роЗройро┐ропро╡ройрпН
21-07-2006, 02:15 PM
பாரிஸ்: ஜிடேன் தனது செயலுக்காக சிறுவர்கள் உள்ளிட்ட "டிவி' பார்த்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கான மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்க மறுத்து விட்டார். தன்னை துїண்டிய மாட்டராஸியையும் தண்டிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக கோரியுள்ளார்.
பிளாஷ் பேக்: 18 வது உலககோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடந்தது. பைனலில் இத்தாலி அணி பிரான்சை வீழ்த்தி கோப்பை வென்றது. இப்போட்டியில் பிரான்ஸ் கேப்டன் ஜிடேன், இத்தாலி வீரர் மாட்டராஸியின் நெஞ்சில் தலையால் முட்டி கீழே தள்ளினார். உடனே, ஜிடேன் ரெட்கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பிரான்ஸ் பரபரப்பு: இப்பிரச்னை கால்பந்து உலகில் பெரும் பூகம்பத்தை கிளப்பியது. இது தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாயின. மாட்டராஸி அப்படி சொன்னார்...இப்படி திட்டினார் என்று ஆளாளுக்கு ஒரு கதையை கிளப்பினர். இந்தச் சூழலில் ஜிடேன் மவுனம் கலைக்கிறார் என்ற செய்தி கேட்டதும் பிரான்ஸ் நாடே பரபரப்பானது. ரசிகர்கள் அனைவரும் "டிவி' முன் அமர்ந்து, அவரது பேட்டியை கண் கொட்டாமல் பார்த்தனர். மாட்டராஸியை தலையால் முட்டிய சம்பவம் பற்றி பிரான்சின், கேனால் பிளஸ் "டிவி' க்கு ஜிடேன் அளித்த பேட்டி:
* இத்தாலி மண்ணில் சுமார் 5 ஆண்டுகள் விளையாடி இருக்கிறீர்கள். அவர்களை பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். இதற்கு முன், ஏதாவது ஒரு வீரருடன் இதுபோன்று பிரச்னை ஏற்பட்டதுண்டா?
யாருடனும் மோதல் ஏற்பட்டது இல்லை. சில நேரங்களில் சிலருடன் தள்ளுமுள்ளு ஏற்படும். அவ்வளவு தான்! இது கால்பந்தில் சகஜமான ஒன்று. இதை தவிர யாருடனும் கைகலப்பில் ஈடுபட்டதில்லை.
* மாட்டராஸியுடன் கூட மோதல் ஏற்பட்டதில்லையா?
இல்லவே இல்லை! அவருடன் எவ்வித மோதலும் கிடையாது. உலக கோப்பை கால்பந்து பைனலில் எனது சட்டையை பிடித்து அவர் இழுத்த பிறகு தான் பிரச்னை ஆரம்பமானது. எனது சட்டையை விடாமல் இழுத்ததும், ""சட்டையை இழுப்பதை நிறுத்து, வேண்டுமானானால் போட்டி முடிந்ததும் இருவரும் சட்டையை மாற்றிக் கொள்ளலாம்,'' என்று சாதாரணமாக தான் கூறினேன். அந்த நேரத்தில் தான் மாட்டராஸி தகாத வார்த்தைகளை கொட்டினார். அது செய்கையால் காண்பிப்பதை காட்டிலும் கடினமானதாக இருந்தது. அதே வார்த்தைகளை திரும்ப, திரும்ப சொல்லி வெறுப் பேற்றினார். இதெல்லாம் மிக விரைவாக நடந்து விட்டது. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் எனது மனதில் இடியாக இறங்கியது.
* அவர் அப்படி என்ன தான் சொன்னார்...? அந்த வார்த்தைகள் என்ன...?என்பதை அறிய ஒவ்வொருவரும் ஆவலாக இருக்கிறார்கள்?
அது மிகவும் சீரியசான விஷயம். மிகவும் தனிப்பட்ட விஷயங்கள்...!
* உங்கள் தாய் மற்றும் சகோதரியை பழித்து பேசினாரா?
ஆமாம்! மிகவும் கடுமையான சொற்கள். ஒரு தடவை கேட்டாலே அங்கிருந்து ஓடி விடுவீர்கள். அப்படியிருக்கையில் இரண்டு தடவை...மூன்றாவது தடவை என தொடர்ந்து சொல்லும் போது...நானும் மனிதன் தானே! சில வார்த்தைகள் செயலை காட்டிலும் கடினமானது. அந்த வார்த்தைகளை கேட்பதற்கு பதிலாக எனது முகத்தில் ஓங்கி ஒரு அடி கொடுத்திருந்தாலும் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன்.
