PDA

View Full Version : ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..!



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11

ராஜா
10-04-2007, 05:01 PM
ஆ..."சிரி.." யர்கள்... [தொடர்ச்சி].

ஒண்ணாவதுலேருந்து எட்டாவது வரைக்கும் இருக்கற பள்ளிகள்..
அதுவும் கிராமத்துப் பள்ளிகள்ள பாத்தீங்கன்னா இந்த ஆசிரியர்கள்
லந்து ஓவரா இருக்கும்.. அவங்க நடவடிக்கை, ஆங்கிலம் இதிலேயெல்லாம் கிரைம் ரேட் கூடிகிட்டே போகும்.. காரணம்..
யாரு கண்டுபிடிக்கப் போறாங்கங்கற நம்பிக்கை.. அப்படிப்பட்ட அட்டகாசங்களில் சில ....

ஆறாம்ப்பு டீச்சர் ஒரு கேள்வி கேட்டாங்க.. செல பயலுக பதில்
தெரியாம திரு திருன்னு முழிச்சானுக.. நல்லா போட்டு
சாத்திபுட்டு இன்னும் எவன் எவனுக்குத் தெரியாதோ அவனுகளா
பார்த்து கேட்டுச்சு அந்த டீச்சரம்மா.. ஒரு புத்திசாலிப்
பையன்.. உங்களைப் போல.. எந்திரிச்சு.." டீச்சர்.. எனக்கு
பதில் தெரியும்... நான் சொல்லட்டுமா..?" ன்னு கேட்டான்..
அந்தம்மா கடுப்பா சொன்னுச்சு..


i know..you know... you know I know..you know..?

என்னா முழிக்கிறீங்க..? அர்த்தம் புரியலியா..? "

உனக்கு தெரியும்ன்னு எனக்குத் தெரியும்.. உனக்குத்
தெரியும்ன்னு எனக்குத்ஹ் தெரியுங்கறது உனக்குத் தெரியுமா..?
அப்படன்னு அர்த்தமாம்..!

இது எவ்வளவோ பரவாயில்லே.. ஒரு வாத்தியார் ஆங்கிலப்
பாடம் நடத்துனார்.. ஒரு மாணவிக்கு ஆங்கில இலக்கணம்
சரியாத் தெரியலே.. உடனே வாத்தியார் கண்டிச்சார்..

You should improve your glammar.. ilஇல்லேன்னா ரொம்பக்
கஷ்டப் படுவே..!

அவர் சொல்ல நெனைச்சது கிராமர்.. கிளாமர் இல்லே..!

இந்தக் கூத்து இப்படியா..? ஒரு பள்ளியில ஒரு ஆசிரியைக்கு
அவசரமா கடைக்கு அனுப்ப ஒரு பையன் தேவைப் பட்டான்..
நேரா ஒரு வகுப்புக்கு போச்சு.. அங்க பாடம் நடத்திகிட்டு
இருந்த வாத்தியார் கிட்ட சொன்னுச்சு..

Excuse me sir.. I need a boy from you ..please help me..!

இதெல்லாம் உண்மையா நடந்த சங்கதி.. ஒரு மாதிரியா சிரிக்கப் படாது..

ராஜா
10-04-2007, 05:05 PM
இன்னொரு கூத்தைக் கேளுங்க.. இந்த வாத்தியாருக பசங்க
எது செஞ்சாலும் குத்தம் கண்டுபிடிப்பாங்க.. மதிய உணவு
இடைவேளை.. ரெண்டு பசங்க வராந்தாவில நடந்து
போயிட்டு இருந்தாங்க.. எதிர்த்தாப்பல வந்த வாத்தியார் சொன்னாரு..

டேய்.. அமைதியா லைன்ல ஒவ்வொருத்தனா போங்க..!

போனது ரெண்டு பய.. இதில லைன்ல போகணுமாம்..
எதையாவது சொல்லி மெரட்டிகிட்டே இருக்கணும்
ஆசிரிய அய்யாவுகளுக்கு..!

அது கூட பரவாயில்லீங்க.. இந்த தமிழ் வாத்தியார்களுக்கு
இங்கிலீஷ் பேசணும்ங்கற வெறி சமயத்தில வரும் பாருங்க.. அப்பப்பா..!

அப்படித்தான் ஒரு தடவை பள்ளி வாகனம் ரிப்பேருக்கு
போயிருந்துச்சு.. மாலை பள்ளி விட்டப்புறமும் பட்டறையில்
இருந்து வரலை.. பசங்க பூரா வெளையாடப் போயிட்டாங்க..
பொம்பளப் புள்ளைக எல்லாம் வகுப்புக்கு போய்
உக்காந்துடிச்சுங்க.. தமிழ் வாத்தியாரும் அந்த வண்டியில
தான் போயாகணும்.. வண்டியைக் காணாம தவிச்சுப்
போயிட்டாரு.. கொஞ்ச நாழி கழிச்சு வண்டி வந்துச்சு..
வண்டி வந்த சந்தோஷத்துல வெளையாடிக்கிட்டு இருந்த
பயலுகளைக் கூப்பிட்டு மாணவிகளை அழைச்சுட்டு வரச்
சொன்னார்.. எப்படி தெரியுமா..?

PLAY BOYS....! CALL GIRLS...!!!

இது தொலைஞ்சுட்டுப் போகுது.. பள்ளியில ஆண்டு விழா
நடக்கும் பார்த்திருக்கீங்களா..? அப்போ பொம்பளைப் புள்ளைங்க
டான்ஸ் ஆடும்.. அதுக்கு பேரு டான்ஸ் அயிட்டம்..
ஒரு நிகழ்ச்சி முடிஞ்சு மேடையில திரை போட்டாங்க.
.அடுத்த நிகழ்ச்சி. [அது ஒரு இரவுப் பாடல]..
ஒரு ஆசிரியர் ரெடி பண்ணினார்.. மைக் இயங்கிக்கிட்டு
இருந்தது தெரியாம..

அந்த நைட்டு அயிட்டம் நளினாவை ஏற்பாடு பண்ணுங்கம்மா..!

அந்த நளினாவோட பெற்றோர் தலையிலயே அடிச்சுகிட்டாங்க..
இந்தப் பள்ளியில பொண்ணை சேர்த்தோமேன்னு..

இன்னொரு பள்ளி.. டீச்சரம்மா பாடம் நடத்தும்போது
ஒரு பய எழுந்து ஏதோ சந்தேகம் கேட்டான். அந்தம்மாவுக்கு
விளக்கம் சொல்லத் தெரியல.. அதனால கண்டுக்காதது போல
இருந்துச்சு.. அவனும் விடறாப்பல இல்ல.. எழுந்து நின்னு
மிஸ்.. மிஸ் ன்னு நச்சரிச்சான்.. டென்ஷன் ஆன டீச்சரம்மா
ஆங்கிலத்துல அலறிச்சு..

. SIT DOWN AND GET OUT...!

ஓவியா
10-04-2007, 05:06 PM
கண்டுக்கினேன் தங்காச்சி.. அப்பால பேஜார் பண்ணிராதே ஹக்காங்..!

அது



Excuse me sir.. I need a boy from you ..please help me....



ஹி ஹி ஹி

தூள்

இளசு
10-04-2007, 08:56 PM
சிட் டவுன் அண்ட் கெட் அவுட்டா???!!!
விபரீத ஆங்கில ஆசையால் விளையும் கேடுகளை பட்டை உரிச்சி கெளப்பிட்டீங்க ராஜா...

நடுநடுவில் பேசும் ஒரு மாணவனைப் பார்த்து ஆங்கிலமோக ஆசிரியர் சொன்னது இது:
ஐ டாக்.. யூ டாக்.. செண்ட்டர் செண்ட்டர் ஒய் டாக்?

ராஜா
11-04-2007, 07:53 AM
அது சரிதான்..!

ஹா..ஹா..

இதயம்
11-04-2007, 02:50 PM
இந்த ஏரியாவில ரவுசு கொஞ்சம் கூடுதலாத்தேன் தெரியுது..!! நாம வெவரம் தெரியாம இங்க வந்துட்டமோ..?!!

இதயம்
11-04-2007, 02:50 PM
என்னாது..? இந்தப் பக்கமே கீழ்ப்பாக்கம் மாதிரி தெரியிது..?!! ஏப்பூ.. இப்படி எழுதி வச்சிட்டு போனா போதுமா? கூடவே வயித்துவலி மாத்திரையையும் அனுப்புங்கப்பூ..!!

ராஜா
11-04-2007, 03:49 PM
ஆதவன் நிறைய வாங்கி வச்சிருக்காரு.. பார்த்தா ரெண்டு மாத்திரை வாங்கிக்கோங்க..!

நன்றி ஜாஃபர்..!

மனோஜ்
11-04-2007, 04:26 PM
இந்தக் கூத்து இப்படியா..? ஒரு பள்ளியில ஒரு ஆசிரியைக்கு
அவசரமா கடைக்கு அனுப்ப ஒரு பையன் தேவைப் பட்டான்..
நேரா ஒரு வகுப்புக்கு போச்சு.. அங்க பாடம் நடத்திகிட்டு
இருந்த வாத்தியார் கிட்ட சொன்னுச்சு..

Excuse me sir.. I need a boy from you ..please help me..!
அவுங்க 10 வருசம் அப்பரமாக நினைத்து செல்லியிருப்பார்கள் அண்ணா அதான்:D :medium-smiley-002:

ராஜா
11-04-2007, 05:26 PM
திருச்சிக் காரரே... சூப்பர்... துவம்சம் பண்றீங்க.. !

நன்றி வர்ஷா..!

ராஜா
11-04-2007, 05:32 PM
மா.சி. யும் சு.சி.யும் ஒரே வீடு எடுத்துத் தங்கி இருந்தாங்க..
மாசி சொந்த ஊருக்குப் போயிட்டு வரும்போது தன்னோட
சாவியை வச்சுட்டு வந்துட்டாரு.. காலையில ரயிலை விட்டு
இறங்கி வீட்டுக்கு வந்து பார்த்தா பூட்டி இருந்துச்சு. காரணம்
சுசிக்கு பேப்பர் போடற வேலை.. கிளம்பிப் போயிட்டாரு.

மாசி பக்கத்துல இருக்கற மளிகைக் கடைக்குப் போய்
சுசியோட கைபேசிக்கு போன் பண்ணி, "உன்னோட சாவியை
கொஞ்சம் கொடு" ன்னு சொல்லிட்டு வந்தாரு..

எதிர்த்தாப்பல சுசி சைக்கிள்ல வந்தவர்," ஜன்னல் வழியா
சாவியை உள்ளே போட்டிருக்கேன் எடுத்துக்கோ.. எனக்கு
லேட் ஆயிடுச்சு..!" ன்னு சொல்லிட்டுப் போனாரு..!
___________________

மாசியும் சுசியும் பேசிக் கொண்டார்கள்..

என்ன சுசி.. உனக்கு வயசாகிக்கிட்டே போகுதே.. எப்போ
கல்யாணம் பண்ணிக்கப் போறே..?

அதுக்குதான் மாசி.. நல்ல பொண்ணாத் தேடிட்டு இருக்கேன்..

இன்னுமா கிடைக்கலே..?

ஓ.. நிறையப் பொண்ணுங்க கிடைச்சாங்க மாசி..

அவங்களில் ஒருத்திய கட்டிக்கறது தானே..?

அந்த கழுதைகளுக்கெல்லாம் நல்ல பையனா, புத்திசாலியா
வேணுமாம் மாசி..!
____________________________

மாசி ஒரு வக்கீல்.. சுசி அவர்கிட்டே அவசரமா வந்து...

வக்கீலய்யா.. ஒரு ஆளை வெட்டிக் கொன்னுட்டேன்..
நீங்கதான் காப்பாத்தணும்..

சரி..சரி.. கவலைப் படாதே.. காப்பாத்தறேன்.. ஆனா ஃபீஸ்
கொஞ்சம் அதிகமாகும்.. சொல்லு.. யாரைக் கொன்னே..
ஏன் கொன்னே..?

அவர் ஒரு டாக்டர்.. பீஸ் அதிகமா கேட்டாருன்னுதான்
போட்டுத் தள்ளினேன்..

மாசி அப்ப ஓடினவர்தான் குவைத்துக்கு..!
_______________________________

சுசி பள்ளி மாணவன்..மாலை பள்ளி விட்டு வந்து தாயிடம்..

அம்மா இன்னிக்கு பிரேயர்ல ரெண்டாங் கிளாஸ் பையனோட
டிராயர் அவுந்து விழுந்துடிச்சு..எல்லாரும� � சிரிச்சாங்க.. நான்
மட்டும் சிரிக்கவே இல்ல..

என் கண்ணு.. அப்படித்தான் இருக்கணும்.. அடுத்தவங்களைக்
கேலி பண்றது தப்பு.. சரி.. யாரு அந்தப் பயித்தியக் காரப்பய..?
நம்ப பக்கத்து வீட்டு மாசியா..?

இல்ல. நான் தாம்மா அது..!
_______________________________

மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பிய சுசி மனைவியிடம்...

வர.. வர.. ஞாபக மறதி அதிகமாப் போகுது வனஜா.. காலையில
என் ஆபீஸ்ன்னு நெனைச்சு எதிர்த்த ஆபீஸுக்குள்ள போயிட்டேன்..

சரி.. சரி..சம்பள கவர் பத்திரமா கொண்டு வந்தீங்களா ..?

இன்னிக்கு இல்லையாம்.. நாளைக்குத் தானாம்..

அப்படியா..? சரி.. யாருய்யா நீ.. ஆம்பள இல்லாத வீட்டுல
நுழைஞ்சு கலாட்டா பண்ணப் பாக்கறியா..? ஒழுங்காப் போறீயா
இல்ல போலீசைக் கூப்பிடவா..?
______________________________

ஓவியா
11-04-2007, 05:37 PM
அடிச்சு தூள் கிளப்புறீக அண்ணா, ஹி ஹி ஹி

varsha
11-04-2007, 05:40 PM
அடிச்சு தூள் கிளப்புறீக அண்ணா, ஹி ஹி ஹி

ஆமாம் ஆமாம் ரொம்ப ஸ்பீடாதான் அடிச்சு தூள் கிளப்புறீக ராஜா சார்

இளசு
11-04-2007, 05:48 PM
ஆமாம் ஆமாம் ரொம்ப ஸ்பீடாதான் அடிச்சு தூள் கிளப்புறீக ராஜா சார்


வர்ஷா அவர்களுக்கு

ராஜா அவர்களின் வேகம் அவரின் சொந்தத் தட்டச்சிய பதிவுகளால் வருவது.....
வெறும் வெட்டி ஒட்டல் அன்று...

varsha
11-04-2007, 05:52 PM
வர்ஷா அவர்களுக்கு

ராஜா அவர்களின் வேகம் அவரின் சொந்தத் தட்டச்சிய பதிவுகளால் வருவது.....
வெறும் வெட்டி ஒட்டல் அன்று...



ராஜா அவர்களின் வேகம் அவரின் சொந்தபடைப்பின் அமுதம் இதன் பலன் அதிகம் தானே

நன்றி ராஜா சார் அண்ட் இளசு சார்

இளசு
11-04-2007, 05:55 PM
அன்பு ராஜா

மாசி+ சுசி கூட்டணி சில படங்களில் வடிவேலு+விவேக் இணைந்து தந்த சிரிப்பு வெடிகளை வென்றுவிடும் போல...

குறிப்பாய் டவுசர் கழண்டதும், சம்பள கவர் பல்டியும்!!!!

அசத்துங்க ராஜா!

varsha
11-04-2007, 06:01 PM
அன்பு ராஜா

மாசி+ சுசி கூட்டணி சில படங்களில் வடிவேலு+விவேக் இணைந்து தந்த சிரிப்பு வெடிகளை வென்றுவிடும் போல...

குறிப்பாய் டவுசர் கழண்டதும், சம்பள கவர் பல்டியும்!!!!

அசத்துங்க ராஜா!

இளசு சார் அவர்களின் நல்ல தோள்கொடுப்பு அசத்துங்க ராஜா சார்

அன்புரசிகன்
11-04-2007, 06:16 PM
மாசி அப்ப ஓடினவர்தான் குவைத்துக்கு..!

ஐயோ பாவம். குவைத்திலயாவது நலமா?


அப்படியா..? சரி.. யாருய்யா நீ.. ஆம்பள இல்லாத வீட்டுல
நுழைஞ்சு கலாட்டா பண்ணப் பாக்கறியா..? ஒழுங்காப் போறீயா
இல்ல போலீசைக் கூப்பிடவா..?

விவாகரத்து செலவு மிச்சம்.:icon_dance:

இன்னும் இன்னும் வேண்டும் மாப்ளே...:Christo_pancho:

மனோஜ்
11-04-2007, 06:48 PM
அப்படியா..? சரி.. யாருய்யா நீ.. ஆம்பள இல்லாத வீட்டுல
நுழைஞ்சு கலாட்டா பண்ணப் பாக்கறியா..? ஒழுங்காப் போறீயா
இல்ல போலீசைக் கூப்பிடவா..?

பணம்னா பிணமும் வாயைப் பிளக்கும்!
ஆனா இது கொஞ்சம் வாயை அதிகமா பிளக்கவைத்துள்ளது போல...
தொடருங்கள் அண்ணா

ஓவியன்
12-04-2007, 03:53 AM
மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பிய சுசி மனைவியிடம்...

வர.. வர.. ஞாபக மறதி அதிகமாப் போகுது வனஜா.. காலையில
என் ஆபீஸ்ன்னு நெனைச்சு எதிர்த்த ஆபீஸுக்குள்ள போயிட்டேன்..

சரி.. சரி..சம்பள கவர் பத்திரமா கொண்டு வந்தீங்களா ..?

இன்னிக்கு இல்லையாம்.. நாளைக்குத் தானாம்..

அப்படியா..? சரி.. யாருய்யா நீ.. ஆம்பள இல்லாத வீட்டுல
நுழைஞ்சு கலாட்டா பண்ணப் பாக்கறியா..? ஒழுங்காப் போறீயா
இல்ல போலீசைக் கூப்பிடவா..?

அருமை ராஜா அண்ணா! :icon_dance:

ராஜா
12-04-2007, 04:02 AM
நன்றி இளசு, வர்ஷா, மாமனாரே, திருச்சிக்காரரே, ஓவியன்.. மற்றுமுள்ள நண்பர்களே..!

ராஜா
12-04-2007, 04:04 AM
அடடா.. போச்சுடா.. என்ன ஆகப் போகுதோ தெரியலியே..

ஓவியா வுக்கும் நன்றி..!

வெள்ளைக் கொடியுடன்...

அண்ணா.

ராஜா
12-04-2007, 05:10 PM
இருந்தாலும் அந்தப் பத்திரிகை ஆசிரியருக்கு என் மேல இவ்வளவு விரோதம் ஆகாது சார்..

ஏன்.. என்னாச்சு..?

கதையைக் கொலை பண்ணிட்டேனாம்.. போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துட்டார்..
____________________________________________________________________


மாப்பிள்ளை ஆபீஸ்ல நிறைய லஞ்சம் வாங்குவார் போல..

ஏங்க அப்படிச் சொல்றீங்க..?

அங்க பாரு.. மொய் கவரையெல்லாம் திருட்டு முழி முழிச்சுகிட்டு வாங்கி அவசரமா பனியனுக்குள்ள சொருவிக்கறதை...!
_____________________________________________________________________


ஏன் கவிஞரே.. உங்க பாடலுக்கு தேசிய விருது கொடுத்தது நல்ல விஷயம் தானே..? அப்புறம் ஏன் கவலையா இருக்கீங்க..?

எனக்கு கெடைச்சது தமிழ்ப் படப் பாடலுக்கு இல்லையாம்.. அஸ்ஸாம் மொழிக்காம்..!
___________________________________________________________________


கவனிச்சியா.. நம்ம தலைவர் தேர்தல் பிரச்சார பயணம் பக்காவா ரெடி பண்ணியிருக்கார்..

அப்படியா..?

ஆமாம்.. 1 ம் தேதியில் இருந்து 5 ம் தேதி வரை ஆளும் கட்சிக் கூட்டணிக்கு.. அப்புறம் கூட்டணி மாறி 6 ம் தேதியிலேருந்து 10 ம் தேதி வரை எதிர்க்கட்சி கூட்டணிக்கு பிரச்சாரம். பின்னர் மனம் திருந்தி ஆளும் கூட்டணிக்கு திரும்பி 11 ம் தேதியில் இருந்து 15 ம் தேதி வரைக்கும் சூறாவளி பிரச்சாரம். இப்பவே ரெடி..!
____________________________________________________________________


உங்க படத்தோட கிளைமாக்ஸ் ரொம்ப வித்தியாசமா எடுத்திருக்கீங்களாமே.. உண்மையா..?

ஆமாம்.. கடைசியில போலீஸ் வராது.. ஹீரொ, வில்லன் ரெண்டு பேரும் ஜீப்ல ஏறி போலீஸ் ஸ்டேஷன் போறாங்க..!
____________________________________________________________________

ராஜா
13-04-2007, 05:43 PM
அன்புச் சொந்தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...!

கண்ணம்மா ; ஏங்க.. நமக்கு கல்யாணம் ஆகி 25 வருஷம் ஆகுது.. அப்போலேருந்து என் சமையலைக் குறை சொல்லிகிட்டுதான் இருக்கீங்க..இன்னும் என் சமையலை நீங்க சாப்பிட்டு பழகலைன்னா அதுக்கு நானா பொறுப்பு..?
_________________

ராஜா ; ஏம்மா .. இது நல்லா டேஸ்டா இருக்கே..? என்ன இது..?

கண்ணம்மா ; அடப் பாவி மனுஷா... இது தண்ணிங்க..

ராஜா ; அப்படியா.. எதிலே தயார் பண்ணது இது..?
_________________

கண்ணம்மா.. கல்யாணத்துக்கு முந்தி நீ விதம் விதமா சமைப்பேன்னு சொன்னாங்க..இப்படி உப்பில்லாம, உறைப்பில்லாம, புளிப்பில்லாம, ருசியில்லாம, சமைக்கிறதைத்தான் சொன்னாங்கன்னு இப்பத்தாம்மா புரியுது..!
_________________

ஏங்க.. பஸ்ஸில யாரோ ஒரு அழகான பொண்ணு கூட ஒண்ணா உக்காந்து வந்தீங்களாமே..? ரொம்ப ஜாலியா..?

அட நீ ஒண்ணும்மா..! கொஞசம் கூட வெக்கப்படாம என் பக்கத்துல உக்காந்து வந்தா என்ன அர்த்தம்..?எனக்கு ரொம்ப வயசாயிடுச்சுன்னுதானே..?
_________________

வீட்டுக்கு வருகை தந்த ஆதவனும் நானும்...

என்ன அய்யா.. கண்ணம்மா அக்கா கொஞ்சம் முரட்டு சுபாவமோ..?

ஹி..ஹி.. எப்படி தெரியும்..?

அங்கங்கே பேண்டேஜ் துணியும் டிஞ்சர் பாட்டிலும் வச்சிருக்கீங்களே..!
_________________

பென்ஸ்
13-04-2007, 05:47 PM
கண்ணம்மா ; ஏங்க.. நமக்கு கல்யாணம் ஆகி 25 வருஷம் ஆகுது.. அப்போலேருந்து என் சமையலைக் குறை சொல்லிகிட்டுதான் இருக்கீங்க..இன்னும் என் சமையலை நீங்க சாப்பிட்டு பழகலைன்னா அதுக்கு நானா பொறுப்பு..?

ராஜா...

சொல்லவேயில்லை...
வீட்டில் சொல்லவேற செய்திட்டாங்களா...

இளசு
13-04-2007, 05:53 PM
ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆ!

கலகலப்பாய் புத்தாண்டை தொடங்கிவைத்த ராஜாவுக்கு
முகமலர்ந்த நன்றியும் பாராட்டும்..

கதை, கவிதை, அரசியல், சினிமாவில் நீங்கள் சொன்ன அனைத்தும்
நாளை நிசத்தில் நடக்கலாம்..
அதிலும் பிரச்சாரத்திட்டம் இப்பவே
இருக்கோன்னு ஒரு குன்சா யோசனை!

அண்ணி -ராஜா கூட்டணி வெற்றிக்கூட்டணி..
எல்லா ஜோக்கும் வெற்றி..
என் முதல் வாக்கு - சுவையான தண்ணீர் சமையலுக்கே!
வெந்நீர் சமைத்த பிரதீப்புக்கே தண்ணி காட்டிடுவாங்க போல...

