த பதில் கேட்டு மயங்கியே விழுந்துவிட்டார்.

இதோ அவருக்கு வந்த பதில்:

"Fine!! Three are out, we hope to have the remaining seven out by lunch. And the last one out was a duck."அடப்பாவிங்களா.. இப்படியா செய்தி தரணும்.. ஆடிப்போயிருப்பாரே. நம்மாளு...

அறிஞர்
09-02-2007, 04:25 PM
அறிஞரே..

அடுத்த ஜோக் பதியறதுக்குள்ளே அதிரடியா பின்னூட்டம் போடறீங்க..

இவ்வளவு விரைவான ரெஸ்பான்ஸ் நான் எங்கேயும் பார்த்ததில்லீங்கோ
இருவரும் கணினியில் இருக்கிறோம்...

ரசித்தவுடன்.. ஒரு சில வார்த்தைகள் உதிர்ப்பதில் தவறில்லை...
அதுவே படைப்பாளிக்கு/கொடுப்பாளிக்கு இன்பத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை..

ராஜா
09-02-2007, 04:38 PM
நன்றாகச் சொன்னீர்கள்.. சரியாகச் சொன்னீர்கள்.. அதையும் அழகாகச் சொன்னீர்கள்.

நன்றி அறிஞர் பெருமானே..!

மயூ
09-02-2007, 05:08 PM
ராஜா மீண்டும் ஒரு கலக்கல் பதிவு வாழ்த்துக்கள்.

மன்மதன்
09-02-2007, 05:10 PM
சிர்ப்பு முத்துகள் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
அழகு நிலையம், ஷாப்பிங் கிளப் பிச்சைக்காரி.. அடடா...

மனோஜ்
09-02-2007, 05:19 PM
ராஜா அவர்களே ரவுசு உன்மையில ரவுசுதாங்க...

ஓவியா
09-02-2007, 06:35 PM
ராஜா அண்ணா அனைத்து நகைச்சுவையும் மிகவும் அருமை

ரசித்தேன்

மிக்க நன்றி

அறிஞசர் சார்,
இந்த பதிப்பை நகைச்சுவை பகுதியில் ஒட்டி வைக்கலாமா? வழிமொழிகிறேன்

pradeepkt
12-02-2007, 03:54 AM
ராஜா, கலக்கிட்டீங்க.
விஜயகாந்துக்குப் போட்டியா இன்னொரு படத்தையும் அனிமல் பிளானட்டுல போடலாம்.
அது எதுன்னு சொன்னா உங்களுக்கு கரடிக் குட்டி பரிசு :D

ராஜா
12-02-2007, 06:02 AM
ஒரு சர்தார் தன்னோட வீட்டுல ஒரு கார் ஷெட் கட்ட ஆசைப்பட்டார்.. ஆனா எத்தனை மூட்டை சிமெண்ட் வாங்கணுமின்னு தெரியல. பக்கத்து வீட்டு சர்தார் 1 மாசத்துக்கு முந்தி அதே மாதிரி ஷெட் கட்டினதால அவர்ட்ட கேட்டார்..

அஞ்சா.... கார்ஷெட்டுக்கு எத்தனை மூட்டை சிமெண்ட் வாங்கினே..?

20 மூட்டை வாங்கினேன் கஞ்சா...!

அதே போல வாங்கி ஷெட் கட்டினார்.ஆனா 13 மூட்டை மிச்சமாயிருச்சு. அப்புறம் அஞ்சா கிட்ட இதைப் பத்தி சொன்னார்.. அஞ்சாவும் ஒத்துக்கிட்டார்.. "ஆமாய்யா.. எனக்கும் 13 மூட்டை வேஸ்ட்டா கட்டி பிடிச்சு காய்ஞ்சுகிட்டு இருக்கு..!"
_________________________________

ராஜா
12-02-2007, 06:03 AM
சர்தாரிணியோட தோழி ரொம்ப நாளைக்கு பிறகு அவளை சந்திச்சு பல விஷயங்களை பேசி தெரிஞசுகிட்டா.. கிளம்பும்போது சொன்னா..

உன் கணவர் தண்ணியில மூழ்கி இறந்து போனது வருத்தம்தான்.. இருந்தாலும் ஒன்னுத்துக்கும் லாயக்கு இல்லாத உனக்கு கோடி ரூபாய் விட்டுட்டு போயிருக்கார்.. அதுக்கு நீ அவருக்கு நன்றி சொல்லணும்..

ஆமாண்டி.. அதோட அவர் சொம்பு தேட கெணத்துக்குள்ள இறங்கினப்போ கயிற்றை அவுத்து எடுத்துட்டுப் போயி துணி காயப் போட்டதுக்கும் மன்னிப்பு கேட்கணும்..!
__________________________________

ராஜா
12-02-2007, 06:04 AM
ஒரு சர்தார் எப்பவும் தான் மட்டுமே முதல் ஆளா இருக்கணும்ன்னு ஆசைப்படுவார்.. ஒருநாள் வீட்டுக்குப் போனபோது அவருடைய மனைவி ஒரு புது டி.வி. வாங்கி பார்த்துட்டு இருந்ததைப் பார்த்து கடுப்பாயிட்டார்.
உடனே கைத் துப்பாக்கியை எடுத்து மனைவிய சுடப் போனார்..அப்புறம்
தன் கொள்கை ஞாபகம் வரவே துப்பாக்கியை தன் தலையில வச்சுக்கிட்டு சுட்டுக்க தயாரானார்.. மனைவி கத்தினாள்..

"ஐயோ வேணாங்க.. செத்துப் போயிடுவீங்க.."

"வாயை மூடு.. நீ மட்டும் உயிரோடவா இருக்கப் போறே.. அடுத்தது உன்னைத் தான் சுடப்போறேன்.."
_________________________________________

ராஜா
12-02-2007, 06:05 AM
ஒரு சர்தார் தன்னோட பேசும் கிளியை அழைச்சுக்கிட்டு ஒரு உணவகத்துக்குப் போனார்.. அந்த உணவகம் ஒரு பெர்ர்ர்ர்ர்ரிய கட்டடத்தோட 110-ஆவது மாடியில இருந்தது. இருவரும் ஒரு மேசையில் அமர, சர்வர் வந்து என்ன வேண்டும் என்று கேட்டார்..

கிளி, " முட்டாளே.. முதலில் தண்ணீர் கொண்டுவா.. பின் என்ன வேண்டும் என்று கேள்.." என்றது. ஆச்சரியம் அடைந்து சர்வர் போய் தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்.. மீண்டும் என்ன வேண்டும் என்று கேட்க, கிளி, " அழுக்குப் பன்றியே.. விரலை தண்ணீரில் வைத்தா கொண்டு வருவது,,? போய் வேறு தண்ணீர் கொண்டுவா உதவாக்கரை பயலே.." என்றது.

இம்முறை சற்று கோபம் வந்தாலும், வேறு வழியின்றி சுத்தமான முறையில் தண்ணீர் கொண்டுவந்தார்.. பின் என்ன வேண்டும் எனக் கேட்க.. சர்தார், அறிவு கெட்டவனே.. சப்பாத்தி கொண்டுவா.. பசிக்கிறது.." என்று திட்டினார். வெகுண்டு போன சர்வர், சர்தாரையும், கிளியையும் சன்னல் வழியே தூக்கி வெளியே எறிந்தார்..

கீழே விழுந்து கொண்டிருக்கும் போது கிளி சர்தாரைக் கேட்டது..

" எனக்கு பறக்கத் தெரியும்.. நான் ரவுசு விட்டேன்.. நீதான் ஒன்னுக்கும் லாயக்கு இல்லாதவன் ஆச்சே.. என்னத்துக்கு வாயைக் கொடுத்து ஆப்பு வாங்கிக் கட்டிக்கிறே..?

ராஜா
12-02-2007, 06:07 AM
ஒரு சர்தார் ஆபீஸ் விட்டு வந்துகிட்டிருந்தார். ரெண்டு திருடனுங்க வழிமறிச்சு பணத்தை கேட்டானுங்க. சர்தார் கொடுக்கல. பயங்கர கைகலப்பு. ஒருவழியா படாத பாடுபட்டு சர்தாரை புடிச்சு அமுக்கி அவர் பர்ஸ் எடுத்து பார்த்தானுங்க.. வெறும் 5 ரூபாய்தான் இருந்துச்சு. ஆச்சரியப்பட்ட திருடனுங்க கேட்டானுங்க..

" ஏன் சிங்கு.. எல்லாரும் உங்களை கிண்டல் பண்றது சரியாத்தான் இருக்கு.. இந்த பிசாத்து 5 ரூபாய்க்கா உயிரை பணயம் வச்சு போராடினே..?

" அடப் போங்கடா மடப் பயலுகளா..? நான் என்ன அவ்வளவு முட்டாளா..? டிப்பன் பாக்ஸ்ல இருக்கற சம்பளப் பணத்துக்காகதாண்டா இவ்வளவு கஷ்டப் பட்டேன்..!"
____________________________________

ராஜா
12-02-2007, 06:08 AM
சிங்கு.. நீங்க வச்சிருக்கற "கோடீஸ்வரன் ஆவது எப்படி" ங்கற புத்தகத்தைக் கொஞ்சம் இரவல் தரீங்களா..?

ஓ. யெஸ்.. தருகிறேனே.. இந்தாங்க..

என்ன சிங்கு..? பாதி பக்கத்தைக் காணோம்..?

ஓசி தானே வாங்கி படிக்கிறீங்க.. 50 லட்சம் போதாதா..?
____________________________________

ஒரு தமிழர் படு வேகமா கார் ஓட்டிட்டு போனார்.. போலீஸ் புடிச்சுருச்சு.. சர்தார் போலீஸ்..! ரொம்ப ஸ்டைலா சர்தார் சொன்னார்.. உன்னை மாதிரி ஆளைப் பிடிக்கதான் காலையிலேருந்து இங்கே காத்துக் கிடக்கேன்.. தமிழர் சொன்னார்.. அது தெரிஞ்சு, உங்களைக் காக்க வைக்கக் கூடாதுன்னுதான் வேக வேகமா காரை ஓட்டிட்டு வந்தேன்..

