மதி
14-07-2006, 07:12 AM
நேத்து மாலை சுமார் 7:30 மணியளவில் ஆபிஸில் மீட்டிங்கில் இருந்தபோது (அப்பப்போ கொஞ்சம் வேலையும் செய்வேணுங்கோ..!) AMMA calling. செல்போனை கட் பண்ணிட்டேன். மீட்டிங் முடிஞ்சப்புறம் அம்மா செல்போன்ல (எங்க வீட்டில நாலு பேருக்கும் ஆளுக்கொரு செல்போன். வீடு கட்டும் போது தேவைப்பட்டதால் வாங்கியது. வேற பந்தா ஒன்னுமில்ல) கூப்பிட்டேன்.
மதி: ஹலோ.
அம்மா : ம்.. சொல்லுப்பா.
மதி: நீங்க தான் கூப்பிட்டீங்க. என்ன விஷயம்?
அம்மா : ஒன்னுமில்ல. நீ பேசி நாலு நாளைக்கு மேலாச்சு. அதான் பேசலாமேன்னு. அங்க என்ன விசேஷம்.
மதி : அதெல்லாம் ஒன்னுமில்ல. வாழ்கையே வெறுக்குது. அதான் இமயமலைக்கு போலாமானு யோசிச்சுட்டிருக்கேன்.
அம்மா: நானும் வர்றேன். என்னையும் கூட்டிட்டு போ.
மதி : உலக பந்தங்கள விட்டுட்டு போலாம்னு பாக்குறேன். நீங்களும் வர்றேங்கறீங்களே..
(எப்பவும் எங்க உரையாடல் இப்படி தான் ஆரம்பிக்கும்)
அம்மா :நானும் தான் விட போறேன். அதான் கூட்டிட்டு போங்கறேன். சரி. என்ன ரொம்ப வேலையா?
மதி : (பந்தாவா) ஆமாம்மா. இப்பல்லாம் எப்பவும் டெலிகான், மீட்டிங்.வேலை பாக்க சொல்றாங்க..ஹ்ம்ம். அதான் உங்க ஞாபகமே வர்றதில்ல.
அம்மா : என் ஞாபகம் இல்லாம வேற யார் ஞாபகம் வருது. சொல்லு.
மதி : ஹ்ம்ம்.. ஒன்னுமில்ல. யாரும் ஞாபகத்துக்கு வர்றதில்ல. அதான் உங்களுக்கு போன் பண்றதில்ல.
அம்மா : சரிடா.. நான் கூட இப்பல்லாம் ரொம்பவே பிஸி.
மதி : என்னாது?
அம்மா :ஆமாம்டா. இங்க நம்ம ஏரியால மகளிர் மன்றம் ஆரம்பிச்சிருக்கோம். போன வெள்ளிக்கிழம மீட்டிங் வச்சு ஒருத்தங்கள தலைவியா தேர்ந்தெடுத்தோம். என்ன செயலாளரா தெர்ந்தெடுத்தாங்க.
மதி : (ஆச்சர்யதுடன்) அப்படியா..ஹ்ம்ம்..அப்புறம்.
அம்மா :அப்புறம். ஞாயித்துக்கிழம கவுன்சிலர், ஆபிஸருங்க எல்லார் வீட்டுக்கும் போய் நம்ம ஏரியாக்கு தண்ணித் தொட்டியும், ரோடும், தெருவிளக்கும் சீக்கிரம் கொண்டு வரணும்னு மனுகொடுத்தோம்.
மதி : (விலகாத ஆச்சர்யத்துடன்) அம்மா..கலக்குறியேம்மா..
அம்மா :அப்படியே மேயர் வீட்டுக்கும் போய் மனு கொடுத்தோம். செவ்வாக்கிழமையிலேர்ந்து லாரியில தண்ணி கொண்டு வந்து கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம வீட்டுக்கு பக்கத்துலேயே வருது.
மதி :பின்ன. செயலாளர்னா சும்மாவா.?அது சரி. அடுத்த வாரம் ஊருக்கு வரலாம்னு இருக்கேன். வரலாமா..?அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா.
அம்மா :வர்றதுன்னா வா. வீடு தான் இருக்குல்ல இருந்துட்டு போ.
