PDA

View Full Version : பயங்கரவாதம்



mgandhi
01-10-2006, 05:33 PM
பயங்கரவாதம் பரவிட்டது - இந்த
பரந்த உலகம் அனைத்திலும்,
தடி எடுத்தகாலம் மாறி - இப்போ
வெடிகுன்டு கலாச்சாரம் பெருகிவிட்டது

பணத்திர்க்கு தரும் மரியாதையை - இந்த
உலகம் மனிதஉயிர்க்கு தருவதில்லை,
மதத்திர்க்கு தரும் உணர்வுகளை - இந்த
மக்கள் மனித நேயத்திற்கு தருவதில்லை

காந்தி பிறந்த இந்நாளில் - அவர்
சிலைக்கு மாலை அணிவிப்பதுடன் - நம்
கடமை தீர்ந்து விடுவதில்லை -அவர்
அகிம்சை வழி நடப்போம் வாரீர்

Mano.G.
02-10-2006, 02:30 AM
என்று தீரும் இந்த அப்பாவி உயிர்களை பலிகொள்வது
உயிரை மாய்த்துதான் தாங்கள் சாதிக்க முடியுமென்றால்
அந்த வெற்றி நமக்கு தேவையில்லை
மனித நேயம் ஒருபக்கம் தோய்வடைகிறது
ஒருபக்கமோ செய்வதறியாது திகைத்து நிற்கிரது
ஒருபக்கமோ மனிதநேயம் என்று ஒன்று உள்ளதா என எண்ண தோன்றுகிறது

அஹீம்சை வழி நட என கூறிய நாட்டிலேயே தீவிரவாதம்
என்ன நடக்குமோ நம் எதிர்கால சந்ததிக்கு

தீவிரவாதத்தை தவிர்ப்போம்
எதிர்ப்போம்


மனோ.ஜி

ஓவியா
03-10-2006, 07:15 PM
அருமையான கருத்து கவிதை,

பணத்திர்க்கு தரும் மரியாதையை - இந்த
உலகம் மனிதஉயிர்க்கு தருவதில்லை,


தொடரவும்

அறிஞர்
03-10-2006, 07:26 PM
பணமும், மதமும் மக்களை ஆட்டி படைக்கிறது...

இதிலிருந்து.. விடுபட்டால்.. தீவிரவாதம் ஒழியும்....

pradeepkt
04-10-2006, 04:22 AM
சரியான நேரத்தில் வந்த சரியான கவிதை.