இதைக் கேட்டு மனசு உருகிப் போன சர்தார் " போயிட்டு வா நண்பா" ன்னு கண்ணீரோட அனுப்பி வச்சுட்டார்..!
___________________________________

அதே தமிழர் இன்னொரு நாள் படுவேகமா கார் ஓட்டிட்டுப் போனார். அவர் மனைவி சண்டை போட்டுட்டு அவங்க அண்ணன் வீட்டுக்கு போன மகிழ்ச்சியைக் கொண்டாட பாருக்கு தண்ணி போட போயிட்டு இருந்தார்.போலீஸ் துரத்த ஆரம்பிச்சுருச்சு. தமிழர் பயங்கரமா தண்ணி காட்டினாரு. இருந்தாலும் ஒரு அடைச்சிருந்த ரயில்வே கேட்டுக்கிட்ட மாட்டிக்கிட்டாரு. பாத்தா அதே பழைய சர்தார்.. அவர் தமிழரைக் கேட்டார்..

"அன்னிக்குதான் ஏதோ உருக்கமா சொல்லி தப்பிச்சுட்டே.. இன்னிக்கு என் வண்டியைப் பார்த்துட்டு வேகமா தப்பிக்கப் பாத்தியே.. இதுக்கு என்ன சொல்றே..?

ஒரு நிமிஷம் யோசிச்ச தமிழர் சொன்னார்..

என் மனைவி கோச்சுகிட்டு போயிட்டா.. அவங்க அண்ணன் போலீஸ்.. திருப்பி அவளை கொண்டாந்து விடப்போறார்ன்னு பயந்து ஓடினேன்..

"அப்படியா சரி.. போ.. எம் பொண்டாட்டியும் ராட்சசிதான்.. உன் கஷ்டம் புரியுது.

maganesh
12-02-2007, 07:34 AM
சிரிச்சுச் சிருச்சு என்வண்டி பஞ்சராச்சுப்பா. தொடர்ந்து தாங்க.

coolgoose
12-02-2007, 08:57 PM
very good raja.
how to type in tamil?

அறிஞர்
12-02-2007, 09:06 PM
அறிஞசர் சார்,
இந்த பதிப்பை நகைச்சுவை பகுதியில் ஒட்டி வைக்கலாமா? வழிமொழிகிறேன்
தோழியின் ஆசைக்காக இது ஒட்டிவைக்கப்படுகிறது.

அறிஞர்
12-02-2007, 09:08 PM
.ஆனா 13 மூட்டை மிச்சமாயிருச்சு. அப்புறம் அஞ்சா கிட்ட இதைப் பத்தி சொன்னார்.. அஞ்சாவும் ஒத்துக்கிட்டார்.. "ஆமாய்யா.. எனக்கும் 13 மூட்டை வேஸ்ட்டா கட்டி பிடிச்சு காய்ஞ்சுகிட்டு இருக்கு..!"
_________________________________
ஆஹா.... இவங்க நண்பர்களுக்காக ஒரு சிமெண்ட் கடை ஆரம்பிக்கலாம் போல..

ராஜா
13-02-2007, 04:42 AM
தோழியின் ஆசைக்காக இது ஒட்டிவைக்கப்படுகிறது.


ராஜா அண்ணா அனைத்து நகைச்சுவையும் மிகவும் அருமை

ரசித்தேன்

மிக்க நன்றி

அறிஞசர் சார்,
இந்த பதிப்பை நகைச்சுவை பகுதியில் ஒட்டி வைக்கலாமா? வழிமொழிகிறேன்


வழிமொழிந்த அன்புத் தங்கை ஓவியாவின் பாசத்துக்கும், இசைவு தெரிவித்த அறிஞர் பெருமானின் பெருந்தன்மைக்கும் தலைவணங்குகிறேன்.. நன்றி..நன்றி.. நன்றி.

ராஜா
13-02-2007, 04:57 AM
ஆருயிர்த் துணைவியரின் அருஞ்சொற்பொருள் அகராதி..

சொல்வதும்ு
உண்மையான பொருளும்....
-----------------------------------------------------
இப்போ நம் குடும்பத்துக்கு இது தேவை
__________________________________________எனக்கு இப்போவே வேணும்..!

உங்க முடிவுக்கு கட்டுப்படுறேன்
____________________________________ ஒழுங்கா சம்மதிக்கலே மவனே...மாவு கட்டு போடுறாப்பல ஆயிடும்..

உங்க இஷ்டம் போல செய்ங்க
______________________________________ ஆனா இதுக்கு ஒருநாளைக்கு பாடம் கற்பிக்காம விடமாட்டேன்.

கொஞ்சம் உங்ககிட்ட பேசணும்..
____________________________________________மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்கே..? இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்..

அப்ப சரி.. அப்படியே செய்ங்க..
______________________________________________இந்த காரியம் எங்கே உருப்படப் போகுது..

இல்லே..இல்லே எனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லே..
______________________________________________________________ இதுக்கு உன்னை அழ வைக்கல.. நான் மங்காத்தா மவ இல்லே...

என்னங்க.. ஏதோ பின்னால சத்தம் வர்றாப்பல இருக்குங்க
--_______________________________________________________________சனியனே.. நான் கொட்ட கொட்ட முழிச்சுக்கிட்டு உக்காந்திருக்கேன்.. நீ கொறட்டை விட்டு தூங்கிக்கிட்டா இருக்கே..?

ஏங்க.. என்னை உங்களுக்கு பிடிக்கும்தானே.?
_____________________________________________________ ஊம் ன்னு சொல்லு.. இன்னிக்கு நகை வாங்க போகணும்..

என்னங்க புதுசா செஞ்சு பார்த்த டிபன்ங்க இது.. சாப்பிட்டு நல்லா இருக்கா சொல்லுங்களேன்..
__________________________________________________________________ இது 5 நிமிஷத்துல செஞ்சது.. நல்லா இல்லேன்னாலும் இது தான் இனிமே.. இதை சாப்பிட பழகிக்கறது நல்லது..

ஏங்க அத்தையை நம்மோட அழச்சுட்டு போவோமே..
_________________________________________________________________ அப்புறம் தினம் தினம் உன்னை அழவச்சுட்டு தான் இருப்பேன்..

எங்கம்மா பாவம்ங்க..
___________________________________________ நம்ம கூட இருக்கட்டும்ன்னு சொல்லு.. இல்லே நீ பாவம் ஆயிடுவே..

ராஜா
13-02-2007, 07:05 AM
மனைவி: இன்னும் ஒரு வாரத்துல, எனக்கு நீங்க இங்கிலீஷ் கத்துக் கொடுக்கணும்.

கணவன்: அதெல்லாம் முடிகிற காரியமா.. அப்படியென்ன அவசரம்?

மனைவி: அப்போ, நான் இங்கிலீஷ் கத்துக்கற வரைக்கும், நீங்க உங்களோட டைரியை தமிழ்லேதான் எழுதணும்..!
-------------------------------------------------------------


ஒரு அம்மா டாக்டர் கிட்டே ஓடி வந்திச்சி. டாக்டர், நேற்று சாயந்தரம் எங்க வீட்டுக்காரர் உங்ககிட்டே வந்தாரே, என்ன அட்வைஸ் கொடுத்தீங்க ?
பதட்டப்படாதீங்கம்மா. இப்ப என்ன ஆச்சு ?ன்னார்.

நேத்து ராத்திரி சரியா 12 மணிக்கு எங்க வீட்டுக்காரர் சுடுகாட்டுப் பக்கமா போயிட்டு வந்தார்.

டாக்டர் தலையிலே அடிச்சிக்கிட்டார். மூக்கு அடைச்சிருக்குன்னார். ஆவி பிடிங்கன்னு சொன்னேன். அதுக்கு அந்த ஆளு சுடுகாட்டுக்கா போனாரு ? அதிர்ந்தார் டாக்டர்...!

மன்மதன்
13-02-2007, 11:44 AM
ஸ்டிக்கியாக முழுதகுதி பெற்ற பதிவு. பாராட்டுகள் ராஜா.

ஆதவா
13-02-2007, 12:06 PM
ஒட்டுபட்டதற்கு வாழ்த்துக்கள்

அறிஞர்
13-02-2007, 03:42 PM
வழிமொழிந்த அன்புத் தங்கை ஓவியாவின் பாசத்துக்கும், இசைவு தெரிவித்த அறிஞர் பெருமானின் பெருந்தன்மைக்கும் தலைவணங்குகிறேன்.. நன்றி..நன்றி.. நன்றி.
அன்பரே... இது ஒரு குடும்பம்.. எதுக்கு இந்த நன்றியெல்லாம்...

அறிஞர்
13-02-2007, 03:43 PM
ஆருயிர்த் துணைவியரின் அருஞ்சொற்பொருள் அகராதி..


அனுபவம் பேசுதா.. ராஜா.....
என்ன சொல்லுறது... எல்லாம் 100% சரியே.. :rolleyes: :rolleyes:

அறிஞர்
13-02-2007, 03:45 PM
மனைவி: அப்போ, நான் இங்கிலீஷ் கத்துக்கற வரைக்கும், நீங்க உங்களோட டைரியை தமிழ்லேதான் எழுதணும்..!...!
கண்டிப்பா... இங்கிலீஷ் கத்து தரணும்.....

இது மாதிரி மனைவிகள் எழுந்தால்..... :rolleyes: :rolleyes:

ராஜா
13-02-2007, 04:03 PM
அனுபவம் பேசுதா.. ராஜா.....
என்ன சொல்லுறது... எல்லாம் 100% சரியே.. :rolleyes: :rolleyes:

யார் அனுபவம் அறிஞர் அய்யா..?

அறிஞர்
13-02-2007, 04:05 PM
யார் அனுபவம் அறிஞர் அய்யா..?
உங்க அனுபவத்தை தான் கேட்டேன் அன்பரே...

