PDA

View Full Version : போர் வெறி



leomohan
29-09-2006, 11:39 AM
பிணம் தின்னி கழுகுளாக மாறிய மனிதர்கள்
மதம் என்ற மதம் பிடித்த மடையர்கள்
நிலம் கேட்காத நிலத்திற்கு நீட்டிய வாள்கள்
தன்னவரையும் எதிரியையும் துளைக்கும் குண்டுகள்
கொன்று கூவித்துவிட்டு கூச்சலிடும் பீரங்கிகள்
அலைந்து பறந்து மரணத்தை அடித்த உலோகப் பறவைகள்
கால்களை காகிதமாய் துண்டித்த கண்ணி வெடிகள்
ஆடவரை இழந்து விதவையான பெண்களின் ஒப்பாரிகள்
தந்தையை இழந்து அனாதையான பிஞ்சுகளின் கூக்குரல்கள்
காதலியை தொலைத்து நாட்டிற்காக உயிர்தொலைத்த வீரர்கள்
மரணத்தை விட கொடுமையான ஊனங்கள்
அந்த ஊனத்தை குறைக்க மருந்தை விற்கும் வியாபாரிகள்
நீர் போல ஓடிய ரத்த ஆறுகள்
குருதியை குடித்து குளித்த மானிட ராட்சதர்கள்
கன்னிகளின் கற்பை சூறையாடிய கயவர்கள்
தாயின் பாலை வற்ற வைத்த நயவஞ்சகர்கள்
தாயையும் சேயையும் பிரித்த பித்தர்கள்
மண்ணிற்காக மனதை அடகு வைத்த வீணர்கள்
வெறுப்பை வளர்த்து அதில் குளிர்காணும் கோழைகள்
பெற்றவளுக்கும் மத்தவளுக்கும் வித்தியாசமறியாத கடயர்கள்
சினத்திற்கு மடை வைக்க அறியாத சிறியர்கள்
தீவுக்கும் தீர்வுக்கும் பேதம் அறியாத பேடிகள்
காட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யாத துரோகிகள்
வீட்;டிற்கும் வீதிக்கும் உண்மையில்லா உலோபிகள்
கண்ணீரை காசாக்கி மனித தோலையும் செருப்பாக்கும் சொறிநாய்கள்
ஓதுவரையும் ஆண்டவனைத் தேடுபவரையும் வதைக்கும் ஓநாய்கள்
செத்தவரின் சிதையிலிருந்து வரும் புகைகள்
அந்த புகை எடுத்து வரும் துர்நாற்றங்கள்
செங்குத்தாய் வெட்டுப்பட்டு கிடக்கும் மனித உடல்கள்
அதிலிருந்த கொட்டி தீர்த்த ரத்தங்கள்
குடல்களை மாலையாய் திரித்த தீயவர்கள்
அவர் மேல் வீசும் மந்த வாசனைகள்
பயத்தால் பறவைகள் செய்த இடமாற்றங்கள்
விலங்குகள் தன்னிடத்தைவிட்டு எடுத்த ஓட்டங்கள்
சிகையெரிந்து புன்னகையெரிந்து கிடந்த நேற்றைய மனிதர்கள்
அறிவிழந்து அறிவு தரும் ஆற்றல் இழந்த அயோக்கியர்கள்
சோறிழந்து சொந்தம் இழந்து போர்முனையில் தவிக்கும் ஆடவர்கள்
அவர் தரும் சுகத்தை இழந்து பரிதவிக்கும் பெண்கள்
தமக்கை இழந்த தமையன்கள் தமையனை இழந்த தமக்கைகள்
பொட்டிழந்து பூவிழந்த மங்கையர்கள்
பூ தரும் வாசம் மறந்த அவர் கேசங்கள்
அலட்ச்சியப்படுத்தப்பட்ட 'போர்வேண்டாம்" எனும் கோ~ங்கள்
