PDA

View Full Version : கவிதை - 2



sunny
27-07-2006, 12:55 PM
வணக்கம்

நேற்றிரவு மெல்லிய
தடுமாற்றத்துடனும்
விசும்பழுடனும்
உன் மார்புமீது
படுத்துறங்கியபோது
தான் உணர்ந்து கொண்டேன்

நான் தேடிக்கொண்டிருந்ததும்
கண்டடைந்ததும்
காதலியை அல்ல
ஒரு அன்னையை !

sunny :)

இனியவன்
27-07-2006, 03:14 PM
மெல்லிய
வல்லிய
சிந்தனை.

றெனிநிமல்
27-07-2006, 08:23 PM
அவளில் உன்னன்னையைக் கண்டாயோ?
வாழ்த்துகள் இணைந்திருங்கள்.

பென்ஸ்
30-07-2006, 03:01 AM
தாயின் ஸ்பரிசம்...
சுத்தமான பால்...
தாரத்தின் ஸ்பரிசம்..
தாகம் தீர்க்கும் நீர்...

இரண்டையும் கலக்க வேண்டாமே..!!!!

இளசு
23-08-2006, 10:32 PM
சன்னி அவர்களின் ஆழ்மனக் கவிதையும்
இனிய பென்ஸின் பால்- நீர் ஒப்பீடும்

சிந்தித்து ரசிக்கவைக்கின்றன. பாராட்டுகள்.