ஷீ-நிசி
13-02-2007, 05:06 PM
ஒரு தமிழர் படு வேகமா கார் ஓட்டிட்டு போனார்.. போலீஸ் புடிச்சுருச்சு.. சர்தார் போலீஸ்..! ரொம்ப ஸ்டைலா சர்தார் சொன்னார்.. உன்னை மாதிரி ஆளைப் பிடிக்கதான் காலையிலேருந்து இங்கே காத்துக் கிடக்கேன்.. தமிழர் சொன்னார்.. அது தெரிஞ்சு, உங்களைக் காக்க வைக்கக் கூடாதுன்னுதான் வேக வேகமா காரை ஓட்டிட்டு வந்தேன்..

இதைக் கேட்டு மனசு உருகிப் போன சர்தார் " போயிட்டு வா நண்பா" ன்னு கண்ணீரோட அனுப்பி வச்சுட்டார்..!


ஹ ஹ ஹ ஹ... உண்மையிலேயே இந்த எழுத்துக்கள் போல சிரித்தேன்.. sticky thread-க்கு முழு தகுதி உண்டு..

வாழ்த்துக்கள் ராஜா அவர்களே!... தொடர்ந்து சிரிக்க வச்சீட்டேயிருங்க....

ராஜா
13-02-2007, 05:13 PM
நன்றி ஷீ-நிசி..!

நான் இங்கு செய்யும் பதிவுகள் அனைத்தையும் தேடித் தேடி பாராட்டும் தங்கள் பண்பு சிலிர்க்க வைக்கிறது.

ராஜா
14-02-2007, 05:15 AM
என்னப்பா.. திருடுனது திருடிட்டே.. அப்புறம் அதிலே 10,000 ரூபாயை எதுக்கு வச்சுட்டுப் போறே..?

ஹி..ஹி.. பண்டிகைச் சிறப்பு தள்ளுபடி 10% சாமி.. வச்சுக்கங்க.. போலிஸ் செலவுக்கு தேவைப்படும்...!
*****************************************************************************
நேத்து ராத்திரி உங்க வீட்டுல திருடினவன் எதாவது சொல்லிட்டு போனானா..?

ஆமாம் சார்.. கோண கொப்பர கொய்யா-ன்னு ஏதோ சொல்லிட்டு போனான்..

அந்த ராஸ்கலா..? அவனுக்கு நேத்து நான் ட்யூட்டி போடலியே..?இருக்கட்டும் பேசிக்கறேன்..!
****************************************************************
ஒழுங்கா பீரோ சாவிய குடுத்துடு.. இல்லேண்ணா உன் பொண்டாட்டியை கொன்னுடுவேன்..

பீரோ சாவி என்ன..எதை வேணும்ன்னாலும் எடுத்துக்கோ.. ஆனா ஆசை காட்டி மோசம் பண்ணிடாதே.. அந்த பாவம் உன்னை சும்மா விடாது..!
******************************************************************
என்ன சார்.. உங்க வீட்டுல திருடினவன்கிட்டே ஆட்டோ கிராஃப் வாங்கணுமா..?

அவன் என் மனைவி கன்னத்துல பளார்ன்னு அறைஞ்சு நகையை பிடுங்கிட்டு போனதிலே இருந்து அவன் விசிறியா ஆயிட்டேன் சார்..!
*******************************************************************
டிபார்ட்மெண்டுக்கே தண்ணி காட்டிட்டு இருந்த டெர்ரர் சிங்காரத்தை எப்படி சார் வழிக்கு கொண்டு வந்தீங்க..?

"மாமூல் நிலுவைத்தொகை தள்ளுபடி" அப்படின்னு ஒரு திட்டத்தை அறிவிச்சேன்.. பய மசிஞ்சுட்டான்.. இனிமே மாசா மாசம் ஒழுங்கா மாமுல் குடுக்கறதா ஒப்புக்கிட்டான்..!
*********************************************************************

ராஜா
14-02-2007, 05:22 AM
காதலன் ; எங்க அப்பா மட்டும் எனக்கு இவ்வளவு சொத்து சேர்த்து வைக்கலேன்னா நீ என்னை காதலிச்சிருப்பியா..?

பியூலா ; என்ன அப்படி சொல்லிட்டே.. உங்க அப்பான்னு இல்லே... யார் உனக்கு இவ்வளவு சொத்து எழுதி வச்சிருந்தாலும் நான் உன்னை காதலிச்சிருப்பேன்..!!!
************************************************************************************
அவன் ; ஏய் பொண்ணு..! இதோ பாத்தியா.. சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்.. என்கூட பைக்கில வர்றியா.. ஒரு ரவுண்டு அடிக்கலாம்..

பீலா ; போயும் போயும் ஒரு குழந்தையோட பைக்கில சுத்துவேன்னு நெனைச்சியா..?

அவன் ; சாரி மேடம்.. உங்க வயித்துல குழந்தை இருக்கறது எனக்கு தெரியாது..!!!
*********************************************************************************************
மடியிலே மட்டும் படுக்காதீங்க டார்லிங்..

ஏன் டியர்..?

அது ராசி இல்லாத இடமாப்போச்சு..! ஏற்கனவே ஏழெட்டு பேர் படுத்து எல்லாரும் தப்பிச்சுட்டானுங்க..! உங்களையும் இழக்க மனசு வரலை...!
********************************************************************************************
என் காதலி குற்றால அருவி மாதிரி...

குளு குளுன்னு இருப்பாளா..?

ம்ஹூம்... தலையிலேயே கொட்டுவா..!
**********************************************************************************************
கண்ணே.. நான் ஆதவன் மாதிரி அழகு இல்லே.. அவனை மாதிரி பணக்காரன் இல்லே.. ஆதவனிடம் இருக்கற மாதிரி என்கிட்டே கார் இல்லே.. ஆனா இது எல்லாத்துக்கும் மேலே உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்.. என்னை ஏத்துக்குவியா..?

சரி..சரி.. அந்த ஆதவன் பத்தி இன்னும் கொஞ்சம் தகவல் சொல்லேன்...!
**********************************************************************************************
காதலன் : நம்ம கல்யாணத்துக்கு வீட்ல ஒத்துக்க மாட்டாங்க போல இருக்கு அதனால ரெண்டு பெரும் ஓடி போய்ரலாமா?

பியூலா : அய்யோ எனக்கு பயமா இருக்குங்க

காதலன் : தனியா வர பயமா இருந்தா உன் தங்கச்சியயும் கூட கூட்டிட்டு வா!!!!!

ராஜா
15-02-2007, 05:21 AM
ஒவ்வொரு வயசுல ஒவ்வொரு மனிதனும் காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது என்ன மனநிலையில் இருப்பான் தெரியுமா..?

20 வயசுக்காரன் ; இன்னிக்கு எவளை பிராக்கெட் போடலாம்..?

30 வயசுக்காரன் ; இன்னிக்கு பொணடாட்டி என்ன வாங்கித் தரச்சொல்லி உயிரை எடுக்கப் போறாளோ..?

40 வயசுக்காரன் ; இன்னிக்காவது சொந்த வீடு வாங்க கடன் கிடைக்குமா..?

50 வயசுக்காரர் ; இன்னிக்கு எது எதை சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லப் போறாரோ..?

60 வயசுக்காரர் ; இன்னிக்கு மருமக என்ன பிரச்சினையைக் கிளப்பி பையன்கிட்ட திட்டு வாங்கி வைப்பாளோ..?

70 வயசுக்காரர் ; இன்னும் உயிரோடதான் இருக்கோம் போல இருக்கே..!
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

சே-தாசன்
15-02-2007, 06:33 AM
நீங்க என்ன நினச்சீங்க ராஜா?

ராஜா
15-02-2007, 06:39 AM
நீங்க என்ன நினச்சீங்க ராஜா?


முதல் நினைப்பு....!

மதி
15-02-2007, 07:19 AM
கலக்கல் ஜோக்ஸ்...ராஜா..

நம் ஆதவனை பத்தி இவ்ளோ தகவல்கள் குடுத்துருக்கீங்க...இனிமே ஏகப்பட்ட அப்ளிகேஷன் அவருக்கு குவிஞ்சுடும்..

மனோஜ்
15-02-2007, 07:24 AM
படிக்க படிக்க குறையாத சிரிப்புகள் நன்றி ராஜா

ஆதவா
15-02-2007, 07:30 AM
கண்ணே.. நான் ஆதவன் மாதிரி அழகு இல்லே.. அவனை மாதிரி பணக்காரன் இல்லே.. ஆதவனிடம் இருக்கற மாதிரி என்கிட்டே கார் இல்லே.. ஆனா இது எல்லாத்துக்கும் மேலே உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்.. என்னை ஏத்துக்குவியா..?

சரி..சரி.. அந்த ஆதவன் பத்தி இன்னும் கொஞ்சம் தகவல் சொல்லேன்...!


அது!!!

மதி
15-02-2007, 07:44 AM
ஆதவா..
தல ரசிகரா..?

அறிஞர்
15-02-2007, 02:03 PM
ஒவ்வொரு வயசுல ஒவ்வொரு மனிதனும் காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது என்ன மனநிலையில் இருப்பான் தெரியுமா..?

நம்மா ஆளுங்க நினைப்பு எல்லாம் ஒரே மாதிரி தான்....

30 வயதுல... மனைவியை எங்கே கூட்டிட்டு போறதா.......
கொஞ்சம் மாத்தி எழுதலாமே.... மனைவி இன்னைக்கு என்ன கேட்டு வேட்டு வைக்கப்போறாளோன்னு...

அறிஞர்
15-02-2007, 02:04 PM
சரி..சரி.. அந்த ஆதவன் பத்தி இன்னும் கொஞ்சம் தகவல் சொல்லேன்...!


அது!!!

