leomohan
04-10-2006, 03:51 AM
தமிழ் மன்ற கலைஞர்களே கவிஞர்களே அறிஞர்களே இந்த கவிதை மூன்று பாகமாக உள்ளது. சற்றும் சம்பந்தமில்லாத இரு வெவ்வேறு சூழலில் வளரும் குழந்தைகளைப் பற்றியது. அவசியம் படித்து உங்கள் மேலான கருத்தை சொல்லுங்கள்.
இங்கோ இருவர் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டு உடலால் காதல் கண்டு
பெண் வயிற்றில் ஒரு பளு சுமந்து அவளுக்காக அவன் கணவன் செய்த தொண்டு
பாத்திரம் கழுவி வீடு பெருக்கி சமையல் செய்து அவளுக்கு அளித்து
மருந்தை அளித்து மருத்தவரிடம் அழைத்துச் சென்று அவள் ஏக்கத்தை கழித்து
அவளை சீராட்டி சிங்காரித்து சீமந்தம் செய்து அவள் குழந்தைக்கு நான் தந்தை என்று
பறைசாற்றி
வந்தவர்க்கு உணவு பரிமாறி உடை வழங்கி வருவது ஆணா பெண்ணா என்று மகிழ்ந்து
அரற்றி
பத்து மாதம் சென்று நாள் வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி
உள்ளே அவளின் அழுகுரலை கேட்கச்சகிக்காமல் மருத்துவரைத் தேடி
எப்படி இருக்கிறாள் என் மனைவி என்று மீண்டும் மீண்டும் விசாரித்து
எனக்கு சேய்வேண்டாம் தாயை மட்டுமாவது காப்பாற்றுங்கள் என்று உரைத்து
பதர வேண்டாம் நண்பா தாயும் சேயும் நலம் என்ற சேதி கேட்டு விண்னைத்தொட்டு
ஓடிச்சென்று மனைவியை நன்றி கண்ணோடு பார்த்து அவள் நெற்றியில் முத்தமிட்டு
அவள் அருகே படுத்திருக்கும் பிஞ்சைக் கண்டு பூரித்து புளங்காகிதம் அடைந்து
அவன் கண் என்னைப்போல உள்ளதா உன்னைப்போல உள்ளதா என்று கடைந்து
என் குடும்பத்திற்கு ஒரு வாரிசை உருவாக்கி விட்டாயே என்று அவளுக்கு நன்றி கூறி
தாயையும் சேயையும் உயிருடன் காத்து நின்ற மருத்துவருக்கு கோடி நன்றி நன்றி
என்று வீட்டுக்கு அவளை அழைத்து செல்லலாம் என்று அனைவரையும் கேட்டு
மிகு விலை கொடுத்து சிறந்த மகிழ்வுந்தை அழைத்து அவளையும் குழந்தையையும் அன்பாள் அதில்
இட்டு
வீடு வந்ததும் அவளுக்கு பூசை செய்து பொட்டு வைத்து திருஷ்டி கழித்து
அவளுக்காக வாங்கி வைத்திருந்த பரிசை ரகசியமாய் அளித்து
குழந்தையின் தாத்தா பாட்டி குழந்தையை கொஞ்சும் போது ரகசியமாய் மனைவியை
கொஞ்சி
பச்சை உடம்பில் காயம் பட்டுவிடுமோ என்று காமம் கொள்வதற்கு அஞ்சி
தூரத்திலிருந்தே என் மனைவியை ரசிப்பேன் என்று காதலுக்கு காமம் மட்டுமே
தேவையில்லை என்று உணர்த்தி
என்னை இப்படி பயமுறுத்திவிட்டாயே என் செல்லக் குறத்தி
இப்படியாக அன்பிற்கும் பண்பிற்கும் காதலுடன் கடமையுடன் இருந்த இருவருக்கு பிறந்ததாம்
ஒரு குழந்தை!
