மதி
26-09-2006, 04:21 AM
அந்த பணக் கவரை நான் வாங்கும் போது அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. பின்ன..வாழ்க்கையிலேயே முதன் முதலாய் வாங்கின ஸ்டைபண்டு ஆச்சே. இது நடந்தது 2003ம் வருடம், ஜூலை மாச இறுதியில் ஒரு நல்ல மாலைப் பொழுதில். இடம், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் (Indian Institute of Science) அலுவலகம்.
என்ன நடந்துச்சுன்னு பாப்போமா? உங்கள்ல பல பேருக்கு தெரியுமானு தெரியல. இந்திய அறிவியல் கழகத்தில் படிக்க ஆளாளுக்கு ஆசைப்பட எனக்கு அங்க ஒரு ரெண்டு மாசம் ப்ரொஜக்ட் பண்ண வாய்ப்பு கிடச்சுது. அதைப் பத்தி சில குறிப்புகள். இந்திய அறிவியல் கழகம் வருடா வருடம் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு Young Engineer Fellowship Programme என்னும் திட்டம் மூலமாக இரண்டு மாதம் அங்கு தங்கி ஒரு ப்ரொபசரின் மேற்பார்வையில் ப்ராஜக்ட் செய்யும் வாய்ப்பளித்து வருகிறது. தேர்வாகும் மாணவர்களுக்கு இரண்டு மாதம் தங்க இடமும் இன்னபிற வசதிகளும் செய்து கொடுப்பதுடன் மாதம் ஊக்கத் தொகையாக ரூபாய் இரண்டாயிரமும் தருகிறது. அவ்வளவே திட்டம் பற்றிய அறிமுகம். இதுக்கும் எனக்கும் எப்படி சம்பந்தம் வந்ததுங்கறது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதப் பத்தி இன்னொரு முறை சொல்றேன்.
கல்லூரி தேர்வெல்லாம் முடிஞ்சு கொஞ்ச நாள் கழிச்சு ஜூன் மாத இறுதியில் பெங்களூருக்கு வந்தேன். கல்லூரிக்கு போய் ப்ரொபஸரை பார்த்து ப்ராஜெக்ட் பண்ண ஆரம்பிச்சாச்சு. அங்கேயே தங்கி இருந்ததால் மிகவும் வசதியாயிருந்தது. ப்ரொபஸர் அங்கிருந்த ஆய்வக சாவியை என்கிட்ட கொடுத்துட்டார். கல்லூரியை முடிச்சாச்சு, இனிமேலாவது உருப்படியா கத்துப்போம்னு கொஞ்சம் வெறியோடு கத்துக்க ஆரம்பிச்சேன். தினமும் ஆறு மணி நேரம் தான் ஆய்வகத்தை விட்டு வெளியே இருக்கும் நேரம்.
ஒரு மாசம் ஆச்சு. ஸ்டைபண்டு வாங்க வேண்டிய நாளும் வந்துச்சு. கொஞ்சம் படபடப்பு, நிறைய சந்தோஷம் , இப்படி ஒரு மாதிரியான உணர்வுடன் கல்லூரி அலுவலகம் போய் பணத்தை வாங்கினேன். எத்தனையோ முறை அப்பாவிடமும் அம்மாவிடமும் பணம் வாங்கியிருக்கேன். ஆனா, எல்லாத்தையும் தாண்டி இந்த முறை ஒரு தனிப்பட்ட சந்தோஷம். எல்லோருக்கும் ஏதாவது வாங்கிட்டு போகணும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன்.
அன்னிக்கு ராத்திரியே திருச்சிக்கு புறப்பட்டேன். திருச்சியில் என்னுடன் பள்ளியில் படித்த நெருங்கிய நண்பன் வீடு இருந்தது. அவனும் விடுமுறைக்காக ஹைதராபாத்திலிருந்து அப்போது வந்திருந்தான். அவனை பார்த்துவிட்டு சனி இரவு வீட்டுக்குப் போவதாக திட்டம். நேராக திருச்சியில் சித்தி வீட்டுக்கு சென்றேன். பணத்தை அம்மாச்சியிடம் குடுத்துவிட்டு அவங்க காலில் விழுந்து வணங்கினேன்.
