PDA

View Full Version : காதல் தீவிரவாதி



franklinraja
15-11-2006, 10:44 AM
கண்ணில்
கண்ணிவெடி வைத்திருந்தாய்.. :eek:

கள்ளமில்லா என் இதயத்தை
கடத்தி கொண்டுபோய் - உன்
உள்ளமெனும் குகையில்
என்னை சிறைவைத்தாய்.. :rolleyes:

பிணையத்தொகையாக என்
காதலைக் கேட்டாய்..
பல நாட்கள் என்னை வைத்து
பார்த்துக்கொண்டாய்.. ;)

நம் திருமணத்திற்கு
நல்ல பல திட்டங்களும் தீட்டினாய்.. :p

பிறகுதான் மிரட்டல் கடிதத்தை
அனுப்பினாய் - அது
உன் கல்யாண அழைப்பிதழ்... :mad:

கடைசியில்
மனித வெடிகுண்டாய் மாறி
என் இதயத்தை சுக்குநூறாக ஆக்கிவிட்டாயே..! :confused:

என் காதல் தீவிரவாதியே..
என்னையும் உன்னையும் சேர்த்தே கொன்றுபோட்டாயே..!! :angry:

pradeepkt
15-11-2006, 11:02 AM
அது சரி...
இந்த மாதிரி காதற் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவையாய் எழுந்து வருவதில்தானேங்க நம்ம சாமர்த்தியம் அடங்கிருக்கு...

சீக்கிரம் வந்து வாழ்க்கையில முன்னேறுங்க :)

தாமரை
15-11-2006, 11:56 AM
காதல் தீவிரவாதியால்
கடத்தப்பட்டு
கல்யாண குண்டில்
வெடித்துச் சிதறி
கருகிக் கிடக்கும்
ஃப்ராங்க்ளின்
ஃப்ராங்கா சொல்லுங்க
பிரதீப் சொன்னது போல
ஃபீனிக்ஸ் ஆக
உயிர்த்தெழ
இன்னொரு காதலி
கிடைக்க வில்லையா?

மன்மதன்
15-11-2006, 12:35 PM
இன்னொரு காதலி
கிடைக்க வில்லையா?

எதயெடுத்தாலும் 3 பத்து ரூபாக்கு கிடைக்கிற மாதிரியில்ல கேட்குறீங்க:D :D பொறுமையாத்தான் கிடைக்குங்க..:rolleyes: :rolleyes: .

franklinraja
15-11-2006, 12:40 PM
காதல் தீவிரவாதியால்
கடத்தப்பட்டு
கல்யாண குண்டில்
வெடித்துச் சிதறி
கருகிக் கிடக்கும்
ஃப்ராங்க்ளின்
ஃப்ராங்கா சொல்லுங்க
பிரதீப் சொன்னது போல
ஃபீனிக்ஸ் ஆக
உயிர்த்தெழ
இன்னொரு காதலி
கிடைக்க வில்லையா?

ஃபீனிக்ஸ் பறவை
உயிர்த்துவிட்டது..
தீவிரவாதமே வேண்டாமென்று... ;)

ஓவியா
15-11-2006, 06:58 PM
அடடா
ஃப்ராங்க்ளின்

என்னா கவிதை, சும்மா நச்சுனு இருக்கு

ஏன்டிங்தான் மனிரத்தினதின் சாயலில் உள்ளது....
(காதலையும் கொன்னு காதலர்களையும் கொன்னு....)

crisho
21-11-2006, 12:22 PM
அடடா
ஃப்ராங்க்ளின்

என்னா கவிதை, சும்மா நச்சுனு இருக்கு

ஏன்டிங்தான் மனிரத்தினதின் சாயலில் உள்ளது....
(காதலையும் கொன்னு காதலர்களையும் கொன்னு....)

கவிதய படிக்கும் போது இததான் எழுதனும்னு நினைத்தேன், கீழ படிச்சிட்டு வரும்போ நீங்க எழுதியிருக்கீங்க....

ஓவியா
21-11-2006, 03:55 PM
கவிதய படிக்கும் போது இததான் எழுதனும்னு நினைத்தேன், கீழ படிச்சிட்டு வரும்போ நீங்க எழுதியிருக்கீங்க....


ஏன்டிங்தான் மனிரத்தினதின் சாயலில் உள்ளது....
(காதலையும் கொன்னு காதலர்களையும் கொன்னு....)

இதுதான் பல வருடதிற்க்கு முன்பே சினிமாவில் சொல்லியாச்சே.....:D :D .


கிஷோர் அண்ணே,
எங்கே உங்க அட்டகாசமான கவிதைகளை காணவில்லையே
யோசித்து ஒரு கவிதை போடுங்களேன்.....:)

crisho
22-11-2006, 06:40 AM
வருது வருது....

உமாமீனா
15-02-2011, 05:08 AM
முகத்தில் அறைந்தார் போல்
இன்றைய காதலை எவ்வளவு எதார்த்தமாக எளிமையாக அற்புதமாக சொன்ன உமக்கு என் வாழ்த்துக்கள்