இது ரொம்ப ஓவர்... :rolleyes: :rolleyes:

அறிஞர்
15-02-2007, 02:05 PM
"மாமூல் நிலுவைத்தொகை தள்ளுபடி" அப்படின்னு ஒரு திட்டத்தை அறிவிச்சேன்.. பய மசிஞ்சுட்டான்.. இனிமே மாசா மாசம் ஒழுங்கா மாமுல் குடுக்கறதா ஒப்புக்கிட்டான்..!
*********************************************************************

தள்ளுபடின்னா... எல்லாம் சரியா நடக்கும் போல... :rolleyes: :rolleyes:

அறிஞர்
15-02-2007, 02:06 PM
காதலன் : தனியா வர பயமா இருந்தா உன் தங்கச்சியயும் கூட கூட்டிட்டு வா!!!!!வில்லங்கமான ஆளு யாரு.. ஆதவனின் நண்பனா....

மயூ
15-02-2007, 02:55 PM
கண்ணே.. நான் ஆதவன் மாதிரி அழகு இல்லே.. அவனை மாதிரி பணக்காரன் இல்லே.. ஆதவனிடம் இருக்கற மாதிரி என்கிட்டே கார் இல்லே.. ஆனா இது எல்லாத்துக்கும் மேலே உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்.. என்னை ஏத்துக்குவியா..?

சரி..சரி.. அந்த ஆதவன் பத்தி இன்னும் கொஞ்சம் தகவல் சொல்லேன்...!


அது!!!

ஆசை நூறு வகை அதில் இதுவும் ஒரு வகை...
ஹூம்.... பாப்பம் எங்க போயி முடியப் போகுதுன்னு!!! :D

அறிஞர்
15-02-2007, 06:25 PM
ஆசை நூறு வகை அதில் இதுவும் ஒரு வகை...
ஹூம்.... பாப்பம் எங்க போயி முடியப் போகுதுன்னு!!! :D
நீங்க முடியுமென நினைக்கிறீங்களா....

ராஜா
16-02-2007, 02:13 AM
ஆதவன் ஜோக் இப்படி சூப்பர் ஹிட் ஆகும்ன்னு நான் நினைக்கவே இல்லே.. சபாஷ் ஆதவன்..!

ஆதவா
16-02-2007, 02:15 AM
ஆதவன் ஜோக் இப்படி சூப்பர் ஹிட் ஆகும்ன்னு நான் நினைக்கவே இல்லே.. சபாஷ் ஆதவன்..!

ஆதவன்னாலே இப்படித்தான்....... :D

ஆதவா
16-02-2007, 02:18 AM
ஆதவா..
தல ரசிகரா..?

யாரந்த தல? அழுகவேதெரியாம, சண்டை போட தெரியாம, கதை தேர்ந்தெடுக்கத் தெரியாம, நடனம் ஆடத்தெரியாம வாலில்லாம சுத்திட்டு இருக்கும் அவரா?......... சேசே... நான் எப்பவுமே தனிவழி.


இது ரொம்ப ஓவர்... :rolleyes: :rolleyes:

என்ன பண்றது அறிஞரே!! இப்படியெல்லாம் சொல்லவேண்டி இருக்குது..


வில்லங்கமான ஆளு யாரு.. ஆதவனின் நண்பனா....

ம்ம்ம்ம்..... நடத்துங்க நடத்துங்க,,,,,,,


ஆசை நூறு வகை அதில் இதுவும் ஒரு வகை...
ஹூம்.... பாப்பம் எங்க போயி முடியப் போகுதுன்னு!!! :D

வாங்க சார்.:p .... ஆனாலும் பொறாமை உங்களுக்கு.... :D

ஆதவா
16-02-2007, 02:27 AM
ராஜா அண்ணாவைப் பற்றி.........

மன்றத்தில் குறிப்பிடத்தகுந்த ஒரு மனிதர்........ அடேயப்பா!! இவர் வீட்டுக்கு மட்டும் நான் போகவே மாட்டேன்... சந்தர்ப்பம் கிடைத்தால் கூட.............. அடுத்த நாள் வயிறு வலிக்கு மருத்துவமனையில்தான் இருக்கவேண்டும்////////// எப்படிங்க ராஜா சார் இப்படி?

ஹாஸ்யம் எல்லாருக்கும் வந்துவிடாது... கவிதை எல்லாரும் எழுதலாம். கதையும்தான்.... ஒரு சிந்தனையாளன் ஆவது எளிதாக இருக்கலாம்.. ஆனால் நகைச்சுவை எழுதுவது, ம்ஹீம்.. ரொம்ப சிரமமான விஷயம். அதிலும் தொடர்ந்து அடைமழையாக எழுதுவது இன்னும் சிரமம்.

ராஜா உண்மையிலேயே ராஜாதான்.. ஹாஸ்ய உலகத்திற்கே ராஜா! ..... இப்பகுதியை ஒட்டி ஆக்கியது வெகு சிறப்பு... நான் அவ்வப்போது வந்து சில சிரிப்புகளை உருவி இருக்கிறேன்.:D . ம்ம்ம்ம்... இன்னும் என்ன சொல்ல.

ராஜா அண்ணாவுக்கு ஒரு பட்டம் கொடுங்க அறிஞரே! நம் மன்ற நண்பர்களிடம் கேட்டாலே கொடுப்பார்கள்.. அதிலிருந்து நாம் தேர்ந்தெடுக்கலாம்........... (அவரின் பெயரின் பின் போடமுடியுமா?) இது என் வேண்டுகோள்.. மன்ற நண்பர்கள் இசைந்தால் செய்யலாமே!!!////

பல நூறு ஆண்டுகள் எங்களை சிரிக்க வையுங்கள்....

ஆதவன்

ராஜா
16-02-2007, 02:37 AM
நன்றி ஆதவரே..!
எனக்கென்னவோ கவிதைதான் கடினம் என்று படுகிறது. கவிஞர்கள் பாக்கியவான்கள்.. ஒரே நேரத்தில் இரு வேறு உலகத்தில் சஞ்சரிக்க அவர்களால் மட்டுமே முடியும். கற்பனை உலகத்தில் கண்டவற்றை நிதர்சன உலகில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் உங்கள் சேவை மகத்தானது.

ராஜா
16-02-2007, 02:46 AM
முதல்நாள் அலுவலக விருந்து வைபவம் முடிந்து இருந்தது.

மறுநாள் முதலாளி சின்னசாமியைக் கூப்பிட்டு கண்டபடி திட்டினார்..

ஏன்யா..? உனக்கு குடிச்சிருந்தா அறிவிருக்காதா..? நேத்து பார்ட்டி முடிஞ்சதும் வீட்டுக்கு போகாம நம்ம ஆபீஸ் குப்பை வண்டியைத் தள்ளிக்கிட்டு அண்ணா சாலை பூரா திரிஞ்சிருக்கே.. பாக்கறவங்க நம்ம கம்பெனியப் பத்தி என்ன நினைப்பாங்க..?

நீங்க அதுக்குள்ள நாடா டிராயரோட உக்காந்துக்கிட்டு வேகமா தள்ளுடா மாப்ளே ன்னு சொல்லும்போது நான் என்ன முதலாளி செய்யமுடியும்..? அதுக்காக நீங்க ரொம்ப வருத்தப் பட வேண்டாம். மக்கள் எல்லாரும் ரொம்ப ரசிச்சு பார்த்தாங்க..!!!
_________________________________________________________________________
ஒருவன் மதுக்கடையில் மூக்கு முட்ட குடித்தான்.. பின்னர் வீட்டுக்கு திரும்ப நினைத்தபோது அவனால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை..குப்புற விழுந்து கிடந்தவன், "சே.. குடித்தாலே இப்படித்தான்.. இனிமேல் குடிக்கக்கூடாது..இப்போது மற்றவர்கள் கேலி செய்யுமுன் எவ்வாறாவது சுதாரித்து எழுந்து வீட்டுக்கு போகவேண்டும்.." என எண்ணியவாறே மீண்டும் எழ முயற்சித்த போது, மறுபடியும் தவறி சேற்றில் விழுந்து விட்டான். முகமெல்லாம் சேறு.. "சரி..இனி தவழ்ந்தாவது வீட்டுக்கு செல்வேன்..இனி விழுந்து மற்றவர்களின் கேலிக்கு இலக்காக மாட்டேன்.." என்று முடிவு செய்து இரவு முழுவதும் தவழ்ந்து வீட்டுக்கு வந்தவன் சோர்வு மிகுதியால் வாசல் படியிலேயே தூங்கி விட்டான்.

காலையில் வாசல் தெளிக்க கதவைத்திறந்த மனைவி அவன் முகத்திலும் தெளித்து எழுப்பினாள்.. கணவன் அசட்டுச் சிரிப்புடன் கண் விழிக்க.. மனைவி கேட்டாள்..

" மறுபடியும் குடிக்க போயிட்டீங்களா..?"

"அட.. எப்படி தெரியும்..?"

" சக்கர நாற்காலியை விட்டுட்டு வந்துருக்கீங்களே.. மதுக்கடையிலே தானே இருக்கு..? "
_________________________________________________________________________
ஒரு குடிகாரன் வீட்டுல தனியா உட்கார்ந்து புலம்பிக்கிட்டு இருந்தான்.. குடியாலே அவன் மனைவி விவாகரத்து வாங்கிக்கிட்டா.. புள்ளை வீட்டை விட்டு ஓடிட்டான்.. வேலையும் போயிடுச்சு.. ஒரு முடிவுக்கு வந்தவனாக அலமாரியைத் திறந்தான்.. ஒரு காலி பிராந்தி பாட்டிலை எடுத்தான்..

உன்னால தான் என் மனைவியைப் பிரிந்தேன்.. என்று அந்த பாட்டிலை ஓங்கி தரையில் அடித்து உடைத்தான்..

இன்னொன்றை எடுத்து மகன் பிரிவுக்கு நீயே காரணம் என்று அதையும் உடைத்தான்..

மூன்றாவது காலி பாட்டிலை எடுத்து வேலை போனதற்காக அதையும் அடித்து உடைத்தான்..