அங்கோ இருவர் கண்டவர் கண்டு திருமணம் என்ற சடங்கை முடித்து
கட்டில் என்றால் காமம் கொள்ளத்தான் என்ற ஒருவரையொருவர் குதறி கடித்து
பிள்ளை தாச்சி என்று பாராமல் குடித்துவிட்டு மனைவியை அடித்து உதைத்து
சொல்லொண்ணா சொற்களால் அவள் நெஞ்சை வதைத்து
பிள்ளை தாங்கியுள்ள வயிற்றுடன் வேலைக்கு போ என்று சொல்லி
அவள் சம்பாதித்து வந்த ஓரிரு ரூபாயிலும் மது மாமிசங்களை அள்ளி
உள்வளரும் அந்த சிசுவுக்கு கிடைக்க இருந்து உணவை தடுத்து
கொடுமைகளை செய்கிறான் அவள் மேல் அடுத்தடுத்து
ஆசையை அடக்கத்தெரியாமல் தன் உயிரை சுமப்பவளை விலைமாதாய் நினைத்து
வெறி அடங்கியதும் அவளை ஒரு பொருட்டாக எண்ணாமல் சிதைத்து
கூலிக்கு வேலை செய்பவனின் வைராக்கியம் என்ன அவள் தெருவில் ஒரு நாள் உருள
அதைக்கண்டு அவள் சேரியில் உள்ள அக்கம்பக்க மக்கள் திரள
ஓடிச் சென்ற ஏவரோ ஒரு ரிட்சாவை அழைத்து வர
அவளை அதில் பதமாக ஏற்ற பலர் கைகளை தர
அரசாங்க மருத்துவமனையில் ஏதோ ஒரு மூலையில் அவள் பிள்ளையை பெற
சாராய போதையில் வீழ்ந்து கிடந்த அவள் கணவனுக்கு யார் மூலமோ செய்தி சேர
பத்து நாட்கள் கழித்து அவளாக வீட வந்து பின்னும்
குழந்தையை அவன் கொஞ்ச ஒரு முறையும் வரவில்லை இன்னும்
எவனுக்கடி பெத்த இந்த பையனை என்று மனைவியை வேசி என்று அழைக்காத குறை
எப்போ வேலைக்கு போவே என்று அவள் தாய்மைக்கு போட்டானே ஒரு திரை
இன்னும் ஒரு மாசம் என்னல் முடியாதுங்க என்று இவள் பரிதாபமாக சொல்ல
இந்த சனியனால தானே நீ வேலைக்கு போகலை என்று சென்றான் அதைக் கொல்ல
அந்த பரிதாபமமோ தாயின் வயிற்றிலிருக்கும் போதே உண்ணவில்லை
இந்த தந்தை தாயிடம் தான் பிறப்பேன் என்று முன்பே எண்ணவில்லை
இப்படியாக காமத்திற்கும் வறுமைக்கும் பொறுப்பற்றதனத்திற்கும் பஞ்சத்திற்கும் பிறந்ததாம்
மற்றோரு குழந்தை
இங்கோ இருவர் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டு உடலால் காதல் கண்டு
பெண் வயிற்றில் ஒரு பளு சுமந்து அவளுக்காக அவன் கணவன் செய்த தொண்டு
பாத்திரம் கழுவி வீடு பெருக்கி சமையல் செய்து அவளுக்கு அளித்து
மருந்தை அளித்து மருத்தவரிடம் அழைத்துச் சென்று அவள் ஏக்கத்தை கழித்து
அவளை சீராட்டி சிங்காரித்து சீமந்தம் செய்து அவள் குழந்தைக்கு நான் தந்தை என்று
பறைசாற்றி
வந்தவர்க்கு உணவு பரிமாறி உடை வழங்கி வருவது ஆணா பெண்ணா என்று மகிழ்ந்து
அரற்றி
பத்து மாதம் சென்று நாள் வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி
உள்ளே அவளின் அழுகுரலை கேட்கச்சகிக்காமல் மருத்துவரைத் தேடி
எப்படி இருக்கிறாள் என் மனைவி என்று மீண்டும் மீண்டும் விசாரித்து
எனக்கு சேய்வேண்டாம் தாயை மட்டுமாவது காப்பாற்றுங்கள் என்று உரைத்து
பதர வேண்டாம் நண்பா தாயும் சேயும் நலம் என்ற சேதி கேட்டு விண்னைத்தொட்டு
ஓடிச்சென்று மனைவியை நன்றி கண்ணோடு பார்த்து அவள் நெற்றியில் முத்தமிட்டு
அவள் அருகே படுத்திருக்கும் பிஞ்சைக் கண்டு பூரித்து புளங்காகிதம் அடைந்து