* உங்கள் தாய், சகோதரிக்கு எதிரான வார்த்தைகளை இரண்டு அல்லது மூன்று முறை சொன்னாரா?
ஆமாம்! இதற்கு தான் நான் பதிலடி கொடுத்தேன். அந்த மாதிரி செயல்பட்டிருக்கவே கூடாது. ஏனென்றால் சிறுவர்கள் உட்பட கோடிக்கணக் கான மக்கள் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். சிறுவர்களிடம் இதை செய்யலாம், அதை செய்யக் கூடாது என்று கற்றுத்தர வேண்டிய நிலையில் நிறைய பேர் இருந்து இருப்பார்கள். அவர்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
* நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள்...ஆனால் அந்த சம்பவத்துக்காக உண்மையிலேயே வருத்தப்படவில்லையா?
நான் வருத்தம் தெரிவிக்க முடியாது. அப்படி தெரிவித்தால் எதையும் சொல்வதற்கு மாட்டராஸிக்கு உரிமை இருப்பது போலாகி விடும்.
மேலும் அவர் சொன்னது எல்லாம் தவறான வார்த்தைகள். நாம் எப்போதுமே ஒரு பதிலடியை பற்றி தான் பேசுகிறோம். அதற்கு தான் தண்டனையும் அளிக்கிறோம். ஆனால், யாரும் தூண்டவில்லை என்றால், பதிலடியும் இருக்கப் போவதில்லை என்பதை உணர வேண்டும். எரிச்சலை துїண்டுகிறவர் தான் குற்றம் செய்தவர். ஆனால் பதிலடி கொடுத்தவர் தண்டிக்கப்படுகிறார். நான் பதிலடி கொடுத்தேன்...அந்த சம்பவமும் நடந்து விட்டது.
நீங்களே கற்பனை செய்து பாருங்கள். உலக கோப்பை பைனலில் எனது ஓய்வுக்கு இன் னும் 10 நிமிடங்கள் இருக்கும் போது, நான் அந்த மாதிரி செய்தது எனக்கு மகிழ்ச்சி தருமா?
* நிச்சயமாக இல்லை.. .ஆனாலும் அந்த நேரத்தில் வெடித்து வீட்டீர்களே?
என்னை துїண்டினார்கள்...அதுவும் மிகவும் சீரியசாக...அவ்வளவு தான்! எனது செயல் மன்னிக்க முடியாதது. ஆனாலும் உண்மையான குற்றவாளியையும் தண்டிக்க வேண்டும். அந்த உண்மையான குற்றவாளி என்னை துїண் டியவர் (மாட்டராஸி) தான்!
நன்றி தினமலர்
பிளாஷ் பேக்: 18 வது உலககோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடந்தது. பைனலில் இத்தாலி அணி பிரான்சை வீழ்த்தி கோப்பை வென்றது. இப்போட்டியில் பிரான்ஸ் கேப்டன் ஜிடேன், இத்தாலி வீரர் மாட்டராஸியின் நெஞ்சில் தலையால் முட்டி கீழே தள்ளினார். உடனே, ஜிடேன் ரெட்கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பிரான்ஸ் பரபரப்பு: இப்பிரச்னை கால்பந்து உலகில் பெரும் பூகம்பத்தை கிளப்பியது. இது தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாயின. மாட்டராஸி அப்படி சொன்னார்...இப்படி திட்டினார் என்று ஆளாளுக்கு ஒரு கதையை கிளப்பினர். இந்தச் சூழலில் ஜிடேன் மவுனம் கலைக்கிறார் என்ற செய்தி கேட்டதும் பிரான்ஸ் நாடே பரபரப்பானது. ரசிகர்கள் அனைவரும் "டிவி' முன் அமர்ந்து, அவரது பேட்டியை கண் கொட்டாமல் பார்த்தனர். மாட்டராஸியை தலையால் முட்டிய சம்பவம் பற்றி பிரான்சின், கேனால் பிளஸ் "டிவி' க்கு ஜிடேன் அளித்த பேட்டி:
* இத்தாலி மண்ணில் சுமார் 5 ஆண்டுகள் விளையாடி இருக்கிறீர்கள். அவர்களை பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். இதற்கு முன், ஏதாவது ஒரு வீரருடன் இதுபோன்று பிரச்னை ஏற்பட்டதுண்டா?
யாருடனும் மோதல் ஏற்பட்டது இல்லை. சில நேரங்களில் சிலருடன் தள்ளுமுள்ளு ஏற்படும். அவ்வளவு தான்! இது கால்பந்தில் சகஜமான ஒன்று. இதை தவிர யாருடனும் கைகலப்பில் ஈடுபட்டதில்லை.
* மாட்டராஸியுடன் கூட மோதல் ஏற்பட்டதில்லையா?