"போர் அவசியம்" என்று அரசியல்வாதிகள் போடும் வே~ங்கள்
அதனால் பொய்யால் அவர் பரப்பும் துவே~ங்கள்
பலர் பல நாட்களாய் அறியாத பாசங்கள்
போர் முடிந்தும் போர் செய்யும் சிலரின் வீண் ரோ~ங்கள்
அவர் மறந்துவிட்ட மனித நேசங்கள்
கட்டிவைத்திருக்கும் மனித நேய கரங்கள்
கடவுள் இந்த ஈனப்பிறப்பிற்கு தர மறுத்த வரங்கள்
இன்று முடிந்துவிடும் போர் என்ற பொய் "இன்னும் பொறுங்கள்"
தீபாவளியைப் போல போர்முனையில் வெடிக்கும் ஆயிரம் சரங்கள்
வீடு திரும்பும் நாள் வருமா என்று வீரர்களின் ஏக்கங்கள்
நாட்டில் அவர் செய்ய காத்திருக்கும் பல ஆக்கங்கள்
எப்போது வெடிக்குமோ என்று விழித்திருந்து விட்ட தூக்கங்கள்
அதனால் அவர் உடலில் ஏற்பட்ட பல தாக்கங்கள்
நிறைவேறாமல் போன பல நல்ல உள்ளங்களின் நோக்கங்கள்
அதற்காக ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள்
உள்ளக் கூக்குரல் கேட்காமல் சண்டையிடும் செவுடுகள்
கத்திப் பேசினாலும் யாரும் கேட்காமல் காய்ந்த உதடுகள்
இனிமேலும் அழ சக்தியில்லாமல் ஓய்ந்து கண்கள்
அந்த கண்களின் தாரையால் தடித்த தாடைகள்
கணவனுக்காக கதவைநோக்கி காத்திருந்து சுளக்கெடுத்த கழுத்துகள்
சுவாசம் மறந்த சம்பிரதாயத்திற்கு காற்றை விட்ட மூக்குகள்
சேதி கேட்டு ஊர் மத்திக்கு ஓடி தேய்ந்த கால்கள்
நல்ல செய்தி சொல்லுங்கள் என்று ஏங்கி கைகூப்பிய கைகள்
வீரர்களின் தந்தையர் ஒடுங்கின போன முதுகுகள்
விரல் விட்டு எண்ணக் கூடிய எலும்புகள்
ஏழ்மையில் சுருங்கிப் போன தோல்கள்
இருந்தும் ஓயவில்லை சண்டையிடும் செங்கோல்கள்!
-எழுத்து: மோகன் கிருட்டிணமூர்த்தி

ஓவியா
21-11-2006, 06:40 PM
அனைவரின் ஏக்கங்ளையும் சிறப்பாய் தொடுத்துல்லீர்கள் ...
ஒவ்வொரு வரியும் சிறப்பக உள்ளது
ஒரு சில வரிகள் அப்படியே கண்ணிர் வருவதுபோல் உள்ளன.....
ஆழமான மன குமுறல்கள்

மீண்டும்-மீண்டும் படிக்க தூண்டும் பதிவு
ஓவ்வொரு வரியும் கோணி ஊசியால் தைப்பது போல் உள்ளது....

நீங்கள் எழுதி, நான்(ங்கள்) படித்து..................
யாருக்கு என்ன லாபம் நண்பரே!!!!!!!!!!!!!
இயர்க்கையே கண்மூடியிருக்கும் போழுது........

நன்றி

Mano.G.
21-11-2006, 10:38 PM
எல்லோரின் அதங்கமும் அதுதான்
ஏன் போர் எதுக்கு போர்
ஏன் இந்த ரத்த தாகம்
ஏன் அப்பாவி உயிர்களை
அநியாயமாக அழிக்கிறார்கள்

கடவுளே எல்லாம் உன் செயல்தானா?