ஓவியா
13-04-2007, 08:57 PM
அடடா.. போச்சுடா.. என்ன ஆகப் போகுதோ தெரியலியே..
ஓவியா வுக்கும் நன்றி..!
வெள்ளைக் கொடியுடன்...

அண்ணா.

ஹி ஹி ஹி ஹி :grin:

உங்க படத்தோட கிளைமாக்ஸ் ரொம்ப வித்தியாசமா எடுத்திருக்கீங்களாமே.. உண்மையா..?

ஆமாம்.. கடைசியில போலீஸ் வராது.. ஹீரொ, வில்லன் ரெண்டு பேரும் ஜீப்ல ஏறி போலீஸ் ஸ்டேஷன் போறாங்க..!




இது செம்ம சூப்பர்.

ராஜா
14-04-2007, 10:50 AM
இன்று இத்திரியைப் பார்வையிட்ட அந்த 150 ஆவது உறுப்பினருக்கும் ஏனைய 149 அன்பர்களுக்கும் நன்றி.

மனோஜ்
14-04-2007, 01:53 PM
அண்ணியிடம் ஆசத்திய அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்

mukilan
14-04-2007, 03:38 PM
ராஜா உங்களின் ரவுசு பக்கங்களை முழுவதுமாகப் படிக்கவில்லை. ஆனால் நான் படித்த எல்லாமே ரவுசுதான். முடிந்தால் எல்லாவற்றையும் PDF கோப்பாக மாற்றி வையுங்கள். புத்தகமாக கொண்டு வர முயற்சிக்கலாம். இனிய தமிழ்ப்புத்தாண்டு உண்மையிலேயே இனிமையாகத்தான் இருக்கிறது. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ராஜா
14-04-2007, 05:01 PM
டாகடர்் ; ஓ கே. இனி நீங்க என்ன வேண்ணாலும் சாப்பிடலாம்..

நோயாளி ; வியாதி தீர்ந்து போயிடுச்சா டாக்டர்..?

டாக்டர் ; ஆயுசு தீர்ந்து போச்சு..!
_________________

நர்ஸ்..1 ; என்னடி.. ராத்திரி பூரா பெரிய டாக்டர் ரூம்ல லைட்
எரியுதே என்ன விஷயம்..?

நர்ஸ் ..2 ; இந்த தடவையாவது ப்ளஸ் 2 அரியர்ஸ்
முடிக்கணும்ன்னு லட்சிய வெறியோட படிச்சுகிட்டு இருக்கார்டி...!
_________________

என்ன இருந்தாலும் நம்ம டாக்டர் ரொம்பக் கெட்டிக்காரர்
தான்யா.. கடைசியா பேஷண்ட்க்கு என்ன வியாதின்னு
கண்டு பிடிச்சிட்டாரே..!

அப்படியா.. எப்போ..?

போஸ்ட் மார்ட்டம் பண்ணும் போதுதான்..!
_________________________

நோயாளி ; டாக்டர்.. எப்போதான் என்னை டிஸ் சார்ஜ் பண்ணுவீங்க..?

பொறுங்க.. அவசரப்படாதீங்க.. ஒரு ரிலீவர் வரட்டும்..!
__________________________

நோயாளி.; ..டாக்டரய்யா..! வயித்துப்போக்கு அரெஸ்ட்
ஆயிடும்ன்னு மாத்திரை கொடுத்தீங்க.. மறுபடி வந்துடிச்சே...!

டாக்டர்.; . கவலைப்படாதீங்க.. "ஜாமீன்" ல வந்திருக்கும்..
இப்போ "அரெஸ்ட்" பண்ணிடறேன்..!
_________________

மனோஜ்
14-04-2007, 05:10 PM
கொஞ்சம் அதிகமா கிம்பளம் கொடுத்தா
ஜாமீன் கிடைக்காதுல்ல அப்படிதான்ணா

ராஜா
15-04-2007, 02:16 PM
நன்றி திருச்சிக் காரரே..!

நர்ஸ் 1 ; ஏண்டி பெரிய டாக்டர் காலையில் இருந்து ஒரே கோவமா இருக்கார்..?

நர்ஸ் 2. ; எந்த படுபாவியோ "ஒன் வே" போர்டை நம்ம ஆஸ்பத்திரி வாசல்ல நட்டுட்டு போயிட்டானாம்டி..!

அன்புரசிகன்
15-04-2007, 02:57 PM
நல்ல மருத்துவமனை. நல்ல தருத்துவர். நல்ல தாதியர். பாவம் நோயாளிகள்.

ஓவியா
15-04-2007, 03:32 PM
நர்ஸ்..1 ; என்னடி.. ராத்திரி பூரா பெரிய டாக்டர் ரூம்ல லைட்
எரியுதே என்ன விஷயம்..?

நர்ஸ் ..2 ; இந்த தடவையாவது ப்ளஸ் 2 அரியர்ஸ்
முடிக்கணும்ன்னு லட்சிய வெறியோட படிச்சுகிட்டு இருக்கார்டி...!


ஹி ஹி ஹி
ஒரு டாக் +2 முடிக்கணும்ன்னு லட்சிய வெறியோட படிச்சுகிட்டு இருக்கார்..! :icon_smokeing:

ஓவியா
15-04-2007, 03:33 PM
"ஒன் வே" போர்டை ஹி ஹி ஹி

நல்லா ரவுசு பன்னுகிறீர்கள் தலிவ

ராஜா
15-04-2007, 05:18 PM
நல்ல மருத்துவமனை. நல்ல மருத்துவர். நல்ல தாதியர். பாவம் நோயாளிகள்.

சூப்பர்...மாமனாரே..!

ராஜா
15-04-2007, 05:19 PM
"ஒன் வே" போர்டை ஹி ஹி ஹி

நல்லா ரவுசு பன்னுகிறீர்கள் தலிவ

எல்லாம் ஒன்ற ட்ரெயினிங் தான் அம்மணி..!

ராஜா
15-04-2007, 06:58 PM
நன்றி நண்பர்களே...!

ஓவியா
15-04-2007, 06:59 PM
எல்லாம் ஒன்ற ட்ரெயினிங் தான் அம்மணி..!

அது அது :feiertag014:

:ernaehrung004:

ராஜா
15-04-2007, 07:03 PM
தொண்டர்: நம்ம தலைவரு ஏது திடீர்னு அவர் பையனை மிலிட்டரிலே சேர்த்துட்டாரு?

மற்றவர்: பையன் பேரிலே நிறைய பணம் போட்டதை அவன் மேஜரானாதான் எடுக்க முடியும்னு பாங்கிலே
சொல்லிட்டாங்களாம்.
___________________________

வயல்ல வேலை பார்க்குற பெண்களையெல்லாம் அழைச்சுட்டு வந்திருக்கியே எதுக்குய்யா?

நம்ம கட்சியில களை எடுக்கணும்னு சொன்னீங்களே தலைவரே!
___________________________

எதிர்க் கட்சிக் காரங்க மேல தனி மனிதத் தாக்குதல் நடத்தறது அநாகாகம்னு தலைவர் சொல்லிட்டாரு."

அப்படியா..........

ஆமாம். இனிமே கும்பல் கும்பலா போய் அட்டாக் பண்ணச் சொல்லியிருக்கார்
_________________________

"ஊழ்ல் வழக்கில் 'உள்ளே' இருக்குற நம்ம தலைவரால ஜெயில்லே பிரச்னையாமே?"

"ஆமாம், ஜெயிலரோட பேச்சு திருப்தி அளிக்கலைன்னு சொல்லி, 'வெளிநடப்பு'
செய்ய ஆரம்பிச்சுட்டாராம்...............!"
__________________________

புது தலைவர் ஏன் ரெண்டு மலர் வளையம் வைக்கிறாரு..?

ஒண்ணு மறைந்த தலைவருக்கு.. இன்னொன்னு அவரோட நீதி, நேர்மை, நியாயம் மற்றும் கொள்கைகளுக்கு..!
___________________________

அன்புரசிகன்
15-04-2007, 07:21 PM
ஒண்ணு மறைந்த தலைவருக்கு.. இன்னொன்னு அவரோட நீதி, நேர்மை, நியாயம் மற்றும் கொள்கைகளுக்கு..!

நாடு உருப்பட்ட மாதிரித்தான். இதுதானட 2 பூச்செண்டின் மகிமையோ?...

ராஜா
16-04-2007, 04:42 PM
நன்றி மாமனாரே..!

வீட்டுக்காரரும் வேண்டாத விருந்தாளியும்...

வீ.கா.; மார்க்கெட்டுக்கு போய் கொஞ்சம் கறிகாய் வாங்கிட்டு வரீங்களா..?

விரு ; ஐயோ.. எனக்கு காய்கறி வாங்கத் தெரியாதே..

வீ.கா.; சரி.. காய்கறி நானே வாங்கிட்டு வந்துட்டேன்..கொஞ்சம் நறுக்கி
தரீங்களா..?

விரு ; ஐயோ.. கையை வெட்டிக்குவேன்.. என்னால் ஆகாது.

வீ.கா.; சரி.. சமையல் ஆயிடுச்சு.. சாப்பிட வரீங்களா..?

விரு.; ஹி..ஹி.. ஏல்லாத்துக்கும் மறுப்பு தெரிவிக்கறது சரியில்ல.. இதையாவது
கேட்கணுமில்ல.. இதோ வர்ரேன்.

மனோஜ்
16-04-2007, 04:52 PM
வீ.கா: இத எல்லதையூம் சப்படுங்க

விரு.; முடியாதுங்க உப்பு அதிகமா இருக்கே

வீ.கா: ஹி..ஹி.. ஏல்லாத்துக்கும் மறுப்பு தெரிவிக்கறது சரியில்ல.. இதையாவது கேட்கணுமில்ல..

ஆதவா
16-04-2007, 04:53 PM
ஆதவா!!! இனி மன்றம் பக்கமே தலை வெச்சு படுக்காதேப்பா!!!

இங்க ராசாங்கற ஒருத்தர் நல்லா பட்டையா அருவாளை தீட்டிக்கிட்டு இருக்கார்....

அய்யோஒ!!! படிக்க முடியலப்பா சாமி..

ராஜா
16-04-2007, 04:57 PM
விருந்தாளியும்.. வீட்டு சிறுவனும்..

வாங்கோ மாமா.. ஆயுசு நூறு.. இப்போதான் அப்பா உங்களப் பத்தி சொல்லிண்டு இருந்தார்..

அப்படியா.. என்ன சொன்னார்..

கடன்காரப் பய வர்றதுக்குள்ள இலையைப் போடு.. சாப்பிட்டுட்டு ஓடறேன்னு அம்மாகிட்ட சொன்னார்.

__________________________________________________________________

ஏண்டா கொழந்தே..? நான் சாப்பிடறச்சே அந்த நாய் ஏன் இப்படி வெறிச்சுப்
பார்த்துண்டிருக்கு..?

அதோட தட்டுல சாப்பிடறீங்க.. அதான் கோபமா பாக்குது.!

____________________________________________________________________

இரு நண்பர்கள்..

இந்த ஆஸ்பத்திரியில உடனே அட்மிட் ஆகியே தீரணும்....

ஓ.. டாக்டரைப் பார்த்துட்டு வரியா..?

இல்லே..நர்சைப் பார்த்துட்டு வரேன்..!

______________________________________________________________________

சாப்பிட வந்த கணவனிடம் மனைவி....

ஏங்க திடீர்ன்னு என்ன வந்தது உங்களுக்கு..?நாலு நாளா
வெண்டைக்காய் கூட்டு பண்ணினேன்.. ஒண்ணும் சோல்லாம சாப்பிட்டீங்க..இன்னைக்கு இப்படி கோச்சுக்கறீங்க..?

_________________________________________________________________________

டேய் சின்னா.. வற்றாத ஜீவநதி ஒண்ணு சொல்லு..

உங்க பொண்ணோட மூக்கு சார்..!

________________________________________________________________________

ராஜா
16-04-2007, 05:00 PM
ஆதவா!!! இனி மன்றம் பக்கமே தலை வெச்சு படுக்காதேப்பா!!!

இங்க ராசாங்கற ஒருத்தர் நல்லா பட்டையா அருவாளை தீட்டிக்கிட்டு இருக்கார்....

அய்யோஒ!!! படிக்க முடியலப்பா சாமி..

ரொம்ப அறுவை ஜோக்கா இருக்கோ ஆதவா..?

ஓவியா
16-04-2007, 05:24 PM
வீட்டுக்காரரும் வேண்டாத விருந்தாளியும்...
விருந்தாளியும்.. வீட்டு சிறுவனும்..


ஹி ஹி ஹி

சூப்பர். நன்றி அண்ணா.

அன்புரசிகன்
16-04-2007, 07:35 PM
நான் உங்கள் வீட்டிற்கு வந்தாலும் எனக்கு வெண்டிக்காய்க்கறிதானா?... எனக்கு அது பிடிக்காது.

சூப்பர் சூப்பரா இருக்கு.

ராஜா
17-04-2007, 05:09 AM
அன்பு ரசிகருக்கு என்ன பிடிக்கும்ன்னு சமையல் விளையாட்டுல தெரிஞ்சுகிட்டோமுல்ல..

இளசு
17-04-2007, 05:11 AM
டாக்டர், அரசியல் தலைவர், விருந்தினர், சமையல் என
நாலாபக்கமும் சிரிப்பு சிலம்பம் சுற்றும் வஸ்தாது ராஜாவுக்கு
'சிரிச்சு சிரிச்சு வந்த சீனாதானாவின்' நன்றி!

ராஜா
17-04-2007, 03:08 PM
நன்றி இளசு அவர்களே..!

"நன்றி"க்கு காரணம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்..!

சுட்டிபையன்
17-04-2007, 03:25 PM
ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து..

நான் உங்கள் மதியூகங்களை செக் பண்ணப் போறேன்...

ஆசிரியர் கேள்வி கேட்டதும் பையங்கள் விழுந்தடிச்சுப் பதில் சொல்லிக்கிட்டே இருந்தாங்க..

ஒருவன் மட்டும்.. மெளனமா..

ஆசிரியர் அவனிடம் : என்ன உன் பதிலைக் காணேல்ல..

மாணவன்: நீங்க தானே சார் மதியை ஊகிக்கச் சொன்னிங்க.. அதுதான் மதி எப்படி இருப்பான்னு ஊகிச்சிட்டு இருக்கேன்.

ராஜா
17-04-2007, 05:43 PM
ஹா..ஹா.. நன்றி சுட்டிப் பையன்..!

ஆதவர் ; என்ன அய்யா.. தலை வீங்கி இருக்கு..?

ராஜா ; ஹி..ஹி.. விறகு பட்டிருச்சு..

ஆதவர் ; விறகா.. எங்க இருந்துச்சு..?

ராஜா ; என் வீட்டுக்காரம்மா கையீல...

____________________________________________________________________

ராஜா ; எனக்கும் என் மனைவிக்கும் இன்னைக்கு பயங்கர சண்டை.. சத்தமா நாலு வார்த்தை விட்டேன்.. உடனே அடங்கிட்டாங்க..

ஆதவர் ; அட.. உண்மையாவா..? அப்படி என்ன சொன்னீங்க..?

ராஜா ; கொலை கேசுல உள்ளே போயிருவ..!

_____________________________________________________________________

ராஜா ; என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்..

கண்ணம்மா ; இப்ப புரியுதா..? நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லேன்னு..!

_____________________________________________________________________

ராஜா ; என்ன கண்ணம்மா.. ஆமை வடை சுடப்போறேன்ன்னு கிளம்பினே.. இப்போ திருதிருன்னு முழிக்கறே..?

கண்னம்மா ; ஒரு வடைக்கு எத்தனை ஆமை போடணும்ன்னு யோசிக்கிறேங்க..!

_____________________________________________________________________

கண்ணம்மா ; என்ன தைரியம் இருந்தா ஆபீஸ் ஸ்டெனோவைக் கூட்டிகிட்டு நேத்து சினிமாவுக்கு போயிருப்பீங்க..?

ராஜா ; முந்தா நாள் என்னை அழைச்சுகிட்டு அவ சினிமாவுக்கு போனா.. திரும்ப நான் செய்யலேன்னா தப்பா நெனைச்சுக்க மாட்டாளா..?

ராஜா
17-04-2007, 05:44 PM
பகவான் கிருஷ்ணர் ; அன்பே ருக்மணி..! ஏன் கோபமாக இருக்கிறாய்..?

ருக்மணி ; பின்னே என்ன ஸ்வாமி.. உங்கள் பெயரில் கிருஷ்ணாயில் இருக்கு.. அந்த சக்களத்தி பெயரில் "பாமா"யில் இருக்கு.. என்பெயரில் ஒன்றுமே இல்லையே..?

அன்புரசிகன்
17-04-2007, 05:48 PM
ராஜா ; என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்..

கண்ணம்மா ; இப்ப புரியுதா..? நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லேன்னு..!


உங்க மனைவிக்கு பின்புத்தி முன்புத்தி சைடு புத்தியெல்லாம் இருக்குப்பொல..
(அவ எ மக.. :icon_ush: )

அன்புரசிகன்
17-04-2007, 05:50 PM
பகவான் கிருஷ்ணர் ; அன்பே ருக்மணி..! ஏன் கோபமாக இருக்கிறாய்..?

ருக்மணி ; பின்னே என்ன ஸ்வாமி.. உங்கள் பெயரில் கிருஷ்ணாயில் இருக்கு.. அந்த சக்களத்தி பெயரில் "பாமா"யில் இருக்கு.. என்பெயரில் ஒன்றுமே இல்லையே..?

கிளம்பிட்டாளுங்கையா.. கிளம்பிட்டாளுங்க..:music-smiley-009:

ஓவியா
17-04-2007, 06:08 PM
பகவான் கிருஷ்ணர் ; அன்பே ருக்மணி..! ஏன் கோபமாக இருக்கிறாய்..?

ருக்மணி ; பின்னே என்ன ஸ்வாமி.. உங்கள் பெயரில் கிருஷ்ணாயில் இருக்கு.. அந்த சக்களத்தி பெயரில் "பாமா"யில் இருக்கு.. என்பெயரில் ஒன்றுமே இல்லையே..?

:1: :1: :1:

pradeepkt
18-04-2007, 04:54 AM
பின்னிப் பெடலெடுக்கிறீங்களே சார்!!!
காலங்கார்த்தால ஆபீசுக்கு வந்து கணினியைப் பார்த்தி கெக்கேபிக்கேன்னு சிரிச்சுக்கிட்டே இருந்தா மக்கள் எங்களைப் பத்தி என்ன நினைப்பாங்க????

சரி, என்ன வேணா நினைச்சிட்டுப் போவட்டும்... நீங்க தொடருங்க... :D :icon_dance:

அன்புரசிகன்
18-04-2007, 02:29 PM
காலங்கார்த்தால ஆபீசுக்கு வந்து கணினியைப் பார்த்தி கெக்கேபிக்கேன்னு சிரிச்சுக்கிட்டே இருந்தா மக்கள் எங்களைப் பத்தி என்ன நினைப்பாங்க????


:icon_hmm:
பெரிசா ஒன்றும் நினைக்க மாட்டாங்க....:icon_wacko: :p
:medium-smiley-044:

ராஜா
18-04-2007, 04:40 PM
சுசி & மாசி

மாசி ; என்ன சுசி..? நம்மை யாரும் பிக்பாக்கெட் அடிக்காம இருக்க வழி கண்டுபிடிச்சுருக்கியா..? சபாஷ்.. என்ன வழி..?

சுசி ; இனிமே பேண்ட் போட்டு அது மேல ஜட்டியைப் போட்டுக்கணும்..
_______________________________________________________________________

ராஜா சார்...

ராஜா சார் அலுவலகத்தில் இருக்கிறார்..போன் வருகிறது..

ஹலோ அங்கிள்.. நான் பக்கத்து வீட்டு கவிதா பேசறேன்..

ஹாய் கவி... என்ன விஷயம்.. சொல்லுப்பா..

கண்ணம்மா அக்கா உங்க கூட பேசணுமாம்..

சாரி.. ராங் நம்பர்..!

______________________________________________________________________

சிரிப்புத் திருடர் சிங்கார வேலர்...

வக்கீலய்யா.. என்மேல உள்ள கேஸ் "தள்ளுபடி" ஆயிடுமா..?

கேஸ் போற போக்கைப் பார்த்தா உன்னை உள்ளே "தள்ளும்படி" ஆயிரும் போல இருக்கு சிங்காரம்..!

______________________________________________________________________

மருத்துவர்கள் பொறுத்தருள்க..

என்ன டாக்டர் ஆபரேஷனை முடிச்சுட்டு தையல் போடாம கிளம்பறீங்க..?

அடப்பாவி.. நீ உயிரோடதான் இருக்கியா..?

______________________________________________________________________

மாண்புமிகு வேலைக்காரி...!

நான் எங்கம்மா வீட்டுக்குப் போறேன்..

போய்த் தொலை.. விட்டது சனியன்..

இப்படி சொல்லுவீங்கன்னு தெரியும்.. வேலைக்காரியை நேத்தே வேலையை விட்டு நிறுத்திட்டேன்..

அய்யோ.. !

______________________________________________________________________

மாதவ் சிங்....!

ஏன் மாதவ்.. போன மாசம் தானே குடி வந்தீங்க.. ? அதுக்குள்ள ஏன் காலி பண்றீங்க..?

என்னய்யா வீடு கட்டியிருக்கே..? என் வீடுலேருந்து பார்த்தா எந்த வீட்டு பாத்ரூமும் தெரிய மாட்டேங்குதே..!
________________________________________________________________________

என்னப்பா.. டாஸ் போட்ட ரெண்டு கேப்டனும் ஏன் கட்டிப் புரளறாங்க..?

காயின்ல ரெண்டு பக்கமும் தலை இருக்குதாம்..?
_______________________________________________________________________

நிருபர் ; டீ.வி. சீரியல் தயாரிக்கணும்ங்கற எண்ணம் எப்படி உங்களுக்கு வந்துச்சு..?

டயரடக்கர் ; இந்த சமூகத்தைப் பழி வாங்கணும்ன்னு ஒரு வெறி ரொம்ப நாளாவே இருந்துச்சு.
_________________________________________________________________________

அன்புரசிகன்
18-04-2007, 04:54 PM
ராஜா சார்...
ராஜா சார் அலுவலகத்தில் இருக்கிறார்..போன் வருகிறது..
ஹலோ அங்கிள்.. நான் பக்கத்து வீட்டு கவிதா பேசறேன்..
ஹாய் கவி... என்ன விஷயம்.. சொல்லுப்பா..
கண்ணம்மா அக்கா உங்க கூட பேசணுமாம்..
சாரி.. ராங் நம்பர்..!

இது நல்லா இல்ல ஆமா....



என்ன டாக்டர் ஆபரேஷனை முடிச்சுட்டு தையல் போடாம கிளம்பறீங்க..?
அடப்பாவி.. நீ உயிரோடதான் இருக்கியா..?

அப்போ மயக்க ஊசி போடவே இல்லையா?


என்னய்யா வீடு கட்டியிருக்கே..? என் வீடுலேருந்து பார்த்தா எந்த வீட்டு பாத்ரூமும் தெரிய மாட்டேங்குதே..!

இது வேற இப்போ கென்சிடர் பண்ணணுமா???:082502now_prv:



டயரடக்கர் ; இந்த சமூகத்தைப் பழி வாங்கணும்ன்னு ஒரு வெறி ரொம்ப நாளாவே இருந்துச்சு.

அது என்னமோஉண்மை தானுங்க... சூப்பர் ஐடியா...
வாழ்த்துக்கள் மாப்ளே....:thumbsup:

அன்புரசிகன்
18-04-2007, 04:57 PM
இளசு சார், பென்ஸ் சாருக்கு ஒரு டிவி சீரியல் ஒன்று தயாரித்து ஓட்டுங்க...

மனோஜ்
18-04-2007, 05:12 PM
ராஜா சார்...
ராஜா சார் அலுவலகத்தில் இருக்கிறார்..போன் வருகிறது..
ஹலோ அங்கிள்.. நான் பக்கத்து வீட்டு கவிதா பேசறேன்..
ஹாய் கவி... என்ன விஷயம்.. சொல்லுப்பா..
கண்ணம்மா அக்கா உங்க கூட பேசணுமாம்..
சாரி.. ராங் நம்பர்..!
ஓ இப்படியல்லா நடந்ததா
திருச்சி வந்து முதல் வேலை அண்ணிகிட்ட இத போட்டு குடுக்கனு

ராஜா
18-04-2007, 05:32 PM
எல்லாமே ஒரு முடிவோடதான் இருக்கீங்க ..

