mgandhi
25-11-2006, 05:55 PM
சர்க்கரை நோயாளிகள் மது அருந்தலாமா?
சர்க்கரை நோயாளிகள் மது அருந்துவதை அறவே தவிர்ப்பதுதான் நல்லது. என்றாலும் அவசியம் அருந்த வேண்டுமெனில், சரியான உணவுக்கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, சரியான அளவில் சர்க்கரைநோய் மாத்திரைகள் சாப்பிடுதல் போன்றவற்றின் மூலம் ரத்தச்சர்க்கரையை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அளவோடு மது அருந்தலாம். குறிப்பாகச் சொன்னால், தினமும் இரண்டு அவுன்ஸ் (60 மி.லி.) விஸ்கி, ரம், ஜின், பிராந்தி இவற்றில் ஒன்றை அருந்தலாம். பீர் அருந்த வேண்டாம். அதில் கலோரிகள் அதிகம். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனே அதிகப்படுத்தும். சர்க்கரைநோய் தீவிரமடையும். பதிலாக, காய்கறி சாலட்களைச் சாப்பிடலாம். என்றாலும் மதுவினால் ஏற்படும் கல்லீரல் பிரச்னை, நரம்புப் பாதிப்பு இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு மது அளவுக்கு மீறினால், போதை தலைக்கேறி மயக்கம் வரும். அதே நேரத்தில் அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்துவிட்டாலோ(Hypoglycaemia) அல்லது மிகவும் அதிகமாகிவிட்டாலோ (Hyperglycaemia) மயக்கம் ஏற்படும். இம்மாதிரி நேரங்களில் அந்தச் சர்க்கரை நோயாளிக்கு நோயினால் மயக்கமா, மதுவினால் மயக்கமா என்று பிரித்துணர்வது கடினம்.
சர்க்கரை நோயாளிகள் மது அருந்துவதை அறவே தவிர்ப்பதுதான் நல்லது. என்றாலும் அவசியம் அருந்த வேண்டுமெனில், சரியான உணவுக்கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, சரியான அளவில் சர்க்கரைநோய் மாத்திரைகள் சாப்பிடுதல் போன்றவற்றின் மூலம் ரத்தச்சர்க்கரையை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அளவோடு மது அருந்தலாம். குறிப்பாகச் சொன்னால், தினமும் இரண்டு அவுன்ஸ் (60 மி.லி.) விஸ்கி, ரம், ஜின், பிராந்தி இவற்றில் ஒன்றை அருந்தலாம். பீர் அருந்த வேண்டாம். அதில் கலோரிகள் அதிகம். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனே அதிகப்படுத்தும். சர்க்கரைநோய் தீவிரமடையும். பதிலாக, காய்கறி சாலட்களைச் சாப்பிடலாம். என்றாலும் மதுவினால் ஏற்படும் கல்லீரல் பிரச்னை, நரம்புப் பாதிப்பு இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு மது அளவுக்கு மீறினால், போதை தலைக்கேறி மயக்கம் வரும். அதே நேரத்தில் அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்துவிட்டாலோ(Hypoglycaemia) அல்லது மிகவும் அதிகமாகிவிட்டாலோ (Hyperglycaemia) மயக்கம் ஏற்படும். இம்மாதிரி நேரங்களில் அந்தச் சர்க்கரை நோயாளிக்கு நோயினால் மயக்கமா, மதுவினால் மயக்கமா என்று பிரித்துணர்வது கடினம்.