குளித்துவிட்டு கிளம்பி நண்பன் வீட்டிற்கு சென்றேன். ரொம்ப நாள் கழிச்சு பாத்ததால ஏகப்பட்ட விஷயங்கள் பேச இருந்துச்சு. பேசிக்கிட்டே என்.எஸ்.பி ரோடு போய் சாரதாஸ்ல அம்மாக்கு ஒரு புடவை, அப்பாக்கு சட்டை எல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்பினோம். இப்படியா அன்றைய பொழுத ஓட்டிட்டு மாலை சித்தி வீடு திரும்பி அம்மாச்சியிடம் நூறு ரூவாய் குடுத்துட்டு தஞ்சைக்கு கிளம்பினேன்.
எட்டு மணிவாக்கில் வீடு போய் சேர்ந்ததும் வீடு அமைதியாயிருந்தது. மனசுக்குள்ள ஒரே சந்தோஷம், பெருமிதம். அப்பா, அம்மாக்கு துணிமணில்லாம் வாங்கிட்டு வந்திருக்கோமேன்னு.
நுழைந்தவுடனே அம்மா,
என்னடாயிது துணிமணியெல்லாம்?
சும்மா தான்..நல்லாருக்கா பாருங்க
அப்பா முகத்தில சலனமேயில்ல. அட! வாங்கிட்டு வந்தத பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலியேன்னு ஒரு சின்ன சஞ்சலம். அமைதியா ரொம்ப சந்தோஷம்னு போயிட்டார். கொஞ்ச நேரம் கழிச்சு தான் உறைச்சுது. வாங்கி வச்சிருந்த ரெண்டாயிரத்தையும் முழுசா செலவழிச்சுட்டோமேன்னு.
கொஞ்ச நேரம் கழிச்சு அம்மா வந்தாங்க.
ஏண்டா, சொல்லாம கொள்ளாம நீ பாட்டுக்கு துணி எடுத்துட்டு வந்துட்ட?
ஏன், ஒரு சர்பிரைஸா இருக்கட்டுமேன்னு தான். பிடிக்கலியா?
நீ எடுத்துட்டு வந்ததெல்லாம் பிடிச்சிருக்கு. ஆனா..
என்னம்மாஆனா?
இல்ல.. வாங்கின பணத்தை அப்படியே அப்பா கையில குடுத்து அப்புறமா நீ அதை வாங்கிட்டு போய் எல்லோருக்கும் துணி வாங்கிட்டு வந்திருந்தியானா அப்பா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பார்.
தலையில இடி விழுந்தது மாதிரி இருந்துச்சு. அட இது நமக்கு தோணாம போயிடுச்சேன்னு. அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டு நம்மையும் தம்பியையும் சக்திக்கு மீறி படிக்க வச்சார். என்ன பெருசா ஆசப்பட்டுட்டார். புள்ள முத முதல்ல வாங்கின பணத்த தன்கிட்ட வந்து குடுப்பான்னு எதிர்பார்த்தார். அதையும் அவருக்குன்னு எதிர்பாக்கலை. முதன்முதலா கையில பணம் வந்ததும் தலைகால் புரியாம ஆடி அத்தனையும் செலவழிச்சுட்டு வந்து நிக்கிறேன். இதோ, எல்லாத்தையும் செலவழிச்சுட்டானே. இவன் எப்படி வாழ்க்கைய நடத்தப்போறான்னு குழம்பி நிக்கிறார்.
அன்னிக்கு முடிவு பண்ணினேன். அதற்கப்புறம் வாங்கின முதல் சம்பளத்தை அப்பாவிடம் கொடுத்துட்டு அப்புறம் வாங்கிதான் செலவு பண்ணினேன். இப்ப கூட அம்மா பொறந்தநாளுக்காக என் செலவுக்குன்னு வச்சிருந்த பணத்தில புடவை எடுத்துட்டு அப்பாகிட்ட மட்டும் சொல்லிட்டேன். அம்மாக்கு கொஞ்சம் சர்பிரைஸா இருக்கட்டுமே? என்னங்க நான் சொல்றது?