நடத்துங்கப்பா... நடத்துங்க..

திருச்சிக்காரரே..நீங்களுமா..? மாமனார் எல்லாரையும் கெடுத்து குட்டிச் சுவராக்கி வச்சிருக்கார்.

அன்புரசிகன்
18-04-2007, 05:35 PM
கெடுத்து குட்டிச் சுவராக்கி

அப்பிடீன்னா என்ன?

slgirl
19-04-2007, 04:37 AM
ஐயாவின் ரவுசுங்கள் அனைத்துமே என்றும் சூப்பரே

மனம் லேசாக இந்த பக்கம் வந்து போவதும் உண்மையே தொடருங்க ஐயா சுசி மாசின்னு போட்டு கலக்குறீங்க

ராஜா
19-04-2007, 05:53 PM
நன்றீ நண்பர்களே..!

ராஜா
19-04-2007, 05:56 PM
சுசி ; தமிழ்நாடு பூரா 40 கிளை இருக்குன்னு சொன்னானுங்கன்னு நம்ம்ம்ம்ம்ம்ம்பி என் பணத்தை அந்த பைனான்ஸ் கம்பெனியில போட்டேன் மாசி.. தூக்கிட்டு ஓடிட்டானுங்க..!

மாசி ; அப்படியா..? ஆமாம்.. கம்பெனி பேர் என்ன..?

சுசி ; அலிபாபா ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்..!
_________________

சுசி ; இன்னிக்குதான் முதல் முதலா பஸ்ல ட்ராவல் பண்ணினேன் மாசி.. அதுக்குள்ளேயே பஸ் ஓட்டக் கத்துக்கிட்டேன்..

மாசி ; அப்படியா..? ஆச்சர்யமா இருக்கே..?

சுசி ; இதிலே என்ன ஆச்சர்யம் மாசி.. நீ கூட கத்துக்கலாம்.. ஈஸிதான்.. ஒருதடவை விசில் அடிச்சா ஓடுற பஸ் நிக்கும்.. ரெண்டு தடவை விசில் அடிச்சா நிக்கிற பஸ் ஓடும்.. !
_________________

சுசி கைபேசி வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டு...

ஹலோ வா.சே. யா..?

ஆமாம்.. உங்களுக்கு என்ன வேணும்..?

என் கிட்ட பேசணும்ன்னா உங்களுக்கு ஃப்ரீ தானே..?

ஆமாம்..

அப்போ ஏன் நான் மிஸ்டு கால் கொடுத்தா கூப்பிட மாட்டேங்கறீங்க..? காலையில் இருந்து எத்தனை தடவை போடறது..?
_________________

சுசி கார் ஓட்டுநர்.. மாசி கார் உரிமையாளர்..

மாசி ; டிரைவர்.. ஏன் அப்போலேருந்து சிரிச்சுகிட்டே இருக்கே..? மலைப் பாதையிலே இறங்கும்போது கவனமா ஓட்டவேண்டாமா..?

சுசி ; இல்லீங்க முதலாளி.. துன்பம் வரும் வேளையில சிரிங்கன்னு வள்ளுவர் சொல்லியிருக்காருங்க..

மாசி ; அப்படி என்ன துன்பம் வந்துடிச்சி உனக்கு..?

சுசி ; எனக்கு மட்டும் இல்லே.. உங்களுக்கும் தான்.. அரை மணி நேரமா முயற்சி பண்றேன்.. பிரேக் பிடிக்க மாட்டேங்குது முதலாளி..!
_________________

மாசி ; அந்த ஆளுக்கு கடன் கொடுத்தா வாங்குறதுக்குள்ள நடையா நடந்து செருப்பு தேஞ்சிரும்ன்னு சோன்னேனே... அப்படியும் ஏன் பணம் கொடுத்தே சுசி..?

சுசி ; நான் என்ன அவ்வளவு முட்டாளா..? செருப்புக்கு காசு கழிச்சுகிட்டுதான் கடன் கொடுத்தேன்.. தெரிஞ்சுக்கோ..!
_________________

அன்புரசிகன்
20-04-2007, 11:33 AM
சுசி ; நான் என்ன அவ்வளவு முட்டாளா..? செருப்புக்கு காசு கழிச்சுகிட்டுதான் கடன் கொடுத்தேன்.. தெரிஞ்சுக்கோ..!

சங்குதான்...:music-smiley-009:

ராஜா
20-04-2007, 01:08 PM
மாம்ஸ்... ரொம்ப ஓவர்..!

மனோஜ்
20-04-2007, 01:50 PM
சுசி கார் ஓட்டுநர்.. மாசி கார் உரிமையாளர்..
மாசி ; டிரைவர்.. ஏன் அப்போலேருந்து சிரிச்சுகிட்டே இருக்கே..? மலைப் பாதையிலே இறங்கும்போது கவனமா ஓட்டவேண்டாமா..?
சுசி ; இல்லீங்க முதலாளி.. துன்பம் வரும் வேளையில சிரிங்கன்னு வள்ளுவர் சொல்லியிருக்காருங்க..
மாசி ; அப்படி என்ன துன்பம் வந்துடிச்சி உனக்கு..?
சுசி ; எனக்கு மட்டும் இல்லே.. உங்களுக்கும் தான்.. அரை மணி நேரமா முயற்சி பண்றேன்.. பிரேக் பிடிக்க மாட்டேங்குது முதலாளி..!
வள்ளுவர் வாக்கு மெய்பித்த ராஜா அண்ணா வாழ்க

ராஜா
20-04-2007, 02:17 PM
இருங்கப்பு..

திருச்சிக்கு வந்துதானே ஆகணும்..!

பென்ஸ்
20-04-2007, 02:31 PM
சுசி கைபேசி வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டு...

ஹலோ வா.சே. யா..?

ஆமாம்.. உங்களுக்கு என்ன வேணும்..?

என் கிட்ட பேசணும்ன்னா உங்களுக்கு ஃப்ரீ தானே..?

ஆமாம்..

அப்போ ஏன் நான் மிஸ்டு கால் கொடுத்தா கூப்பிட மாட்டேங்கறீங்க..? காலையில் இருந்து எத்தனை தடவை போடறது..?
_________________

ராஜா...
உன்மையை சொல்லுங்க....
இப்படி ஒன்று நமக்கு தெரிந்து நடக்கலைதானே..!!???

மதி
20-04-2007, 03:17 PM
சுசி ; இதிலே என்ன ஆச்சர்யம் மாசி.. நீ கூட கத்துக்கலாம்.. ஈஸிதான்.. ஒருதடவை விசில் அடிச்சா ஓடுற பஸ் நிக்கும்.. ரெண்டு தடவை விசில் அடிச்சா நிக்கிற பஸ் ஓடும்.. !

அட..இவ்ளோ ஈ.ஸி.யா...???

ராஜா
20-04-2007, 03:22 PM
லூஸ்ல விடுங்க மக்கா..!

ரொம்ப விவரம் கேட்காதீங்க.. மாட்டிக்குவேன்..!

ராஜா
20-04-2007, 04:52 PM
நன்றி நண்பர்களே..!

ராஜா
20-04-2007, 04:53 PM
அட..இவ்ளோ ஈ.ஸி.யா...???

மதி கேட்கறதைப் பார்த்தா அவர் கூட.....

ராஜா
20-04-2007, 04:57 PM
எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கறானுங்கன்னு பாருங்க...

அவன் ; அன்னிக்கு ரவியோட லவரோட தங்கையோட பிறந்தநாள் பார்ட்டிக்கு விஜயோட ஃபிரண்டோட லவரோட அண்ணனோட நான் பெர்முடாஸோட கையில கோக்கோட வாயில கேக்கோட திருட்டு முழியோட நின்னப்போ சிரிச்சீங்களே ஞாபகமிருக்கா..?

அவள் ; ஏண்டா மூதேவி..! இத்தனை ஜொள்ளோட நீ அவசியம் கடலை போட்டுத் தான் ஆகணுமா..?



அவன் ; பொதுவா நான் முன்ன பின்ன தெரியாத பொண்ணுங்களுக்கு ஸ்கிராப் அடிக்க மாட்டேன்.. ஆனா உங்க ப்ரொபைல் அட்டகாசம்.. என்னால கட்டுப்படுத்த முடியல.. இது வரைக்கும் நான் பார்த்ததிலே இதுதான் பெஸ்ட்.

[இவுரு ரொம்ப நல்லவராம்...அந்த பாப்பாவோட புத்திசாலித்தனம் இவரை இம்ப்ரெஸ் பண்ணிடுச்சாம்..]

அவள் ; தேங்க் யூ சார்.. 31 க்கு அடுத்தது என்ன தெரியுமா..? யெஸ்.. 32.. இதுவரைக்கும் 32 புண்ணாக்கு பயலுக இதே போல எனக்கு ஸ்கிராப் அடிச்சிருக்கானுங்க.


இன்னொரு புத்திசாலி ; ஹாய் க்யூட்டி.. நான் ஐ.ஐ.டி மாணவன்.. உன்கிட்டேருந்து பதில் வரும்ன்னு நெனைக்கிறேன்..உனக்கு எழுதப் படிக்க தெரியும்ன்னு நம்பறேன்..

[ இவர் ரொம்ப இண்டலிஜெண்டாம்.. அவளோட ஈகோவை தட்டி எழுப்பறாராம்..]

அவள் ; மொன்னை நாயே..! எழுதப் படிக்க தெரியாம எப்படிடா ஆர்க்குட்ல கணக்கு ஆரம்பிக்க முடியும்..? உன்னை எவண்டா ஐஐடில அட்மிஷன் போட்டான்..?
_________________

ராஜா
20-04-2007, 04:59 PM
கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.

சுசி: ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.
_________________

சுசியும் நண்பர் மாசியும்...


சுசி ; என்னோட முதல பையன் அப்படியே என்னை உரிச்சு வைச்ச மாதிரி இருப்பான்!"

மாசி ; "அடப்பாவமே!.....ரெண்டாவது் பையனாவது அழகா இருப்பானா.................?"
_________________

மிஸ்டர் சுசியும் மிஸஸ் சுசியும்...

படிக்காம உங்க பையன் ஊரைச் சுத்திட்டு இருக்கானே. நீங்க அவனைக் கேள்வி கேட்க மாட்டீங்களா?"

அவன் தான் படிக்கலையே, என்ன கேள்வி கேட்கறது?
_________________

அன்புரசிகன்
20-04-2007, 07:43 PM
அவன் தான் படிக்கலையே, என்ன கேள்வி கேட்கறது?

அதுதானே...:icon_shok:

அன்புரசிகன்
20-04-2007, 07:45 PM
எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கறானுங்கன்னு பாருங்க....

அனுபவமேதுமில்லையே...:nature-smiley-006:

இளசு
20-04-2007, 08:49 PM
ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹா...

ஆர்க்குட் அமர்களமும் சுசீ அண்ட் கோவின் குசும்புமாய்
ஆரவாரத் தொடர்ச்சி..

என்னை சீனாதானாவாக்கும் இத்திரிக்கு நன்றி...

ஓவியன்
21-04-2007, 10:03 AM
கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.

சுசி: ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.

என்னைக் கட்டுப் படுத்தவே முடியல, அலுவலகம் என்று கூடப் பாராமல் சிரிச்சிட்டேன்.

அருமை ராஜா அண்ணா!

lolluvathiyar
21-04-2007, 02:46 PM
அண்பு ராஜா
இன்றுதான் உன் நகைசுவைகளை படித்தேன்
இதுவர 25 பக்கங்கள் தான் படித்தேன்
நகைசுவை சுரங்கம் தான் நீங்கள்
அனைத்துக்கும் பின்னூட்ட இட முடியாது.
ஆனால் பிடித்த 2 க்கு பின்னூட்டம் இட ஆசைபடுகிறேன்
சர்தார்ஜி ஜோக்குகள் அனைத்தும் அருமை




ஆரஞ்சுப் பழத்தை இன்னொருத்தருக்குக் கொடுக்கணும்ன்னா வழக்கறிஞர் கொடுத்தா எப்படிக் கொடுப்பார்ன்னு

நாளது ##ம் வருடம் ##ம் நாள் சென்னை வியாசர்பாடி, ##விலாசத்தில் வசிக்கும் தமுக்கடிச்சான் மகன் ##குடியிருந்து வரும் ஈயடிச்சான் மகன் கொசு கடிச்சான் கமலா ஆரஞ்சு கொடுப்பதோடு மட்டுமல்லாது, இதன் பேரில் எனக்கிருக்கும் உரிமை, சொந்தம், பாத்தியம்,ஆதாயம் ஆகியவற்றையும் உங்கள் அனைவர் முன்னிலையில், என் சுய புத்தியோடும், முழு மனதோடும், எவ்வித நெருக்குதலுக்கு ஆளாகாமலும், மனமுவந்து அளிக்கிறேன்.
இதை இவர், உடனடியாகவோ அல்லது தான் விரும்பும் போதோ, தனக்காகவோ அல்லது பிறர்க்காகவோ பயன்படுத்தலாம்.

பழங்களை இவரோ இவரது வம்சாவளியினரோ சர்வ சுதந்திரமாக விற்பனை செய்யவோ இலவசமாக வழங்கவோ, தூக்கி எறியவோ யாதொரு இடர்ப்பாடும் இல்லை.. அந்த ஆரஞ்சு மரத்தை வெட்டி விறகாகவோ அல்லது...


இந்த நகைசுவை அருமை,
ஆனால் இது வாக்கீலின் மனு அல்ல
பத்திர எழுத்தாளர் பாசை,
வக்கீல் என்பதர்க்கு பதிலாக பத்திர எழுத்தாளர் என்று
வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.


புஷ், மன் மோகன் சிங் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்..

சிங் ; அடுத்த வருடம் சந்திரனுக்கு ஆள் அனுப்பப் போகிறோம்..

புஷ் ; நாங்கள் ஏற்கனவே அனுப்பி விட்டோம்..

சிங் ; நாங்கள் 100 பேரை அனுப்பப் போகிறோம்..

புஷ் ; அடேயப்பா.. அவ்வ்ளவு பேரா..? யார்..யார்..?

சிங் ; பிற்பட்டோர் 27 பேர்.
மிக பிற்பட்டோர்---17 பேர்
பெண்கள் ----------33 பேர்.
விளையாட்டு வீரர்-- 2 பேர்.
போர் விதவை------ 1 பேர்
சுனாமி பாதிப்பு------ 5 பேர்
பயங்கரவாத பாதிப்பு 5 பேர்
ஊனமுற்றோர்------- 5 பேர்.
அரசியல்வாதிகள்-----4 பேர்.. இடம் இருந்தால்..
விண்வெளி வீரர்-----1 பேர்.



முதலில் ஸ்காட்லாந்து அணியினர் விடுதலைப் "புலி" என்று ஒரு சுள்ளி பொறுக்கும் கிராமவாசியைப் பிடித்து இழுத்து வந்தனர்..

அடுத்து அமெரிக்க அணியினர் காட்டுக்குள் புகுந்தனர்.." அல் காயிதா" எல்லா புலிகளையும் கடத்திச் சென்று விட்டதாகவும், பின் லாடன் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்"

இந்திய போலீஸ் படை
ஒரு கரடியை மரத்தில் கட்டி வைத்து, " புலின்னு ஒத்துக்கோ.. உனக்கு வேற வழியே இல்லே.. பேசாம நான் புலி தான்னு வாக்குமூலம் கொடுத்துடு..இல்லேன்னா என்கவுண்டர்தான்" என்று மிரட்டிக்கொண்டிருந்தனர்..!

இந்த நகைசுவை அருமை,
இதை நகைசுவையாக மட்டும் பார்க்காமல்
அறிவின் கன்னோட்டத்தில் பார்த்தால் புரியும் அவலம்

ராஜா
21-04-2007, 03:56 PM
நன்றி நண்பர்களே...!

ராஜா
21-04-2007, 03:57 PM
ஆசிரியர் : ஒரு பெண்ணின் உயர்வுக்குக் காரணம் என்னவாக இருக்கமுடியும்?

மாணவன் : அவள் போட்டிருக்குற ஹை ஹீல்ஸ் தான் சார்.
_________________________________________________________________

நபர் : ஜோசியரே, நம்ம ஜாதகத்துல ஏதும் தோஷம் இருக்கா பாருங்க.

ஜோசியர் : தம்பி, உனக்கு ஒரு தோஷம் இருக்குப்பா. கல்யாணம் பண்ணா தோஷம் போயிடும்.

நபர் : என்ன தோஷம்?

ஜோசியர் : சந்தோஷம்
___________________________________________________________________

இந்த வாழ்த்துச்செய்தியை அனுப்பியவருக்கு, இருதயநோய் இருக்கும் போலிருக்கிறது"

எப்படிச் சொல்றே?

பின்னே, வாழ்த்துச்செய்தியில், I wish you all the success hole heartedly, அப்படின்னுபோட்டிருக்காரே.
_____________________________________________________________________

ஆசியர்: ஆங்கிலேயர்கள் நம் நாட்டை படிப்படியாக கைப்பற்றினார்கள். இதில் இருந்து என்ன தொகிறது?

சின்னா;: அந்தக் காலத்தில் லிப்ட் இல்லை என்று தொகிறது ஸார்..........
_____________________________________________________________________

"அந்த நடிகைக்கு ஏகப்பட்ட காதலர்கள்!"

"கணவர்...?"

"அது கொஞ்சம் தான்!"
_________________

leomohan
21-04-2007, 04:03 PM
___________________________________________________________________

இந்த வாழ்த்துச்செய்தியை அனுப்பியவருக்கு, இருதயநோய் இருக்கும் போலிருக்கிறது"

எப்படிச் சொல்றே?

பின்னே, வாழ்த்துச்செய்தியில், I wish you all the success hole heartedly, அப்படின்னுபோட்டிருக்காரே.
_____________________________________________________________________
_________________


சூப்பரு

varsha
21-04-2007, 04:05 PM
அருமையான நகைச்சுவை நன்றி படித்து மகிழ்ந்தேன்

மனோஜ்
21-04-2007, 04:06 PM
அந்த நடிகைக்கு ஏகப்பட்ட காதலர்கள்!"

"கணவர்...?"

"அது கொஞ்சம் தான்!"
இது புரியலையே அண்ணா

mravikumaar
21-04-2007, 04:09 PM
அருமையான தமாசுகள் ராஜா

அன்புடன்
ரவி

ராஜா
21-04-2007, 04:26 PM
இது புரியலையே அண்ணா

காதலர்கள் எண்ணிக்கை அளவுக்கு கணவர்கள் எண்ணிக்கை இல்லியாமாம்..!

நண்பன்
21-04-2007, 04:59 PM
உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் இவ்வளவு நகைச்சுவைத்துனுக்குகள் கிடைக்கின்றன!!! எவ்வளவு கவலையில் இருந்தாலும் உங்கள் நகைச்சுவை துணுக்குகளை படித்தால் உடனே புதுத்தெளிவு பிறந்துவிடும். வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
21-04-2007, 06:43 PM
மாணவன் : அவள் போட்டிருக்குற ஹை ஹீல்ஸ் தான் சார்.

ஆம்புளேங்கதா பாவம்.



நபர் : என்ன தோஷம்?
ஜோசியர் : சந்தோஷம்

அடி வயித்தில புளிய கரைக்கிறீங்களே...



சின்னா;: அந்தக் காலத்தில் லிப்ட் இல்லை என்று தெரிகிறது ஸார்..........

ரொம்பகஷ்டப்பட்டிருப்பாங்க போல..

மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் மாப்ளோய்...:icon_clap: :icon_clap: :icon_clap:

aren
22-04-2007, 03:28 AM
செம்ம கடி கடிக்கிறீங்க. எப்படித்தான் மக்கள் உங்களுடன் ஆபீஸில் வேலை செய்கிறார்களோ தெரியவில்லை. எல்லோரும் இந்நேரம் ஓடியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

இதுவரை 60 பக்கங்கள் ஓடி இன்னும் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
22-04-2007, 04:00 AM
ஆசிரியர் : ஒரு பெண்ணின் உயர்வுக்குக் காரணம் என்னவாக இருக்கமுடியும்?

மாணவன் : அவள் போட்டிருக்குற ஹை ஹீல்ஸ் தான் சார்.


அருமை அண்ணா!!:icon_clap:
பல வேளைகளில் அவர்களது பலத்திற்கும் அதுதான் காரணமாக அமைகிறது - ஒரு தடவை அதனால் அடி வாங்கினால் தான் அது விளங்கும்.:D :D :D

அன்புரசிகன்
22-04-2007, 04:06 AM
அருமை அண்ணா!!:icon_clap:
பல வேளைகளில் அவர்களது பலத்திற்கும் அதுதான் காரணமாக அமைகிறது - ஒரு தடவை அதனால் அடி வாங்கினால் தான் அது விளங்கும்.:D :D :D

ஆகா..ஆகா... அனுபவ முதிர்ச்சி என்பது இதுவல்லவா...:4_1_8:

ஓவியன்
22-04-2007, 04:38 AM
ஆகா..ஆகா... அனுபவ முதிர்ச்சி என்பது இதுவல்லவா...:4_1_8:

அனுபவத்திலே இரண்டு வகை உண்டு தோழரே........
01 தானே பட்டுத் தெளிவது
02 மற்றவர் படும் போது நேரே பார்த்து கேட்டு அறிவது:thumbsup:
எனக்கு கிடைத்த நண்பர்கள் புண்ணியத்தால் இரண்டாம் வகை அனுபவம் தாராளமாகவே கிடைத்தன, கிடைக்கின்றன, இன்னமும் தொடர்ந்து கிடைக்கும் (அவ்வளவு நம்பிக்கை எனக்கு!!!,ஏனென்றால் என் நண்பர்கள் அப்படி!!!):lachen001: :lachen001: :lachen001:

ராஜா
22-04-2007, 04:43 AM
மாமனாரே..!

நீங்க அன்பு ரசிகனா... இல்லே.....வம்பு ரசிகனா..?

இதெல்லாம் அனுபவிச்சுத் தெரிஞ்சுக்கணும்ங்கிறது இல்லே.. யாராவது வம்பு பண்ணிட்டு வாங்குறதைப் பார்த்தா கூட தெரிஞ்சுக்கலாம்..!

ஓவியன்
22-04-2007, 04:47 AM
மாமனாரே..!

நீங்க அன்பு ரசிகனா... இல்லே.....வம்பு ரசிகனா..?

இதெல்லாம் அனுபவிச்சுத் தெரிஞ்சுக்கணும்ங்கிறது இல்லே.. யாராவது வம்பு பண்ணிட்டு வாங்குறதைப் பார்த்தா கூட தெரிஞ்சுக்கலாம்..!

அதே!:thumbsup:
இதனைத் தான் நானும் சொன்னேன்!!
ஹி!,ஹி!

அன்புரசிகன்
22-04-2007, 09:58 AM
அனுபவத்திலே இரண்டு வகை உண்டு தோழரே........
02 மற்றவர் படும் போது நேரே பார்த்து கேட்டு அறிவது:thumbsup:

எனக்கு கிடைத்த நண்பர்கள் புண்ணியத்தால் இரண்டாம் வகை அனுபவம் தாராளமாகவே கிடைத்தன, கிடைக்கின்றன, இன்னமும் தொடர்ந்து கிடைக்கும் (அவ்வளவு நம்பிக்கை எனக்கு!!!,ஏனென்றால் என் நண்பர்கள் அப்படி!!!):lachen001: :lachen001: :lachen001:

நீரல்லவோ நட்புக்கு இலக்கணம்.
உமது நண்பர்கள் கொடுத்துவைத்தவர்கள். (உம்மைப்போல் ஒரு நண்பர் கிடைக்க.)

அன்புரசிகன்
22-04-2007, 10:02 AM
நீங்க அன்பு ரசிகனா... இல்லே.....வம்பு ரசிகனா..?

வம்பு இருக்கிற அடத்தில் அன்பும் இருக்கும்.
நல்லவர் போல் நடிப்பவர்களிடம் அன்பும் அவ்வாறே இருக்கும்.



இதெல்லாம் அனுபவிச்சுத் தெரிஞ்சுக்கணும்ங்கிறது இல்லே.. யாராவது வம்பு பண்ணிட்டு வாங்குறதைப் பார்த்தா கூட தெரிஞ்சுக்கலாம்..!

