PDA

View Full Version : உன்னை கண்டு



mgandhi
15-09-2006, 05:28 PM
பூக்களும்-உன்னை கண்டு
முகம் வாடுதே
குளிர் காற்றும்-உன்னை கண்டு
வெட்கப் படுதே
நிலவும்--உன்னை கண்டு
தேய்ந்து போனதே
சூரியனும்---உன்னை கண்டு
மேகத்தில் மறைந்ததே
நான்மட்டும்-உன்னைகண்டு
மதி மயங்கியதில் வியப்பென்ன?

crisho
16-09-2006, 04:38 AM
அருமை... அருமை....
அனுபவத்தின் வெளிப்பாடோ? ;)

meera
16-09-2006, 04:48 AM
பூக்களுக்கும்,நிலவுக்கும்,சூரியனுக்கும் அந்த பாடு என்றால்,உங்களின் பாடு நிச்சயம் திண்டாட்டம் தான் அதில் ஒன்றும் வியப்பில்லை

கவிதை அருமையாய் இருக்கிறது... வாழ்த்துக்கள்...