அவன் கண் என்னைப்போல உள்ளதா உன்னைப்போல உள்ளதா என்று கடைந்து
என் குடும்பத்திற்கு ஒரு வாரிசை உருவாக்கி விட்டாயே என்று அவளுக்கு நன்றி கூறி
தாயையும் சேயையும் உயிருடன் காத்து நின்ற மருத்துவருக்கு கோடி நன்றி நன்றி
என்று வீட்டுக்கு அவளை அழைத்து செல்லலாம் என்று அனைவரையும் கேட்டு
மிகு விலை கொடுத்து சிறந்த மகிழ்வுந்தை அழைத்து அவளையும் குழந்தையையும் அன்பாள் அதில்
இட்டு
வீடு வந்ததும் அவளுக்கு பூசை செய்து பொட்டு வைத்து திருஷ்டி கழித்து
அவளுக்காக வாங்கி வைத்திருந்த பரிசை ரகசியமாய் அளித்து
குழந்தையின் தாத்தா பாட்டி குழந்தையை கொஞ்சும் போது ரகசியமாய் மனைவியை
கொஞ்சி
பச்சை உடம்பில் காயம் பட்டுவிடுமோ என்று காமம் கொள்வதற்கு அஞ்சி
தூரத்திலிருந்தே என் மனைவியை ரசிப்பேன் என்று காதலுக்கு காமம் மட்டுமே
தேவையில்லை என்று உணர்த்தி
என்னை இப்படி பயமுறுத்திவிட்டாயே என் செல்லக் குறத்தி
இப்படியாக அன்பிற்கும் பண்பிற்கும் காதலுடன் கடமையுடன் இருந்த இருவருக்கு பிறந்ததாம்
ஒரு குழந்தை!
அங்கோ இருவர் கண்டவர் கண்டு திருமணம் என்ற சடங்கை முடித்து
கட்டில் என்றால் காமம் கொள்ளத்தான் என்ற ஒருவரையொருவர் குதறி கடித்து
பிள்ளை தாச்சி என்று பாராமல் குடித்துவிட்டு மனைவியை அடித்து உதைத்து
சொல்லொண்ணா சொற்களால் அவள் நெஞ்சை வதைத்து
பிள்ளை தாங்கியுள்ள வயிற்றுடன் வேலைக்கு போ என்று சொல்லி
அவள் சம்பாதித்து வந்த ஓரிரு ரூபாயிலும் மது மாமிசங்களை அள்ளி
உள்வளரும் அந்த சிசுவுக்கு கிடைக்க இருந்து உணவை தடுத்து
கொடுமைகளை செய்கிறான் அவள் மேல் அடுத்தடுத்து
ஆசையை அடக்கத்தெரியாமல் தன் உயிரை சுமப்பவளை விலைமாதாய் நினைத்து
வெறி அடங்கியதும் அவளை ஒரு பொருட்டாக எண்ணாமல் சிதைத்து
கூலிக்கு வேலை செய்பவனின் வைராக்கியம் என்ன அவள் தெருவில் ஒரு நாள் உருள
அதைக்கண்டு அவள் சேரியில் உள்ள அக்கம்பக்க மக்கள் திரள
ஓடிச் சென்ற ஏவரோ ஒரு ரிட்சாவை அழைத்து வர
அவளை அதில் பதமாக ஏற்ற பலர் கைகளை தர
அரசாங்க மருத்துவமனையில் ஏதோ ஒரு மூலையில் அவள் பிள்ளையை பெற
சாராய போதையில் வீழ்ந்து கிடந்த அவள் கணவனுக்கு யார் மூலமோ செய்தி சேர
பத்து நாட்கள் கழித்து அவளாக வீட வந்து பின்னும்
குழந்தையை அவன் கொஞ்ச ஒரு முறையும் வரவில்லை இன்னும்
எவனுக்கடி பெத்த இந்த பையனை என்று மனைவியை வேசி என்று அழைக்காத குறை
எப்போ வேலைக்கு போவே என்று அவள் தாய்மைக்கு போட்டானே ஒரு திரை
இன்னும் ஒரு மாசம் என்னல் முடியாதுங்க என்று இவள் பரிதாபமாக சொல்ல
இந்த சனியனால தானே நீ வேலைக்கு போகலை என்று சென்றான் அதைக் கொல்ல
அந்த பரிதாபமமோ தாயின் வயிற்றிலிருக்கும் போதே உண்ணவில்லை
இந்த தந்தை தாயிடம் தான் பிறப்பேன் என்று முன்பே எண்ணவில்லை
இப்படியாக காமத்திற்கும் வறுமைக்கும் பொறுப்பற்றதனத்திற்கும் பஞ்சத்திற்கும் பிறந்ததாம்
மற்றோரு குழந்தை