PDA

View Full Version : மரணம்!



crisho
29-09-2006, 11:55 AM
http://mytamilchannel.com/mytamil/mytamilpic/maranam.jpg

சிறகு முறிந்தால் பறவை மரணம்
சிந்தனை சிதைந்தால் கவிதை மரணம்
கற்றல் நின்றால் கல்வி மரணம்
கடமை மறைந்தால் வாழ்வே மரணம்

கதிரவன் மறைந்தால் பகலே மரணம்
கடவுளை மறந்தால் கண்ணியம் மரணம்
உடையவள் பிரிந்தால் உறவே மரணம்
சுழல்வது நின்றால் உலகே மரணம்

கருவிழி கெட்டால் கதையே மரணம்
கருகுறை பட்டால் கதையே மரணம்
நல்வழி மறந்தால் நன்னெறி மரணம்
பல்வழி சென்றால் பயணம் மரணம்

உழைப்பை மறந்தால் உயர்வு மரணம்
பழிச்சொல் பகன்றால் பண்பே மரணம்
பாவம் செய்தால் பதவி மரணம்
நன்றி மறந்தால் நாளும் மரணம்

நன்றி ப.சுப்பிரமணியம். தமிழ் நேசன் (மலேசியா)

ஓவியா
09-02-2007, 09:28 PM
அருமை. சிந்திக்க வைக்கின்றது

வழங்கிய கிரிஷ்கோ அவர்களுக்கும்
எழுதிய ப.சுப்பிரமணியம். அவர்களுக்கும் நன்றி.

விகடன்
11-02-2007, 03:45 AM
கருத்து மிக்க கவிதை.

எத்தனை நாட்கள் செலவிட்டீர்கள் இந்த கவிதையை வரைந்து முடிப்பதற்கு...

எனக்கு அந்தளவு பரீட்சயமில்லை. அதனால்த்தான் கேற்கிறேன்.

ஓவியன்
15-02-2007, 09:01 AM
http://mytamilchannel.com/mytamil/mytamilpic/maranam.jpg

உழைப்பை மறந்தால் உயர்வு மரணம்
பழிச்சொல் பகன்றால் பண்பே மரணம்
பாவம் செய்தால் பதவி மரணம்
நன்றி மறந்தால் நாளும் மரணம்

நன்றி ப.சுப்பிரமணியம். தமிழ் நேசன் (மலேசியா)


அழுத்தமான, ஆழமான வரிகள்!

கவிதையுடன் இணைத்திருந்த ஓவியமும் பல கவிதைகள் சொல்லி நிற்கின்றது,

மயூ
15-02-2007, 09:15 AM
நல்ல வரிகள்....
பாராட்டுகள்.... சிந்திக்கத் தூண்டினது..