rambal
25-04-2003, 04:26 PM
ஜெனீ.. சிறுகதை..
"ஜெனீ டார்லிங்.. நான் ஊருக்குப் போறேன். தந்தி வந்திருக்கு. ரெண்டே நாள்ள திரும்பி வந்திடுவேன்."
".............."
"இந்த தடவை கண்டிப்பா அப்பா அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்கிடுவேன்"
".................."
"டோண்ட் வொர்ரி.. அதுக்கு அப்புறம் நீ இங்கேயே வந்து என் கூட இருந்தா யார் என்ன கேக்கப் போறா?"
".................."
"ப்ச்" என்ற முத்தத்தோடு தொலைபேசி உரையாடலை முடித்தேன்.
ஜெனீயை பிரிந்து செல்வது கொஞ்சம் வேதனை அளித்தாலும் இந்த தடவை கண்டிப்பாக இந்த உண்மையை சொல்லி பெர்மிசன் வாங்கிடனும். என்ன அம்மா கொஞ்சம் அழுவா. அப்பா.. என்னோட முற்போக்கு சிந்தனை அவருக்குத் தெரியும். அதனால பக்குவமா குழப்பப் பார்ப்பார். ஆனால், கொஞ்சம் நியாயங்களை எடுத்துச் சொன்னால் சம்மதிப்பார். அம்மாவைத்தான் எப்படி சமாதானம் செய்வது என்று யோசிக்க வேண்டும். சரி, போகும் வழியில் யோசித்துக் கொள்ளாலாம். தந்தி வந்த காரணம் என்னவாக இருக்கும்? அது வேறு கொஞ்சம் குடைந்து கொண்டிருந்தது. இப்படி பல சிந்தனைகளுக்கிடையே துணியை அள்ளி பையில் திணித்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
வாசுதேவ நல்லூருக்கும் சென்னைக்கும் ஏணிவைத்தாலும் எட்டாது. அது இயற்கை எழில் கொஞ்சும் விளையாட்டுமைதானம் என்றால் இது கட்டிட காடு. எதையோ பறிகொடுத்து, எதையோ தேடுகிற விலங்குகளாய் மனிதர்கள். அந்த வெள்ளந்திச் சிரிப்பும் கள்ளாங்கபடமில்லாத மனிதர்கள் என்ன? இங்கு அடுத்த வீட்டில் இருப்பவரின் பெயர் கூட தெரியாத கூட்டு வாழ்க்கை என்ன? இப்படி ஒப்பீட்டுப் பார்த்தாலும் இந்த நகர நரக வாழ்க்கை என்பது காலத்தின் கட்டாயம். எப்படியோ ஏதோ ஒன்றில் மனம் சிக்கிக் கொண்டு கை அகப்பட்ட குரங்காய் வாழ வேண்டியிருக்கிறது. வாசுதேவ நல்லூரில் இருக்கும் பெரிய காரை வீடு எங்களுடையது. என் தாத்தா பேர் போனவர். என் அப்பா என் தாத்தாவின் பெருமைகளை கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அங்கு தோப்பென்ன? வாய்க்கால் வரப்பென்ன? ம்ம். மனசு ஒரு முறை பால்ய நினைவுகளுக்கு ஏங்கியது. சரி பழைய கதை எதுக்கு? இந்த தடவை கண்டிப்பா புரிய வைக்கனும். ஜெனீயை பிரிஞ்சு என்னாலோ என்னைப் பிரிஞ்சு ஜெனீயாலோ வாழ முடியாது. அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். இப்படி பல யோசனைகளுக்கு இடையில் வாசுதேவனல்லூர் வந்திருந்தேன். கிட்டத்தட்ட காலை எட்டு மணியாயிருந்தது.
அந்த தேக்கு மர நிலை. வீட்டிற்கு முன் தென்னை. பெரிய வாராண்டா. தாயைக் கண்ட கன்னுக் குட்டியாய் ஆனது மனம். என்ன இருந்தாலும் சொந்த மண்ணில் கால் வைக்கும் போது ஏற்படும் பரவசத்திற்கு ஈடு இணை இந்த உலகில் வேறு எதுவும் கிடையாது. கார் சத்தம் கேட்டு வீட்டின் முன்புற கதவு திறந்தது. அப்பாதான்.
"வாடே. கிருஷ்ணா.. கார் ஒன்னும் மக்கர் பண்ணலையே. ஒரு டிரைவர் போட்டுக்கக்கூடாது?" அனுசரணையாக ஆரம்பித்தார்.
"என்ன தந்தி? திடீர்னு"
"ஓ..அதுவா. ஒன்னும் பெரிசா இல்லை. முதல்ல உள்ளே வா. பேசிக்கலாம்"
எங்கள் சம்பாசணை கேட்டு அம்மாவும் வந்துவிட்டாள்.
"யாரு கிருஷ்ணனா? எப்படேவந்தே?"
"யெம்மே.. இப்ப என்ன ஆச்சுன்னு இந்த தந்தி?"
"குளிச்சிட்டு வா. உனக்குப் பிடிச்ச கம்பந்தோசைக்கு மாவு அரைச்சு வைச்சிருக்கேன்.சுட்டுத் தற்றேன். சாப்பிட்டுட்டு சாவகாசமா பேசலாம்"
"சரி" என்று விட்டு மாடிக்கு சென்றேன். அப்பாடா! ஒருத்தருக்கும் ஒன்னும் இல்லை. மனது கொஞ்சம் அமைதியடைந்தது. காலைக்கடன்களை முடித்துவிட்டு கீழிறங்கி வந்தேன்.
"இப்ப யாருக்கு என்னாச்சுன்னு எனக்கு தந்தி அனுப்புனிங்க"
"ஓ அதுவா?'
"என்ன அதுவா"
"எல்லாம் நல்ல விஷயந்தான்"
"என்ன?"
"எல்லாம் உன் கல்யாணம் பத்தித்தான்"
"என்ன அம்மே.. நீ கூட என்னை புரிஞ்சுக்காம? இப்ப என்ன அவசரம்?"
"அந்த கற்பகம் மவனுக்கு கல்யாணம் ஆகி இப்ப ரெண்டு பிள்ளை. தெரியும்ல"
"அதுக்கு?"
"அவன் உன்னை விட மூனு வயசு சின்னவன். அதுவும் போக ஆழ்வார்குறிச்சியில இருந்து ஒரு நல்ல வரன் வந்திருக்கு. பொண்ணு டிகிரி வரைக்கும் படிச்சிருக்கா. நல்லா சமைப்பாளாம். நீ சரின்னு சொன்னா ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்திடலாம்"
அப்பா இடைமறித்து பேச்சை ஆரம்பித்தார்.
"ஏட்டி.. இங்க பாரு. எங்களுக்கும் வயசாயிடுச்சு. உனக்கு இப்பவே 29, இப்ப விட்டா அப்புறம் 31லதான் முடிக்க முடியும். ஏற்கனவே நீ நிறைய தடவை தள்ளிப் போட்டுட்ட. இப்பவிட்டா வேற எப்ப? அதான் தந்தி கொடுத்து வரவைச்சோம்"
"இங்க பாருங்கப்பா. இப்ப வேண்டாம்னா வேண்டாம்"
"இப்படி பிடிச்ச பிடி பிடிச்சா எப்படிடே? அதான் உனக்காக இவ்வளவு தள்ளிப் போட்டுட்டோம். ஏதாச்சும் ஒரு காரணம் சொல்லு?
இல்லை வேற யார் கூடவாவது சகவாசம் வைச்சிருக்கியால? சொல்லு."
"அப்படில்லாம் ஒன்னும் இல்லை."
"பின்ன என்ன?"
"சரி.. இவ்வளவு தூரம் கேட்கிறதால சொல்றேன். கல்யாணத்துக்கு நான் தயார். ஆனா ஒரு கண்டிசன்"
"என்ன?"
"நீங்க யார் கழுத்துல வேண்ணாலும் தாலி கட்டச் சொல்லுங்க... கட்டுறேன். ஆனா, ஜெனீன்னு ஒரு 6 வயசு பெண் குழந்தையை தத்தெடுத்திருக்கேன். அந்தக் குழந்தைக்கு எனக்கு மனைவியா வற்றவ அம்மாவா இருக்கணும்."
"ஜெனீ டார்லிங்.. நான் ஊருக்குப் போறேன். தந்தி வந்திருக்கு. ரெண்டே நாள்ள திரும்பி வந்திடுவேன்."
".............."
"இந்த தடவை கண்டிப்பா அப்பா அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்கிடுவேன்"
".................."
"டோண்ட் வொர்ரி.. அதுக்கு அப்புறம் நீ இங்கேயே வந்து என் கூட இருந்தா யார் என்ன கேக்கப் போறா?"
".................."
"ப்ச்" என்ற முத்தத்தோடு தொலைபேசி உரையாடலை முடித்தேன்.
ஜெனீயை பிரிந்து செல்வது கொஞ்சம் வேதனை அளித்தாலும் இந்த தடவை கண்டிப்பாக இந்த உண்மையை சொல்லி பெர்மிசன் வாங்கிடனும். என்ன அம்மா கொஞ்சம் அழுவா. அப்பா.. என்னோட முற்போக்கு சிந்தனை அவருக்குத் தெரியும். அதனால பக்குவமா குழப்பப் பார்ப்பார். ஆனால், கொஞ்சம் நியாயங்களை எடுத்துச் சொன்னால் சம்மதிப்பார். அம்மாவைத்தான் எப்படி சமாதானம் செய்வது என்று யோசிக்க வேண்டும். சரி, போகும் வழியில் யோசித்துக் கொள்ளாலாம். தந்தி வந்த காரணம் என்னவாக இருக்கும்? அது வேறு கொஞ்சம் குடைந்து கொண்டிருந்தது. இப்படி பல சிந்தனைகளுக்கிடையே துணியை அள்ளி பையில் திணித்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
வாசுதேவ நல்லூருக்கும் சென்னைக்கும் ஏணிவைத்தாலும் எட்டாது. அது இயற்கை எழில் கொஞ்சும் விளையாட்டுமைதானம் என்றால் இது கட்டிட காடு. எதையோ பறிகொடுத்து, எதையோ தேடுகிற விலங்குகளாய் மனிதர்கள். அந்த வெள்ளந்திச் சிரிப்பும் கள்ளாங்கபடமில்லாத மனிதர்கள் என்ன? இங்கு அடுத்த வீட்டில் இருப்பவரின் பெயர் கூட தெரியாத கூட்டு வாழ்க்கை என்ன? இப்படி ஒப்பீட்டுப் பார்த்தாலும் இந்த நகர நரக வாழ்க்கை என்பது காலத்தின் கட்டாயம். எப்படியோ ஏதோ ஒன்றில் மனம் சிக்கிக் கொண்டு கை அகப்பட்ட குரங்காய் வாழ வேண்டியிருக்கிறது. வாசுதேவ நல்லூரில் இருக்கும் பெரிய காரை வீடு எங்களுடையது. என் தாத்தா பேர் போனவர். என் அப்பா என் தாத்தாவின் பெருமைகளை கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அங்கு தோப்பென்ன? வாய்க்கால் வரப்பென்ன? ம்ம். மனசு ஒரு முறை பால்ய நினைவுகளுக்கு ஏங்கியது. சரி பழைய கதை எதுக்கு? இந்த தடவை கண்டிப்பா புரிய வைக்கனும். ஜெனீயை பிரிஞ்சு என்னாலோ என்னைப் பிரிஞ்சு ஜெனீயாலோ வாழ முடியாது. அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். இப்படி பல யோசனைகளுக்கு இடையில் வாசுதேவனல்லூர் வந்திருந்தேன். கிட்டத்தட்ட காலை எட்டு மணியாயிருந்தது.
அந்த தேக்கு மர நிலை. வீட்டிற்கு முன் தென்னை. பெரிய வாராண்டா. தாயைக் கண்ட கன்னுக் குட்டியாய் ஆனது மனம். என்ன இருந்தாலும் சொந்த மண்ணில் கால் வைக்கும் போது ஏற்படும் பரவசத்திற்கு ஈடு இணை இந்த உலகில் வேறு எதுவும் கிடையாது. கார் சத்தம் கேட்டு வீட்டின் முன்புற கதவு திறந்தது. அப்பாதான்.