மதி : என்னா.இருந்துட்டு போவா. அப்படின்னா..?
அம்மா :கோவிச்சுக்காதடா..இது உன் வீடு.எப்ப வேணும்னாலும் வா. நான் இங்க தான் இருப்பேன்.
மதி :ம்ம்..வர்றேன்.
இவ்வளவு தான் நடந்தது. ரொம்பவே சுவாரஸ்யமா இல்லாட்டியும். அம்மாகிட்ட ஏற்பட்டிருந்த முன்னேற்றத்த பாத்து எனக்கு ஆச்சர்யம். ஒரு காலத்துல பக்கத்து ஊருக்கு கூட போக எங்க துணையில்லாம போக மாட்டாங்க. அப்பா எவ்ளவோ திட்டுவார். எதையும் தனியா செய்ய கத்துக்கணும், பழகிக்கணும்னு. அப்பல்லாம் அம்மா மாறவேயில்ல. நானும் தம்பியும் வீட்ட விட்டு வந்தப்புறம் தான் மாற ஆரம்பிச்சாங்க.
போன வருஷம் வீடு கட்ட ஆரம்பிச்சப்போ, தம்பி கூட சேர்ந்து அம்மா தான் மேற்பார்வை பாக்க ஆரம்பிச்சாங்க. அப்பா ஆபிசுக்கு போயிடுவார் தம்பியும் வேலைக்கு போனதுக்கப்புறம் வேற வழியில்லாம மணலாகட்டும், சிமெண்டாகட்டும் எல்லாத்துக்கும் அம்மாவே போய் பேச ஆரம்பிச்சாங்க. பணம் பட்டுவாடா பண்ணினது அம்மா தான். வீட்டுக்கு செஞ்சது போய் இப்ப ஏரியா லெவலுக்கு போயாச்சு.
அடடா..ஒரு காலத்துல எப்படி இருந்த அம்மா இப்போ இப்படி ஆயிட்டாங்க. உண்மையாவே ஒரு மகனா நான் பெருமபடுறேன். ஆனா, வீட்டுக்குள்ளே இருந்த இருக்க ஆசப்பட்ட அம்மாவ இப்படி வெளியுலக பாக்க வச்சு, தன்னம்பிக்க கொடுத்து பேச வச்ச பெருமை அப்பாவையே சேரும்.
அம்மா, அப்பா உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஸ்பெஷல் சல்யூட்..:cool: :cool:
மதி: ஹலோ.
அம்மா : ம்.. சொல்லுப்பா.
மதி: நீங்க தான் கூப்பிட்டீங்க. என்ன விஷயம்?
அம்மா : ஒன்னுமில்ல. நீ பேசி நாலு நாளைக்கு மேலாச்சு. அதான் பேசலாமேன்னு. அங்க என்ன விசேஷம்.
மதி : அதெல்லாம் ஒன்னுமில்ல. வாழ்கையே வெறுக்குது. அதான் இமயமலைக்கு போலாமானு யோசிச்சுட்டிருக்கேன்.
அம்மா: நானும் வர்றேன். என்னையும் கூட்டிட்டு போ.
மதி : உலக பந்தங்கள விட்டுட்டு போலாம்னு பாக்குறேன். நீங்களும் வர்றேங்கறீங்களே..
(எப்பவும் எங்க உரையாடல் இப்படி தான் ஆரம்பிக்கும்)
அம்மா :நானும் தான் விட போறேன். அதான் கூட்டிட்டு போங்கறேன். சரி. என்ன ரொம்ப வேலையா?
மதி : (பந்தாவா) ஆமாம்மா. இப்பல்லாம் எப்பவும் டெலிகான், மீட்டிங்.வேலை பாக்க சொல்றாங்க..ஹ்ம்ம். அதான் உங்க ஞாபகமே வர்றதில்ல.
அம்மா : என் ஞாபகம் இல்லாம வேற யார் ஞாபகம் வருது. சொல்லு.
மதி : ஹ்ம்ம்.. ஒன்னுமில்ல. யாரும் ஞாபகத்துக்கு வர்றதில்ல. அதான் உங்களுக்கு போன் பண்றதில்ல.
