இனியவன்
08-11-2006, 03:33 PM
http://img73.imageshack.us/img73/7434/pg10vj5.jpg
கதை சொல்லித்
தூங்க வைக்க
கண்ட கனவைப்
பகிர்ந்து கொள்ள
பாட்டி இருப்பாள்.
தாத்தாவின்
நடுங்கும் கரம் பிடித்து
நடக்கையில்
முதுமை அழகாய்த் தெரியும்!
ஓடும் ரயிலுக்கு
டாட்டா காட்டிய பொழுதுகள்
விவரிக்க முடியாத
பரவசத் தருணங்கள்...
சொப்பனங்களில் கூட
பயமுறுத்துவார்
பகலில் கும்பிட்ட
அத்துவானக் காட்டு அய்யனார்!
நிலவொளியில்
அமர்ந்து ரசித்த
வள்ளித் திருமணம்,
ஆசையாய் ஊதிய
பூவரச இலை நாதஸ்வரம்,
தேடிச் சேகரித்த
மயிலிறகு,
சேர்ந்து ஆக்கிய
கூட்டாஞ்சோறு,
காக்கா கடி
கடித்துக் கொடுத்த
கல்மிஷம் இல்லாத சிநேகமென...
எப்போதும்
அசை போடச் சிறந்ததாய்
என் யவ்வனப் பருவம்!...
அம்மாவாய் தான்
திருப்தியில்லை
கணினி படித்து
பீஸா கொரித்து
கார்ட்டூனோடு தூங்கிப்போகும்
மகனைப் பார்க்கையில்...
கதை சொல்லித்
தூங்க வைக்க
கண்ட கனவைப்
பகிர்ந்து கொள்ள
பாட்டி இருப்பாள்.
தாத்தாவின்
நடுங்கும் கரம் பிடித்து
நடக்கையில்
முதுமை அழகாய்த் தெரியும்!
ஓடும் ரயிலுக்கு
டாட்டா காட்டிய பொழுதுகள்
விவரிக்க முடியாத
பரவசத் தருணங்கள்...
சொப்பனங்களில் கூட
பயமுறுத்துவார்
பகலில் கும்பிட்ட
அத்துவானக் காட்டு அய்யனார்!
நிலவொளியில்
அமர்ந்து ரசித்த
வள்ளித் திருமணம்,
ஆசையாய் ஊதிய
பூவரச இலை நாதஸ்வரம்,
தேடிச் சேகரித்த
மயிலிறகு,
சேர்ந்து ஆக்கிய
கூட்டாஞ்சோறு,
காக்கா கடி
கடித்துக் கொடுத்த
கல்மிஷம் இல்லாத சிநேகமென...
எப்போதும்
அசை போடச் சிறந்ததாய்
என் யவ்வனப் பருவம்!...
அம்மாவாய் தான்
திருப்தியில்லை
கணினி படித்து
பீஸா கொரித்து
கார்ட்டூனோடு தூங்கிப்போகும்
மகனைப் பார்க்கையில்...