mgandhi
04-09-2006, 04:44 AM
ஹமீத் அல் சய்தி கைதாஇராக்கில் இயங்கி வரும் அல் கொய்தாவின் துணை தலைவரான ஹமீத் அல் சய்தி என்பவரை கைது செய்து இருப்பதாக இராக் கூறியுள்ளது.
பகுபா நகரத்தின் வடக்கு பகுதியில் கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த இவரை சில நாட்களுக்கு முன்னர் கைது செய்ததாக இராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொவாஃபாக் அல் ருபேயி கூறியுள்ளார்.
கொடூரமான இன வெறி தாக்குதல்களை ஆரம்பித்து வைத்த பிப்ரவரி மாதத்தில் சமாரா நகரத்தில் இருக்கின்ற ஷியாக்களின் வழிப்பாட்டு ஸ்தலம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஒருங்கிணைத்ததாக ஹமீத் அல் சயித் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய இராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இவரின் கைது இராக்கில் இருக்கும் அல் கொய்தாவுக்கு பலமான அடியினை கொடுத்து இருப்பதாகவும் மேலும் இருபதுக்கும் அதிகமான அல் கொய்தாவினர் கைது செய்யப்பட்டு அல்லது கொல்லப்பட்டு இருப்பதாக கூறினார்.
நன்றி-பிபிசி
பகுபா நகரத்தின் வடக்கு பகுதியில் கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த இவரை சில நாட்களுக்கு முன்னர் கைது செய்ததாக இராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொவாஃபாக் அல் ருபேயி கூறியுள்ளார்.
கொடூரமான இன வெறி தாக்குதல்களை ஆரம்பித்து வைத்த பிப்ரவரி மாதத்தில் சமாரா நகரத்தில் இருக்கின்ற ஷியாக்களின் வழிப்பாட்டு ஸ்தலம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஒருங்கிணைத்ததாக ஹமீத் அல் சயித் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய இராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இவரின் கைது இராக்கில் இருக்கும் அல் கொய்தாவுக்கு பலமான அடியினை கொடுத்து இருப்பதாகவும் மேலும் இருபதுக்கும் அதிகமான அல் கொய்தாவினர் கைது செய்யப்பட்டு அல்லது கொல்லப்பட்டு இருப்பதாக கூறினார்.
நன்றி-பிபிசி