mukilan
08-11-2006, 03:57 AM
பல நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அ.தி.மு.க அவைத்தலைவருமான திரு.காளிமுத்து மாரடைப்பினால் காலமானார். சிறந்த பேச்சாளர். முக்கியமாக "கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது" என்ற பிரபலமான சொற்றொடருக்குச் சொந்தமானவர். அவரது ஆத்மா சாந்தியடைவதாக.