என்ன நடந்துச்சுன்னு பாப்போமா? உங்கள்ல பல பேருக்கு தெரியுமானு தெரியல. இந்திய அறிவியல் கழகத்தில் படிக்க ஆளாளுக்கு ஆசைப்பட எனக்கு அங்க ஒரு ரெண்டு மாசம் ப்ரொஜக்ட் பண்ண வாய்ப்பு கிடச்சுது. அதைப் பத்தி சில குறிப்புகள். இந்திய அறிவியல் கழகம் வருடா வருடம் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு Young Engineer Fellowship Programme என்னும் திட்டம் மூலமாக இரண்டு மாதம் அங்கு தங்கி ஒரு ப்ரொபசரின் மேற்பார்வையில் ப்ராஜக்ட் செய்யும் வாய்ப்பளித்து வருகிறது. தேர்வாகும் மாணவர்களுக்கு இரண்டு மாதம் தங்க இடமும் இன்னபிற வசதிகளும் செய்து கொடுப்பதுடன் மாதம் ஊக்கத் தொகையாக ரூபாய் இரண்டாயிரமும் தருகிறது. அவ்வளவே திட்டம் பற்றிய அறிமுகம். இதுக்கும் எனக்கும் எப்படி சம்பந்தம் வந்ததுங்கறது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதப் பத்தி இன்னொரு முறை சொல்றேன்.
கல்லூரி தேர்வெல்லாம் முடிஞ்சு கொஞ்ச நாள் கழிச்சு ஜூன் மாத இறுதியில் பெங்களூருக்கு வந்தேன். கல்லூரிக்கு போய் ப்ரொபஸரை பார்த்து ப்ராஜெக்ட் பண்ண ஆரம்பிச்சாச்சு. அங்கேயே தங்கி இருந்ததால் மிகவும் வசதியாயிருந்தது. ப்ரொபஸர் அங்கிருந்த ஆய்வக சாவியை என்கிட்ட கொடுத்துட்டார். கல்லூரியை முடிச்சாச்சு, இனிமேலாவது உருப்படியா கத்துப்போம்னு கொஞ்சம் வெறியோடு கத்துக்க ஆரம்பிச்சேன். தினமும் ஆறு மணி நேரம் தான் ஆய்வகத்தை விட்டு வெளியே இருக்கும் நேரம்.
ஒரு மாசம் ஆச்சு. ஸ்டைபண்டு வாங்க வேண்டிய நாளும் வந்துச்சு. கொஞ்சம் படபடப்பு, நிறைய சந்தோஷம் , இப்படி ஒரு மாதிரியான உணர்வுடன் கல்லூரி அலுவலகம் போய் பணத்தை வாங்கினேன். எத்தனையோ முறை அப்பாவிடமும் அம்மாவிடமும் பணம் வாங்கியிருக்கேன். ஆனா, எல்லாத்தையும் தாண்டி இந்த முறை ஒரு தனிப்பட்ட சந்தோஷம். எல்லோருக்கும் ஏதாவது வாங்கிட்டு போகணும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன்.
அன்னிக்கு ராத்திரியே திருச்சிக்கு புறப்பட்டேன். திருச்சியில் என்னுடன் பள்ளியில் படித்த நெருங்கிய நண்பன் வீடு இருந்தது. அவனும் விடுமுறைக்காக ஹைதராபாத்திலிருந்து அப்போது வந்திருந்தான். அவனை பார்த்துவிட்டு சனி இரவு வீட்டுக்குப் போவதாக திட்டம். நேராக திருச்சியில் சித்தி வீட்டுக்கு சென்றேன். பணத்தை அம்மாச்சியிடம் குடுத்துவிட்டு அவங்க காலில் விழுந்து வணங்கினேன்.