அடுத்து எடுத்தது ஒரு புது சீல் பிரிக்கப்படாத விஸ்கி புட்டி.. அதை சற்று நேரம் தடவிப் பார்த்தவன் சொன்னான்..

" நீ பயப்படாதே.. நடந்த எதுவுக்கும் நீ பொறுப்பாளி இல்லே.. நீ இப்பொதான் வந்திருக்கே.. நீ இருக்கலாம்..!!!!".
_________________________________________________________________________
சின்னசாமி எப்போதும் ராத்திரி பூரா சாராயக் கடையிலேயே குடிச்சுட்டு கெடப்பான்.. காலையிலே எழுந்து வீட்டுக்கு வருவான்.. ஒருநாள் அவன் மனைவி கண்டபடி திட்டிட்டு இன்னக்கி நானும் உன்கூட கடைக்கு வர்றேன்.. அப்படி என்னா சுகத்தைக் கண்டேன்னு பார்க்கிறேன்னு சொன்னா.

சின்னசாமி அவளை அழைச்சுட்டுப் போயி ஒரு கிளாஸ் வாங்கிக் குடுத்தான். கொஞ்சமா வாயில வச்சுப் பார்த்த மனைவி கீழே துப்பிட்டு சொன்னா..

" தூ... இந்த எழவை எப்பிடிய்யா குடிக்கறே..?"

சின்னசாமி அமைதியா சொன்னான்...

" இப்ப தெரியுதா நான் படுற கஷ்டம்..? என்னமோ தினமும் குடிச்சுட்டு கும்மாளம் போடுறேன்னு உனக்கு நெனப்பு...!
_________________________________________________________________________

ஆதவா
16-02-2007, 02:48 AM
நன்றி ஆதவரே..!
எனக்கென்னவோ கவிதைதான் கடினம் என்று படுகிறது. கவிஞர்கள் பாக்கியவான்கள்.. ஒரே நேரத்தில் இரு வேறு உலகத்தில் சஞ்சரிக்க அவர்களால் மட்டுமே முடியும். கற்பனை உலகத்தில் கண்டவற்றை நிதர்சன உலகில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் உங்கள் சேவை மகத்தானது.

இல்லைங்க ராஜா ண்ணா! கவிதை எழுதுவது மிக சுலபம். சிலர் சொல்லுவதுபோல காதலித்தாலோ அல்லது காதலை நினைத்தாலோ கவிதை பிறந்துவிடுமாம்.... நகைச்சுவை உணர்வு அப்படியல்ல... மூடியிருக்கும் உதடுகளைத் திறக்க வேண்டும். மனதைக் கூட திறந்துவிடலாம்........ இது சாத்தியமில்லை...... சில வரிகளில் என்னையும் மறந்து நான் சிரித்திருக்கிறேன் பலமுறை........ சிலரிடம் உங்கள் ஜோக்கைச் சொன்னால்.. உனக்கு மட்டும் எப்படிடா இப்படி மாட்டுது என்று சொல்லுகிறார்கள்......... அருமை......

ஆதவா
16-02-2007, 02:53 AM
குடி ஜோக்ஸ் அருமை................

ஷீ-நிசி
16-02-2007, 03:01 AM
ரு குடிகாரன் வீட்டுல தனியா உட்கார்ந்து புலம்பிக்கிட்டு இருந்தான்.. குடியாலே அவன் மனைவி விவாகரத்து வாங்கிக்கிட்டா.. புள்ளை வீட்டை விட்டு ஓடிட்டான்.. வேலையும் போயிடுச்சு.. ஒரு முடிவுக்கு வந்தவனாக அலமாரியைத் திறந்தான்.. ஒரு காலி பிராந்தி பாட்டிலை எடுத்தான்..

உன்னால தான் என் மனைவியைப் பிரிந்தேன்.. என்று அந்த பாட்டிலை ஓங்கி தரையில் அடித்து உடைத்தான்..

இன்னொன்றை எடுத்து மகன் பிரிவுக்கு நீயே காரணம் என்று அதையும் உடைத்தான்..

மூன்றாவது காலி பாட்டிலை எடுத்து வேலை போனதற்காக அதையும் அடித்து உடைத்தான்..

அடுத்து எடுத்தது ஒரு புது சீல் பிரிக்கப்படாத விஸ்கி புட்டி.. அதை சற்று நேரம் தடவிப் பார்த்தவன் சொன்னான்..

" நீ பயப்படாதே.. நடந்த எதுவுக்கும் நீ பொறுப்பாளி இல்லே.. நீ இப்பொதான் வந்திருக்கே.. நீ இருக்கலாம்..!!!!".

ராஜா சார், இந்த ஜோக் ரொம்ப......... சூப்பர்...

அறிஞர்
16-02-2007, 10:00 PM
குடிகாரனின் கூத்துக்கள்.. அருமை.... தொடரட்டும் ராஜாவின் ரவுசு.

ராஜா
17-02-2007, 08:46 AM
ஒரு ஓவியக் கண்காட்சியில் ஒரு அழகான ஜமீந்தாரை ஒவியம் வரைந்து வைத்திருந்தார்கள். நம் சர்தார் சென்று விலை கேட்டார். 5000 ரூபாய் என்றார்கள். இவரிடம் 20 ரூபாய் விலை குறைந்தது. எவ்வளவோ பேரம் பேசியும் விலையைக் குறைக்க மறுத்துவிட்டார்கள். அடுத்தநாள் 20 ரூபாயைச் சேர்த்து முழுத்தொகையை எடுத்துக் கொண்டு போனார். ஆனால் அதற்குள் ஒவியம் விற்றுப் போயிருந்தது. இவன் சோகமாக வீட்டுக்கு வந்தார்.

அடுத்த வாரம் ஒரு நண்பர் வீட்டுக்குப் போனார் சர்தார், அங்கே அந்த ஒவியம் மாட்டியிருந்தது!

"இது யாருடைய படம்?" என்று சர்தார் கேட்டார்.

"என் தாத்தா...ஜமீன்தாராய் இருந்தவர்" என்றார் நண்பர்.

" ம்...அன்னைக்கு என் கையில் மட்டும் 20 ரூபாய் கூடுதலாக இருந்திருந்தால் இவர் என் தாத்தாவாகி இருப்பார்" என்றார் சர்தார்!
-----------------------------------------------------------------
ஒரு சர்தாஜி ரயிலிலிருந்து தண்ணீர் பிடிக்க இற்ங்கினார். சில நிமிடங்களில் ரயில் கூவிவிட்டது. டக்குன்னு தான் வந்த ரயில் இது தானா என கூட யோசிக்காமல் பெட்டியில் ஏறிவிட்டார். கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, பர்த்தில் ஏறி படுத்து விட்டார். சிறிது நேரம் கழித்து கீழ் பர்த்திலிருந்த்வரிடம், அவர் எங்கு போகிறார் என விசாரித்தார்.

அவர் சொன்ன ஊரின் பேரைக் கேட்டவுடன், சர்தாஜி மெய்சிலிர்த்துப் போய், ஆஹா என்னமா நமது ரயில்வே துறை வேலை செய்யுது. நான் போற டில்லி வண்டிலேயெ மேல் பர்த் டெல்லிக்கும், கீழ் பர்த்து மெட்றாஸுக்கும் போகிற வண்டி உட்ருக்காங்கன்னுட்டு தூங்க ஆரம்பித்து விட்டாராம்.
------------------------------------------------------------------
ஒரு நாள் பாண்டாசிங் ரோட்ல நடந்து போய்கிட்டிருந்தார். அப்போ ஒரு லாரியை இன்னொரு லாரி கயிறு கட்டி டோ பண்ணி போய்கிட்டு இருந்தது. அதை பார்த்த நம்மாளு,

"ஐயோ! ஐயோ!! ஒரு சின்ன்ன்ன கயிற கொண்டு போறதுக்கு ரெண்டு லாரியா?"
------------------------------------------------------------------
ஒருநாள் சென்னை விமான நிலையத்தில் சர்தார் உக்கார்ந்து இருந்தபோது இருவர் சண்டை போட்டுகொண்டு இருப்பதை வேடிக்கை பார்த்தார்.

ஒருவன்:- அடிச்சா அமெரிக்காவிலே போயி விழுவடா

அடுத்தவன் :- நான் உதைச்சா நீ ஆப்பிரிக்கா போயிடுவே..

அப்போ சர்தார் இதை பார்த்துட்டு சொன்னார்...

அவர்களிடம் " என்னை கொஞ்சம் லேசா அடிங்க.. நான் டெல்லி வரைக்கும் போகணும்..!

அமரன்
17-02-2007, 09:00 AM
கடைசிப் பதிப்பின் முதலாவது நகைச்சுவையில் வழமைக்கு மாறாக சர்தாஜியை புத்திசாலியாகக் காட்டிவிட்டு அடுத்த இரு நகைச்சுவைகளிலும் அடிச்சிட்டீங்களே ஆப்பு.

விகடன்
17-02-2007, 09:13 AM
தொடர்ச்சியாக பல வகைக்களில் தரப்பட்டிருந்தது தொடர் கலக்கலாக இருந்தது.
பொதுவாக ஆண்களே பெண்களின் கேலிக்கும் கிண்டலிற்கும் ஆளாக்கப்படுவது வாடிக்கையே. அதன் பரிமானம் முதலாவதில் தென்பட்டது.

மிக்க நன்றி.

virumaandi
17-02-2007, 01:51 PM
அய்யோடா...
கொஞ்சமாக படித்த உடனேயே.. இப்படி சிரிப்பு அடக்கமுடியவில்லை..

நான் எப்போ முழுசா படிக்கிறது??

தமிழ் மண்ணே வணக்கம்

ஓவியா
17-02-2007, 06:07 PM
வழிமொழிந்த அன்புத் தங்கை ஓவியாவின் பாசத்துக்கும், இசைவு தெரிவித்த அறிஞர் பெருமானின் பெருந்தன்மைக்கும் தலைவணங்குகிறேன்.. நன்றி..நன்றி.. நன்றி.

