PDA

View Full Version : ஹைக்கூ...!



franklinraja
08-11-2006, 09:17 AM
சுற்றிலும் முட்களிருந்தும்
சிரிப்பை விடவில்லையே
-ரோஜாப் பூ

நன்றி - இரா. பார்த்திபன் (நடிகர்)

பென்ஸ்
08-11-2006, 09:44 AM
பிராங்..
அருமையான கவிதையை தேடி கொடுத்தமைக்கு நன்றி...
ஆனால் இதை இலக்கியங்கள் , புத்தகங்கள் பகுதியில் பதிப்பது வழக்கம்...

பென்ஸ்
08-11-2006, 09:48 AM
இரவெல்லாம் முட்படுக்கையில்
அழுதாயோ ரோஜாவே...
இதழெல்லாம் பனித்துளி

franklinraja
08-11-2006, 10:34 AM
பிராங்..
அருமையான கவிதையை தேடி கொடுத்தமைக்கு நன்றி...
ஆனால் இதை இலக்கியங்கள் , புத்தகங்கள் பகுதியில் பதிப்பது வழக்கம்...

ஆஹா..
மறந்தாப்ல போட்டுட்டேனே..

அறிஞர் அய்யா வாங்க...
இதைக் கொஞ்சம் இலக்கியப் பகுதில போட்டிடுங்க..!!

franklinraja
08-11-2006, 10:36 AM
இரவெல்லாம் முட்படுக்கையில்
அழுதாயோ ரோஜாவே...
இதழெல்லாம் பனித்துளி

அழகு ! :cool:

ஓவியா
08-11-2006, 05:36 PM
இரவெல்லாம் முட்படுக்கையில்
அழுதாயோ ரோஜாவே...
இதழெல்லாம் பனித்துளி



நல்ல கர்ப்பனை....பெஞ்சமின்

இதழெல்லாம் பனித்துளி - இருந்தும்
தாகத்துடன் காத்திருப்பு
சூரியனின் முத்ததிற்காக...

pradeepkt
09-11-2006, 03:02 AM
அழுதா எப்படி இதழில் கண்ணீர்...
எப்படி இருந்தாலும் ஆனந்தக் கண்ணீராகத்தான் இருக்கும். ரோஜாவின் பெருமையே அதுதானே...

பென்ஸ்
09-11-2006, 06:26 AM
பிரதிப்...
நீங்கள் கண்ணிரை சுவைத்ததில்லையா....
தாமரையை கேளுங்கள்...
அவரை மாதிரியே நானும்... நீலி கண்ணீரை சுவைத்திருக்கிறேன்...

ஓவியா
09-11-2006, 06:42 PM
ஆமாம் ஆமாம்

ஒரு ஆம்பள மனசு இன்னோரு ஆம்பளைக்குதானே தெரியும்.....(நன்றி: பிரதீப்).....