குளித்துவிட்டு கிளம்பி நண்பன் வீட்டிற்கு சென்றேன். ரொம்ப நாள் கழிச்சு பாத்ததால ஏகப்பட்ட விஷயங்கள் பேச இருந்துச்சு. பேசிக்கிட்டே என்.எஸ்.பி ரோடு போய் சாரதாஸ்ல அம்மாக்கு ஒரு புடவை, அப்பாக்கு சட்டை எல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்பினோம். இப்படியா அன்றைய பொழுத ஓட்டிட்டு மாலை சித்தி வீடு திரும்பி அம்மாச்சியிடம் நூறு ரூவாய் குடுத்துட்டு தஞ்சைக்கு கிளம்பினேன்.
எட்டு மணிவாக்கில் வீடு போய் சேர்ந்ததும் வீடு அமைதியாயிருந்தது. மனசுக்குள்ள ஒரே சந்தோஷம், பெருமிதம். அப்பா, அம்மாக்கு துணிமணில்லாம் வாங்கிட்டு வந்திருக்கோமேன்னு.
நுழைந்தவுடனே அம்மா,
என்னடாயிது துணிமணியெல்லாம்?
சும்மா தான்..நல்லாருக்கா பாருங்க
அப்பா முகத்தில சலனமேயில்ல. அட! வாங்கிட்டு வந்தத பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலியேன்னு ஒரு சின்ன சஞ்சலம். அமைதியா ரொம்ப சந்தோஷம்னு போயிட்டார். கொஞ்ச நேரம் கழிச்சு தான் உறைச்சுது. வாங்கி வச்சிருந்த ரெண்டாயிரத்தையும் முழுசா செலவழிச்சுட்டோமேன்னு.
கொஞ்ச நேரம் கழிச்சு அம்மா வந்தாங்க.
ஏண்டா, சொல்லாம கொள்ளாம நீ பாட்டுக்கு துணி எடுத்துட்டு வந்துட்ட?
ஏன், ஒரு சர்பிரைஸா இருக்கட்டுமேன்னு தான். பிடிக்கலியா?
நீ எடுத்துட்டு வந்ததெல்லாம் பிடிச்சிருக்கு. ஆனா..
என்னம்மாஆனா?
இல்ல.. வாங்கின பணத்தை அப்படியே அப்பா கையில குடுத்து அப்புறமா நீ அதை வாங்கிட்டு போய் எல்லோருக்கும் துணி வாங்கிட்டு வந்திருந்தியானா அப்பா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பார்.
தலையில இடி விழுந்தது மாதிரி இருந்துச்சு. அட இது நமக்கு தோணாம போயிடுச்சேன்னு. அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டு நம்மையும் தம்பியையும் சக்திக்கு மீறி படிக்க வச்சார். என்ன பெருசா ஆசப்பட்டுட்டார். புள்ள முத முதல்ல வாங்கின பணத்த தன்கிட்ட வந்து குடுப்பான்னு எதிர்பார்த்தார். அதையும் அவருக்குன்னு எதிர்பாக்கலை. முதன்முதலா கையில பணம் வந்ததும் தலைகால் புரியாம ஆடி அத்தனையும் செலவழிச்சுட்டு வந்து நிக்கிறேன். இதோ, எல்லாத்தையும் செலவழிச்சுட்டானே. இவன் எப்படி வாழ்க்கைய நடத்தப்போறான்னு குழம்பி நிக்கிறார்.
அன்னிக்கு முடிவு பண்ணினேன். அதற்கப்புறம் வாங்கின முதல் சம்பளத்தை அப்பாவிடம் கொடுத்துட்டு அப்புறம் வாங்கிதான் செலவு பண்ணினேன். இப்ப கூட அம்மா பொறந்தநாளுக்காக என் செலவுக்குன்னு வச்சிருந்த பணத்தில புடவை எடுத்துட்டு அப்பாகிட்ட மட்டும் சொல்லிட்டேன். அம்மாக்கு கொஞ்சம் சர்பிரைஸா இருக்கட்டுமே? என்னங்க நான் சொல்றது?