பார்த்தப்பெறுவதிலும் நேரடியாக கிடைக்கும் அனுபவம் பெரியது. அவருடைய பதிலில் அனுபவ முதிர்ச்சி தெரிந்தது. (எப்படித்தெரிந்தது என cross question கேட்க்க வேண்டாமே...) :whistling:

ஓவியன்
22-04-2007, 10:06 AM
நீரல்லவோ நட்புக்கு இலக்கணம்.
உமது நண்பர்கள் கொடுத்துவைத்தவர்கள். (உம்மைப்போல் ஒரு நண்பர் கிடைக்க.)

என் நண்பர்கள் ..................வேண்டாமே இத்துடன் விட்டு விடுகிறேன்:shutup:

அன்புரசிகன்
22-04-2007, 10:27 AM
என் நண்பர்கள் ..................வேண்டாமே இத்துடன் விட்டு விடுகிறேன்:shutup:

ஏனிந்த தயக்கம். அவ்வளவு மோசமானவர்களா???(உமது நண்பர்கள்)

ஓவியன்
22-04-2007, 10:31 AM
ஏனிந்த தயக்கம். அவ்வளவு மோசமானவர்களா???(உமது நண்பர்கள்)

ஹி!,ஹி!!!

இது நீர் உமது அறிமுகத்தின் போது பதித்த பதிவு!

ஹி!,ஹி!!


அன்பின் தமிழ் பேசும் உறவுகளே
...........
............
இப்போது வந்தாரை வெருட்டி வாழவைக்கும் கட்டாரில் உள்ளேன். ஓவியனின் அறிமுகத்தால் இந்த இணையத்திற்கு பிரவேசித்துள்ளேன்.
.........
.
:icon_clap: :icon_clap: :icon_clap:

அன்புரசிகன்
22-04-2007, 10:33 AM
ஓவியனின் அறிமுகத்தால் இந்த இணையத்திற்கு பிரவேசித்துள்ளேன்.. அவ்வளவே... வேறு என்ன கூறினேன்.??

ராஜா
22-04-2007, 12:20 PM
நடக்கற கூத்தைக் கவனிச்சா உதை வாங்கிய நண்பர்... ஒவியனின் நண்பர் ..... நம்ம...... மா............ ஹி..ஹி...

இளசு
22-04-2007, 12:41 PM
ஆசிரியர் : ஒரு பெண்ணின் உயர்வுக்குக் காரணம் என்னவாக இருக்கமுடியும்?

மாணவன் : அவள் போட்டிருக்குற ஹை ஹீல்ஸ் தான் சார்.
_________________________________________________________________




எல்லாமே அருமை ராஜா..

நகைச்சுவைச் சக்கரவர்த்தி என்று அழைக்கலாமா உங்களை?

இங்கே ஹை-ஹீல்ஸ் பற்றிய கலியமூர்த்தி கவிதை -

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8660

அன்புரசிகன்
22-04-2007, 01:33 PM
நடக்கற கூத்தைக் கவனிச்சா உதை வாங்கிய நண்பர்... ஒவியனின் நண்பர்

அப்பிடித்தான் சொல்லுறார்.அவற்ற நண்பர் (???) வாங்கினத பார்த்தவராம்.


..... நம்ம...... மா........
புரியல... என்ன சொல்ல வாறீங்க... :innocent0002:

ராஜா
22-04-2007, 01:45 PM
லூஸ்ல விடுங்க மாமு...!

அன்புரசிகன்
22-04-2007, 01:46 PM
விட்டுட்டேன்...

ராஜா
22-04-2007, 05:45 PM
மாதவ் சிங் சுபனிடம்....போனைக் காட்டி...

என்ன சுபன் இந்த ரீ-டயல் பட்டன் நாம் முதல்ல அமுக்கின நம்பரை தானா
போட்டுக்கும் தானே..?

ஆமாம்.. அதிலென்ன குழப்பம் உனக்கு..?

உன் நம்பர் 98424 98424 தானே..?

ஆமாம்.. என்ன பிரச்சினை மாசி..?

98424 போட்டு ரீ-டயல் போட்டா உனக்கு போகவே மாட்டேங்குது சுபன்..! நம்பரை சரி பார்க்கச் சொல்லுது..!

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

மாதவ் சிங் தன் நாயோட வாலை ஒரு இரும்பு குழாய்க்குள்ள விட்டு ஏதோ பண்ணிகிட்டு இருந்தாரு. அங்கே வந்த சுபன் இதைப் பார்த்துட்டு...

இப்படி்யெல்லாம் பண்ணினா நாய் வால் நிமிராது...மாசி...!

எனக்க்குத் தெரியும்.. நான் என்ன அவ்வளவு முட்டாளா..? நான் இரும்புக் குழாயை வளைக்க முயற்சி பண்ணிகிட்டிருக்கேனாக்கும்..!

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

மாதவ் ஒரு ஆட்டோ ஓட்டுநர்.. அவசரம் அவசரமா தன் ஆட்டோவோட ஒரு சக்கரத்தைக் கழட்டிகிட்டு இருந்தார்.. சுபன் பார்த்துட்டு கேட்டார்...

என்ன மாதவ்.. டயர் பஞ்சரா..?

கருமமே கண்ணாக இருந்த மாதவ் சிங் மேலே இருந்த அறிவிப்பைக் காட்டினார்..அதில்...

"இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துமிடம்" என்று போட்டு இருந்தது..!

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ஒரு நாள் மாதவ் சிங் தன்னை நாய் கடிக்கிறது போல கனவு கண்டார்.. உடனே தன் வங்கிக் கணக்குல இருந்த ப்பணத்தைப் பூரா எடுத்துட்டு வந்துட்டார்.. ஏன் தெரியுமா..?

"எங்களிடம் சேமியுங்கள்.. உங்கள் கனவுகள் நனவாகும்" அப்படின்னு அந்த வங்கியோட விளம்பரம் இருந்ததே காரணம்..!

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

சுபன் ; என்ன மாதவ்..? போன் பண்ணினா எடுக்கவே மாட்டியா..? காலையில் இருந்து போட்டுகிட்டே இருக்கேன்.. அடிச்சு அடிச்சு ஓயுது.. என்ன சமாச்சாரம்..?

மாதவ் சிங் ; 45 ரூபாய் செலவு பண்ணி காலர் ட்யூன் பாட்டு போட்டிருக்கேன்.. போனை எடுத்தா அதை யார் கேக்கறதாம்..?

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

மாதவ் சிங் பரிட்சைக்கு படிக்கும் போது நிலைக் கண்ணாடிக்கு முன்னாடிதான் உட்கார்ந்து படிப்பார்.. ஏன்னு காரணம் கேட்டா ...

1) ஒரு தடவை படிச்சா ரெண்டு தடவை படிச்ச மாதிரி...

2) ஒருத்தர் படிக்கிறதை இன்னொருத்தர் காதிலே வாங்கிக்கலாம்..

3) குரூப் ஸ்டடி ன்னும் வச்சுக்கலாம்..

அப்படின்னு சொல்லுவார்..!

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

அன்புரசிகன்
22-04-2007, 06:11 PM
சோக்கான ஜோக்குகள். நன்றி.. சுபன் ரொம்ப அறிவாளி தான்.

ஓவியா
22-04-2007, 07:43 PM
"இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துமிடம்" என்று போட்டு இருந்தது..!

ஹி ஹி ஹி தூள்

ராஜா
23-04-2007, 04:37 PM
தமிழ்த்திரைப்பட உலகமும் ..................... கணிணி உலகமும்

பில்லா - ஆள் விற்பவன் (பாடி ஷாப்பர்)

எங்க ஊரு பாட்டுக்காரன் - எங்க ஊரு பாடி ஷாப்பர்

வேலைக்காரன் - புரோகிராமர் (நம்மதான்)


கோபுர வாசலிலே - அமெரிக்க தூதரக நுழைவாயில்

வாழ்வே மாயம் - கிடைக்காத H1 விசா

மெளனராகம் - விசா கிடைக்காமல் போனதும் வீட்டில் பாடுவது

உன்னால் முடியும் தம்பி - மீண்டும் விசா அப்ளிகேஷன் போட தேவையான ஊக்கம்

மறுபடியும் - மீண்டும் H1 க்கு முயற்சி

24 மணி நேரம் - அமெரிக்க தூதரகத்தில் விசா ஒப்பம் வாங்க காத்திருக்கும் நேரம்

கடலோரக் கவிதைகள் - விசா வாங்கிய பின்னர் மெரினா பீச்சில் பாடுவது

அந்த 7 நாட்கள் - H1 விசா வாங்கியதற்கும் அமெரிக்காவில் இறங்குவதற்கும் இடையே உள்ள கால இடைவெளி


மின்சாரக் கனவு - கிரீன் கார்ட்(பச்சை அட்டை)

சகலகலா வல்லவன் - பில் கேட்ஸ்

நீரும் நெருப்பும் - மைக்ரோசாப்ட் ஐபிஎம்

நேருக்கு நேர் - நெட்ஸ்கேப்பும் எக்ஸ்புளோரரும்

பார்த்தால் பசி தீரும் - மின்வலையில் நேர்வது

பட்டிக்காடா பட்டணமா ? - லெகஸி ஸிஸ்டமா, கிளையண்ட் சர்வரா ?

புன்னகை மன்னன் - நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாத ப்ராஜக்ட் மேனேஜர்

டிக் டிக் டிக் - கிளையண்ட் அலுவலகத்தில் முதல் நாள்

ஓட்டம் - முதல் பாடி ஷாப்பரை விட்டு ஓடுவது

அலைகள் ஓய்வதில்லை - கம்பெனி விட்டு கம்பெனி ஓடிக்கொண்டே இருப்பது

நல்லவனுக்கு நல்லவன் - பெஞ்சில் இருக்கும் போதும் முழு சம்பளம் கொடுக்கும் கம்பெனி

அடிமைச் சங்கிலி - பாண்ட்

பசி - பெஞ்சில் சம்பளம் இல்லாமல்

வைதேகி காத்திருந்தாள் - பெஞ்ச் முடிய காத்திருப்பது

படிக்காத மேதை - y2k புரோகிராமர்

சர்வர் சுந்தரம் - y2k வேலை முடிந்ததும்

பயணங்கள் முடிவதில்லை - புரோகிராமில் உள்ள தவறுகளை களைவது

திருடா திருடா - அடுத்தவன் புரோகிராமை காப்பி அடிப்பது

எங்கேயோ கேட்ட குரல் - ஒரே ஒரு தடவை ஓடிய புரோகிராம்

ஆயிரத்தில் ஒருவன் - அஸெம்பிளி புரோகிராமர்

ராஜா
23-04-2007, 04:39 PM
ரஜினிகாந்த் விஜயகாந்த் (பழைய எம்ஜியார் பாணியில்) ரிக்ஷாக்காரன், ஆட்டோக்காரன், பால்காரன் என்று எல்லாத் தொழில்களையும் செய்து நடித்துவிட்டார்கள். புரோகிராமர் சோகங்கள் தெரிந்தால், புரோகிராமராகவும் அவர்கள் நடித்திருப்பார்கள்.

இதுவரை நடிக்கவில்லையாதலால், ஆறுதலுக்கு டைட்டில் பாடலாவது பாடிப்பார்ப்போம்



நான் சாஃப்ட்வேர்காரன், சாஃப்ட்வேர்காரன்

நாலும் தெரிந்த பிஸி காரன்

மெயின்பிரேம்ல கோபால்காரன்

இண்டர்நெட்டில ஜாவாக்காரன்

கட் அண்ட் பேஸ்ட் வேலைக்காரன்

லாஜிக்குள்ள மூளைக்காரன்டா

நான் எப்பவுமே பாடி ஷாப்பர் உறவுக்காரன்டா


ஒய்டுகேன்னா அஜக்குத்தான்

ஒய்டுகேன்னா குமுக்குத்தான்

---( நான் சாஃப்வேர்காரன்..


ப்ராஜக்ட் பெரிசாச்சி

கோடு பெரிசாச்சி

பக்-கு எதிர்பார்த்து பாதி வயசாச்சி

ரிவியூ படிப்பதுக்கும் நேரத்திலே


ஈ-மெயில் விண்டோ ஓரத்திலே

ஒய்டுகேன்னா அஜக்குத்தான்

ஒய்டுகேன்னா குமுக்குத்தான்

---( நான் சாஃப்வேர்காரன்..


நான் ஹெச்-ஒன்னு இலவசமா போறேம்மா

உன் பிள்ளைக்கொரு

பி-ஒன்னு வாங்கித் தாரேம்மா

நம்பி வந்து பாரு

இது நம்ம சாஃப்வேரு

மைக்ரோசாஃப் புராடக்டு

விண்டோசுன்னு பேரு


நான் சாஃப்வேர்காரன்..சாஃட்வேர்காரன்

பேக்கெண்டில டிபிக்காரன்

ஃப்ரண்ட் எண்டுல விபிக்காரன்

ஓஎஸ்ஸில எண்டிக்காரன்

மைக்ரோசாஃப் மெளஸ்காரன்

இண்டெர்நெட்டில டிசிபி ஐபிக்காரன்


ஒய்டுகேன்னா அஜக்குத்தான்

ஒய்டுகேன்னா குமுக்குத்தான்


---

ஐஎஸ்ஓ ஆடிட்டில் ஆபத்தில் விடமாட்டேன்

சிஎம்எம் லெவல் 4ஐ மாட்டேன்னு சொல்லமாட்டேன்

அப்பப்போ போரு

அடிச்சாக்கா ஹாட்மெயிலு

அக்ஸெஸ் லைன் எல்லாம் டெடிக்கேட்டடு


ஒய்டுகேன்னா அஜக்குத்தான்

ஒய்டுகேன்னா குமுக்குத்தான்


-- நான் சாஃப்வேர்காரன்..சாஃட்வேர்காரன்

leomohan
23-04-2007, 05:00 PM
சாஃப்ட் வேர் பாட்டு சூப்பர். இதனால் பழைய பாடலை உல்டா செய்ய அருமையான கற்பனைகளை தட்டிவிட்டீர்கள். நன்றி.

மனோஜ்
23-04-2007, 05:03 PM
அருமை
ஆனா எங்கே படித்த ஞபாகம்

ஓவியா
24-04-2007, 02:30 AM
நான் சாஃப்ட்வேர்காரன், சாஃப்ட்வேர்காரன்

அடடா எங்கயோ போகுதே பாட்டு!!!!!!!! சூப்பர்

ராஜா
24-04-2007, 03:01 PM
ஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது ?


பல்வேறு முறைகள்


ரஜினிகாந்த் முறை:

1) இதோ தாக்கப்போறேன், இதோ அடிக்கப்போறேன் என்று எச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும். சிங்கம், பயத்திலேயே வாழ்ந்து பயத்தாலேயே இறந்துவிடும்

2) இல்லையென்றால், ரஜினி முகத்தில் போட்டிருக்கும் மேக்கப்பை எடுத்து சிங்கத்தின் மீது போட்டுவிட்டால் போது, எடை தாங்காமல் உயிரைவிட்டுவிடும்


கமலஹாசன் முறை:

சிங்கத்தின் அருகே சென்று நாயகன் ஸ்டைலில் கதறி அழவேண்டும். துக்கம் தாங்காமல் செத்துவிடும் சிங்கம்

இல்லாவிட்டால் கமல் முத்தம் கொடுக்கப் போகிறார் என்று வதந்தியைக் கிளப்பி விடலாம்.. சிங்கம் அதிர்ச்சியில் செத்து விடும்.


ஜெயலலிதா முறை:

இரவு 2 மணிக்கு, போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனைக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தைக் கொல்வதுதான்.

அல்லது ஹெலிகாப்டரில் அடிக்கடி காட்டுப் பக்கம் சுற்றி வந்தால், ஹெலியின் நிழலுக்கு காலில் விழுந்து விழுந்து களைத்துப் போய் செத்துவிடும்.

கருணாநிதி முறை :

முதலில் சிங்கத்தை உடன் பிறப்பாக்க வேண்டும். ஆக ஒரு மாதம் தொடர்ந்து, 'என் சிங்கமே, என் உடன் பிறப்பே ' என்ற ரீதியில் கடிதங்கள். பிறகு, ஜெயலலிதாவின் வழக்கமான அட்டகாசத்தை காரணமாக வைத்து, 'சிங்கமே, என் உடன் பிறப்பே.. நீ எனக்காக தற்கொலை செய்து கொள்ளாதே ' என்ற ரீதியில் கடிதம் வந்ததும், தலைவர் தன்னை தற்கொலை செய்து கொள்ள சொல்கிறார் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு, சிங்கம் தற்கொலை செய்து கொள்ளும். அவ்வளவுதான்.


மணிரத்னம் முறை:

சிங்கத்துக்கு சூரிய வெளிச்சமே காட்டக்கூடாது. ஒரே ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்து இருட்டறையில் அதனிடம்

செத்துடு...

மொத்தமா செத்துடு..

ரத்தம் வராம செத்துடு

என்று ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் போகாமல் சுகாசினி டப்பிங்கில் பேசிக்கொண்டே இருக்கவேண்டும். எரிச்சலில் தற்கொலை செய்துகொண்டுவிடும்.

பாலச்சந்தர் முறை:

ஒரு பெண் சிங்கத்தை காட்டுக்கு அனுப்புங்கள். நமது சிங்கமும், பெண் சிங்கமும் காதலில் விழும். இன்னொரு பெண் சிங்கத்தை காட்டுக்கு அனுப்புங்கள், அப்புறம் இன்னொரு பெண் சிங்கத்தை. அப்புறம் ஒரு ஆண் சிங்கத்தை. முதல் ஆண் சிங்கம் இரண்டாவது பெண் சிங்கத்தை காதலிக்கும். முதல் பெண்சிங்கம் இரண்டாவது ஆண் சிங்கத்தை காதலிக்கும். சரி, இப்போது உங்கள்ளுக்குள் என்ன உறவுமுறை என்று கேளுங்கள்...

குடும்பமே கூட்டமாக் தற்கொலை செய்துகொள்ளும்.


பாரதிராஜா முறை:

நெப்போலியனை அனுப்பி திருப்பாச்சி அருவாளால் ஒரே போடு. அவ்வளவு தான். தீர்ந்தது.

இல்லாவிட்டால் அவர் மகன் ஆணழகன் மனோஜ் நடிக்க ஒரு படம் தயாரிக்கிறியா..? என்று கேளுங்கள்.. சிங்கம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்.


சங்கர் முறை:

சிங்கத்தை ஆஸ்திரேலியா அல்லது அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கே சுவிட்ஸர்லாந்து ஆல்ப்ஸ் மலை செட்டிங் போட்டு, நல்ல அழகான லொகேஷனில் கம்ப்யூட்டர் அனிமேஷனில் எலும்பு தனி சதை தனியாக பிரிக்க வேண்டியதுதான்.

அல்லது சிவாஜி ரிலீஸ் எப்போ என்று கேளுங்கள்.. சிங்கம் பரலோகப் பிராப்திதான்...!

அன்புரசிகன்
24-04-2007, 03:07 PM
அலுவலகத்தில் பெரிதாக சிரித்துவிட்டேன். அடக்க முடியாமல். அதிலும் பாலச்சந்தர் முறை தூள். நன்றி மாப்ளோய்.

ஓவியா
24-04-2007, 04:58 PM
ஹி ஹி ஹி

ஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது ?

அண்ணா,
ரொம்ப அட்டாகாசம் பன்ன ஆரபிச்சுடீங்க ....படித்து வாய் விட்டே சிரித்தேன்......ஹி ஹி ஹி

அண்ணா, இதை நகைச்சுவை நடிகர்கள் எப்படி செய்வார்கள்????

ஓவியன்
25-04-2007, 07:21 AM
ஹாஹா அருமையாக இருக்கு

இன்னும் சில முறைகள் உள்ளனவே

ஏ.ஆர்.ராஜா முறை

ராஜா அண்ணாவின் முன்னால் விட்டு அவரது நகைச்சுவையைக் கேட்கச் செய்ய வேண்டும், அது சிரிச்சு சிரிச்சு வயிறு வெடித்துச் செத்துவிடும்.


மயூரேசன் முறை

மயூரேசனின் கதைகளைக் கொடுத்து வாசிக்கச் சொல்ல வேண்டும், வாசித்து விட்டு மயூரேசன் சிங்களப் பெட்டையளப் பற்றி விட்ட பீலாவை நம்பி வயிற்றெரிச்சலில் வயிறு புண்ணாகி நோய்வாய்ப் பட்டுச் செத்துவிடும்.:D

ஓவியன்
25-04-2007, 07:35 AM
மயூரேசன் முறை 2

மயூவிடம் சொல்ல வேண்டும் இந்த சிங்கத்தைக் கொல்வது உன் பொறுப்பு என்று, உடனே அவர் தனது ஹரிப் பொட்டர் துடைப்பக் குச்சியை எடுத்துப் போயி சிங்கத்துன் மூக்கில் நுளைப்பார் (மந்திரம் தெரியாததால் அதனைத் தானே செய்யலாம்:D ). உடனே சிங்கம் மூச்சு விட முடியாமல் தும்மித் தும்மிச் செத்துவிடும்.

மனோஜ்
25-04-2007, 07:46 AM
அருமை நகைசுவைகள் நன்றி ராஜா அண்ணா

pradeepkt
25-04-2007, 09:50 AM
மயூரேசன் முறை 2

மயூவிடம் சொல்ல வேண்டும் இந்த சிங்கத்தைக் கொல்வது உன் பொறுப்பு என்று, உடனே அவர் தனது ஹரிப் பொட்டர் துடைப்பக் குச்சியை எடுத்துப் போயி சிங்கத்துன் மூக்கில் நுளைப்பார் (மந்திரம் தெரியாததால் அதனைத் தானே செய்யலாம்:D ). உடனே சிங்கம் மூச்சு விட முடியாமல் தும்மித் தும்மிச் செத்துவிடும்.

ஓய்... ஹாரி பாட்டர் பத்திப் பேசாதே... மயூரேசன் நினைத்தால் சும்மா மந்திரம் சொல்லி சிங்கத்தைச் சிக்கன் 65 ஆக மாற்றித் தின்று விடுவான்.. :violent-smiley-010:

மதி
25-04-2007, 10:00 AM
ஓய்... ஹாரி பாட்டர் பத்திப் பேசாதே... மயூரேசன் நினைத்தால் சும்மா மந்திரம் சொல்லி சிங்கத்தைச் சிக்கன் 65 ஆக மாற்றித் தின்று விடுவான்.. :violent-smiley-010:
ஏ...சாமி
இவ்ளோ ஹாரிபாட்டர் ரசிகர்களா???:huh:

மதி
25-04-2007, 10:02 AM
ராஜாண்ணே...
அத்தனை முறையும் அருமை...
ரொம்பவும் புடிச்சது பாலச்சந்தரும் மணிரத்னமும் தான்..
கலக்கிட்டீங்க போங்க..

எங்கிருந்து தான் யோசிப்பீங்களோ..?

ஷீ-நிசி
25-04-2007, 10:04 AM
கலக்கிட்டீங்க ராஜா சார்.....

வைகோ இருந்தா எப்படி சாகடிச்சி இருப்பார் சிங்கத்த....

ஹிரோஷிமா நகரத்திலே, சம்பல் பள்ளத்தாக்கிலே கி.மு 1900 ஆண்டுகளிலே.....

சார் போதும்..... சிங்கம் செத்துடுச்சி...

ஓவியன்
25-04-2007, 10:13 AM
ஓய்... ஹாரி பாட்டர் பத்திப் பேசாதே... மயூரேசன் நினைத்தால் சும்மா மந்திரம் சொல்லி சிங்கத்தைச் சிக்கன் 65 ஆக மாற்றித் தின்று விடுவான்.. :violent-smiley-010:

அப்ப அது சிங்கம் 65!!!

அதற்கு 65 சிங்கம் வேணுமே???:icon_tongue:

அன்புரசிகன்
25-04-2007, 10:26 AM
அப்ப அது சிங்கம் 65!!!
அதற்கு 65 சிங்கம் வேணுமே???:icon_tongue:

ஏம்பா உண்மையிலெயே சிக்கன் 65 எப்பிடீன்னு தெரியாதா..? அது தெரிந்தால் சிங்கம் 65 ற்கு 65 சிங்கம் தேவைன்னு சொல்லியிருக்கமாட்டீர்.