அண்ணா,
சிறப்பான பதிவினை பாராட்டுவது தான் சிறப்பு.

தங்களின் எழுத்து திறமையை பாராட்டுவது தமிழ்மன்றதிற்க்கு பெருமையே.

மக்களை சிரிக்க வைக்கும் தாங்கள் திறமைக்கு இதெல்லாம் சிரிய பரிசுதான்.

அறுசுவை விகடகவியாய் வலம் வர வாழ்த்துக்கள்.
....................................................................................................

ஆதவா கவணிக்க
அறுசுவை விகடகவி
வினோத விதூஷகன்(ர்)

ஆதவா
17-02-2007, 06:14 PM
ஆதவா கவணிக்க
அறுசுவை விகடகவி
வினோத விதூஷகன்(ர்)

அப்படியே அர்த்தம் சொல்றது????

அருமையான பட்டம்.. அறுசுவை விகடகவி.....

(நம்மாளுங்க சாப்படறதிலேயே இருக்காங்கப்பா!!:D )


நன்றிங்க ஓவி

ஓவியா
17-02-2007, 06:27 PM
அப்படியே அர்த்தம் சொல்றது????

அருமையான பட்டம்.. அறுசுவை விகடகவி.....

(நம்மாளுங்க சாப்படறதிலேயே இருக்காங்கப்பா!!:D )


நன்றிங்க ஓவி

அறுசுவை விகடகவி (போண்டாவை அமுக்கும் பொழுதுதான் இந்த சிந்தனையே வந்தது)
பொதுவாக அனைத்து விசயங்களையும் நகைசுவை சிந்தனையோடு ஒப்பிட்டு வழங்குவதர்க்காக இது தோன்றியது




வினோத விதூஷகன்(ர்)
என்றால் நகைசுவையாலர், அகராதியில் பார்த்தேன். அதான் வச்சுடேன்

ஆதவா
17-02-2007, 06:36 PM
அறுசுவை விகடகவி (போண்டாவை அமுக்கும் பொழுதுதான் இந்த சிந்தனையே வந்தது)
பொதுவாக அனைத்து விசயங்களையும் நகைசுவை சிந்தனையோடு ஒப்பிட்டு வழங்குவதர்க்காக இது தோன்றியது




வினோத விதூஷகன்(ர்)
என்றால் நகைசுவையாலர், அகராதியில் பார்த்தேன். அதான் வச்சுடேன்

அக்கா!!!!!:eek: சிந்தனை அருமை...:)

ஓவியா
17-02-2007, 06:41 PM
வினோத விதூஷகன்(ர்)
என்றால் நகைசுவையாலர், அ..க..ரா..தி..யி..ல் பார்த்தேன். அதான் வச்சுடேன்


அக்கா!!!!!:eek: சிந்தனை அருமை...:)

இததானே சொல்லுறீங்க ஆதவன்.:eek: :eek:

புரிந்தது :D :D

ஆதவா
17-02-2007, 06:52 PM
இததானே சொல்லுறீங்க ஆதவன்.:eek: :eek:

புரிந்தது :D :D

அக்காவுக்கு
அறிவு
அதிகம்.
அதைத்தான்
அப்படி
அடித்தேன்... (டைப்)

ராஜா
18-02-2007, 04:28 AM
என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே..?

ராஜா
18-02-2007, 05:14 AM
அப்படியே அடுத்த பக்கத்துக்கு அப்பீட் ஆவோமா..?

ராஜா
18-02-2007, 05:23 AM
ராஜா ; இன்னிக்கு நீ செஞ்ச டிபன் சூப்பர் கண்ணம்மா..
உப்பு, உறைப்பு எல்லாம் சரியா இருக்கு.. சபாஷ்.. ஆமாம்.. அது பேர் என்ன..?

கண்ணம்மா ; அய்யோ .. அது பால் கோவாங்க..!

**************************************************************************************
ராஜா ; கண்ணம்மா.. இன்னிக்கு நம்ம வீட்ல என்னம்மா டிபன்..?

கண்ணம்மா ; சுடச் சுட சப்பாத்தி குருமா..!

ராஜா ; சூப்பர்.. ரெடியா இருக்கா..?

கண்ணம்மா ; ம்ம்ம்ம் குழவி, மாவு,.. கல்லு எல்லாம் ரெடியா இருக்குங்க.. நீங்க உங்க வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி..!

***************************************************************************************
கண்ணம்மா ; என்னங்க..? இப்போ தொட்டுக்கறீங்களே..
இதிலே சட்னி நல்லாருக்கா.. இல்லே சாம்பார் நல்லாருக்கா..?

ராஜா ; முதல்ல நீ எது சாம்பார்.. எது சட்னின்னு சொல்லு.. அப்புறம் நான் நல்லா இருக்கான்னு சொல்றேன்..!

*******************************************************************************************

ராஜா
18-02-2007, 05:28 AM
ஒரு முதிர்ந்த மகானைப் பார்க்க ஒருவர் தன் 4 வயது மகளுடன் போயிருந்தார்.. மகானுடன் குழந்தை உரையாடும்போது...

உன் வயசு என்ன குழந்தே..?

4. உங்க வயசு என்ன தாத்தா..?

98.

நிஜம்மாவா..? அவ்ளோ வயசா..? தாத்தா.. நீங்க ஒரு வயசிலேருந்துதானே ஆரம்பிச்சு வந்துருக்கீங்க..?
__________________

ராஜா
18-02-2007, 05:28 AM
டாக்டர்.. ஓட்டுநர் உரிமம் பெற வண்டி ஒட்டிக் காட்டும்போது என் இதயத் துடிப்பு ரொம்ப அதிகம் ஆயிடுது..

இதெல்லாம் சாதாரணம்தான்.. லைசென்ஸ் கிடைக்குமோ கிடைக்காதோங்கற பதட்டத்திலே புதுசா கத்துக்கறவங்களுக்கு இப்படி இருக்கும்.. உங்களுக்கு லைசென்ஸ் கிடைச்சுடும்.. கவலைப்படாதீங்க..

ஆனா டாக்டர்...... நான்தான் சோதனை செஞ்சு உரிமம் வழங்கும் அதிகாரி..!
__________________

gayathri.jagannathan
19-02-2007, 03:49 AM
யப்பா, ராசா,
நகைச்சுவை அனைத்தும் மிகவும் அருமை...
சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா ஆனது தான் மிச்சம்.......
எங்கிருந்து புடிக்கறீங்கப்பா இப்படியெல்லாம்?


இதுக்குன்னே ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ? :cool: :cool: :confused:

ராஜா
19-02-2007, 07:25 AM
நன்றி காயத்ரி...!

எங்க முதலாளி எப்போதும் சூரியன் எஃப் எம் கேட்டுக்கிட்டேயிருக்காரு

அதனால உனக்கு என்ன பிரச்சனை?

சம்பளம் கேட்டா... கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டேயிருங்கன்னு சொல்றாரே தவிர கொடுக்க மாட்டேங்கறாரே!
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH
ஆசிரியர்: கணக்கில் இத்தனை தவறுகளைச் செய்ய உன்னால் எப்படி முடிந்தது?

மாணவன்: என் அப்பா எனக்கு உதவி செய்தார், மிஸ்.
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH
கலங்கரை விளக்கத்தின் உச்சியில்...

ஜக்கு : மக்கு, கீழே எத்தனை அற்புதமான காட்சி பார்

மக்கு : கீழே இவ்வளவு அற்புதமா இருக்கறப்ப, என்னை எதுக்காக கஷ்டப்பட்டு மேலே கூட்டிக்கிட்டு வந்தே?
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

ஏம்பா எப்ப பாத்தாலும் ரூம்லயே உட்கார்ந்திட்டிருக்கியே உனக்கு வேலை வெட்டி எதுவும் கிடையாதா?

நீங்க மட்டும் ஏன் எப்ப பாத்தாலும் வெட்டி வேலையா வெளில சுத்துறீங்கன்னு எனக்கும்தான் புரிய மாட்டேங்குது!
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

சோம்பேறின்னு நானும் கேள்விபட்டிருக்கேன் இன்னிக்குதான் நேர்ல பாத்தேன்?

யாரப் பாத்த?

பக்கத்து வீட்டுக்காரர் ரிமோட் கன்ட்ரோல ஆபரேட் பண்ண ரிமோட் எதாவது இருக்கான்னு கேக்கறாரு!
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

நம்ம ராமசாமி தன்னோட ஓடிப்போன பையன் கல்யாணம் பண்ணிட்டு திரும்பி வீட்டுக்கு வந்தப்ப ரெண்டு பேருக்கும் விட்டாரு பாரு ஒரு அறை!

அடடா! இதுக்கு போய் ஏன் கோவப்படறாரு!

நான் இப்ப கோவப்பட்டாருன்னா சொன்னேன், ரெண்டு பேருக்கும் தன்னோடைய அறைய விட்டாருன்னு சொன்னேன்.
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH
என் பையன் ஓடிட்டான்னு நானே கவலைப்படலே... அப்புறம் நீ ஏன் கவலைப்படற...!"

"யோவ்! என் பெண்ணைக் கூட்டிக்கிட்டு ஓடிட்டான்யா?"

"இப்போதான் எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு...
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH
நிருபர்: "ஏன் நீங்க கல்யாணம் பண்ணிக்கலே?"

பியூலாஸ்ரீ : "எனக்கு எதுக்குங்க கல்யாணம்? இனிமே என் மகளோட நல்வாழ்க்கை தாங்க எனக்கு முக்கியம்!"
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

சார் நம்ம ஹீரோயின் பியூலாஸ்ரீ ராத்திரி பெட்ரூம்ல தடுக்கி விழுந்து...?"

"அய்யையோ... என்னாச்சி?"

"நம்ம தயாரிப்பாளரோட கால் எலும்பு முறிஞ்சிடுச்சாம்!"
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH
அந்தப்புரத்தில் திருட நுழைந்த திருடன் அங்கே மூர்ச்சித்து விழுந்து கிடக்கிறான் மன்னா!"