இல்லவே இல்லை! அவருடன் எவ்வித மோதலும் கிடையாது. உலக கோப்பை கால்பந்து பைனலில் எனது சட்டையை பிடித்து அவர் இழுத்த பிறகு தான் பிரச்னை ஆரம்பமானது. எனது சட்டையை விடாமல் இழுத்ததும், ""சட்டையை இழுப்பதை நிறுத்து, வேண்டுமானானால் போட்டி முடிந்ததும் இருவரும் சட்டையை மாற்றிக் கொள்ளலாம்,'' என்று சாதாரணமாக தான் கூறினேன். அந்த நேரத்தில் தான் மாட்டராஸி தகாத வார்த்தைகளை கொட்டினார். அது செய்கையால் காண்பிப்பதை காட்டிலும் கடினமானதாக இருந்தது. அதே வார்த்தைகளை திரும்ப, திரும்ப சொல்லி வெறுப் பேற்றினார். இதெல்லாம் மிக விரைவாக நடந்து விட்டது. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் எனது மனதில் இடியாக இறங்கியது.
* அவர் அப்படி என்ன தான் சொன்னார்...? அந்த வார்த்தைகள் என்ன...?என்பதை அறிய ஒவ்வொருவரும் ஆவலாக இருக்கிறார்கள்?
அது மிகவும் சீரியசான விஷயம். மிகவும் தனிப்பட்ட விஷயங்கள்...!
* உங்கள் தாய் மற்றும் சகோதரியை பழித்து பேசினாரா?
ஆமாம்! மிகவும் கடுமையான சொற்கள். ஒரு தடவை கேட்டாலே அங்கிருந்து ஓடி விடுவீர்கள். அப்படியிருக்கையில் இரண்டு தடவை...மூன்றாவது தடவை என தொடர்ந்து சொல்லும் போது...நானும் மனிதன் தானே! சில வார்த்தைகள் செயலை காட்டிலும் கடினமானது. அந்த வார்த்தைகளை கேட்பதற்கு பதிலாக எனது முகத்தில் ஓங்கி ஒரு அடி கொடுத்திருந்தாலும் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன்.
* உங்கள் தாய், சகோதரிக்கு எதிரான வார்த்தைகளை இரண்டு அல்லது மூன்று முறை சொன்னாரா?
ஆமாம்! இதற்கு தான் நான் பதிலடி கொடுத்தேன். அந்த மாதிரி செயல்பட்டிருக்கவே கூடாது. ஏனென்றால் சிறுவர்கள் உட்பட கோடிக்கணக் கான மக்கள் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். சிறுவர்களிடம் இதை செய்யலாம், அதை செய்யக் கூடாது என்று கற்றுத்தர வேண்டிய நிலையில் நிறைய பேர் இருந்து இருப்பார்கள். அவர்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
* நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள்...ஆனால் அந்த சம்பவத்துக்காக உண்மையிலேயே வருத்தப்படவில்லையா?
நான் வருத்தம் தெரிவிக்க முடியாது. அப்படி தெரிவித்தால் எதையும் சொல்வதற்கு மாட்டராஸிக்கு உரிமை இருப்பது போலாகி விடும்.
மேலும் அவர் சொன்னது எல்லாம் தவறான வார்த்தைகள். நாம் எப்போதுமே ஒரு பதிலடியை பற்றி தான் பேசுகிறோம். அதற்கு தான் தண்டனையும் அளிக்கிறோம். ஆனால், யாரும் தூண்டவில்லை என்றால், பதிலடியும் இருக்கப் போவதில்லை என்பதை உணர வேண்டும். எரிச்சலை துїண்டுகிறவர் தான் குற்றம் செய்தவர். ஆனால் பதிலடி கொடுத்தவர் தண்டிக்கப்படுகிறார். நான் பதிலடி கொடுத்தேன்...அந்த சம்பவமும் நடந்து விட்டது.
நீங்களே கற்பனை செய்து பாருங்கள். உலக கோப்பை பைனலில் எனது ஓய்வுக்கு இன் னும் 10 நிமிடங்கள் இருக்கும் போது, நான் அந்த மாதிரி செய்தது எனக்கு மகிழ்ச்சி தருமா?
* நிச்சயமாக இல்லை.. .ஆனாலும் அந்த நேரத்தில் வெடித்து வீட்டீர்களே?
என்னை துїண்டினார்கள்...அதுவும் மிகவும் சீரியசாக...அவ்வளவு தான்! எனது செயல் மன்னிக்க முடியாதது. ஆனாலும் உண்மையான குற்றவாளியையும் தண்டிக்க வேண்டும். அந்த உண்மையான குற்றவாளி என்னை துїண் டியவர் (மாட்டராஸி) தான்!
நன்றி தினமலர்