crisho
29-09-2006, 11:55 AM
http://mytamilchannel.com/mytamil/mytamilpic/maranam.jpg
சிறகு முறிந்தால் பறவை மரணம்
சிந்தனை சிதைந்தால் கவிதை மரணம்
கற்றல் நின்றால் கல்வி மரணம்
கடமை மறைந்தால் வாழ்வே மரணம்
கதிரவன் மறைந்தால் பகலே மரணம்
கடவுளை மறந்தால் கண்ணியம் மரணம்
உடையவள் பிரிந்தால் உறவே மரணம்
சுழல்வது நின்றால் உலகே மரணம்
கருவிழி கெட்டால் கதையே மரணம்
கருகுறை பட்டால் கதையே மரணம்
நல்வழி மறந்தால் நன்னெறி மரணம்
பல்வழி சென்றால் பயணம் மரணம்
உழைப்பை மறந்தால் உயர்வு மரணம்
பழிச்சொல் பகன்றால் பண்பே மரணம்
பாவம் செய்தால் பதவி மரணம்
நன்றி மறந்தால் நாளும் மரணம்
நன்றி ப.சுப்பிரமணியம். தமிழ் நேசன் (மலேசியா)
சிறகு முறிந்தால் பறவை மரணம்
சிந்தனை சிதைந்தால் கவிதை மரணம்
கற்றல் நின்றால் கல்வி மரணம்
கடமை மறைந்தால் வாழ்வே மரணம்
கதிரவன் மறைந்தால் பகலே மரணம்
கடவுளை மறந்தால் கண்ணியம் மரணம்
உடையவள் பிரிந்தால் உறவே மரணம்
சுழல்வது நின்றால் உலகே மரணம்
கருவிழி கெட்டால் கதையே மரணம்
கருகுறை பட்டால் கதையே மரணம்
நல்வழி மறந்தால் நன்னெறி மரணம்
பல்வழி சென்றால் பயணம் மரணம்
உழைப்பை மறந்தால் உயர்வு மரணம்
பழிச்சொல் பகன்றால் பண்பே மரணம்
பாவம் செய்தால் பதவி மரணம்
நன்றி மறந்தால் நாளும் மரணம்
நன்றி ப.சுப்பிரமணியம். தமிழ் நேசன் (மலேசியா)