"ஏன் மூர்ச்சித்து விழுந்தான்?"

"மகாராணியை மேக்கப் இல்லாமல் பார்த்தானாம்!"
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH
"என்ன! போன மாசம் வேலை தேடிப் போன உன் மகனைப் போலீஸ் பிடிச்சிக்கிட்டாங்களா? ஏன்?"

"அவன் தேடிப்போனது கோயில்ல இருந்த முருகனோட வேலை!"
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

"உன்னை உன் கணவர் கடலோரம் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரா?"

"அட! ஆமா. எப்படிக் கண்டுபிடிச்சே!"

"அடிக்கடி... கடலோரம் வாங்கிய கழுதைன்னு அவர் பாடறதை வச்சித்தான்!"
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH
என்ன இருந்தாலும் பட்டிமன்றத்துக்கு இப்படித் தலைப்பு வச்சிருக்கக் கூடாது!"

"அப்படி என்ன தலைப்பு வச்சாங்க?"

"நடிகை பியுலாஸ்ரீயின் குழந்தைக்குத் தகப்பன் முதல் கணவனா? மூன்றாம் கணவனான்னு தான்!"
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

"தலைவர் சாப்பிட்டுட்டு வர 12 மணி நேரமாகும்!"

"எப்படிச் சாப்பிட்டாலும் 1/2 மணி நேரம்போதுமே"

"அது இறங்க 12 மணி நேரமாகும்யா!"
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

பியூன்: "சார்! நம்ம டெஸ்பாட்ச் கிளார்க்குக்கு ரொம்ப திமிர் சார்!"

மானேஜர்: எப்படி சொல்றே?"

பியூன்: என்ன சார் சேர்லியே சாஞ்சி தூங்கறீங்கன்னு கேட்டா இந்த ஆபிஸ்ல தர்ர சம்பளத்துக்கு ஸ்டீல் கட்டில், மெத்தை வாங்கிப்போட்டா தூங்க முடியும்னு நக்கலா பேசறாரு!"

ஷீ-நிசி
19-02-2007, 08:16 AM
ராஜா அவர்களின் நகைச்சுவை ஒவ்வொன்றும் ரசனையான ரகங்கள்...

ஆதவா
19-02-2007, 09:40 AM
அருமை அருமை... ராஜா சார்......

அறிஞர்
19-02-2007, 03:56 PM
கண்ணம்மா ; அய்யோ .. அது பால் கோவாங்க..!

ராஜாவின் லொள்ளு ரொம்ப தான்.... பால் கோவாவில் காரமா... :rolleyes: :rolleyes:

அறிஞர்
19-02-2007, 03:58 PM
#225ல் ஒவ்வொன்றும அருமை ராஜா..

ரவுசுகள் இன்னும் தொடரட்டும்.

அமரன்
19-02-2007, 03:59 PM
எல்லாமே சிரிக்க வைக்கும்படியாக இருக்கு. தொடர்ந்து ரவுசுபண்ணுங்கப்பு.

ராஜா
20-02-2007, 05:38 AM
மன்னர் ; மந்திரி.. அரண்மனை சேவகர்களுக்கு இந்த மாதம் சம்பளம் பட்டுவாடா செய்யவில்லையா..?

மந்திரி ; ஏன் மன்னா அப்படி கேட்கிறீர்கள்..?

மன்னர் ; யார் அங்கே என்று கூப்பிட்டால் நீ வா இங்கே என பதில் வருகிறதே...!
_________________________________________________________________________

காவலன் 1 ; மன்னருக்கு திடீர் மாரடைப்பாமே.. ஏன் ?

காவலன் 2 ; சுயம்வரத்துக்கு வந்த எல்லா இளவாரசர்களையும் கட்டி வைன்னு இளவரசி அட்டகாசம் பண்ணுதாம்...!
__________________________________________________________________________

அரசன் :- புலவரே! என்ன துணிச்சல்? என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுகிறீர்?''

புலவர்:- மன்னிக்க வேண்டும் அரசே! அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே..!
__________________________________________________________________________

என்ன..புறமுதுகிட்டு ஓடிவந்த நம் மன்னருக்கு பாராட்டு விழாவா..?

ஆமாம்.. சராசரியாக 40 கி.மீ. வேகத்தில் ஓடி உயிர் பிழைத்தது உலக சாதனையாம்..!!
__________________________________________________________________________

மந்திரி ; அரசே.. நம் நாட்டில் நிலவும் பஞ்சத்தைப் பயன்படுத்தி எதிரி மன்னன் எளிதாக போரில் வென்றுவிட்டான்..

அரசர் ; எப்படி..?

மந்திரி ; நம் படை வீரர்கள் இருக்கும் பகுதிக்கு பேரீச்சம்பழ வண்டிக்காரர்களை அனுப்பி வைத்துவிட்டான் மன்னா..வீரர்கள் வாள் கேடயங்களைப் போட்டு பேரீச்சம்பழம் வாங்கித் தின்றுவிட்டார்கள்..!!!
_________________________________________________________________________

" நலம், நலம் அறிய ஆவலனு அரசர் அனுப்பிய ஓலைக்கு, எதிரி நாட்டு மன்னர் கோபமா பதில் அனுப்பியிருக்கார்"

"அப்படியா! என்ன அனுப்பினார்?"

" களம், களமறிய ஆவல்னு"
_________________________________________________________________________

''என்ன இது ராப்பிச்சைக்காரன் நமது மன்னரை 'வாடா, போடா' என்று அழைக்கிறானே...''

''மன்னர் தினமும் இரவில் நகர்வலம் போன போது பிரெண்ட் ஆயிட்டானாம்''
_________________________________________________________________________

''அரசே, தாங்கள் இளவரசருக்கு 'பாக்கெட் மணி' தரவில்லையா என்ன?''

''எதற்காக கேட்கிறீர்கள் அமைச்சரே?''

''நமது பட்டத்து யானையை கொண்டு போய் இளவரசர், சர்க்கஸ்காரர்களிடம் விற்றுவிட்டாரே...!''

அமரன்
20-02-2007, 10:39 AM
என்னது. இன்று அரசர்கள் ஜோக்காகவே இருக்கு. அனைத்தும் அருமை. இதேபோல இன்றைய மந்திரிகள் ஜோக்கையும் தரலாமே.

praveen
20-02-2007, 11:46 AM
இந்த திரியில் உள்ள சில சிரிப்புகள் ஏற்கெனவே சில வாரப்பத்திரிக்கைகளில் படித்திருந்தாலும், நிறைய சிரிப்புகள் புதிதாக உள்ளன

பதிந்ததிற்கு நன்றி.

ராஜா
21-02-2007, 03:43 AM
நேத்து தலைவரை கட்சிக்காரங்க அடி பின்னிட்டாங்க......

ஓ... அதான் கட்சி செயல்பாடுகளிலிருந்து "அடியோடு" விலகுகிறேன்னு அறிக்கை விட்டாரா????????

...................................................................................................
''தலைவர் செருப்புகூட போடமாட்டாரு. அவ்வளவு எளிமை.''

''அதுக்காக, வருங்கால முதல்வரேனு சொல்றதுக்குப் பதிலா, அவரை வெறுங்காலு முதல்வரேனு சொல்றது நல்லாயில்லை.''

..................................................................................................
தலைவருக்கு தேர்தல் பற்றிய அனுபவம் இல்லேன்னு நினைக்கிறேன்..

ஏன்..?

ஓட்டை பிரிச்சா வெற்றி நிச்சயம்ன்னு சொன்னதுக்கு, நான் ஒரு காலத்துல கொத்தனாரா இருந்தவன்தான்னு சொல்லிட்டு கூரை மேல ஏறிட்டாரு..

.................................................................................................
தலைவர் என்ன குஷியா இருக்காரு..?

இடைத்தேர்தல்ல நிக்கிறது அவர் சின்ன வீடாம்....? அவங்க சின்னம் வீடாம்..
....................................................................................................

தலைவர் வீட்டு சோதனையிலே கிடைச்ச 2000 செருப்புகளுக்கு என்ன சமாதானம் சொல்லி சமாளிச்சாரு..?

காசு குடுத்து வாங்கியிருந்தா கணக்கு காட்டலாம்.. மேடையிலே வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டுறதுன்னு சொல்லிட்டாரு..
...................................................................................................

தெரியுமா..? தலைவர் நேத்து மூணாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாரு..

அப்ப மூணாவது "அண்ணீ'யை உருவாக்கிட்டாருன்னு சொல்லு..

leomohan
21-02-2007, 03:46 AM
காலத்திற்கு ஏற்ற நகைச்சுவை. கலக்குங்க ராஜா.

raj6272
21-02-2007, 04:38 AM
நல்ல கலெக்ஷன், நன்றி ராஜா

மன்மதன்
21-02-2007, 07:21 AM
சிரிப்புகளின் முடிசூடா மன்னராகி விட்டீர்கள் ராஜா................

அமரன்
21-02-2007, 01:40 PM
நேத்து தலைவரை கட்சிக்காரங்க அடி பின்னிட்டாங்க......
ஓ... அதான் கட்சி செயல்பாடுகளிலிருந்து "அடியோடு" விலகுகிறேன்னு அறிக்கை விட்டாரா????????

இவற்றில் எனக்கு மிகவும்பிடித்தது இதுதான். எப்படித்தான் இவ்வாறு சிந்தித்து எழுதுகின்றீரோ?

ராஜா
22-02-2007, 05:31 AM
ஒரு கணவன் மனைவி இருந்தார்கள்.. ஒருநாள் இரவு முழுவதும் மனைவி வீட்டுக்கு வரவேயில்லை. கணவன் கேட்டதற்கு, கார் பழுது பட்டுப் போனதால் சினேகிதி வீட்டில் தங்கிவிட்டதாக சொன்னாள்..
பின்னர் கணவன் அவளுடைய தோழிகளுக்கு போன் செய்து தன் மனைவி உன்னுடன் இரவு தங்கியிருந்தாளா என்று ஒவ்வொருவராக விசாரித்தான்.. 9 தோழிகள் இல்லையென்று மறுக்க, 10 வது தோழி மட்டும் ஒப்புக்கொண்டாள்..