அம்மா : சரிடா.. நான் கூட இப்பல்லாம் ரொம்பவே பிஸி.
மதி : என்னாது?
அம்மா :ஆமாம்டா. இங்க நம்ம ஏரியால மகளிர் மன்றம் ஆரம்பிச்சிருக்கோம். போன வெள்ளிக்கிழம மீட்டிங் வச்சு ஒருத்தங்கள தலைவியா தேர்ந்தெடுத்தோம். என்ன செயலாளரா தெர்ந்தெடுத்தாங்க.
மதி : (ஆச்சர்யதுடன்) அப்படியா..ஹ்ம்ம்..அப்புறம்.
அம்மா :அப்புறம். ஞாயித்துக்கிழம கவுன்சிலர், ஆபிஸருங்க எல்லார் வீட்டுக்கும் போய் நம்ம ஏரியாக்கு தண்ணித் தொட்டியும், ரோடும், தெருவிளக்கும் சீக்கிரம் கொண்டு வரணும்னு மனுகொடுத்தோம்.
மதி : (விலகாத ஆச்சர்யத்துடன்) அம்மா..கலக்குறியேம்மா..
அம்மா :அப்படியே மேயர் வீட்டுக்கும் போய் மனு கொடுத்தோம். செவ்வாக்கிழமையிலேர்ந்து லாரியில தண்ணி கொண்டு வந்து கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம வீட்டுக்கு பக்கத்துலேயே வருது.
மதி :பின்ன. செயலாளர்னா சும்மாவா.?அது சரி. அடுத்த வாரம் ஊருக்கு வரலாம்னு இருக்கேன். வரலாமா..?அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா.
அம்மா :வர்றதுன்னா வா. வீடு தான் இருக்குல்ல இருந்துட்டு போ.
மதி : என்னா.இருந்துட்டு போவா. அப்படின்னா..?
அம்மா :கோவிச்சுக்காதடா..இது உன் வீடு.எப்ப வேணும்னாலும் வா. நான் இங்க தான் இருப்பேன்.
மதி :ம்ம்..வர்றேன்.
இவ்வளவு தான் நடந்தது. ரொம்பவே சுவாரஸ்யமா இல்லாட்டியும். அம்மாகிட்ட ஏற்பட்டிருந்த முன்னேற்றத்த பாத்து எனக்கு ஆச்சர்யம். ஒரு காலத்துல பக்கத்து ஊருக்கு கூட போக எங்க துணையில்லாம போக மாட்டாங்க. அப்பா எவ்ளவோ திட்டுவார். எதையும் தனியா செய்ய கத்துக்கணும், பழகிக்கணும்னு. அப்பல்லாம் அம்மா மாறவேயில்ல. நானும் தம்பியும் வீட்ட விட்டு வந்தப்புறம் தான் மாற ஆரம்பிச்சாங்க.
போன வருஷம் வீடு கட்ட ஆரம்பிச்சப்போ, தம்பி கூட சேர்ந்து அம்மா தான் மேற்பார்வை பாக்க ஆரம்பிச்சாங்க. அப்பா ஆபிசுக்கு போயிடுவார் தம்பியும் வேலைக்கு போனதுக்கப்புறம் வேற வழியில்லாம மணலாகட்டும், சிமெண்டாகட்டும் எல்லாத்துக்கும் அம்மாவே போய் பேச ஆரம்பிச்சாங்க. பணம் பட்டுவாடா பண்ணினது அம்மா தான். வீட்டுக்கு செஞ்சது போய் இப்ப ஏரியா லெவலுக்கு போயாச்சு.
அடடா..ஒரு காலத்துல எப்படி இருந்த அம்மா இப்போ இப்படி ஆயிட்டாங்க. உண்மையாவே ஒரு மகனா நான் பெருமபடுறேன். ஆனா, வீட்டுக்குள்ளே இருந்த இருக்க ஆசப்பட்ட அம்மாவ இப்படி வெளியுலக பாக்க வச்சு, தன்னம்பிக்க கொடுத்து பேச வச்ச பெருமை அப்பாவையே சேரும்.
அம்மா, அப்பா உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஸ்பெஷல் சல்யூட்..:cool: :cool: