பாரதி
05-10-2006, 11:39 PM
வலி
நேற்று அப்படித்தான்....
காலை எட்டேகால் மணி இருக்கும்.
வேகமாக ஓடி வந்த சத்யா "அப்பா... பஸ்ஸு போயிருச்சுப்பா... ஸ்கூல்ல கொண்டு போயி விடுப்பா..." என்றான்.
"நேரத்துக்கு போகாம என்னடா பண்ணிகிட்டு இருந்த...? ஒரு பத்து நிமிசம் முன்னாடி போனாத்தான் என்ன..?"
"எப்பயும் போற நேரந்தாப்பா... பஸ்ஸு இன்னைக்கு சீக்கிரம் போயிருச்சு.... ப்ளீஸ்ப்பா..."
"பெட்ரோல் விக்கிற வெலைல... நானே பஸ்ஸுலதான் போறேன். உன்ன ஸ்கூல்ல விடணும்னா தண்டத்துக்கு பெட்ரோலுக்கு அழணும்" சலிப்பில் அவனிடம் கத்தினேன்.
கண்களில் நீர் திரண்டு அழப்போகும் நிலையிலிருந்த அவனைக் கண்டதும் "சரி சரி - அழுது தொலக்காத. கொண்டு போயி விடுறேன்" என்றேன்.
--------------------------------------------------------------
இன்றைக்கு என்னடா வென்றால் ... பேருந்து நிறுத்தத்தில் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது...?
"சை" என்றிருந்தது. சீக்கிரமாக பேருந்து வந்தால் தேவலாம் போலிருந்தது. இன்றைக்கு அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாதுதான் போலும்.
எத்தனை பேருந்துகள் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கின்றன..? நாம் போக வேண்டிய பேருந்து மட்டும் எப்போதும் ஏன் தாமதமாக வருகிறது என்பது மட்டும் புரியாத புதிர்தான்.
ஒரு வழியாக பேருந்தை கண்டதும் வந்த மகிழ்ச்சி, கூட்டத்தை பார்த்ததும் காணாமல் போனது. அடித்துப் பிடித்து, பேருந்தில் ஏறி பயணச்சீட்டை வாங்குவதற்குள் 'போதும் போதும்' என்றாகிவிட்டது.
இன்றைக்கு எத்தனை வேலைகள் இருக்கிறதோ என்று மனம் அலுத்துக்கொள்ளும் நேரத்தில் ' சுரீர்' என்ற வலி.. வலது கால் சுண்டுவிரலை ஒரு செருப்புக் கால் நசுக்கிக்கொண்டிருந்தது.
வலியும் கோபமும் தாங்க முடியாமல் " கொஞ்சமாச்சும் அறிவிருக்கா....? இப்படி மாடு மாதிரி மிதிச்சுகிட்டிருக்கியே.. கால எடுய்யா.." என்று கத்தினேன்.
காலை மிதித்தவர் "அடடா... சாரிங்க... தெரியாம மிதிச்சுட்டேன்" என்றார்.
"ஆமாய்யா... சாரி... சொன்னா போதுமா...? விரல்ல வலி உயிர் போற மாதிரி இருக்கு... ஒனக்கென்ன தெரியப்போகுது...?"
"கூட்ட நெரிசல்ல தெரியாம செஞ்சுட்டேங்க... மன்னிச்சுக்கோங்க..."
"ஆமா.... படிச்சவர் மாதிரி இருங்க... ஆனா கூட்டத்துல எப்படி நடந்துக்கணும்னு மாத்திரம் தெரியாது....ஹும்... என்ன ஆளுங்களோ" முனகிய படியே விரலைப் பார்த்தேன். நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை என்று மனதிற்குள் சற்றே மகிழ்ச்சி.
ஆனால் என் முணுமுணுப்பை கேட்ட அந்த நபரின் முகம் மட்டும் கருத்துப்போனது. "எல்லாம் நடிக்கிறானுங்க" என்று எண்ணிக்கொண்டேன்.
--------------------------------------------------------------
நினைத்த படியே அலுவலகத்திற்குள் நுழையும் போது பதினைந்து நிமிடங்கள் தாமதமாகி விட்டது. மேலாளர் என்ன சொல்வாரோ என்று நினைத்துக்கொண்டே இருக்கையில் அமர்ந்தேன். உடனே மேசையில் இருந்த தொலைபேசி அலறியது.
"கொஞ்சம் ரூமுக்கு வந்துட்டுப்போங்க..." - மேலாளர்தான்.
'இன்னைக்கு என்ன சொல்லப் போறானோ' என்று நினைத்துக்கொண்டே மேலாளர் அறைக்குள் நுழைந்தேன்.
"என்ன சார்.. இப்படி நீங்க லேட்டா வந்தா எப்படி...? கஸ்டமர்களுக்கு நேரமாகாதா...?"
"இல்ல சார்... பஸ்ஸு வர்றதுக்கு லேட்டாயிருச்சு..."
"நீங்களும் படிச்சவர்தானே சார்... இதுதான் மொத தடவன்னா சரி... இந்த மாசத்துல இப்படி நடக்குறது எத்தனையாவது தடவன்னு நான் சொல்ல வேண்டியதில்ல.."
"நான் நேரத்துக்குதான் சார் வந்தேன். பஸ்ஸுதான்...."
"ச்சு... சும்மா கத விடாதீங்க சார். உங்களுக்கு மாத்திரம் எப்பவும் பஸ்ஸு லேட்டு. ஆனா நீங்க மாத்திரம் கரெக்ட்டு. அப்படித்தான..!
கொஞ்சம் முன்னாடி வந்தா கொறஞ்சு போயிருவீங்களோ..? இதுதான் லாஸ்ட் டைம். இனிமே லேட்டா வந்தா 'ஆக்சன்' எடுக்க வேண்டி வரும். நீங்க போகலாம்..."
முகத்தில் அறைந்தது போல இருந்தது.
'பொடிப்பய... என்ன பேச்சு பேசறான்..?' - எரிச்சலாக வந்தது.
பேருந்தில் அடிபட்ட விரல் வலிப்பது போல இருந்தது. பேசாம 'மெடிக்கல் லீவு' போட்டுருக்கலாமோ என்று யோசித்தேன்.
--------------------------------------------------
மாலையில் வீட்டுக்குள் போகும் போது, "அப்பா..." சந்தோசமாக சொல்லிக் கொண்டே காலைக்கட்டிக்கொள்ள ஓடி வந்தான் சத்யா.
"ஆமா... அது ஒண்ணுதான் கொறச்சல்.. ஏண்டா ஓடிவர்ற..? எங்கயாவது விழுந்து வைக்கப்போற.." - திட்டிக்கொண்டே அவனுடைய முகத்தைப்பார்த்தேன்.
மலர்ந்திருந்த அவன் முகம் கூம்பிப்போனது...
லேசாக நெற்றியில் வீங்கியிருப்பது போல தோன்றியது.
"என்னடா... எங்கனாச்சும் விழுந்தியா...?"
"இல்லியே..."
அவன் தாத்தாவும் "அப்படியெல்லாம் ஒண்ணும் தெரியலயே.." என்றார்.
"பஸ்ஸூல ஒரு வெளங்காதவன் வெரல நல்லா மிதிச்சுட்டான்.
இன்னும் வலிக்குது. வெந்நி ஒத்தடம் கொடுக்கணும். ஏதாச்சும் ஆயிண்மெண்ட் இருந்தா கொண்டா..." என்றபடியே விரலைத் தடவிக்கொடுத்தேன்.
மருந்து பூசியதும் ஏற்பட்ட சூட்டில்... வலி குறைந்தாற் போல இருந்தது.
--------------------------------------------------------------
தூங்கப்போகும் நேரத்தில்.... படுக்கையில்...
"அப்பா... நீங்க காலைல ஸ்கூல்ல கொண்டு வந்து விட்டதப்பாத்து, என்னோட ஃபிரெண்ட்ஸு எல்லாரும் நீங்கதான் என்னோட அப்பாவான்னு கேட்டாங்க..."
"நீ என்ன சொன்ன...?"
"ஆமா.. ன்னு சொன்னேன் - ஏம்ப்பா... இனிமே பஸ் லேட்டானா நீங்க ஸ்கூல்ல கொண்டு வந்து விடுவீங்கதான.."
"ஓஹோ... தொரைக்கு அப்படி வேற ஆச இருக்கா... சர்தான்.... இனிமே ஸ்கூலுக்கு கூட்டிட்டு போக முடியாதுன்னு சொன்னா ...?"
உடனே அவன் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்தது.
அவன் எதுவும் பேசவில்லை.
முகம் சிவந்து, மூக்கு விடைக்க கோபத்தில் எதிர் பக்கமாக புரண்டு படுத்தான்.
அப்போதுதான் கவனித்தேன்.... முழங்கைக்கு மேலே இடது கையில் இரண்டு இஞ்சு அளவிற்கு ஒரு வெட்டுக்காயம். இரத்தம் வந்து காய்ந்து போயிருந்தது. வீட்டுக்கு வரும் போது சீருடை மறைத்திருந்ததால் யாருமே கவனிக்கவில்லை போல - இப்போது தெளிவாக தெரிந்தது..
"என்னடா இது..? கைல எப்படி இவ்ளோ பெரிய காயம்..?"
"........."
"கேக்குறேனில்ல... பதில் சொல்றா..."
"வரிசைல வரும் போது பின்னாடி இருந்தவன் தள்ளி விட்டுட்டான். கீழ
விழுந்துட்டேன்.."
"எங்கன...?"
"ஸ்கூல்ல..."
"டீச்சர்கிட்ட சொன்னியா...?"
"........."
"ஏண்டா வீட்டுக்கு வந்ததும் சொல்லல..? மருந்து போட்டிருக்கலாம்ல..?"
"வலிக்கலப்பா.." என்றான்.
சூடு வைத்தாற் போல எனக்கு வலித்தது.
நேற்று அப்படித்தான்....
காலை எட்டேகால் மணி இருக்கும்.
வேகமாக ஓடி வந்த சத்யா "அப்பா... பஸ்ஸு போயிருச்சுப்பா... ஸ்கூல்ல கொண்டு போயி விடுப்பா..." என்றான்.
"நேரத்துக்கு போகாம என்னடா பண்ணிகிட்டு இருந்த...? ஒரு பத்து நிமிசம் முன்னாடி போனாத்தான் என்ன..?"
"எப்பயும் போற நேரந்தாப்பா... பஸ்ஸு இன்னைக்கு சீக்கிரம் போயிருச்சு.... ப்ளீஸ்ப்பா..."
"பெட்ரோல் விக்கிற வெலைல... நானே பஸ்ஸுலதான் போறேன். உன்ன ஸ்கூல்ல விடணும்னா தண்டத்துக்கு பெட்ரோலுக்கு அழணும்" சலிப்பில் அவனிடம் கத்தினேன்.
கண்களில் நீர் திரண்டு அழப்போகும் நிலையிலிருந்த அவனைக் கண்டதும் "சரி சரி - அழுது தொலக்காத. கொண்டு போயி விடுறேன்" என்றேன்.
--------------------------------------------------------------
இன்றைக்கு என்னடா வென்றால் ... பேருந்து நிறுத்தத்தில் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது...?
"சை" என்றிருந்தது. சீக்கிரமாக பேருந்து வந்தால் தேவலாம் போலிருந்தது. இன்றைக்கு அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாதுதான் போலும்.
எத்தனை பேருந்துகள் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கின்றன..? நாம் போக வேண்டிய பேருந்து மட்டும் எப்போதும் ஏன் தாமதமாக வருகிறது என்பது மட்டும் புரியாத புதிர்தான்.
ஒரு வழியாக பேருந்தை கண்டதும் வந்த மகிழ்ச்சி, கூட்டத்தை பார்த்ததும் காணாமல் போனது. அடித்துப் பிடித்து, பேருந்தில் ஏறி பயணச்சீட்டை வாங்குவதற்குள் 'போதும் போதும்' என்றாகிவிட்டது.
இன்றைக்கு எத்தனை வேலைகள் இருக்கிறதோ என்று மனம் அலுத்துக்கொள்ளும் நேரத்தில் ' சுரீர்' என்ற வலி.. வலது கால் சுண்டுவிரலை ஒரு செருப்புக் கால் நசுக்கிக்கொண்டிருந்தது.
வலியும் கோபமும் தாங்க முடியாமல் " கொஞ்சமாச்சும் அறிவிருக்கா....? இப்படி மாடு மாதிரி மிதிச்சுகிட்டிருக்கியே.. கால எடுய்யா.." என்று கத்தினேன்.
காலை மிதித்தவர் "அடடா... சாரிங்க... தெரியாம மிதிச்சுட்டேன்" என்றார்.
"ஆமாய்யா... சாரி... சொன்னா போதுமா...? விரல்ல வலி உயிர் போற மாதிரி இருக்கு... ஒனக்கென்ன தெரியப்போகுது...?"
"கூட்ட நெரிசல்ல தெரியாம செஞ்சுட்டேங்க... மன்னிச்சுக்கோங்க..."
"ஆமா.... படிச்சவர் மாதிரி இருங்க... ஆனா கூட்டத்துல எப்படி நடந்துக்கணும்னு மாத்திரம் தெரியாது....ஹும்... என்ன ஆளுங்களோ" முனகிய படியே விரலைப் பார்த்தேன். நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை என்று மனதிற்குள் சற்றே மகிழ்ச்சி.
ஆனால் என் முணுமுணுப்பை கேட்ட அந்த நபரின் முகம் மட்டும் கருத்துப்போனது. "எல்லாம் நடிக்கிறானுங்க" என்று எண்ணிக்கொண்டேன்.
--------------------------------------------------------------
நினைத்த படியே அலுவலகத்திற்குள் நுழையும் போது பதினைந்து நிமிடங்கள் தாமதமாகி விட்டது. மேலாளர் என்ன சொல்வாரோ என்று நினைத்துக்கொண்டே இருக்கையில் அமர்ந்தேன். உடனே மேசையில் இருந்த தொலைபேசி அலறியது.
"கொஞ்சம் ரூமுக்கு வந்துட்டுப்போங்க..." - மேலாளர்தான்.
'இன்னைக்கு என்ன சொல்லப் போறானோ' என்று நினைத்துக்கொண்டே மேலாளர் அறைக்குள் நுழைந்தேன்.
"என்ன சார்.. இப்படி நீங்க லேட்டா வந்தா எப்படி...? கஸ்டமர்களுக்கு நேரமாகாதா...?"
"இல்ல சார்... பஸ்ஸு வர்றதுக்கு லேட்டாயிருச்சு..."
"நீங்களும் படிச்சவர்தானே சார்... இதுதான் மொத தடவன்னா சரி... இந்த மாசத்துல இப்படி நடக்குறது எத்தனையாவது தடவன்னு நான் சொல்ல வேண்டியதில்ல.."
"நான் நேரத்துக்குதான் சார் வந்தேன். பஸ்ஸுதான்...."
"ச்சு... சும்மா கத விடாதீங்க சார். உங்களுக்கு மாத்திரம் எப்பவும் பஸ்ஸு லேட்டு. ஆனா நீங்க மாத்திரம் கரெக்ட்டு. அப்படித்தான..!
கொஞ்சம் முன்னாடி வந்தா கொறஞ்சு போயிருவீங்களோ..? இதுதான் லாஸ்ட் டைம். இனிமே லேட்டா வந்தா 'ஆக்சன்' எடுக்க வேண்டி வரும். நீங்க போகலாம்..."
முகத்தில் அறைந்தது போல இருந்தது.
'பொடிப்பய... என்ன பேச்சு பேசறான்..?' - எரிச்சலாக வந்தது.
பேருந்தில் அடிபட்ட விரல் வலிப்பது போல இருந்தது. பேசாம 'மெடிக்கல் லீவு' போட்டுருக்கலாமோ என்று யோசித்தேன்.
--------------------------------------------------
மாலையில் வீட்டுக்குள் போகும் போது, "அப்பா..." சந்தோசமாக சொல்லிக் கொண்டே காலைக்கட்டிக்கொள்ள ஓடி வந்தான் சத்யா.
"ஆமா... அது ஒண்ணுதான் கொறச்சல்.. ஏண்டா ஓடிவர்ற..? எங்கயாவது விழுந்து வைக்கப்போற.." - திட்டிக்கொண்டே அவனுடைய முகத்தைப்பார்த்தேன்.
மலர்ந்திருந்த அவன் முகம் கூம்பிப்போனது...
லேசாக நெற்றியில் வீங்கியிருப்பது போல தோன்றியது.
"என்னடா... எங்கனாச்சும் விழுந்தியா...?"
"இல்லியே..."
அவன் தாத்தாவும் "அப்படியெல்லாம் ஒண்ணும் தெரியலயே.." என்றார்.
"பஸ்ஸூல ஒரு வெளங்காதவன் வெரல நல்லா மிதிச்சுட்டான்.
இன்னும் வலிக்குது. வெந்நி ஒத்தடம் கொடுக்கணும். ஏதாச்சும் ஆயிண்மெண்ட் இருந்தா கொண்டா..." என்றபடியே விரலைத் தடவிக்கொடுத்தேன்.
மருந்து பூசியதும் ஏற்பட்ட சூட்டில்... வலி குறைந்தாற் போல இருந்தது.
--------------------------------------------------------------
தூங்கப்போகும் நேரத்தில்.... படுக்கையில்...
"அப்பா... நீங்க காலைல ஸ்கூல்ல கொண்டு வந்து விட்டதப்பாத்து, என்னோட ஃபிரெண்ட்ஸு எல்லாரும் நீங்கதான் என்னோட அப்பாவான்னு கேட்டாங்க..."
"நீ என்ன சொன்ன...?"
"ஆமா.. ன்னு சொன்னேன் - ஏம்ப்பா... இனிமே பஸ் லேட்டானா நீங்க ஸ்கூல்ல கொண்டு வந்து விடுவீங்கதான.."
"ஓஹோ... தொரைக்கு அப்படி வேற ஆச இருக்கா... சர்தான்.... இனிமே ஸ்கூலுக்கு கூட்டிட்டு போக முடியாதுன்னு சொன்னா ...?"
உடனே அவன் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்தது.
அவன் எதுவும் பேசவில்லை.
முகம் சிவந்து, மூக்கு விடைக்க கோபத்தில் எதிர் பக்கமாக புரண்டு படுத்தான்.
அப்போதுதான் கவனித்தேன்.... முழங்கைக்கு மேலே இடது கையில் இரண்டு இஞ்சு அளவிற்கு ஒரு வெட்டுக்காயம். இரத்தம் வந்து காய்ந்து போயிருந்தது. வீட்டுக்கு வரும் போது சீருடை மறைத்திருந்ததால் யாருமே கவனிக்கவில்லை போல - இப்போது தெளிவாக தெரிந்தது..
"என்னடா இது..? கைல எப்படி இவ்ளோ பெரிய காயம்..?"
"........."
"கேக்குறேனில்ல... பதில் சொல்றா..."
"வரிசைல வரும் போது பின்னாடி இருந்தவன் தள்ளி விட்டுட்டான். கீழ
விழுந்துட்டேன்.."
"எங்கன...?"
"ஸ்கூல்ல..."
"டீச்சர்கிட்ட சொன்னியா...?"
"........."
"ஏண்டா வீட்டுக்கு வந்ததும் சொல்லல..? மருந்து போட்டிருக்கலாம்ல..?"
"வலிக்கலப்பா.." என்றான்.
சூடு வைத்தாற் போல எனக்கு வலித்தது.