மற்றொருநாள் கணவன் இரவு திரும்பவேயில்லை.. காரணம் கார் ரிப்பேர்.. நண்பனுடன் தங்கினேன்.. என்றான்..
இம்முறை மனைவி போன் செய்து விசாரித்தாள்..
5 நண்பர்கள் கணவன் தன்னுடன் தான் தங்கியிருந்ததாக சாதித்தார்கள்.. மற்ற 5 பேரோ இன்னும் ஒரு படி மேலே போய், " இப்போ கூட அவன் அவர்களோடு இருப்பதாக சத்தியம் செய்தார்கள்...!

____________________________________________________________________

ஒரு கப்பலில் ஒரு மேஜிக் காரன் இருந்தான்.கப்பலில் வரும் பயணிகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ வைப்பது அவன் வேலை..
ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பயணிகள் வருவார்கள் ஆதலால் இவ்ன் செய்த மேஜிக்கையே திரும்பத் திரும்ப செய்து பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வந்தான்.

ஆனால் இவற்றையெல்லாம் கப்பல் கேப்டன் வளர்த்து வந்த கிளி ஒன்று கவனித்து வந்தது. கொஞ்ச நாளில் வித்தைகாரனின் செயல்கள் அந்தக் கிளிக்கு அத்துபடி ஆகிவிட்டது. மேஜிக் காட்சிக்கு இடையே அது வித்தைக் காரனின் ஏமாற்று வேலைகளைப் போட்டுக் கொடுக்க தொடங்கி விட்டது.

ஹேய்.. எல்லோரும் கவனியுங்கள்.. அது வேறு தொப்பி.. இது வேறு தொப்பி..!

பூச்செடி மேசைக்கு கீழே இருக்கிறது.. இப்போது எடுப்பான் பாருங்கள்..!

வியப்படையாதீர்கள்.. எல்லா சீட்டுக்களுமே ஸ்பேட் ஆஸ் தான்..!

இவ்வாறு கத்தி மேஜிக் காரனின் காட்சியைக் கேலிக்கூத்தாக்கியது..! என்றாலும் கேப்டன் வளர்க்கும் கிளி என்பதால் வித்தைக்காரனால் ஒன்றும் செய்ய இயலவில்லை..

ஒருநாள் கப்பல் பனிப்பாறையில் மோதி சுக்கு நூறாகியது. வித்தைக்காரன் ஒரு கட்டையைப் பிடித்து உயிர் தப்பினான். எங்கிருந்தோ பறந்து வந்த கிளியும் அக் கட்டையின் ஒரு மூலையில் தொத்திக் கொண்டது. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இரண்டு முழு நாட்கள் கடந்தன. மூன்றாம் நாள் மௌனத்தை உடைத்த கிளி வித்தைக் காரனைக் கேட்டது..

"ஓகே.. இப்போ நான் ஒத்துக்கறேன்.. இந்த மந்திர வித்தையை நான் பார்த்ததே இல்லை.. சொல்.. கப்பலை எங்கே மறைச்சு வச்சிருக்கே..?"

மயூ
22-02-2007, 05:59 AM
ஐயோ பாவம் அந்தக் கிளி.!!!

மனோஜ்
22-02-2007, 09:00 AM
மனிதன் அறிவில் உயர்ந்தவன் என்பதை மறக்ககுடாது இது இறைநீதி என்பதை உனர்ந்தும் சிரிப்பு

ராஜா நீங்க உங்க ரவுச தொடருங்கள் நாங்கள் :D :D :D யிருக்கேம்

அமரன்
22-02-2007, 11:27 AM
இரண்டுமே சிரிப்பைத்தந்தது. முதலாவதில் ஆண்களின் அதிதீவிர நட்புவிசுவாசத்தை உணர்த்தியுள்ளீர்கள்

praveen
22-02-2007, 11:44 AM
கிளி ஜோக் நன்றாக உள்ளது.

ஆனால் அதில் இருந்து அறிவு பூர்வமாக ஒரு கேள்வி.

தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இம்மாதிரி பேச பழக்கும் கிளிகளுக்கு சொந்த அறிவை பயன்படுத்தி பேச இயலுமா?. எனக்குத் தெரிந்தவரை நாம் சொல்லிக் கொடுத்த ஓரிரு வார்த்தைகளை நினைவில் வைத்து தானே குரல் எழுப்பும். சரியா நண்பர்களே.

அமரன்
22-02-2007, 11:53 AM
தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இம்மாதிரி பேச பழக்கும் கிளிகளுக்கு சொந்த அறிவை பயன்படுத்தி பேச இயலுமா?. எனக்குத் தெரிந்தவரை நாம் சொல்லிக் கொடுத்த ஓரிரு வார்த்தைகளை நினைவில் வைத்து தானே குரல் எழுப்பும். சரியா நண்பர்களே


ஆமாம். நாம் கிளியின் முன்னால் அதிகம்பேசும் சொற்களையே கிளி திரும்பச் சொல்லும். மற்றப்படி அதுக்கு சிந்திக்கும் அறிவு இல்லை.

ராஜா
23-02-2007, 04:34 AM
ஒரு அமெரிக்கர், ஒரு ஜப்பானியர் மற்றும் ஒரு இந்தியர் மூவரும் ஒரு மதுக்கடையில் சந்தித்துக் கொண்டனர். ஒவ்வொருவரும் தங்கள் நாட்டுப் பெருமைகளை தம்பட்டம் அடித்துக் கொண்டனர்.

அமெரிக்கர்..; எங்கள் நாட்டில் வானை முட்டும் கட்டிடங்கள் இருக்கின்றன..!

சப்பானியர் ;.. வானை முட்டும் கட்டிடங்களா..? நம்ப முடியவில்லையே..

அமெரிக்கர் ; வானை முட்டும் அளவுக்கு இல்லை.. கொஞ்சம் கீழே..

[அடுத்து] சப்பானியர் ; எங்கள் நாட்டில் காலுக்கு அடியிலேயே தண்ணீர் ஊற்றெடுக்கும்..!

அமெரிக்கர் ; காலுக்கு கீழேயேவா..?

சப்பானியர் ; காலுக்கு அடியில் இல்லை.. கொஞ்சம் கீழே.

இந்தியர் ; எங்கள் நாட்டில் எல்லோரும் மூக்கால் சாப்பிடுவோம்..

அமெரிக்க சப்பானிய கூட்டு தயாரிப்பில்..; என்னது..? மூக்காலேயா..?

இந்தியர் ; ஓகே.. ஓகே.. கொஞ்சம் கீழே ..வாயால் தான் சாப்பிடுவோம்..!.

ராஜா
23-02-2007, 04:58 AM
இந்திய, அமெரிக்க மற்றும் ஸ்காட்லாண்ட் யார்ட் காவலர்கள் ஒரு திறன் போட்டியில் கலந்து கொண்டார்கள்..போட்டி நிகழ்ந்த இடம் இந்தியாவில் உள்ள "கிர்" கானகம். போட்டி.. . எந்த நாட்டு அணியினர் மிக விரைவில்
ஒரு புலியை பிடித்து வருகிறார்களோ அவர்களே சிறந்தவர்கள்..!

முதலில் ஸ்காட்லாந்து அணியினர் காட்டுக்குள் சென்று ஒரு மணி நேரத்தில் விடுதலைப் "புலி" என்று ஒரு சுள்ளி பொறுக்கும் கிராமவாசியைப் பிடித்து இழுத்து வந்தனர்..

அடுத்து அமெரிக்க அணியினர் காட்டுக்குள் புகுந்தனர்.. அரை நாள் கழித்து வெளியே வந்து, " அல் காயிதா" எல்லா புலிகளையும் கடத்திச் சென்று விட்டதாகவும், பின் லாடன் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்றும் சூளுரைத்தனர்..

அடுத்து நம் இந்திய போலீஸ் படை புயலெனப் புகுந்தது. காட்டுக்குள் போய் மூன்று நாள் ஆகியும் ஒரு தகவலும் இல்லை.. போட்டி நடத்துனர்கள் காட்டுக்குள் தேடிப்போன போது...

ஒரு கரடியை மரத்தில் கட்டி வைத்து, " புலின்னு ஒத்துக்கோ.. உனக்கு வேற வழியே இல்லே.. பேசாம நான் புலி தான்னு வாக்குமூலம் கொடுத்துடு..இல்லேன்னா என்கவுண்டர்தான்" என்று மிரட்டிக்கொண்டிருந்தனர்..!

gragavan
23-02-2007, 05:28 AM
கலக்கல் ரவுசுங்க. அடுத்த ரவுசு எப்போ?

மயூ
23-02-2007, 05:56 AM
வாய்க்குக் கொஞ்சம் கீழ...
நல்ல கடிங்க... :)

அறிஞர்
23-02-2007, 01:23 PM
அமெரிக்க சப்பானிய கூட்டு தயாரிப்பில்..; என்னது..? மூக்காலேயா..?

இந்தியர் ; ஓகே.. ஓகே.. கொஞ்சம் கீழே ..வாயால் தான் சாப்பிடுவோம்..!.
பலே இந்தியர்... இப்படிதான் மற்றவரை.... சமாளிக்க முடியும்

அறிஞர்
23-02-2007, 01:23 PM
ஒரு கரடியை மரத்தில் கட்டி வைத்து, " புலின்னு ஒத்துக்கோ.. உனக்கு வேற வழியே இல்லே.. பேசாம நான் புலி தான்னு வாக்குமூலம் கொடுத்துடு..இல்லேன்னா என்கவுண்டர்தான்" என்று மிரட்டிக்கொண்டிருந்தனர்..!
கரடிக்கு போதாத காலம்... என்ன பண்ணுவது.. :rolleyes: :rolleyes: