இளசு
31-07-2006, 09:09 PM
நுண்ணியிர் நோக்கியவர்
அறிவியல் மைல்கற்கள் - 23
ஆண்ட்டனி வான் லியூவன்ஹக்
Antoni van Leeuwenhoeck
(1632-1723)
----------------------------------------------------
22ம் பாகம் காற்றழுத்தம் - இங்கே
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=154034#post154034
----------------------------------------------------------------------
தாய்மொழி மட்டுமே அறிந்தவரால் தம் நாடு தாண்டி தம் அறிவாற்றலை நிலைநாட்டுவது
கடினம்.
வேறுமொழி அதுவும் விஞ்ஞான ஆட்சிமொழியாம் லத்தீன் கோலோச்சும் அந்நாட்களில்
லத்தீனும் அறியாமல், ஆங்கிலம் , பிரெஞ்சு போன்ற வல்லரசு மொழிகளும் அறியாமல்
தாய்மொழியாம் டச்சு மட்டுமே அறிந்த ஒருவர் விடாமல் போராடி
தம் கண்டுபிடிப்புகளை அனைவருக்கும் பறைசாற்றினார்.
அவர் லியூவன்ஹக்.
லென்ஸ்கள் மூலம் அதுவரை அறியப்பட்டவற்றில் சிறப்பானவை இரண்டு:
1) கார்க் மூடிகளை ஆராய்ந்த ராபர்ட் ஹுக் கண்டு சொன்ன - 'செல்கள்'
2) குருதி ஓட்டம் ஆராய்ந்த மால்பிஜி கண்டு சொன்ன - 'கேபில்லரிகள்'
இந்த கண்டுபிடிப்பு கட்டுரைகளை வாசிக்க லத்தீன் தெரியாத லியூவன்ஹக்
அவற்றில் உள்ள சித்திரங்களை மட்டும் வைத்தே கொஞ்சம் கொஞ்சம் புரிந்துகொண்டார்.
(ஒரு ஆங்கிலேயர் நம் அம்புலிமாமா புத்தகத்தில் படம் பார்ப்பதைப்போல்..)
லென்ஸ்கள் மேல் ஆர்வமும் அவற்றைச் செய்வதில் அதீத திறமையும் உள்ள இவர்
தம் கையாலேயே கடைந்து உருவாக்கிய லென்ஸ்கள் 400-க்கும் மேலே.
அவை ஒரு பொருளை 250 மடங்கு பெரிதாக்கிக்காட்ட வல்லவை.
இந்த லென்ஸ்களை வைத்து லியூவன்ஹக் கண்டு சொன்ன உண்மைகள்
அசத்தலானவை. மிக முக்கியமானவை.
1) 'சுத்தமான' நீரில் லட்சக்கணக்கில் நீந்தும் புரோட்டோசோவா ( ஒரு செல் உயிரிகள்)
2) ஆண் விந்தில் நீந்தும் ஸ்பெர்மட்டசோவாக்கள்
3) கேபில்லரிகளில் நுழைந்து செல்லும் ரத்தம்
4) அந்த ரத்தத்தில் படகுகளாய் பயணிக்கும் சிவப்பு, வெள்ளை அணுக்கள்
5)தசை, நரம்பு, கேசம், எலும்புகளின் அடிப்படை கட்டமைப்புகள்
6) தாவர செல்கள்
இப்படி ஒரு ஆடி லென்ஸ்களை வைத்து இவர் சாதித்தவை பிரமிக்கத்தக்கவை.
உயிர்கள் ' தாமே' உருவாவதில்லை. ஆண் அணு + பெண் முட்டை சேர்க்கையால்
உருவாகுபவை என்ற உண்மையை நிரூபித்தவர் இவரே.
அழுகும் பொருளில் புழுக்கள் தாமே ' சுயம்பு'வாய் வருவதில்லை.
அதை மொய்த்துப்போன ஈக்கள் இட்ட நுண்ணிய முட்டைகள் பொரித்து வந்தவை
என்று லென்ஸ் மூலம் கண்டு சொன்னார். ஆண் விந்துவில் ஸ்பெர்மட்டசொவாதான்
போர் வீரன். அவனே பெண் முட்டையைத் துளைத்து கரு உருவாக்குபவன்.
விந்துவில் மிஞ்சி நிற்கும் நீர் ஸ்பெர்மட்டசோவாவின் ' நீர் ஆகாரம்' மட்டுமே
என்று லென்ஸ் உதவியால் நிச்சயம் செய்தவரும் இவர்தான்.
