View Full Version : புன்னகை..
rambal
24-04-2003, 08:20 PM
என் வாசிப்பிற்குள்
சிக்காத
வார்த்தைகளாய்...
புரியாத சங்ககால
இலக்கியமாய்..
தொல்காப்பியமாய்...
என்ன நடக்கிறது என்று
புரியா வண்ணம் போகும்
அயல்மொழி கலைப் படமாய்..
சித்தனாய்..
பித்தனாய்..
கிறுக்கனாய்..
போதும் நிறுத்து
உன் இதழில்
தெறிக்கும் சிரிப்பை..
சித்தனாய், கிறுக்கனாய்,பித்தனாய் மட்டுமா?
கவிஞனாயும் தானே?
காதல் காதல்காதல் காதற்போயின் சாதல் சாதல் சாதல்
அவஸ்தயிலும் ஆனந்தம் உள்ளது தானே?
Narathar
25-04-2003, 05:23 AM
சித்தனாய், கிறுக்கனாய்,பித்தனாய் மட்டுமா?
கவிஞனாயும் தானே?
ஏன்? காதலனாயும்!!!
ஒரு தெற்றுப்பல் சிரிப்பின் வலிமை நானும் உணர்ந்திருக்கிறேன்..
அருமை ராம்!!!
Nanban
26-04-2003, 02:52 PM
என்ன நடக்கிறது என்று
புரியா வண்ணம் போகும்
அயல்மொழி கலைப் படமாய்..
.
புரியாத கலைப்படைப்பு தானே - பெண் ?
புரியாவிட்டாலும், புரிந்து கொண்டாலும், கவிதையின் தோற்றத்திற்கு பெண் அவசியமானவளாய் தான் அன்றும் இன்றும் என்றும் இருக்கிறாள் பெண்.
Emperor
27-04-2003, 06:30 AM
அருமையான கவிதை ராம்பால் அவர்களே ! பாராட்டுக்கள்
கூந்தல் காட்டில் வழி தெரியாமல்
மாட்டி கொண்டேன் என் வலி என்ன!!
காதல் முகிழ்ப்பது ஒரு கணத்தில்..
தெறித்த சிரிப்பில் உதித்த காதல் அருமை ராம்!
பாராட்டுகள்...