ஓவியன்
25-04-2007, 10:52 AM
ஏம்பா உண்மையிலெயே சிக்கன் 65 எப்பிடீன்னு தெரியாதா..? அது தெரிந்தால் சிங்கம் 65 ற்கு 65 சிங்கம் தேவைன்னு சொல்லியிருக்கமாட்டீர்.

நகைச்சுவைப் பகுதியில் வந்து ஆராய்ட்சி செய்கிறீரே?

உம்மை.......:violent-smiley-004:

அன்புரசிகன்
25-04-2007, 10:57 AM
ஆராச்சி செய்யவும் இடம் முக்கியமோ,?

ராஜா
25-04-2007, 04:37 PM
!நீங்க ஆபரேஷன் டேபிள்ல இருக்கீங்க.. அப்போ கீழே இருக்கற
மாதிரி எதுவும் உங்க காதிலே விழலேன்னா நீங்க பொழைக்க
வாய்ப்பு அதிகம் இருக்கு....

1) சிஸ்டர்.. அதை பத்திரமா எடுத்து வையுங்க..
போஸ்ட் மார்ட்டம் செய்யும்போது தேவைப்படும்..!

2) என்னப்பா..? இந்த ஆள் பொண்டாட்டி நாம கேட்ட
தொகைக்கு ஒத்து வந்துட்டாங்களா..?

3) ஏம்மா..? எத்தனை தடவை சொன்னாலும் கேட்க
மாட்டீங்களா..? உங்க நாய் அதைக் கவ்விகிட்டு ஓடிருச்சே..
போங்க.. போய் அதைப் பிடிக்க முடியுமா பாருங்க..

4) ஏன் டாக்டர்..? ் குழாய்ல ஆக்சிஜன வரலை போல
இருக்கே.. எம்ட்டி சிலிண்டர் மாத்தவே இல்லியா..?

5) டாக்டர்.. கரண்ட் இல்லாதப்போ தையல் போடாதீங்கன்னு
சொன்னா கேட்க மாட்டீங்களா..? ரெண்டு மூனு கத்தரிக்கோல்
குறையுது பாருங்க..

6) ஏன் சிஸ்டர்.. மீட்டர் இவ்வளவு எகிறுதே..!
காலையில செத்துப்போனாரே ஒரு பேஷண்ட்
அவருக்கும் இப்படித்தானே..?

7) என்ன டாக்டர்..? ஆபரேஷன் ஓவர்ங்கறீங்க.. ட்ரேயில
எடுத்து வச்ச கல்லீரல் அப்படியே இருக்கே.. கவனிக்கலையா..?

8) ஏன் டாக்டர்.. நம்ம விஐபி பேஷண்ட்க்கு தேவைப்படற
அதே ரேர் குரூப் கிட்னி இவருக்கும் இருக்கு கவனிச்சீங்களா..?

ராஜா
25-04-2007, 04:40 PM
மூன்று மருத்துவர்கள்
சொர்க்கம் போனார்கள்.. வாயில் தேவதை வழிமறித்து ...

நீங்கள் செய்த சேவைகளைச் சொல்லிவிட்டு உள்ளே செல்லுங்கள்..

டாக் 1 ; நான் குழந்தைகள் மருத்துவன்.. ஏராளமான
குழந்தைகளை காப்பாற்றியிருக்கிறேன்..

தேவதை ; சரி.. உள்ளே செல்லுங்கள்..

டாக் 2 ; நான் பொது மருத்துவன்.. அனேகம் பேரை
குணமடைய வைத்திருக்கிறேன்..

தே ; சரி.. நீங்களும் உள்ளே போகலாம்..

டாக் 3 ; நான் தர்ம ஆஸ்பத்திரி டாக்டர்..!

தே ; ஓ ..அப்படியா..? சரி. ரெண்டு நாள் மட்டும் இங்க
இருங்க.. அப்புறம் வெளியே போயிடுங்க..!
_______________________________________

அந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வேலை
நிறுத்தம் துவங்கியது. டாக்டர்கள் 7 அம்ச கோரிக்கைப்
பட்டியலைக் கொடுத்து நிறைவேற்றக் கோரினார்கள்..

ஆஸ்பத்திரி நிர்வாகிகள் ஒரு பதில் அறிக்கை கொடுத்தார்கள்,


"ஒரு மருந்துக் கடைக்காரரைக் கூப்பிட்டு, டாக்டர்கள் எழுதிக்
கொடுத்த கோரிக்கைகள் என்ன என்று புரிந்த பிறகு
முடிவு எடுப்போம்."
________________________________

அந்தப் பெண் டாக்டரிடம் சொன்னாள்,
"டாக்டர், என் கணவர் தன்னை ஒரு டிஷ் ஆண்டனாவாகக் கற்பனை செய்து கொள்கிறார்."

டாக்டர்: கவலைப்படாதீர்கள்- சரி செய்து விடலாம்.

பெண்மணி: வேண்டாம் ...டாக்டர், அவரை சன் டீவி தெரியற
ஆங்கிள்ல திரும்பி இருக்கும்படி செய்தால் போதும்.
________________________________________

மனோஜ்
25-04-2007, 04:46 PM
இதை எல்லம் அவரு கேட்டா ஆபரேஷன் வேன்டாம் நானே சாவுரேனு செத்துருவாரு
எப்படி அண்ணா இப்படி யோசிக்கிறிங்க சூப்பர்

poo
26-04-2007, 04:43 AM
ஆப்பரேஷன் தியேட்டர் வசனங்கள் அருமை...நாட்டுநடப்பை நல்லாவே சொல்லியிருக்கீங்க ராஜா..

aren
26-04-2007, 05:07 AM
நல்லகாலம் ஆபரேஷன் செய்யும்பொழுது மயக்கமருந்து கொடுத்து விடுகிறார்கள். இல்லையென்றால் இந்த மாதிரி வார்த்தைக்களை கேட்டு அனைவரும் தானாகவே செத்துவிடுவார்கள்.

நல்ல சிரிப்பு.

தொடருங்கள் ராஜா அவர்களே.

நன்றி வணக்கம்
ஆரென்

ராஜா
26-04-2007, 06:04 PM
நன்றி நண்பர்களே...!

ராஜா
26-04-2007, 06:06 PM
அமெரிக்க அதிபர் புஷ் ஒருநாள் காலையில் மெல்லோட்டம் [ஜாகிங்] சென்ற போது ஒரு சாக்கடைக் குழிக்குள் விழுந்து உயிருக்குப் போராடினார்.. அங்கு விளையாடிக்கொண்டிருந்த 3 சிறுவர்கள் புஷ்சைக் காப்பாற்றவே, மகிழ்ந்த அதிபர், சிறுவர்கள் வேண்டும் பரிசைத் தருவதாக உறுதியளித்தார்..

முதல் சிறுவன் ; எனக்கு ஒரு ஃபெராரி கார் வேண்டும்..

புஷ் ; நாளைக் காலை உன் வீட்டு வாசலில் அது நிற்கும்..

2ம் சிறுவன் ; எனக்கு ஒரு நல்ல வீடு வேண்டும்..

புஷ் ; அப்படியே கிடைக்கும்..

3ம் சிறுவன் ; எனக்கு ஒரு சக்கர நாற்காலி வேண்டும்..

புஷ் ; ஆனால் மகனே.. உன் கால்கள் நன்றாகத்தானே உள்ளன..?

3ம் சிறுவன் ; ஆம்.. ஆனால் உங்களைக் காப்பாற்றியது என் தந்தைக்குத் தெரிந்தால் பிறகு எனக்கு சக்கர நாற்காலி தேவைப்படும்..!

ராஜா
26-04-2007, 06:08 PM
கொஞ்சம் பழசுதான்.. ஆனா இன்னொருமுறை படிக்க உகந்தது...

லாலு பிரசாத் யாதவ் தன் மகனுக்கு திருமணம் செய்விக்க விரும்பினார்..

முதலில் மகனிடம் பேசினார்..

லாலு ; மகனே உனக்கு ஒரு பெண் பார்த்திருக்கேன்..

மகன் ; ஆனா நான் ஒரு பொண்ணை லவ் பண்றேனே..!

லாலு ; அந்தப் பொண்ணு நான் பார்த்திருக்கற அம்பானி பொண்ணை விட பணக்காரியா..?

மகன் ; அப்படியா..? உங்க வார்த்தையை நான் என்னைக்குப்பா மீறியிருக்கேன்.. உங்க இஷ்டப்படி செய்யுங்க..!

அடுத்து லாலு முகேஷ் அம்பானியை அணுகினார்..

லாலு ; உங்க பொண்ணுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்..

அம்பானி ; ஆனா என் பொண்ணுக்கு இப்போ கல்யாணம் பண்ற யோசனை இல்லையே..

லாலு ; உங்க இஷ்டம்..! ஆனா மாப்பிள்ளை உலக வங்கியின் துணைத் தலைவர். அதான் நம்ம பொண்ணுக்கு பார்க்கலாம்ன்னு நெனைச்சேன்..

அம்பானி ; அப்படியா..? இதை முதல்லேயே சொல்லக்கூடாதா..? பேஷா கல்யாணம் பண்ணிக்கலாம்..

கடைசியாக உலக வங்கித் தலைவரைச் சந்தித்தார்...

லாலு ; ஒரு திறமையான இளைஞரை உங்களுக்கு அறிமுகப் படுத்தப்போறேன்.. நீங்க அவரை துணைத் தலைவரா வச்சுக்கலாம்..

உ.வ்.தலை ; ஆனால் ஏற்கனவே என்கிட்ட நிறைய ஆட்கள் இருக்காங்களே..

லாலு ; ஒ.. சாரி.. உங்களை வற்புறுத்த மாட்டேன்.. ஆனால் நான் சொல்லும் இளைஞர் அம்பானியின் மருமகன்.. ! பரவாயில்லை .. வருகிறேன்..

உ.வ.தலை ; இருங்கள்.. அம்பானி மருமகன் என்று முன்பே சொல்லியிருந்தால் என் பதவியையே தந்திருப்பேனே.. உடனடியாக அந்த இளைஞரை பொறுப்பேற்கச் சொல்லுங்கள்..

இப்படியாக ஒரு டீல் முடிவடைந்தது...!

மனோஜ்
26-04-2007, 06:21 PM
கிருமினல் மூலதான் :icon_wacko: :medium-smiley-088:

அன்புரசிகன்
26-04-2007, 07:27 PM
எப்படித்தான் முடியுதோ?:icon_hmm: :whistling:

ராஜா
27-04-2007, 06:05 PM
மாசியும் சுசியும் நண்பர்கள்.. ஒரே அலுவலகத்தில் பணி புரிபவர்கள்..
மாசி வருஷக்கணக்காக காலுறையைத் துவைக்காமல் போட்டுக் கொள்ளும் வழக்கமுள்ளவர். இதனால் தன்னைச் சுற்றி நிறைந்த நாற்ற அழுத்த மண்டலத்தை உருவாக்கி வைத்திருப்பவர். மறுநாள் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. சுசி மிகவும் வற்புறுத்தி வேறு புதிய காலுறை அணிந்து வரும்படி மாசியைக் கேட்டுக் கொண்டார்.. மாசியும் இசைந்தார்.

மறுநாள் விருந்தின் போது மாசி வரும்போது அதே நாற்றம். சிறப்பு விருந்தினருக்கு மயக்கமே வந்துவிட்டது. மாசியை தனியே இழுத்துப் போய் சுசி கேட்டார்..

"உனக்கு என்ன சொன்னாலும் அறிவே வராதா..? மீண்டும் அதே காலுறையை அணிந்து வந்திருக்கிறாயே மாசி..?

"இல்லவே இல்லை.. புது காலுறைகள் அணிந்திருக்கிறேன்.. நீ இப்படி சந்தேகப்படுவாய் என்று எனக்குத் தெரியும்.. அதனால்தான் பழைய காலுறையை கையோடு கொண்டு வந்திருக்கிறேன்" என்ற் மாசி, பையிலிருந்து எடுத்து சுசியின் முகத்துக்கெதிராக நீட்ட.. சுசி ஃபிளாட்..!
________________________________________

மா.சி.;: இந்த பீர்ல நிறம் இல்லை.
சுசி ;;: இந்த பீர்ல சுவை இல்லை
மணி சிங் ;: இந்த பீர்ல திடம் இல்லை

ஒயின்ஸ்ஷாப் காரர் : அட! அறிவாளிகளா..! அது பீரே இல்ல.. சோடா..!
_________________

மாசியின் ஜவுளி கடையில் திருடு போய் விட்டது.. போலீஸ் வந்து விசாரித்தது..

போலீஸ் ; திருட்டுப் போன பொருள் மதிப்பு எவ்வளவு இருக்கும்.. ?

மாசி ; 10 லட்சம் ரூபாய்.. நல்ல வேளை.. அடுத்த வாரம் திருட்டுப் போகாம இருந்திச்சே.. நஷ்டம் இன்னும் ஜாஸ்தியா இருந்திருக்கும்..

போலீஸ்..; ஏன்..? இன்னும் அதிகமா சரக்கு வரப்போகுதா..?

மாசி ; இல்லே.. இப்போ 50% தள்ளுபடியில வித்துகிட்டு இருக்கோம்.. அடுத்த வாரம் தள்ளுபடி முடியுது..!
_________________

மாசி வீட்டில் நாய் வளர்த்தார்..வாசலில் "எச்சரிக்கை.. நாய் ஜாக்கிரதை..." என்று போர்டு வைத்திருந்தார். ஆனால் நாயோ ஒரு நோஞ்சான்.. அதைப் பார்த்த சுசி கேட்டார்..

ஏன் மாசி..? உன் நாய் அப்படி ஒண்ணும் பயங்கரமா இல்லையே.. பின்ன ஏன் இப்படி ஒரு அறிவிப்பு..?

அது நாய்கிட்டே இருந்து விருந்தாளிகளைக் காப்பாத்த இல்ல.. இந்த சோனி நாய் கிடக்கற து தெரியாம வர்றவங்க மிதிச்சுட்டுப் போயிடறாங்க.. அவங்ககிட்ட இருந்து நாயைக் காப்பாத்த தான்..!
_________________

ஓவியா
28-04-2007, 12:34 AM
அண்ணா ஒரு அலோசனை, இந்த ஜோக்கை அகற்றிடலாமே!!
இது உலக்த்தில் ஒரு கருப்பு நாள். கோடான கோடி மக்களின் கண்ணீர் விட்ட நாள். இது வேண்டாமே.....பிலிஸ் என் செல்ல அண்ணா இல்ல பிலிஸ்.

செப்டம்பர் 11 அன்று காலை முஷரஃப் அமெரிக்க அதிபர் புஷ்சுக்கு போன் செய்தார்..

நன்றி அண்ணா.

ராஜா
28-04-2007, 06:46 AM
இப்போ சந்தோஷம் தானே..?

ராஜா
28-04-2007, 01:43 PM
வணக்கம் நண்பர்களே..!

இன்று இந்த "ராஜாவின் ரவுசுப் பக்கம்" திரி 5000 பதிவுகளைத் தாண்டி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணமான...


அறிஞர், ஓவியா, கோபி, சிவாஜி, சுட்டிபையன், செல்விபிரகாஷ், சேரன்கயல், ஜீவா, ஜே.எம், தங்க கம்பி, தமிழன், திராவிடன், நண்பன், நரன், பங்காளிமகன், பாரதி, பிரசாத், பிரித்தா, பென்ஸ், மதிவாணன், மதுரகன், மனோஜ், மொக்கச்சாமி, ராஜா, விவேக்ராஜா, வேணு, ஷீ-நிசி, 20012001, aam537, agnii, anpurasihan, aren, aromabest, arsvasan16, arun, asai78, asho, balasubramanian, bangman, banupriya, barakathnisha, Basheera, battom4484, bronzen, cchandru007, cindrella, coolgoose, crisho, csk, demi, djkrushanth, drjperumal, dupukku, faizer80, farhan, gayathri.jagannathan, gnana61, Gobalan, gragavan, grponly, Isaiprabhu, jaikumar123, Jasithas, java, javith, Joe, jpl, jptheepan, kaaman, kalairajan, karikaalan, karthik.p.mca, kathalan, kbogoss, Knowit007, kr_srinivasan1977, ksmani21, Kugathas, kunathika, lebaster6528, lenram80, liaquatali, likesunrisebaby, lolluvathiyar, maja, malan, Manimegalai, manosham, march, Mathu, mayooresan, meenakumar, mehajaafar, mgandhi, moorthy-kv, mravikumaar, mrefai, mukilan, murthykmd, Myboy, namsec, Narathar, NIDHI, nisha, omnlog03, ooveyan, paarthiban, paramsothy, Parthipan, pgk53, pksrath, ponchandar, ponrajesh, poo, pradeepkt, puthuvaithamizan, ragavanx, raj6272, rajani_shamx, rajasi13, Rajeshkumar, RajeshP, ralah, Ramki, rangan, rathi_lux, reash, rekha, rithik, rtmz, saba1979, safari, samkum, santhoshvenu, sarcharan, saritha_1147, SathishVijayaraghavan, scartone, sham, shanthi5551, shivasevagan, sivapiraba, skumar16975, sla026, slgirl, srikaninanda, sriram, srjah, staker789, stselvan, Studds, sujeendran, sunpack, sunr, superhero, suraj, sureshkumaar1611, sureshkumarcdm, sutha, svmurali1983, s_mohanraju, tamil81, tamilmars, tamilyouandme, thamizhmahan, thilak, thiruppam, unas, uthaya, varsha, vijayan_t, vimalms4, virumaandi, visakagn, vista, vjkumar_72@yahoo.com

ஆகிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..நன்றி...நன்றி..!!!

ஓவியா
28-04-2007, 02:09 PM
இப்போ சந்தோஷம் தானே..?

அதே அதே. :medium-smiley-065: :medium-smiley-065:

கிழக்கு சீமையிலே பார்ட் 2...ஹீ ஹி ஹி



.......................................அண்ணா எப்படி 5000 பதிவா.................

கண்டு பிடிசுட்டேன்

Rating Thread / Thread Starter Last Post Replies
Sticky: ராஜாவின் ரவுசு பக்கம்.. ( 1 2 3 ... Last Page)
ராஜா

Today 02:43 PM
by ராஜா 648


Views : 5,009



..........................................................................................................................

நன்றி அண்ணா.

சாதனையாளருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....

ஷீ-நிசி
28-04-2007, 03:34 PM
வாழ்த்துக்கள் ராஜா சார்.. 50000 பார்வைகள் விரைவில் வரும்...

ராஜா
28-04-2007, 05:51 PM
ஒருவர் :என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...?

மற்றவர்:நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்


டேய் தம்பி! இந்த லெட்டரை உங்க அக்காகிட்டே குடுத்திடுறியா?"

"அதுக்கு வேற ஆளைப்பாரு!"

"ஏண்டா, உங்க அக்கா நல்லாதானே இருக்கா!"


"இந்த சாமியாருக்கு ஏன் `கூலிங்கானந்தான்னு பேர் வந்திச்சி?"

"ஒண்ணரைக் கண்ணை மறைக்க கூலிங்கிளாஸ் போட்டாரு... அன்னையிலிருந்து இந்தப் பேர் வந்திடுச்சி!"



"என்ன அந்த ஆள் கோயில்ல பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி, யோகேஸ்வரி இவங்க கிட்டேயிருந்து என்னை காப்பாத்து கடவுளேன்னு கும்பிடறான்?"

"அதெல்லாம் இவனோட மனைவிங்க..!
_________________

ராஜா
28-04-2007, 05:52 PM
மாசி ; விக்கலா வந்துகிட்டு இருக்கு சுசி..

சுசி ; வந்துட்டுதா..? உக்காரச் சொல்லேன்...

மாசி ; நிக்கவே மாட்டேங்குது.. எங்க உக்காரச் சொல்லுறது..?



மாசி ; சுசி.. உடம்பு சரியில்லேன்னு சொன்னியே.. நான் சொன்ன டாக்டரைப் போய் பாத்தியா..? நான் அனுப்பினேன்னு சொன்னியா..? என்ன சொன்னார்..?

சுசி ; முதல்ல இந்த ஆள்கிட்ட காசை வாங்கிகிட்டு உள்ள அனுப்புங்கன்னு நர்ஸ்கிட்ட சொன்னார் மாசி..!
_________________

ஓவியா
28-04-2007, 07:46 PM
"என்ன அந்த ஆள் கோயில்ல பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி, யோகேஸ்வரி இவங்க கிட்டேயிருந்து என்னை காப்பாத்து கடவுளேன்னு கும்பிடறான்?"

"அதெல்லாம் இவனோட மனைவிங்க..!


ஹி ஹி ஹி ஹி

அண்ணா, இது அப்படியே எங்க முறைமாமா செய்யும் விசயம். எங்க குடும்பாதில் அதிகமாக - - - லட்சுமி என்று பெயர் சூட்டிய அத்தை பொண்ணுங்க கேங் இருக்கும்.


நன்றி.

அன்புரசிகன்
28-04-2007, 08:01 PM
மாசி ; சுசி.. உடம்பு சரியில்லேன்னு சொன்னியே.. நான் சொன்ன டாக்டரைப் போய் பாத்தியா..? நான் அனுப்பினேன்னு சொன்னியா..? என்ன சொன்னார்..?
சுசி ; முதல்ல இந்த ஆள்கிட்ட காசை வாங்கிகிட்டு உள்ள அனுப்புங்கன்னு நர்ஸ்கிட்ட சொன்னார் மாசி..!


ரொம்ப பெயர் போன ஆளுதான் மாசி. உள்ளம் கேட்குமே இன்னும் இன்னும் இன்னும் என்று.
-இப்படிக்கு மாப்ளேயின் நகைச்சுவையை எதிர்பார்க்கும்,

ராஜா
29-04-2007, 04:42 PM
மாசி ஓட்டல் வச்சிருந்தாரு.. அவரே சப்ளையரும் கூட.. அப்பாவி சுசி அங்க டிபன் சாப்பிட தெரியாத்தனமா வந்து மாட்டிக்கிட்டாரு..

சுசி ; உங்க கடையில மட்டன் பிரியாணில நாய்க்கறி போடறீங்களாமே அப்படியா..?

மாசி ; நாய்க்கறிக்கும் ஆட்டுக்கறிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியுமா..?

சுசி ; தெரியாதே...

மாசி ; அப்ப சரி.. நாங்க நாய்க்கறியெல்லாம் சேர்க்கமாட்டோம்..!

சுசி ; என்னய்யா.. இங்க பாரு.. ரசத்துல ஈ செத்துக் கிடக்கு...

மாசி ; ஆமாம் சார்.. அதுகளுக்கு நீச்சல் அடிக்கத் தெரியாது...

சுசி ; இங்க பாருய்யா.. பாயசத்துல எறும்பு கிடக்குது..

மாசி ; கவலைப்படாதீங்க.. முக்கி முக்கி குடிச்சாலும் கால் ஸ்பூன் தான் குடிச்சிருக்கும்..

சுசி ; சரி அது போகட்டும்.. சாம்பார்ல கரப்பான் பூச்சி கிடக்குதே.. இதுக்கு என்ன அர்த்தம்..?

மாசி ; தெரியலையே.. மேல ஒரு ஜோசியர் தங்கியிருக்கார்.. அவர்கிட்ட வேண்ணா கேட்டுப் பாருங்க..

சுசி ; டீ கிளாஸ்ல பூச்சி மிதக்குது பாரு.. இதுக்கு என்ன பண்ணப்போறே..?

மாசி ; என்ன பண்ண முடியும்..? தீயணைப்பு படைக்கா சொல்லியனுப்ப முடியும்.. உயிரைக் காப்பாத்த சொல்லி.. ! தூக்கி போட்டுட்டு குடிங்க் சார்..

சுசி சாப்பிட்டு முடித்து காசு கொடுக்காமல் நடையைக் கட்ட துரத்தி வந்த மாசி..

பில்லுக்கு காசு குடுக்காமப் போறியே.. என்ன விஷயம்..?

சுசி ; பில்லை வீட்டுக்கு அழைச்சுகிட்டு போறேன்.. அங்க வச்சு அதுகிட்ட காசு கொடுக்கறேன்.. கவலைப்படாதே..!

ராஜா
29-04-2007, 04:42 PM
சுசி ; என்னா மாசி.. உன் செல்லுக்கு எப்போ கால் போட்டாலும் ஸ்விட்ச்டு ஆஃப் ன்னு சொல்லுதே.. ஆன் பணணவே மாட்டியா..?