"வாடே. கிருஷ்ணா.. கார் ஒன்னும் மக்கர் பண்ணலையே. ஒரு டிரைவர் போட்டுக்கக்கூடாது?" அனுசரணையாக ஆரம்பித்தார்.
"என்ன தந்தி? திடீர்னு"
"ஓ..அதுவா. ஒன்னும் பெரிசா இல்லை. முதல்ல உள்ளே வா. பேசிக்கலாம்"
எங்கள் சம்பாசணை கேட்டு அம்மாவும் வந்துவிட்டாள்.
"யாரு கிருஷ்ணனா? எப்படேவந்தே?"
"யெம்மே.. இப்ப என்ன ஆச்சுன்னு இந்த தந்தி?"
"குளிச்சிட்டு வா. உனக்குப் பிடிச்ச கம்பந்தோசைக்கு மாவு அரைச்சு வைச்சிருக்கேன்.சுட்டுத் தற்றேன். சாப்பிட்டுட்டு சாவகாசமா பேசலாம்"
"சரி" என்று விட்டு மாடிக்கு சென்றேன். அப்பாடா! ஒருத்தருக்கும் ஒன்னும் இல்லை. மனது கொஞ்சம் அமைதியடைந்தது. காலைக்கடன்களை முடித்துவிட்டு கீழிறங்கி வந்தேன்.
"இப்ப யாருக்கு என்னாச்சுன்னு எனக்கு தந்தி அனுப்புனிங்க"
"ஓ அதுவா?'
"என்ன அதுவா"
"எல்லாம் நல்ல விஷயந்தான்"
"என்ன?"
"எல்லாம் உன் கல்யாணம் பத்தித்தான்"
"என்ன அம்மே.. நீ கூட என்னை புரிஞ்சுக்காம? இப்ப என்ன அவசரம்?"
"அந்த கற்பகம் மவனுக்கு கல்யாணம் ஆகி இப்ப ரெண்டு பிள்ளை. தெரியும்ல"
"அதுக்கு?"
"அவன் உன்னை விட மூனு வயசு சின்னவன். அதுவும் போக ஆழ்வார்குறிச்சியில இருந்து ஒரு நல்ல வரன் வந்திருக்கு. பொண்ணு டிகிரி வரைக்கும் படிச்சிருக்கா. நல்லா சமைப்பாளாம். நீ சரின்னு சொன்னா ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்திடலாம்"
அப்பா இடைமறித்து பேச்சை ஆரம்பித்தார்.
"ஏட்டி.. இங்க பாரு. எங்களுக்கும் வயசாயிடுச்சு. உனக்கு இப்பவே 29, இப்ப விட்டா அப்புறம் 31லதான் முடிக்க முடியும். ஏற்கனவே நீ நிறைய தடவை தள்ளிப் போட்டுட்ட. இப்பவிட்டா வேற எப்ப? அதான் தந்தி கொடுத்து வரவைச்சோம்"
"இங்க பாருங்கப்பா. இப்ப வேண்டாம்னா வேண்டாம்"
"இப்படி பிடிச்ச பிடி பிடிச்சா எப்படிடே? அதான் உனக்காக இவ்வளவு தள்ளிப் போட்டுட்டோம். ஏதாச்சும் ஒரு காரணம் சொல்லு?
இல்லை வேற யார் கூடவாவது சகவாசம் வைச்சிருக்கியால? சொல்லு."
"அப்படில்லாம் ஒன்னும் இல்லை."
"பின்ன என்ன?"
"சரி.. இவ்வளவு தூரம் கேட்கிறதால சொல்றேன். கல்யாணத்துக்கு நான் தயார். ஆனா ஒரு கண்டிசன்"
"என்ன?"
"நீங்க யார் கழுத்துல வேண்ணாலும் தாலி கட்டச் சொல்லுங்க... கட்டுறேன். ஆனா, ஜெனீன்னு ஒரு 6 வயசு பெண் குழந்தையை தத்தெடுத்திருக்கேன். அந்தக் குழந்தைக்கு எனக்கு மனைவியா வற்றவ அம்மாவா இருக்கணும்."