இவரின் கண்டுபிடிப்புகளின் உச்சம் : தமது வாயில் தாமே கண்டு சொன்ன
'பாக்டீரியாக்கள்'.
(1683-ல் இவர் முதலில் கண்டு சொன்ன பாக்டீரியாக்களை பிற அறிவுலகம்
பெரிதாய் மதித்து ஆராய்ச்சிகளைத் தொடர இதற்குப்பின் ஒரு நூற்றாண்டு ஆனது.)
ஆனால் டச்சு மொழியில் இவர் அனுப்பிய கட்டுரைகளை லண்டன்,பாரீஸில் உள்ள
மேல்வர்க்க ஆராய்ச்சி அமைப்புகள் புரிந்தேற்க தாமதம் ஆனது.
அசரவில்லை லியூவன்ஹக்.
ஒரு மனிதனின் மனத்திண்மையை ஒரே செயலை அவன் மூன்றாம், நான்காம் முறையும்
விடாது முயற்சி செய்யும்போது அளக்கலாம் எனச் சொல்வார்கள்.
ஆனால் லியூவன்ஹக் முயன்றது 400 முறைக்கும் மேல். லண்டன் ராயல் சொசைட்டிக்கும்
பிரஞ்சு அறிவியல் அகாடமிக்கும் இத்தனை முறை ஓயாது அவர் எழுதிப்போட்டார்.
தாம் கண்ட 'நுண் காட்சிகளை' அந்த மேல் வர்க்கமும் காண 26 லென்ஸ்களையும்
அனுப்பினார்.
மெல்ல அவர் கண்ட ஆணித்தரமான உண்மைகள் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அறிவியல் சபைகள் மட்டுமல்ல.. அரசவைகளும் அவரை மதித்து அழைத்து கௌரவித்தன.
மொழி அகழியைத் தாண்டி, முதலை மேல்வர்க்கங்களையும் வென்று
அமைத்த அற்புத லென்ஸ் கொண்டு, உழைத்துக் கண்ட உண்மைகளை
ஓயா முயற்சி மூலம் அனைவரின் ஒப்புதலுக்கு அர்ப்பணித்து
ஒரு புதிய நுண்பார்வையை அறிவுலகத்துக்கு அளித்த நாயகரை
நாமும் போற்றுவோம்.
அறிவியல் மைல்கற்கள் - 23
ஆண்ட்டனி வான் லியூவன்ஹக்
Antoni van Leeuwenhoeck
(1632-1723)
----------------------------------------------------
22ம் பாகம் காற்றழுத்தம் - இங்கே
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=154034#post154034
----------------------------------------------------------------------
தாய்மொழி மட்டுமே அறிந்தவரால் தம் நாடு தாண்டி தம் அறிவாற்றலை நிலைநாட்டுவது
கடினம்.
வேறுமொழி அதுவும் விஞ்ஞான ஆட்சிமொழியாம் லத்தீன் கோலோச்சும் அந்நாட்களில்
லத்தீனும் அறியாமல், ஆங்கிலம் , பிரெஞ்சு போன்ற வல்லரசு மொழிகளும் அறியாமல்
தாய்மொழியாம் டச்சு மட்டுமே அறிந்த ஒருவர் விடாமல் போராடி
தம் கண்டுபிடிப்புகளை அனைவருக்கும் பறைசாற்றினார்.
அவர் லியூவன்ஹக்.
லென்ஸ்கள் மூலம் அதுவரை அறியப்பட்டவற்றில் சிறப்பானவை இரண்டு:
1) கார்க் மூடிகளை ஆராய்ந்த ராபர்ட் ஹுக் கண்டு சொன்ன - 'செல்கள்'
2) குருதி ஓட்டம் ஆராய்ந்த மால்பிஜி கண்டு சொன்ன - 'கேபில்லரிகள்'
இந்த கண்டுபிடிப்பு கட்டுரைகளை வாசிக்க லத்தீன் தெரியாத லியூவன்ஹக்
அவற்றில் உள்ள சித்திரங்களை மட்டும் வைத்தே கொஞ்சம் கொஞ்சம் புரிந்துகொண்டார்.
(ஒரு ஆங்கிலேயர் நம் அம்புலிமாமா புத்தகத்தில் படம் பார்ப்பதைப்போல்..)
லென்ஸ்கள் மேல் ஆர்வமும் அவற்றைச் செய்வதில் அதீத திறமையும் உள்ள இவர்
தம் கையாலேயே கடைந்து உருவாக்கிய லென்ஸ்கள் 400-க்கும் மேலே.
அவை ஒரு பொருளை 250 மடங்கு பெரிதாக்கிக்காட்ட வல்லவை.
இந்த லென்ஸ்களை வைத்து லியூவன்ஹக் கண்டு சொன்ன உண்மைகள்
அசத்தலானவை. மிக முக்கியமானவை.
1) 'சுத்தமான' நீரில் லட்சக்கணக்கில் நீந்தும் புரோட்டோசோவா ( ஒரு செல் உயிரிகள்)
2) ஆண் விந்தில் நீந்தும் ஸ்பெர்மட்டசோவாக்கள்
3) கேபில்லரிகளில் நுழைந்து செல்லும் ரத்தம்
4) அந்த ரத்தத்தில் படகுகளாய் பயணிக்கும் சிவப்பு, வெள்ளை அணுக்கள்
5)தசை, நரம்பு, கேசம், எலும்புகளின் அடிப்படை கட்டமைப்புகள்
6) தாவர செல்கள்
இப்படி ஒரு ஆடி லென்ஸ்களை வைத்து இவர் சாதித்தவை பிரமிக்கத்தக்கவை.
உயிர்கள் ' தாமே' உருவாவதில்லை. ஆண் அணு + பெண் முட்டை சேர்க்கையால்
உருவாகுபவை என்ற உண்மையை நிரூபித்தவர் இவரே.
அழுகும் பொருளில் புழுக்கள் தாமே ' சுயம்பு'வாய் வருவதில்லை.
அதை மொய்த்துப்போன ஈக்கள் இட்ட நுண்ணிய முட்டைகள் பொரித்து வந்தவை
என்று லென்ஸ் மூலம் கண்டு சொன்னார். ஆண் விந்துவில் ஸ்பெர்மட்டசொவாதான்
போர் வீரன். அவனே பெண் முட்டையைத் துளைத்து கரு உருவாக்குபவன்.
விந்துவில் மிஞ்சி நிற்கும் நீர் ஸ்பெர்மட்டசோவாவின் ' நீர் ஆகாரம்' மட்டுமே
என்று லென்ஸ் உதவியால் நிச்சயம் செய்தவரும் இவர்தான்.
இவரின் கண்டுபிடிப்புகளின் உச்சம் : தமது வாயில் தாமே கண்டு சொன்ன
'பாக்டீரியாக்கள்'.
(1683-ல் இவர் முதலில் கண்டு சொன்ன பாக்டீரியாக்களை பிற அறிவுலகம்
பெரிதாய் மதித்து ஆராய்ச்சிகளைத் தொடர இதற்குப்பின் ஒரு நூற்றாண்டு ஆனது.)
ஆனால் டச்சு மொழியில் இவர் அனுப்பிய கட்டுரைகளை லண்டன்,பாரீஸில் உள்ள
மேல்வர்க்க ஆராய்ச்சி அமைப்புகள் புரிந்தேற்க தாமதம் ஆனது.
அசரவில்லை லியூவன்ஹக்.
ஒரு மனிதனின் மனத்திண்மையை ஒரே செயலை அவன் மூன்றாம், நான்காம் முறையும்
விடாது முயற்சி செய்யும்போது அளக்கலாம் எனச் சொல்வார்கள்.
ஆனால் லியூவன்ஹக் முயன்றது 400 முறைக்கும் மேல். லண்டன் ராயல் சொசைட்டிக்கும்
பிரஞ்சு அறிவியல் அகாடமிக்கும் இத்தனை முறை ஓயாது அவர் எழுதிப்போட்டார்.
தாம் கண்ட 'நுண் காட்சிகளை' அந்த மேல் வர்க்கமும் காண 26 லென்ஸ்களையும்
அனுப்பினார்.
மெல்ல அவர் கண்ட ஆணித்தரமான உண்மைகள் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அறிவியல் சபைகள் மட்டுமல்ல.. அரசவைகளும் அவரை மதித்து அழைத்து கௌரவித்தன.
மொழி அகழியைத் தாண்டி, முதலை மேல்வர்க்கங்களையும் வென்று
அமைத்த அற்புத லென்ஸ் கொண்டு, உழைத்துக் கண்ட உண்மைகளை
ஓயா முயற்சி மூலம் அனைவரின் ஒப்புதலுக்கு அர்ப்பணித்து
ஒரு புதிய நுண்பார்வையை அறிவுலகத்துக்கு அளித்த நாயகரை
நாமும் போற்றுவோம்.