மாசி ; ஐயோ...ஐயோ.. அது என்னோட காலர் ட்யூன்.. !

அன்புரசிகன்
29-04-2007, 05:23 PM
பில் கொடுக்காம வியாதிய வாங்கீட்டு பேறாரு சுசி... :D
இப்படி எல்லாம் caller tune வந்தாச்சா???

ஓவியன்
30-04-2007, 04:25 AM
சுசி ; என்னா மாசி.. உன் செல்லுக்கு எப்போ கால் போட்டாலும் ஸ்விட்ச்டு ஆஃப் ன்னு சொல்லுதே.. ஆன் பணணவே மாட்டியா..?

மாசி ; ஐயோ...ஐயோ.. அது என்னோட காலர் ட்யூன்.. !

அடடா!
இப்படித் தான் நம்ம நண்பர் ஒருத்தரும் என்னுடைய அலை பேசிக்கு முயற்சி பண்ணி(நான் ஓவ்(off) பண்ணி வைத்திருந்தேன்) பின்னர் கோவத்துடன் நான் உனக்கு கோல் பண்ணும் பொதெல்லாம் யாரோ ஒரு பெண் வந்து ஆங்கிலத்தில் இந்த அலைபேசி ஓவ் ஆக உள்ளது எண்டு பொய் சொல்லுறாடா? - ஓவ் எண்டால் எப்படி அவ பேசுவா?
யாரடா அவா? எண்டு சண்டையே போட்டுட்டார்.

aren
30-04-2007, 05:16 AM
சுசி ; என்னா மாசி.. உன் செல்லுக்கு எப்போ கால் போட்டாலும் ஸ்விட்ச்டு ஆஃப் ன்னு சொல்லுதே.. ஆன் பணணவே மாட்டியா..?

மாசி ; ஐயோ...ஐயோ.. அது என்னோட காலர் ட்யூன்.. !

இது என்ன கொடுமையாக உள்ளதே. இப்படியுமா காலர் ட்யூன் வைப்பார்கள்.

aren
30-04-2007, 05:18 AM
சுசி மாதிரி எத்தனியோ பேர் தினமும் ஓட்டலில் சாப்பிடபோய் மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால் கடைசியில் சுசியின் அடி சரியான நெத்தியடிதான். தொடருங்கள்.

அன்புரசிகன்
30-04-2007, 03:50 PM
அடடா!
இப்படித் தான் நம்ம நண்பர் ஒருத்தரும் என்னுடைய அலை பேசிக்கு முயற்சி பண்ணி(நான் ஓவ்(off) பண்ணி வைத்திருந்தேன்) பின்னர் கோவத்துடன் நான் உனக்கு கோல் பண்ணும் பொதெல்லாம் யாரோ ஒரு பெண் வந்து ஆங்கிலத்தில் இந்த அலைபேசி ஓவ் ஆக உள்ளது எண்டு பொய் சொல்லுறாடா? - ஓவ் எண்டால் எப்படி அவ பேசுவா?
யாரடா அவா? எண்டு சண்டையே போட்டுட்டார்.

இப்படிப்பட்ட கிறுக்கர்கள் உங்கள் நண்பர்களா..? :1:

பென்ஸ்
30-04-2007, 03:54 PM
இப்படிப்பட்ட கிறுக்கர்கள் உங்கள் நண்பர்களா..? :1:
ஆமா .. ஆமா... நாமெல்லாம் அவரு பிரண்டுதானே...:music-smiley-012: :music-smiley-012: :music-smiley-012:

அன்புரசிகன்
30-04-2007, 04:04 PM
ஆமா .. ஆமா... நாமெல்லாம் அவரு பிரண்டுதானே...:music-smiley-012: :music-smiley-012: :music-smiley-012:

அது என்ன நாம... அதில் நான் அடக்கமில்லை. :sport-smiley-018: வேண்டுமென்றால் நீங்கள் இருந்துவிட்டுப்போங்கள். :icon_dance:

ராஜா
30-04-2007, 05:30 PM
குட்டி சுசியும் குட்டி மாசியும்....

ஜூனியர் சுசி ; எங்கப்பா தீப்பெட்டி வாங்கினால் குச்சியை
எண்ணிப் பார்த்துதான் வாங்குவார்...

ஜூனியர் மாசி ; இது என்ன பிர்மாதம்..? எங்கப்பா
தீப்பெட்டி வாங்கினா எல்லா குச்சியும் எரியுதான்னு
கொளுத்திப் பார்த்துதான் வாங்குவார்..!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜூனியர் சுசி ; என்னாது..? ஜோதியை எடுத்துகிட்டு ஓடின
உங்க அப்பாவை கைது பண்ணிட்டாங்களா.. ஏன்..?

ஜூனியர் மாசி ; ஜோதிங்கறது எங்க பக்கத்து வீட்டு அக்கா..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சுசி பெண் பார்க்க போனார்.. மாப்பிள்ளைத் தோழனாக
மாசி.. சுசி பெண்ணிடம் ஏதோ கேட்க, வெட்கத்துடன்
முகத்தை மூடிக்கொண்டு,
"சீ..! அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்..!"
என்று சொல்லிவிட்டு அது உள்ளே ஓடி விட்டது..
மாசிக்கு சுசி கேட்டது காதில் விழாததால் விசாரித்தார்..

என்ன சுசி கேட்டே..?

என்னை அடிக்க மாட்டியேன்னு கேட்டேன் மாசி..!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மாசியும் சுசியும் கோவிலுக்கு போனார்கள்.. சுசி துள்ளித்
துள்ளிக் குதித்தவாறு வந்தார்..

மாசி ; ஏன் சுசி துள்ளித் துள்ளி வர்றே..?

சுசி ; ஏன்னா நான் ஒரு பக்தி"மான்"..!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சுசி-மாசி ஊரில் சினிமா ஷூட்டிங் எடுத்தார்கள்.. ஒரே
காட்சியைத் திரும்பத் திரும்ப பலமுறை எடுத்ததைப்
பார்த்த சுசி வெறுத்துப் போய் கேட்டார்...

ஏன் மாசி இத்தனை தடவை எடுக்கறானுக..?

எத்தனை தியேட்டரில் ரிலீஸ் பண்ணனும்.. அதுக்கு தான்
சுசி இத்தனை தடவை எடுக்கறாங்க..!

அன்புரசிகன்
30-04-2007, 05:37 PM
புருஷனை போட்டுவங்குவதிலும் வெட்க்கமா..?
அது சரி அப்போ சக்திமான் எப்படி வருருவார்...
என்னதான் இருந்தாலும் மாசியின் குசும்பு ரொம்ப மோசம். இந்தியா ழுவதும் படம் வைக்கிறதென்றால்,,??? :icon_hmm:

மன்மதன்
30-04-2007, 06:02 PM
குட்டி சுசியும் மாசியும் ரொம்ப கெட்டி....!

pradeepkt
01-05-2007, 06:20 AM
கலக்கிப் போட்டீங்க ராஜா...
சும்மா பட்டையக் கெளப்புங்கோவ்...

மயூ
01-05-2007, 06:23 AM
அட கலியானத்துக்கு அப்புறம் அடியா??? கடவுளே!!!!!!!!!!!!!!!

சுட்டிபையன்
01-05-2007, 06:27 AM
அட கலியானத்துக்கு அப்புறம் அடியா??? கடவுளே!!!!!!!!!!!!!!!

ஆம்பிளைகளுக்கு அதுதானே தலையெழுத்து:huh:

ராஜா
01-05-2007, 04:33 PM
மாசி, சுசி வீட்டுக்கு வந்தார்.. சுசி அப்போ வீட்டில் இல்ல. குட்டி சுசி விளையாடிக்கிட்டு இருந்தார். மாசி அவரைக் கூப்பிட்டு...

பெரியவனா ஆனதும் என்ன ஆகப் போறே..குட்டி..?

நான் படிப்பேன்...அப்பா போல ஒரு குட்டி பெத்துப்பேன்.. வேலைக்கு போவேன்.. கல்யாணம் பண்ணிக்குவேன்..மாமா..!

நீயாவது முறைப்படி எல்லாத்தையும் செய்வேன்னு நினைச்சேன்.. ஹ்ம்ம்ம்ம்.. !

ராஜா
01-05-2007, 04:34 PM
சுசியும் மாசியும் பார்ல மூக்கு முட்ட குடிச்சுட்டு கார்ல திரும்பிகிட்டு இருந்தாங்க.. கார் தாறுமாறா ரோட்டை அளந்துகிட்டு போச்சு. திடீர்ன்னு மாசி கத்தினார்..

சுசி.. மரம்.. மரத்துகிட்ட வண்டி போகுது பாரு..

கொஞ்ச நேரத்துல மறுபடியும் மாசி கத்தினார்.. அய்யோ.. மோதப் போகுது.. சுசீஈஈஈஈஈ....!

டமால்...!

மறுநாள், மருத்துவமனையில் ஊஞ்சலாடும் காலுடன் மாசி சோகமாக முனகினார்..

அவ்வளவு எச்சரிக்கை பண்ணியும் கேட்க மாட்டேன்னுட்டியே சுசி..

பக்கத்து படுக்கையில் இருந்த சுசி, பேண்டேஜுக்குள்ளிருந்து உருக்கமான குரலில் தழுதழுத்தார்...

காரை நீ ஓட்டும்போது நான் என்ன பண்ண முடியும் மாசி..?

ராஜா
01-05-2007, 04:35 PM
சுசியோட தாத்தாவுக்கு 90 வயசு.. ஒருநாள் சுசிக்கு அவசரமா வெளியூர் போகவேண்டிய வேலை வந்துடிச்சி. ஆகவே தன் மகன் ஜூனியர் சுசியைக் கூப்பிட்டு "இன்னிக்கு மட்டும் தாத்தாவை பத்திரமா பார்த்துக்கோடா கண்ணா..!" என்று சொல்லிச் சென்றார்.

ஜூ.சுசி தன் தோழன் பக்கத்து வீட்டு ஜூ.மாசியுடன் இணைந்து தாத்தாவைக் குளிப்பாட்டி, அழகா ட்ரெஸ் பண்ணிவிட்டு வாசல் தோட்டத்துல ஒரு சேர்ல உக்கார வச்சுடடு, கிரிக்கெட் விளையாடினார். தாத்தாவும் கொள்ளுப் பேரன்கள் ஆட்டத்தை ரசித்தார்.

திடீர்ன்னு தாத்தா சேர்லேருந்து ஒரு பக்கமா சரிஞ்சார்.. ரெண்டு ஜூ.வும் உடனே ஓடிவந்து தாத்தாவை சரியா உக்கார வச்சுட்டுப் போய் விளையாடினார்கள்.

மீண்டும் தாத்தா ஒரு பக்கமா சரிவதைக் கவனித்த ரெண்டு வாண்டுகளும் வேகமாக வந்து மறுபடியும் சரி பண்ணிட்டு போனாங்க.. இப்படி பலமுறை நடந்துச்சு..

மாலை சுசி [ரெகுலர்] ஊரில் இருந்து வந்துட்டார்.. தாத்தாவைக் கேட்டார்..

பேரனுங்க நல்லா கவனிச்சுகிட்டானுகளா..?

ஓ. அதுக்கென்ன.. ஆனா ரொம்ப நேரமா வயிறு உப்பிகிட்டு இருக்கு.. ரெண்டு காத்து பிரிஞ்சா நல்லா இருக்கும்.. இந்த ரெண்டு குட்டி பிசாசும் அதுக்கு மட்டும் விடவே மாட்டேங்குதுங்க..!

பென்ஸ்
01-05-2007, 05:52 PM
மாசி, சுசி வீட்டுக்கு வந்தார்.. சுசி அப்போ வீட்டில் இல்ல. குட்டி சுசி விளையாடிக்கிட்டு இருந்தார். மாசி அவரைக் கூப்பிட்டு...
பெரியவனா ஆனதும் என்ன ஆகப் போறே..குட்டி..?
நான் படிப்பேன்...அப்பா போல ஒரு குட்டி பெத்துப்பேன்.. வேலைக்கு போவேன்.. கல்யாணம் பண்ணிக்குவேன்..மாமா..!
நீயாவது முறைப்படி எல்லாத்தையும் செய்வேன்னு நினைச்சேன்.. ஹ்ம்ம்ம்ம்.. !
என்னமோ போங்க இது ரொம்ப பிடிச்சிருக்கு...

ஓவியா
01-05-2007, 07:27 PM
ஹி ஹி ஹி

கலக்கறீக அண்ணா. பலே

அன்புரசிகன்
01-05-2007, 07:35 PM
காரை நீ ஓட்டும்போது நான் என்ன பண்ண முடியும் மாசி..?

புரைக்கடித்து இருமத்தொடங்கியதுது. இருமல் இன்னமும் நிற்கவில்லை.
ரொம்ப நன்றி மாப்ளே.

ராஜா
02-05-2007, 07:20 AM
ரொம்ப நன்றி மாமனாரே..!

உங்க ஆசி இருக்கும்போது பின்னி பெடலெடுத்துட மாட்டேனா..?

ஓவியன்
02-05-2007, 08:15 AM
நீயாவது முறைப்படி எல்லாத்தையும் செய்வேன்னு நினைச்சேன்.. ஹ்ம்ம்ம்ம்.. !

அதெப்படி நீங்கள் அப்படி நினைக்கலாம்!

அப்பாவுக்குத் தப்பாம குட்டி பிறந்திருக்கு தானே.:icon_wink1:

மனோஜ்
02-05-2007, 08:20 AM
ராஜா அண்ணா உங்கள் சுசி மாசி அருமை

mravikumaar
02-05-2007, 09:05 AM
நன்றாக இருந்தது

அன்புடன்
ரவி

aren
02-05-2007, 09:38 AM
காரை நீ ஓட்டும்போது நான் என்ன பண்ண முடியும் மாசி..?

அது சரி. தான் தப்புபண்ணிவிட்டு சுசியை எப்படி???

ராஜா
02-05-2007, 04:52 PM
இத்தனை நாளா உங்களை சிரிக்க வச்சுகிட்டே இருந்தேன்..இன்னிக்கு ஒருநாள் மட்டும் சிந்திக்க வைக்கிறேனே...
[மாம்ஸ்; இத்தனை நாளா நாங்க சிரிச்சோம்ன்னு நீங்க எப்படி நம்பலாம்..?இதெல்லாம் ஒரு ஜோக்கான்னு சிந்திச்சுகிட்டுதான் இருந்தோம்..]


ஓகேவா..?
_________________


கேள்வி எண். 1

ஒரு வித்தியாசமான முட்டை உங்ககிட்ட இருக்கு.. அது லேசுல உடையாது.. ஒரு 36 மாடிக் கட்டிடத்துல எந்த மாடியிலேருந்து அதைப் போட்டா உடையும்ன்னு நீங்க கண்டுபிடிக்கணும்..

அதையும் குறைஞ்ச அளவு முயற்சியிலே கண்டுபிடிக்கணும்.. ஓகேவா..?


எத்தனை முயற்சியிலே உங்களால் கண்டுபிடிக்க முடியும்..? சொல்லுங்க பார்ப்போம்...
_________________

கேள்வி எண். 2.

உங்க கிட்ட வெள்ளை நிற [சீட்டுக்கட்டு] அட்டைகளும், கருப்புநிற அட்டைகளும் இருக்கு..
அவற்றை நான் சொல்லும் நிபந்தனைகளுக்குட்பட்டு வரிசையா அடுக்கி வைக்கணும்..
அதிக பட்சம் எத்தனை அட்டைகள் வரை அடுக்க முடியும்..?

நிபந்தனை 1. இரண்டு வெள்ளை அட்டைகள் [வெ+வெ] அடுத்தடுத்து வைக்கவே கூடாது.

2.ஒரே மாதிரியான அடுக்கும் அமைப்பு மூன்று முறை வரவே கூடாது.. உதாரணமா...
க+க்+க் என்றோ, க+வெ,க+வெ,க+வெ என்றோ,க+வெ+க்,க+வெ+க, க+வெ+க என்றோ வரக் கூடாது.
_________________

கேள்வி எண்.3.

ஒரு பெரிய வட்டம்.. 1ல் இருந்து 1000 வரை எண்கள் எழுதப்பட்டு அதில் ஒவ்வொருவராக 1000 நபர்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கின்றனர். இப்போ நம்பர் 1 கையில ஒரு துப்பாக்கி இருக்கு. அவர் தனக்கு பக்கத்தில இருக்கற நம்பர் 2 ஐ சுட்டுவிட்டு அடுத்தவர் [எண் 3} கையில் துப்பாக்கியைக் கொடுக்கிறார். அவர் 4 ஐ சுட்டுவிட்டு 5 கிட்ட கொடுக்க, அவர் 6 ஐச் சுட்டு 7 வசம் கொடுக்கிறார்.. இவ்வாறு 999 வது நபர் 1000 வது நபரைச் சுட்டுவிட்டு திரும்ப நம்பர் 1 வசம் துப்பாக்கியைக் கொடுக்கிறார்.. அவர் தனக்கு அடுத்து உயிரோடு இருக்கும் 3 ஐச் சுட்டுவிட்டு 5 இடம் கொடுக்க....

இவ்வாறு நிகழ்ந்தால் கடைசியில் உயிரோடு இருப்பவர் யார்..?
_________________

கேள்வி எண்.4.

இது கொஞ்சம் எளிதான கேள்வி..

3 மற்றும் 5 மற்றும் 7 ஆல் வகுபடக்கூடிய ஒரு எண் தேவை...இங்கு எண் என்று குறிப்பிடப்படுவது ஒற்றை இலக்க எண் அல்ல. [குறைந்த பட்ச இலக்கங்களுடன் இருத்தல் வேண்டும்..]

நிபந்தனை இல்லாமலா..?

1. அந்த எண்ணிலும் 3,5,7 என்ற இலக்கங்கள் மட்டுமே இருக்க வேண்டும்..

2. அந்த எண்ணில் [அதாவது ஃபிகர்] அடங்கியிருக்கும் இலக்கங்களைக் கூட்டினாலும் அந்தக் கூட்டுத்தொகை 3,5,7 ஆல் வகுபட வேண்டும்.
_________________

கேள்வி எண் 5.


இரண்டு மட்டையாளர்கள் களத்தில்.. இருவரும் 94 ரன்களில் ... கடைசி 2 பந்துகள் மீதம்.. வெற்றிக்குத் தேவை 7 ரன்கள்..

இரு மட்டையாளர்களும் சதம் அடிக்கும் சாத்தியக்கூறு ஏதேனும் உள்ளதா..?
_________________

ஷீ-நிசி
02-05-2007, 05:13 PM
முதல் பந்து பேட்ஸ்மேனின் பேட்டின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் அதை தவறவிட்டு அது ஹெல்மெட்டில் படுகிறது அதற்கு 5 ரன்,, பேட்ஸ்மேன்கள் ஓடி ஒரு ரன்னை எடுக்கின்றனர்.. மொத்தம் 6 ரன் கள் கிடைத்துவிட்டது அவருக்கும் அணிக்கும்.. ஒரு மட்டையாளர் சதம் அடித்துவிட்டார்.. கடைசி பந்தை சந்திக்கின்ற இன்னொரு மட்டையாளர் சிக்ஸர் அடித்து சதமடிக்கிறார்..அணியும் வெற்றிபெறுகிறது...

சரிதானா ராஜா சார்....

மனோஜ்
02-05-2007, 05:19 PM
1. 3 முறை

2.-

3. 999

4.573

5.நோபலுடன் ஆறு அடித்தால் உண்டு

ராஜா
02-05-2007, 06:05 PM
ஷீ யின் விளக்கம் தவறு.

ராஜா
02-05-2007, 06:10 PM
தம்பி...

நீங்க விளக்கம் கொடுங்க.. அப்புறம் எவை தவறுன்னு நான் சொல்றேன்..

கடைசி கேள்விக்கு நீங்க சொல்லியிருக்கும் விபரம் தவறு.நோ பாலில் சிக்ஸர் அடித்தால் ஆட்டம் முடிந்து விடும் அல்லவா..? பின்னர் அடுத்த மட்டையாளர் சதம் அடிப்பது எவ்வாறு..?

அன்புரசிகன்
02-05-2007, 06:11 PM
இத்தனை நாளா உங்களை சிரிக்க வச்சுகிட்டே இருந்தேன்..இன்னிக்கு ஒருநாள் மட்டும் சிந்திக்க வைக்கிறேனே...
[மாம்ஸ்; இத்தனை நாளா நாங்க சிரிச்சோம்ன்னு நீங்க எப்படி நம்பலாம்..?இதெல்லாம் ஒரு ஜோக்கான்னு சிந்திச்சுகிட்டுதான் இருந்தோம்..]
ஓகேவா..?

டபிள் ஓகே



எத்தனை முயற்சியிலே உங்களால் கண்டுபிடிக்க முடியும்..? சொல்லுங்க பார்ப்போம்...

மொட்டை மாடியையும் சேர்த்தால் 7. இல்லாவிட்டால் 6.
36ம் மடி 27 18 9. பின்னர' ஒவ்வொன்றினதும் அரைவாசி கால் வாசி என முய்சிக்கவேண்டும்

(மொட்டைமாடியிலிருந்து போட்டும் உடையாவிட்டால் என்னசெய்ய??:whistling: )


அதிக பட்சம் எத்தனை அட்டைகள் வரை அடுக்க முடியும்..?

4 (வெ க க வெ)

சரியா என்று சொல்லவும்.

ராஜா
02-05-2007, 07:06 PM
விடை இப்போ சொல்லிட்டா சுவை இருக்காது மாம்ஸ்..!

mania
03-05-2007, 06:59 AM
ராஜா, உன்னுடைய 5 ஆவது கேள்விக்கு ஒரு சாத்தியக்கூறு....
முதல் ஆட்டக்காரர் பந்தை அடித்துவிட்டு மூன்று ஓட்டங்கள் எடுக்கிறார்.அதில் ஒரு ரன் ஷார்ட் ஆகிறது.அதே சமயம் பந்து ஓவர்த்ரோ ஆகி 4 ரன்கள் கிடைக்கிறது. ஆகமொத்தம் 6 ரன்கள் கிடைக்கிறது அவர் சதம் அடிக்கிறார். அதே சமயம் அடுத்த ஆட்டக்காரர்க்கு கடைச்சி பந்தை அடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
அதில் ஒர் சிக்சர் அடிக்கிறார். அவரும் சதம். அணிக்கு 106 ரன்களும் வெற்றியும்....!!!!
சரியா ராஜா.....
அன்புடன்
மணியா....:sport-smiley-018:

mravikumaar
03-05-2007, 07:42 AM
கேள்வி எண்: 4 க்கு விடை

அந்த எண்: 735735735735735735735

7 ஆல் வகுக்க ஈவு: 105105105105105105105

3 ஆல் வகுக்க ஈவு: 245245245245245245245

5 ஆல் வகுக்க ஈவு: 147147147147147147147

அந்த என்ணின் இலக்கங்களின் கூடுதல்: 105

105 ஐ 7 ஆல் வகுக்க ஈவு: 15

105 ஐ 3 ஆல் வகுக்க ஈவு: 35

105 ஐ 5 ஆல் வகுக்க ஈவு : 21

விடை சரியா?

அன்புடன்
ரவி

அன்புரசிகன்
03-05-2007, 12:06 PM
ஒரு பெரிய வட்டம்.. 1ல் இருந்து 1000 வரை எண்கள் எழுதப்பட்டு அதில் ஒவ்வொருவராக 1000 நபர்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கின்றனர். இப்போ நம்பர் 1 கையில ஒரு துப்பாக்கி இருக்கு. அவர் தனக்கு பக்கத்தில இருக்கற நம்பர் 2 ஐ சுட்டுவிட்டு அடுத்தவர் [எண் 3} கையில் துப்பாக்கியைக் கொடுக்கிறார். அவர் 4 ஐ சுட்டுவிட்டு 5 கிட்ட கொடுக்க, அவர் 6 ஐச் சுட்டு 7 வசம் கொடுக்கிறார்.. இவ்வாறு 999 வது நபர் 1000 வது நபரைச் சுட்டுவிட்டு திரும்ப நம்பர் 1 வசம் துப்பாக்கியைக் கொடுக்கிறார்.. அவர் தனக்கு அடுத்து உயிரோடு இருக்கும் 3 ஐச் சுட்டுவிட்டு 5 இடம் கொடுக்க....
இவ்வாறு நிகழ்ந்தால் கடைசியில் உயிரோடு இருப்பவர் யார்..?


977.



இரண்டு மட்டையாளர்கள் களத்தில்.. இருவரும் 94 ரன்களில் ... கடைசி 2 பந்துகள் மீதம்.. வெற்றிக்குத் தேவை 7 ரன்கள்..
இரு மட்டையாளர்களும் சதம் அடிக்கும் சாத்தியக்கூறு ஏதேனும் உள்ளதா..?


பந்தை முதலில் எதிர் கொள்பவர்: பிரதீப் அண்ணா. மறுமுனையில் நிற்பவர் பென்ஸ் அண்ணா.
முதலில் பிரதீப் ஒரு ஓட்டம் எடுக்கிறார். களத்தடுப்பில் இருந்த பரம்ஸ் விக்கட் காப்பாளர் புகழ் இளசுவுக்கு பந்தை எறிய இளசுவால் பந்தை பிடிக்கமுடியாது அது இளசு அவர்கள் கவிட்டு வைத்திருந்த தலைக்கவசத்தில் படவே 5 ஓட்டங்கள் பிரதீப்பிற்கு. (ஓடியது 1+இளசுஅண்ணாவின் தலைக்கவசத்தின் புண்ணியத்தால் 5 ஆகமோத்தம் 100. யாரங்க பாத்துக்கிட்டு நிற்கிறது. கரைச்சு போத்திலுக்குள் வச்சிருக்கிறத கொண்டுபோய் பிரதீப் அண்ணருக்கு குடுங்கோ. இல்லேன்னா விட்டுவைக்கமாட்டார்.)
பின்னர் பென்ஸ் அண்ணா இலகுவாக 6 ஓட்டங்கள் அடிக்கிறார். அவருடைய ரசிகைகள் வரிசையில் நிற்பதை ஒழுங்கு படுத்தும் பொறுப்பு மயூரேசனுக்கு. (ஆட்டோகிராப் வாங்க கியூ)
"ஆனாலும் பென்ஸ் அண்ணருக்கு ஆப்பு வைக்க நினைத்திருந்தால் ஷீநிஷி அண்ணர் கடைசி பந்தை அகலப்பந்தாக போட்டிருந்தால் அவ்வளவு தான்.

என்ன ராஜா அம்பயரே நான் அவுட்டா?"

நகைச்சுவைக்காகவே மன்றத்தில் உள்ளவர்களின் பெயர்களைப்பாவித்தேன். கோபம் ஏதுமிலையே?

ராஜா
03-05-2007, 12:16 PM
ஒரு விடயம்...

களப் பொருட்களின் மேல் பந்து பட்டு தடைபடுமேயான்னால் 5 ரன் கொடுக்கப்படும் என்பது உண்மைதான்.. ஆனால் மட்டையாளர்கள் ஓடி எடுக்கும் ஓட்டங்கள் அதில் சேர்த்து கூடுதல் ஓட்டமாக கணக்கிடப்படாது,.

உருண்டு ஓடும் பந்து எல்லைக்கோட்டை கடக்கும் என்ற நம்பிக்கையில் 4 ஓட்டங்களும் அபராதமாக 1 ஓட்டமும் சேர்த்து 5 ஓட்டங்கள் வழங்கப் படுகின்றன.

துப்பாக்கியால் சுடும் கேள்விக்கும் தங்கள் விடை பொருந்தி வரவில்லை.

அன்புரசிகன்
03-05-2007, 01:49 PM
ஒரு விடயம்...
களப் பொருட்களின் மேல் பந்து பட்டு தடைபடுமேயான்னால் 5 ரன் கொடுக்கப்படும் என்பது உண்மைதான்.. ஆனால் மட்டையாளர்கள் ஓடி எடுக்கும் ஓட்டங்கள் அதில் சேர்த்து கூடுதல் ஓட்டமாக கணக்கிடப்படாது,.
உருண்டு ஓடும் பந்து எல்லைக்கோட்டை கடக்கும் என்ற நம்பிக்கையில் 4 ஓட்டங்களும் அபராதமாக 1 ஓட்டமும் சேர்த்து 5 ஓட்டங்கள் வழங்கப் படுகின்றன.


முதலில் பிரதீப் ஒரு ஓட்டம் எடுக்கிறார் என்பதற்கு பதிலாக முதலில் [B]பிரதீப் ஒரு ஓட்டம் எடுத்து மறுஓட்டத்திற்காக ஓடஆரம்பிக்கிறார் என வந்திருத்தல் வேண்டும்.
ஆனாலும் நீங்கள் கூறுவதை மீள்பரிசீலனை செய்யவும். காரணம் எனது விடையை சரியாக்கவல்ல.
ஒரு துடுப்பாட்டவீரர் 2 ஓட்டங்கள் எடுத்து பின் 3ஆவது ஓட்டத்திற்காக எத்தனித்து அவர் வெளியே வந்து துடுப்பை நிலத்திலிருந்து எடுக்கவே களத்தடுப்பாளரின் மிகைமிஞ்சிய எறியால் (over thro) அது தலைக்கவசத்தில் படவே அவருக்கு 7 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. (2 ஓடிநிறைவு செய்யப்பட்டுவிட்டது +4 ஓட்டம் + 1 அபராத ஓட்டம்)
அவர் (கோட்டிற்குள் நின்றுவிட்டு over thro வின் போது ஓடினால் மட்டுமே அது உதிரியாக கணிக்கப்படும்)

ராஜா
03-05-2007, 02:19 PM
கேள்வி எண். 1

ஒரு வித்தியாசமான முட்டை உங்ககிட்ட இருக்கு.. அது லேசுல உடையாது.. ஒரு 36 மாடிக் கட்டிடத்துல எந்த மாடியிலேருந்து அதைப் போட்டா உடையும்ன்னு நீங்க கண்டுபிடிக்கணும்..

அதையும் குறைஞ்ச அளவு முயற்சியிலே கண்டுபிடிக்கணும்.. ஓகேவா..?


எத்தனை முயற்சியிலே உங்களால் கண்டுபிடிக்க முடியும்..? சொல்லுங்க பார்ப்போம்...


ஒரே ஒரு முட்டை இருக்கறதாலே அதைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு மாடிய்யாதான் போட்டுகிட்டு போகணும்..

முதல் மாடியிலேயே உடைஞ்சு முடிவு கிடைக்கிறதும், 36 ஆவது மாடியிலேருந்து போட்டதுக்கு அப்புறம் உடைஞ்சு உங்களை நாக்குதள்ள வைக்கிறதும் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.[/b]
_________________

ராஜா
03-05-2007, 02:20 PM
கேள்வி எண். 2.

உங்க கிட்ட வெள்ளை நிற [சீட்டுக்கட்டு] அட்டைகளும், கருப்புநிற அட்டைகளும் இருக்கு..
அவற்றை நான் சொல்லும் நிபந்தனைகளுக்குட்பட்டு வரிசையா அடுக்கி வைக்கணும்..
அதிக பட்சம் எத்தனை அட்டைகள் வரை அடுக்க முடியும்..?

நிபந்தனை 1. இரண்டு வெள்ளை அட்டைகள் [வெ+வெ] அடுத்தடுத்து வைக்கவே கூடாது.

2.ஒரே மாதிரியான அடுக்கும் அமைப்பு மூன்று முறை வரவே கூடாது.. உதாரணமா...
க+க்+க் என்றோ, க+வெ,க+வெ,க+வெ என்றோ,க+வெ+க்,க+வெ+க, க+வெ+க என்றோ வரக் கூடாது.

விடை ; கணக்கற்ற அட்டைகள்....

BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW
----------
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW
----------
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BW
**********
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW
----------
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW
----------
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BW
**********
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW
----------
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW
----------
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BBW BW , BBW BW
BBW BBW BW , BBW BW

ராஜா
03-05-2007, 02:23 PM
கேள்வி எண்.3.

ஒரு பெரிய வட்டம்.. 1ல் இருந்து 1000 வரை எண்கள் எழுதப்பட்டு அதில் ஒவ்வொருவராக 1000 நபர்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கின்றனர். இப்போ நம்பர் 1 கையில ஒரு துப்பாக்கி இருக்கு. அவர் தனக்கு பக்கத்தில இருக்கற நம்பர் 2 ஐ சுட்டுவிட்டு அடுத்தவர் [எண் 3} கையில் துப்பாக்கியைக் கொடுக்கிறார். அவர் 4 ஐ சுட்டுவிட்டு 5 கிட்ட கொடுக்க, அவர் 6 ஐச் சுட்டு 7 வசம் கொடுக்கிறார்.. இவ்வாறு 999 வது நபர் 1000 வது நபரைச் சுட்டுவிட்டு திரும்ப நம்பர் 1 வசம் துப்பாக்கியைக் கொடுக்கிறார்.. அவர் தனக்கு அடுத்து உயிரோடு இருக்கும் 3 ஐச் சுட்டுவிட்டு 5 இடம் கொடுக்க....

இவ்வாறு நிகழ்ந்தால் கடைசியில் உயிரோடு இருப்பவர் யார்..?

முதலில் சுட்டு ஆரம்பித்து வைத்த நம்பர் 1 தான் கடைசியில் உயிரோடு இருப்பார்.
_________________

ராஜா
03-05-2007, 02:25 PM
ேள்வி எண்.4.

இது கொஞ்சம் எளிதான கேள்வி..

3 மற்றும் 5 மற்றும் 7 ஆல் வகுபடக்கூடிய ஒரு எண் தேவை...இங்கு எண் என்று குறிப்பிடப்படுவது ஒற்றை இலக்க எண் அல்ல. [குறைந்த பட்ச இலக்கங்களுடன் இருத்தல் வேண்டும்..]

நிபந்தனை இல்லாமலா..?

1. அந்த எண்ணிலும் 3,5,7 என்ற இலக்கங்கள் மட்டுமே இருக்க வேண்டும்..

2. அந்த எண்ணில் [அதாவது ஃபிகர்] அடங்கியிருக்கும் இலக்கங்களைக் கூட்டினாலும் அந்தக் கூட்டுத்தொகை 3,5,7 ஆல் வகுபட வேண்டும்.


7777777777333335555

ராஜா
03-05-2007, 02:28 PM
கேள்வி எண் 5.


இரண்டு மட்டையாளர்கள் களத்தில்.. இருவரும் 94 ரன்களில் ... கடைசி 2 பந்துகள் மீதம்.. வெற்றிக்குத் தேவை 7 ரன்கள்..

இரு மட்டையாளர்களும் சதம் அடிக்கும் சாத்தியக்கூறு ஏதேனும் உள்ளதா..?


ஆம்.. உள்ளது..

நானும் பரம்ஸும் களத்தில்.. இருவரும் 94 ரன்களில்.. கடைசி பந்துக்கு முந்தைய பந்தை சுபன் வீச நான் கவர் ட்ரைவ் ஆடி 3 ஓட்டங்கள் எடுக்கிறேன்.. ஷீ நிசி மிக விரைவாகச் சென்று அந்தப் பந்தைத் தடுக்கிறார்.. எடுத்து மிகத்துல்லியமாக ஸ்டம்பை நோக்கி வீசுகிறார்.. இலக்கைத் தாக்குகிறது பந்து.. .ஆனால் நான் கிரீஸ் உள்ளே நிற்பதால் ஆட்டம் இழக்கவில்லை. இலக்கை தகர்த்த பந்தை யாரும் தடுக்காததால் மறுபுறம் சென்று எல்லைக் கோட்டைக் கடக்கிறது. ஓவர் த்ரோ 4 ரன்கள்.....7 ஓட்டம் .. போட்டி வெற்றி.. நான் சதம்.. பரம்ஸ் கல் தேட, அம்பயர் ஆதவன் குறுக்கிட்டு, நீங்கள் ஓடி எடுத்த 3 ஓட்டங்களில் ஒன்று குறைவு என்று உணர்த்துகிறார். பரம்ஸ் சரியாக கிரீஸைத் தொடவில்லையாம்..

எனவே 6 ஓட்டங்கள் தான்.. (2+4 )) மேட்ச் இன்னும் இருக்கிறது. ஸ்கோர் சமன் ஆகியிருக்கிறது் முனை மாறிய பரம்ஸ் .கடைசி பந்தில சிக்ஸர் கிளப்பி தன் சதத்தை பூர்த்தி செய்கிறார். ஆட்டத்தையும் வெல்லுகிறார்.

ஒருவேளை இதுதான் அன்பு மாமனார் சொல்ல முயன்ற விடை என்றால் அவருக்கு என் பாராட்டுகள்.. !
உங்கள் விடையை சரியாக புரிந்துகொள்ளாததற்கு என்னைப் பொறுத்தருளுங்கள் மாம்ஸ்...!

அன்புரசிகன்
03-05-2007, 03:44 PM
ஒருவேளை இதுதான் அன்பு மாமனார் சொல்ல முயன்ற விடை என்றால் அவருக்கு என் பாராட்டுகள்.. !
உங்கள் விடையை சரியாக புரிந்துகொள்ளாததற்கு என்னைப் பொறுத்தருளுங்கள் மாம்ஸ்...

இது ராஜாவின் ரவுசுப்பக்கம். ராஜாவின் வருந்தும் பக்கம் இல்லை.

நீங்கள் எப்போதும் நகைச்சுவைமன்னனக (:Christo_pancho: ) இருத்தல் வேண்டும். அது போதும்.

ராஜா
03-05-2007, 04:29 PM
பொது இடத்தில் இந்தப் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தீங்களா?''

""ஐயோ.. அபாண்டம்ங்க. கன்னத்திலதான் முத்தம் குடுத்தேன்!''



இந்த மாத்திரையை சாப்பிட்டா கண்ணு நல்லா தெரியுமா டாக்டர்?

அய்யோ, முதல்ல அதை கீழ வைங்க.. அது பேப்பர் வெயிட்.



"என்னப்பா... சாம்பார்ல ஈ இருக்கு?''

""ஸாரி சார்... ஈயைப் பிடிக்க சாம்பார்ல பல்லி குதிச்சுதேனு அலட்சியமா இருந்துட்ேன்.''



"என் காதலர் பாகிஸ்தான் மாதிரி''

""அப்படின்னா?''

""அடிக்கடி எல்லைமீற முயற்சி செய்வார்.''



"நிறைய மெகா சீரியல் பார்ப்பீங்களோ..?

"ஏன்..?"

"இல்லே.. ரேஷன் கார்டுல, அபி, அரசி, அண்ணாமலை, செல்வி, தொல்காப்பியன், பாஸ்கர், இப்படி பேராவே இருக்கே.. அதான் கேட்டேன்.."

மனோஜ்
03-05-2007, 05:00 PM
[QUOTE"நிறைய மெகா சீரியல் பார்ப்பீங்களோ..?
"ஏன்..?"
"இல்லே.. ரேஷன் கார்டுல, அபி, அரசி, அண்ணாமலை, செல்வி, தொல்காப்பியன், பாஸ்கர், இப்படி பேராவே இருக்கே.. அதான் கேட்டேன்.."[/QUOTE]
தற்பொழது இப்படி தான் பெயர் வைக்கப்படுது

ஆதவா
03-05-2007, 05:04 PM
கலக்கீட்டீங்க ராஜா அவர்களே!... புதிர்கள்கூட சிரிக்கும் வகையில் இருந்தது.. என்னைத்தான் அம்பயர் ஆக்கிவிட்டிங்க... :D

இன்னும் இருவர்தான் இருக்கிறார்கள் இந்த பதிவைப் பார்வையிடும் 200 வது உறுப்பினர் என்ற நிலைக்கு.....

வாழ்த்துக்கள் ராஜா அண்ணலே!

அன்புரசிகன்
03-05-2007, 08:56 PM
பொது இடத்தில் இந்தப் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தீங்களா?''
""ஐயோ.. அபாண்டம்ங்க. கன்னத்திலதான் முத்தம் குடுத்தேன்!''

போயும் போயும் கன்னத்தில குடுத்துட்டு வீராப்ப பாரு



இந்த மாத்திரையை சாப்பிட்டா கண்ணு நல்லா தெரியுமா டாக்டர்?
அய்யோ, முதல்ல அதை கீழ வைங்க.. அது பேப்பர் வெயிட்.

அப்போ வெப்பமானி கூட்டுக்குளிகையா?? (Capsule)



"என் காதலர் பாகிஸ்தான் மாதிரி''
""அப்படின்னா?''
""அடிக்கடி எல்லைமீற முயற்சி செய்வார்.''

பின்லாடின் மாதிரி என்றால் இடுப்பில் இடிப்பாரோ??



"நிறைய மெகா சீரியல் பார்ப்பீங்களோ..?
"ஏன்..?"
"இல்லே.. ரேஷன் கார்டுல, அபி, அரசி, அண்ணாமலை, செல்வி, தொல்காப்பியன், பாஸ்கர், இப்படி பேராவே இருக்கே.. அதான் கேட்டேன்.."


இப்படி வேறு தொடங்கிவிட்டார்களா? நல்லவேளை சில தொடர் நாடகங்களின் பெயர்கள் பொதுவாக வந்துவிட்டன. இல்லாவிட்டால் என் பேராண்டிகளை இப்படித்தான் அழைக்கவேண்டிவந்திருக்கும்.

டேய் நம்பிக்கை. மனைவியை (நம்பிக்கையின் தங்கை) கூட்டிக்கொண்டு வா. நாங்கள் பக்கத்தில இருக்கிற அலைகள் வீட்டுக்கு போட்டு வருவம்.
எப்படி இருக்கு மாப்ளே... (உங்க பிள்ளைகளையும் சுற்றத்தாரையும் தான் சொன்னேன். :medium-smiley-080:

mania
04-05-2007, 06:28 AM
ராஜா, உன்னுடைய 5 ஆவது கேள்விக்கு ஒரு சாத்தியக்கூறு....
முதல் ஆட்டக்காரர் பந்தை அடித்துவிட்டு மூன்று ஓட்டங்கள் எடுக்கிறார்.அதில் ஒரு ரன் ஷார்ட் ஆகிறது.அதே சமயம் பந்து ஓவர்த்ரோ ஆகி 4 ரன்கள் கிடைக்கிறது. ஆகமொத்தம் 6 ரன்கள் கிடைக்கிறது அவர் சதம் அடிக்கிறார். அதே சமயம் அடுத்த ஆட்டக்காரர்க்கு கடைசி பந்தை அடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
அதில் ஒர் சிக்சர் அடிக்கிறார். அவரும் சதம். அணிக்கு 106 ரன்களும் வெற்றியும்....!!!!
சரியா ராஜா.....
அன்புடன்
மணியா....:sport-smiley-018:

நேற்றே நான் இந்த பதிவை கொடுத்திருந்தேனே ராஜா....????!!!!! பார்க்கவில்லையா நண்பா!!!
அன்புடன்
மணியா....

அன்புரசிகன்
04-05-2007, 07:57 AM
முதல் ஆட்டக்காரர் பந்தை அடித்துவிட்டு மூன்று ஓட்டங்கள் எடுக்கிறார்.அதில் ஒரு ரன் ஷார்ட் ஆகிறது.அதே சமயம் பந்து ஓவர்த்ரோ ஆகி 4 ரன்கள் கிடைக்கிறது. ஆகமொத்தம் 6 ரன்கள் கிடைக்கிறது அவர் சதம் அடிக்கிறார்.


ஓவர் த்ரோ 4 ரன்கள்.....7 ஓட்டம் .. போட்டி வெற்றி.. நான் சதம்.. பரம்ஸ் கல் தேட, அம்பயர் ஆதவன் குறுக்கிட்டு, நீங்கள் ஓடி எடுத்த 3 ஓட்டங்களில் ஒன்று குறைவு என்று உணர்த்துகிறார். பரம்ஸ் சரியாக கிரீஸைத் தொடவில்லையாம்..

எனவே 6 ஓட்டங்கள் தான்.. (2+4 )) மேட்ச் இன்னும் இருக்கிறது. ஸ்கோர் சமன் ஆகியிருக்கிறது் முனை மாறிய பரம்ஸ் .கடைசி பந்தில சிக்ஸர் கிளப்பி தன் சதத்தை பூர்த்தி செய்கிறார். ஆட்டத்தையும் வெல்லுகிறார்.

இங்கே அவர் ஓடியது 2 ஓட்டங்களள் எனின் இறுதிப்பந்தையும் அவரே எதிர் கொள்வாரல்லவா. எப்படி மற்றயவர் சதம் அடிக்க முடியும்? துடுப்பாட்டவீரர்கள் பதில் கூறவும். இது சர்ச்சைக்காக அல்ல. விடையத்தை தெரிந்துகொள்ள.

ராஜா
04-05-2007, 10:23 AM
நேற்றே நான் இந்த பதிவை கொடுத்திருந்தேனே ராஜா....????!!!!! பார்க்கவில்லையா நண்பா!!!
அன்புடன்
மணியா....

பொறுத்தருளுங்கள் அண்ணா..! [பரம்ஸின் ஆதர்ச நாயகரான உங்களைப் பற்றி அவர் பக்கம் பக்கமாக என்னிடம் கூறிப் பெருமைப் பட்டிருக்கிறார்.]

கவனியாதது என் தவறே... உங்களுக்கு பாராட்டுகள்..!

ராஜா
04-05-2007, 10:27 AM
இங்கே அவர் ஓடியது 2 ஓட்டங்களள் எனின் இறுதிப்பந்தையும் அவரே எதிர் கொள்வாரல்லவா. எப்படி மற்றயவர் சதம் அடிக்க முடியும்? துடுப்பாட்டவீரர்கள் பதில் கூறவும். இது சர்ச்சைக்காக அல்ல. விடையத்தை தெரிந்துகொள்ள.

மாம்ஸ்...

அவர்கள் ஓடியது மூன்று முறை.. அதனால் அடித்தவர் எதிர் முனைக்குப் போய் விட்டார். நடுவர் ஒரு ஓட்டத்தைக் குறைத்தாலும் முனையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்தானே..?

அப்புறம் இன்னிக்கு உங்க பின்னூட்டம் ரொம்ப ரவுசா இருக்கு.. ஆட்டம் பலே ஜோர்..!

ராஜா
04-05-2007, 05:05 PM
நன்றி நண்பர்களே..!

ராஜா
04-05-2007, 05:07 PM
கலக்கீட்டீங்க ராஜா அவர்களே!... புதிர்கள்கூட சிரிக்கும் வகையில் இருந்தது.. என்னைத்தான் அம்பயர் ஆக்கிவிட்டிங்க... :D

இன்னும் இருவர்தான் இருக்கிறார்கள் இந்த பதிவைப் பார்வையிடும் 200 வது உறுப்பினர் என்ற நிலைக்கு.....

வாழ்த்துக்கள் ராஜா அண்ணலே!


கவிஞன் வாக்கு பொய்க்காது என்பார்கள்.. இன்று அந்த இருவரும் பார்வை இட்டு விட்டார்கள்..

ராஜா
04-05-2007, 05:08 PM
அனைவ்ருக்கும் நன்றி...!

ராஜா
04-05-2007, 05:15 PM
இன்று..

இந்தத் திரியை...

பார்வை இட்ட...

அந்த...

200 ஆவது...

உறுப்பினருக்கு வாழ்த்துகள்...

அவரை..

200 ஆவது..

உறுப்பினராக ஆக்கிய..

மற்ற

199 சொந்தங்களுக்கும்..

நன்றி....நன்றி...நன்றி...

http://img12.picsplace.to/img12/2/Entertainment_02_june.gif

ஆதவா
04-05-2007, 05:27 PM
இருநூறைத் தொட்டு மன்றத்தில் அசைக்கமுடியா இடத்திலிருக்கும் அண்ணலுக்கு என் வாழ்த்துக்களுடன் 200 பணமும்....

ராஜா
04-05-2007, 05:39 PM
நன்றி ஆதவா..!

ராஜா
04-05-2007, 05:44 PM
கொய்யாப் பழத்தை கொட்டையோட சாப்பிடலாம். மாம்பழத்தை கொட்டையை எடுத்துட்டு திங்கலாம்... பலாப்பழத்துல கொட்டையை சுட்டுத் திங்கலாம். இதுலேர்ந்து என்ன தெரியுது?''

""நீங்க பழம் தின்று கொட்டை போட்டவர்னு தெரியுதுங்க!''
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

காலிங் பெல்லை கருப்பு நிறத்துல வாங்கினது தப்பாப் போச்சு..

ஏன்..?

"ப்ளாக் மணி' வெச்சிருக்கேன்னு ஊரெல்லாம் பேசறாங்க.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

என்னோட அடுத்த மெகா சீரியலுக்கு "கோயில் தேர்' னு பேர் வச்சிருக்கேன்...

இழுஇழுன்னு இழுக்க செகரியமா இருக்கும்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

எனக்கு சங்கீதப் புயல்னு பட்டம் கொடுத்திருக்காங்க... எப்படி பாத்தீங்களா?

ரொம்ப சரி... நீங்க பாடறப்போ யாருமே வீட்டை விட்டு வெளியே வர்தில்லையே....!
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

ஹலோ, இன்ஸ்பெக்டரா.. எங்க வீட்ல திருட வந்த ஒருத்தனை கையும் களவுமா பிடிச்சு வச்சிருக்கோம். உடனே வர்றீங்களா?

அப்படியா.. அவன் இப்ப என்ன பண்ணிட்டிருக்கான்.

உக்கார வச்சிருக்கோம்...டிவி பாத்துட்டிருக்கான் சார்.

உடனே டிவியை ஆஃப் பண்ணுங்க. சட்டத்தைக் கையில எடுத்துகிட்டு நீங்களே அவனுக்கு தண்டனை எல்லாம் தரக்கூடாது.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

இதுல என்ன எழுதியிருக்குன்னு படிங்க முதல்ல...

தமிழ்நாடு.. குழந்தை... வாழைப்பழம்.. அழகுதமிழ்..

தொழிலுக்குப் பொருந்தாம இப்படிப் பேசினா உங்களுக்கு எப்படி டிவி சேனலில் வேலை கொடுக்க முடியும்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

அவரு தேர்தல்ல கள்ளவோட்டாலேயே ஜெயிச்சிருக்காருன்னு நினைக்கின்.

எப்படிச் சொல்றீங்க?

தேர்தல்ல வோட்டுப் போட வராதவங்களுக்கு நன்றிங்கறாரே..

அறிஞர்
04-05-2007, 06:25 PM
"நிறைய மெகா சீரியல் பார்ப்பீங்களோ..?

"ஏன்..?"

"இல்லே.. ரேஷன் கார்டுல, அபி, அரசி, அண்ணாமலை, செல்வி, தொல்காப்பியன், பாஸ்கர், இப்படி பேராவே இருக்கே.. அதான் கேட்டேன்.."

ஹிஹி... பெயர்கள் எல்லாவற்றிற்கும் காப்பிரைட் வாங்கி வைக்கனும்... அப்படி வாங்கி வைத்தால் டீவி.. காரர்களிடம் நிறைய சம்பாதிக்கலாம்.:spudnikbackflip: :spudnikbackflip:

அன்புரசிகன்
04-05-2007, 06:26 PM
கொய்யாப் பழத்தை கொட்டையோட சாப்பிடலாம். மாம்பழத்தை கொட்டையை எடுத்துட்டு திங்கலாம்... பலாப்பழத்துல கொட்டையை சுட்டுத் திங்கலாம். இதுலேர்ந்து என்ன தெரியுது?''
""நீங்க பழம் தின்று கொட்டை போட்டவர்னு தெரியுதுங்க!''


நல்லா தெரியுது...



என்னோட அடுத்த மெகா சீரியலுக்கு "கோயில் தேர்' னு பேர் வச்சிருக்கேன்...
இழுஇழுன்னு இழுக்க செளகரியமா இருக்கும்.


சுவிங்கம் என்று வைச்சிருந்தா இன்னமும் நன்றாக இருக்கவேண்டும்.



ஹலோ, இன்ஸ்பெக்டரா.. எங்க வீட்ல திருட வந்த ஒருத்தனை கையும் களவுமா பிடிச்சு வச்சிருக்கோம். உடனே வர்றீங்களா?
அப்படியா.. அவன் இப்ப என்ன பண்ணிட்டிருக்கான்.
உக்கார வச்சிருக்கோம்...டிவி பாத்துட்டிருக்கான் சார்.
உடனே டிவியை ஆஃப் பண்ணுங்க. சட்டத்தைக் கையில எடுத்துகிட்டு நீங்களே அவனுக்கு தண்டனை எல்லாம் தரக்கூடாது.


மெகாசீரியல் போடப்பட்டிருந்ததோ?? அதோ கெதிதான். (திருடனின் கதி)

அறிஞர்
04-05-2007, 06:27 PM
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

காலிங் பெல்லை கருப்பு நிறத்துல வாங்கினது தப்பாப் போச்சு..

ஏன்..?

"ப்ளாக் மணி' வெச்சிருக்கேன்னு ஊரெல்லாம் பேசறாங்க.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

இதுல என்ன எழுதியிருக்குன்னு படிங்க முதல்ல...

தமிழ்நாடு.. குழந்தை... வாழைப்பழம்.. அழகுதமிழ்..

தொழிலுக்குப் பொருந்தாம இப்படிப் பேசினா உங்களுக்கு எப்படி டிவி சேனலில் வேலை கொடுக்க முடியும்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''..
அருமையான சிரிப்புக்கள் இன்னும் தொடரட்டும்.. ராஜா..

அமரன்
04-05-2007, 06:28 PM
ஒருமாத இடைவெளியில் எத்தனை நகைச்சுவைகள் அத்தனையும் அருமையான பல்சுவை விருந்தாக உள்ளது. இறைக்க இறைக்க ஊற்றெடுக்கும் வற்றாத கிணறு போல மேலும் மேலும் உங்கள் நகைச்சுவை சிதறல்கள் அதிகரிக்கின்றது. வாழ்த்துகள் ராஜா.

அறிஞர்
04-05-2007, 06:28 PM
இன்று..

இந்தத் திரியை...

பார்வை இட்ட...

அந்த...

200 ஆவது...

உறுப்பினருக்கு வாழ்த்துகள்...

அவரை..

200 ஆவது..

உறுப்பினராக ஆக்கிய..

மற்ற

199 சொந்தங்களுக்கும்..

நன்றி....நன்றி...நன்றி...

http://img12.picsplace.to/img12/2/Entertainment_02_june.gif 200 சொந்தங்கள் தொடர்ந்து மன்றம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. சபாஷ் ராஜா.. அண்ணா:icon_08: :icon_08: :icon_08: :icon_08: :icon_08: :icon_08: :icon_08:

அன்புரசிகன்
04-05-2007, 06:30 PM
200 சொந்தங்கள் தொடர்ந்து மன்றம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. சபாஷ் ராஜா.. அண்ணா:icon_08: :icon_08: :icon_08: :icon_08: :icon_08: :icon_08: :icon_08:

சொர்க்கம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?... அதை நம் மன்றத்தில் பர்க்கலாம்.

ஆதவா
04-05-2007, 06:41 PM
அன்பு.... நிச்சயம் வரும்... நம்மை தள்ளிவிட்டு வேறு நிறையபேர் வருவார்கள்... மன்றம் ஆரம்பித்த காலத்தில் உறுப்பினர்கள் அவ்வளவாக இருந்திருக்காது.. நான் வரும்போது 2100 வது உறுப்பினன். இன்று மூவாயிரம் தாண்டுகிறது.. நாளொன்றுக்கு 15 பேர் சராசரி... நாளை உறுப்பினர் எண்ணிக்கை 6000 ஆகும்போது இந்த மடங்கு 30க்கும் மேலேதான் இருக்கும்.. நொடியில் பதிவுகள் உண்டாகும்...

(இருநூறு பேர் என்றால் அறிஞரே நம்மை மறந்துவிடுவார்... ஹி ஹி அப்போதும் ராஜா அண்ணா கலக்கிக் கொண்டு இருப்பார்)

மனோஜ்
04-05-2007, 06:47 PM
வாழ்த்துக்கள் ராஜா அண்ணா உங்கள் இந்த வெற்றிக்கு
50 இ பணம் பரிசுகள்

அன்புரசிகன்
04-05-2007, 06:48 PM
6000 வருகையில் உங்களுக்கே இந்தக்கெதியென்றால் நம்மபாடு அதோ கெதிதான். க்யூவில நின்றுறு தான் பதியணும். நிலைக்க 1நிமிடத்திற்கு 100 சொற்கள் என்ற விகிதத்தில் நம்ம தட்டச்சு அமையவேண்டும்.

ஓவியா
04-05-2007, 09:38 PM
ஹலோ, இன்ஸ்பெக்டரா.. எங்க வீட்ல திருட வந்த ஒருத்தனை கையும் களவுமா பிடிச்சு வச்சிருக்கோம். உடனே வர்றீங்களா?

அப்படியா.. அவன் இப்ப என்ன பண்ணிட்டிருக்கான்.

உக்கார வச்சிருக்கோம்...டிவி பாத்துட்டிருக்கான் சார்.

உடனே டிவியை ஆஃப் பண்ணுங்க. சட்டத்தைக் கையில எடுத்துகிட்டு நீங்களே அவனுக்கு தண்டனை எல்லாம் தரக்கூடாது.


ஹி ஹி ஹி அருமை அருமை


இந்த பொன்னான வேளையில் அந்த 200 மனிதருக்கு என் வாழ்த்துக்கள், அவரை 198 படிப்போட்டு ஏற்றி விட்ட மக்களுக்கும், 199தாவது படியை போட்ட எனக்கும், மற்றும் 200 மக்களை சிரிக்க வைத்த நகைச்சுவை களஞ்சியம், மாமலை, விகடகவி செம்மல், ராஜா அண்ணாக்கு என் பாராட்டுக்கள்.

இத்துடன் என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்

நன்றி
வணக்க்ம்.

aren
05-05-2007, 12:16 AM
ஹிஹி... பெயர்கள் எல்லாவற்றிற்கும் காப்பிரைட் வாங்கி வைக்கனும்... அப்படி வாங்கி வைத்தால் டீவி.. காரர்களிடம் நிறைய சம்பாதிக்கலாம்.:spudnikbackflip: :spudnikbackflip:

அறிஞர் புத்திசாலி என்று தெரியும், ஆனால் இந்த அளவுக்கு புத்திசாலி என்று தெரியாது.

aren
05-05-2007, 12:18 AM
எங்கவீட்டில் இனிமேல் காலிங் பெல்லே வைக்கப்போவதில்லை. இப்படியெல்லாம் வழி இருக்கிறதா மாட்டிவிடுவதற்கு.

ஓவியா
05-05-2007, 12:23 AM
எங்கவீட்டில் இனிமேல் காலிங் பெல்லே வைக்கப்போவதில்லை. இப்படியெல்லாம் வழி இருக்கிறதா மாட்டிவிடுவதற்கு.

இதற்காக நான் சொந்தமாகவா காலிங் பெல்லே எடுத்துக்கிட்டு உங்க வீட்டுக்க வர வேண்டும்!!!

வாசலில் சும்மா கம்முனு நிக்க முடியுமா??

aren
05-05-2007, 12:26 AM
இதற்காக நான் சொந்தமாகவா காலிங் பெல்லே எடுத்துக்கிட்டு உங்க வீட்டுக்க வர வேண்டும்!!!

வாசலில் சும்மா கம்முனு நிக்க முடியுமா??

ஒருவருக்கு வேலை காலியாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

ஓவியா
05-05-2007, 12:27 AM
ஒருவருக்கு வேலை காலியாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

ஹி ஹி ஹி சமத்து அண்ணா.

mania
05-05-2007, 05:15 AM
பொறுத்தருளுங்கள் அண்ணா..! [பரம்ஸின் ஆதர்ச நாயகரான உங்களைப் பற்றி அவர் பக்கம் பக்கமாக என்னிடம் கூறிப் பெருமைப் பட்டிருக்கிறார்.]

கவனியாதது என் தவறே... உங்களுக்கு பாராட்டுகள்..!

பெரிய வார்த்தைகள் எல்லாம் வேண்டாம் ராஜா...:angel-smiley-033: பரம்ஸுக்கு மட்டும் அல்ல ....எனக்கும் கொஞ்சம் கிரிக்கெட் தெரியுமே என்றுதான்......ஹி...ஹி....ஹி....
அன்புடன்
மணியா...

poo
05-05-2007, 08:03 AM
கலக்கறீங்க நண்பரே... வாய்விட்டு சிரிக்க வைக்கறீங்க..


தலை.. கிரிக்கெட்டுக்கு உங்களை நல்லாவே தெரியுமே..

ஓவியன்
05-05-2007, 11:01 AM
இதுல என்ன எழுதியிருக்குன்னு படிங்க முதல்ல...

தமிழ்நாடு.. குழந்தை... வாழைப்பழம்.. அழகுதமிழ்..

தொழிலுக்குப் பொருந்தாம இப்படிப் பேசினா உங்களுக்கு எப்படி டிவி சேனலில் வேலை கொடுக்க முடியும்.

சிரிப்பூட்டுவதாக இருந்தாலும் உண்மையாக எல்லோரும் சிந்திக்க வேண்டிய விடயம் இது ராஜா அண்ணா!

ஆதவா
05-05-2007, 02:26 PM
அண்ணலே பொங்கல் திரும்பவும் வந்திட்டது போல இருக்கே

ராஜா
05-05-2007, 06:35 PM
ஹா..ஹா... ஆமாம் ஆதவா..!

ராஜா
05-05-2007, 06:37 PM
""மத்தவங்களை அழவெச்சு வாங்கற பணம் ஒட்டாதுங்க...''

""யார் சொன்னது? அந்த மெகா சீரியல் தயாரிப்பாளர் நல்லாத்தானே இருக்காரு.''

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

""ஏங்க, ஆபீஸ் விட்டு வரும்போது மறக்காம கிளிசரின் வாங்கிட்டு வாங்க.''

""எதுக்கு?''

""மெகா சீரியல் பார்க்கும்போது எனக்குக் கண்ணீர் வரலைன்னா அக்கம் பக்கம் இருக்கிற பெண்கள் எல்லாம் என்னை ஒரு மாதிரியாப் பார்க்கறாங்க.''
_________________

ராஜா
05-05-2007, 06:38 PM
ஆச்சரியமாயிருக்கே.. மாமியார், மருமகள் சண்டையே இல்லாம அந்த வீடு அமைதியா இருக்கே..

அதுவா.. ரொம்ப தொந்தரவா இருக்குன்னு பக்கத்து வீட்டுக்காரர் கோர்ட்டுல ஸ்டே வாங்கியிருக்காராம்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

என்னங்க.. உங்க பையன் ஏப்ரலுக்குப் பிறகு ஜூன் மாதம்ன்னு சொல்றான்..?

அவன் ஒரு "மே" தாவி...!

ராஜா
05-05-2007, 06:39 PM
சர்வர்.. என்னங்க இது? சாம்பார்ல கத்தரிக்காய் எல்லாம் நறுக்காம முழுசு முழுசா போட்டிருக்கீங்க?

அரியாமல் செய்த தவறுக்கு வருந்துகிறோம்..!

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

""எங்க சலூன்ல "கட்டிங்" பண்ணிகிட்டா "ஷேவிங்' இலவசம்!""

"அவ்வளவுதானா..? எங்க ஃபைனான்ஸ் கம்பெனிலே "சேவிங்" பண்ணினா
"மொட்டை" யே இலவசம்!""

ஆதவா
05-05-2007, 06:48 PM
அப்படீன்னா ஏதோ விஷயம்.... வாழ்த்துக்கள் அண்ணலே!
----------------
சிரிப்புகள் சூப்பார்

ஓவியன்
06-05-2007, 03:55 AM
என்னங்க.. உங்க பையன் ஏப்ரலுக்குப் பிறகு ஜூன் மாதம்ன்னு சொல்றான்..?

அவன் ஒரு "மே" தாவி...!

அடடே இதற்கு இப்படி வேற அர்த்தமிருக்கா???
அசத்துறீங்க அண்ணா!

ஓவியன்
06-05-2007, 04:02 AM
""எங்க சலூன்ல "கட்டிங்" பண்ணிகிட்டா "ஷேவிங்' இலவசம்!""

"அவ்வளவுதானா..? எங்க ஃபைனான்ஸ் கம்பெனிலே "சேவிங்" பண்ணினா
"மொட்டை" யே இலவசம்!""

அப்ப திருப்பதிக்குப் போகத் தேவையே இல்லை,
அந்த ஃபைனான்ஸ் கம்பெனிலே "சேவிங்" பண்ணினா போதும் போல...

அன்புரசிகன்
06-05-2007, 10:35 AM
""மத்தவங்களை அழவெச்சு வாங்கற பணம் ஒட்டாதுங்க...''
""யார் சொன்னது? அந்த மெகா சீரியல் தயாரிப்பாளர் நல்லாத்தானே இருக்காரு.''


அழவச்சுக்கிட்டு மட்டுமா... பசியையும் தான். செய்திநேரத்தில தான் சமையல் நடக்கும். தேனீர் எல்லாம் ஏதாச்சும் பெரிய விளம்பரம் வாற நாடகங்களில மட்டும் தான்.



""மெகா சீரியல் பார்க்கும்போது எனக்குக் கண்ணீர் வரலைன்னா அக்கம் பக்கம் இருக்கிற பெண்கள் எல்லாம் என்னை ஒரு மாதிரியாப் பார்க்கறாங்க.''


ரொம்பத்தான் கல்மனசு. என்ன செய்ய... கிளிசரீன் எல்லாம் ரொம்ப ஓவர். வெங்காயம் போதுமே... (கல்நெஞ்சையும் உருக வைத்திடும்)

ராஜா
06-05-2007, 02:36 PM
என்ன மாம்ஸ்..? ஐடியா எல்லாம் பலமா இருக்கு..?

ஓவியா
06-05-2007, 03:31 PM
கலக்கல்.

வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
06-05-2007, 04:05 PM
என்ன மாம்ஸ்..? ஐடியா எல்லாம் பலமா இருக்கு..?

எல்லாம் பாத்து கேட்டு தெரிஞ்சு கொண்டதுதான்.

ராஜா
06-05-2007, 04:30 PM
""படுத்து ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் டாக்டர் எனக்குத் தூக்கம் வருது...""

"" அப்ப ஒரு மணி நேரம் கழிச்சுப் படுங்க! ""
_________________

""என்னங்க இது.... உங்க ஆபீஸ் ஹெட்கிளார்க் இவ்வளவு
நிம்மதியா ஆபீஸ்ல தூங்கிட்டிருக்கார்?""

""நான்தான் முன்னயே சொன்னனே...மத்தவங்க
வேலைங்களையெல்லாம் இவர் தன் தலைல போட்டுக்குவார்னு!''

_________________

"ஆன்ட்டி ஹீரோயின் காரெக்டர்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க.''

""என்ன பண்ணிட்டாங்க..?''

""ஹீரோயினுக்கு ஆன்ட்டியா என்னை நடிக்கச் சொல்லிட்டாங்க..!''
_________________

"வெக்கமா இல்லியா... உன் ஃப்ரெண்டோட கிராமர் பேப்பரைப்
பார்த்து அப்படியே காப்பி பண்ணியிருக்கியே...?''

""எங்களைப் பார்த்து "நட்புக்கு இலக்கணம்'னு நீங்கதானே சார் சொன்னிங்க!''
_________________

"டாக்டர்... ரெண்டு கண்ணையும் மூடவே முடியலை....''

""இனிமே அந்தக் கவலையை என்கிட்டே விட்ருங்க....
நான் பார்த்துக்கறேன்''
_________________

"இந்த ஆபரேஷன்ல உங்க மாமியாரைக் கடவுள்தான் காப்பாத்தினாரு!''

""அநாவசியமா கடவுள்மேல ஏன் டாக்டர் பழியைப் போடறீங்க...?''
_________________
_________________

அன்புரசிகன்
06-05-2007, 04:42 PM
""என்னங்க இது.... உங்க ஆபீஸ் ஹெட்கிளார்க் இவ்வளவு
நிம்மதியா ஆபீஸ்ல தூங்கிட்டிருக்கார்?""
""நான்தான் முன்னயே சொன்னனே...மத்தவங்க
வேலைங்களையெல்லாம் இவர் தன் தலைல போட்டுக்குவார்னு!''

உருப்பட்ட மாதிரித்தான்.



"வெக்கமா இல்லியா... உன் ஃப்ரெண்டோட கிராமர் பேப்பரைப்
பார்த்து அப்படியே காப்பி பண்ணியிருக்கியே...?''
""எங்களைப் பார்த்து "நட்புக்கு இலக்கணம்'னு நீங்கதானே சார் சொன்னிங்க!''

காப்பிக்கு இலக்கணம் இவர்கள்.



"இந்த ஆபரேஷன்ல உங்க மாமியாரைக் கடவுள்தான் காப்பாத்தினாரு!''
""அநாவசியமா கடவுள்மேல ஏன் டாக்டர் பழியைப் போடறீங்க...?''


அதிசயம் ஆணால் உண்மை என்கிறது இதுவோ??

வாழ்த்துக்கள் மாப்பு.

சக்தி
06-05-2007, 05:16 PM
டாக்டர் சர்தார் புது மருத்துவமனை திறந்தார்.. ஆனால் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்த போது தச்சர், பெயிண்டர் எல்லோரையும் கடுமையாக திட்டவே.. தங்கள் கைவரிசையை காட்டிவிட்டார்கள்.

மூட்டு வைத்தியரின் அறைக்கதவு ஒரு கீல் இல்லாமல் இருந்தது.

காது டாக்டரின் அழைப்பு மணி வேலை செய்யவில்லை,,

சிறுநீரக மருத்துவர் அறையில் உள்ள டாய்லெட்டில் கதவே இல்லை..

கண் டாக்டர் அறைக்கதவில் கண்ணாடி இல்லை.. சாவித் துவாரமும் இல்லை..

முத்தாய்ப்பாக..டாக்டர் . சர்தார்.. psychotherapist என்பதை இவ்வாறு எழுதிச் சென்றுவிட்டனர்..

Dr. SARDAR...
Pscho The Rapist.

ராஜா பட்டையை கிளப்புகிறீகள், அனைத்தும் மிக அருமை. அதுவும் அந்த சர்தார் பவம்யா!!!

ஓவியா
06-05-2007, 05:23 PM
"நட்புக்கு இலக்கணம்''
''ரெண்டு கண்ணையும் மூட''

நச் :musik010:

ஓவியன்
07-05-2007, 05:04 AM
""படுத்து ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் டாக்டர் எனக்குத் தூக்கம் வருது...""

"" அப்ப ஒரு மணி நேரம் கழிச்சுப் படுங்க! ""


இதனைப் பார்க்க எனக்கு எங்கள் வீட்டில் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வருகுது.

முன்பெல்லாம் எங்கள் வீட்டில் கிணற்றில் இருந்து நீரை வாளியால் அள்ளித்தான்(மோட்டர், பைப், தொட்டி ஒன்றும் கிடையாது) குளிப்போம். அதிகாலை வேளையில் கிணற்று(கிணற்றை சுற்றி நிறைய மரங்களும்(நெல்லி,நாவல்)அப்பாலே நீர் நிரம்பியிருக்கும் நெல் வயலும் இருந்தன) நீர் ஜில்லென்று இருந்து உடம்பை ஒரு வழி பண்ணிவிடும் அதுவும் மார்கழி மாதமென்றால் குளிர் பின்னி எடுத்துவிடும்.

ஒரு நாள் நான் வீட்டில் எனது அண்ணாவிடம் சொன்னேன்,
அண்ணா எப்போதும் முதல் வாளி தண்ணீர் தான் குளிருது - பிறகு பரவாயில்லை சமாளிக்கலாமென்று.

உடனே அண்ணா கூறினார் - அப்ப இனிமேல் முதல் வாளி தண்ணீரில் குளிக்காதே:nature-smiley-008: அதனைக் கீழே கொட்டி விட்டு இரண்டாவது வாளித் தண்ணீரிலிருந்து குளிக்கத் தொடங்கு என்று....:icon_shout:

ராஜா
07-05-2007, 08:19 AM
ஹா...ஹா... அண்ணா ரவுசுக்கார அண்ணா போல...

ஓவியன்
07-05-2007, 08:20 AM
ஹா...ஹா... அண்ணா ரவுசுக்கார அண்ணா போல...

ஆமா அண்ணா! - உங்களைப் போலவே:sport-smiley-018:

அறிஞர்
07-05-2007, 02:06 PM
உடனே அண்ணா கூறினார் - அப்ப இனிமேல் முதல் வாளி தண்ணீரில் குளிக்காதே:nature-smiley-008: அதனைக் கீழே கொட்டி விட்டு இரண்டாவது வாளித் தண்ணீரிலிருந்து குளிக்கத் தொடங்கு என்று....:icon_shout:
ரவுசுக்கார அண்ணன் ராஜா - தம்பி ஓவியன்..

தொடரட்டும்... உங்கள் ரவுசுகள்..