PDA

View Full Version : தேதியில்லாக் குறிப்புகள் 2ம் பாகம்-மயூ'ரே



рооропрпВ
02-07-2006, 09:33 AM
எனது முதல் நினைவுகளை முன்னர் உங்களுடன் பகிர்ந்திருந்தேன் இப்போது இரண்டாம் பாகம் வழமைபோல தேதி வாரியாக இல்லை ஏதோ எழுதும் போது ஞாபகத்திற்கு வரும் ஒழுங்கிலே எழுதுகின்றேன். பாரதி கூறியது போல நிஜம் மட்டுமே இங்கு கிடைக்கும் சுவாரசியமல்ல.....

ஆசிரியர்கள் இந்த சமூகத்திற்கு கிடைத்தற்கு அரிய பொக்கிசங்கள். சரஸ் ரீச்சர் அவ்வாறான பொக்கிசம் ஒன்றுதான். என் சிறுவயது ஆசிரியர் சரஸ் ரீச்சர். எனது வகுப்பாசிரியராய் இல்லாவிட்டாலும் பல தடவை எமக்கு படிப்பித்து இருக்கின்றா. Уசரஸ் ரீச்சரிட்ட மாட்டி குடுக்கட்டாФ என்று வெருட்டினால் எமக்கெல்லாம் ஒன்னுக்கு போகாத குறையாக வெருண்டுகொண்டு இருப்போம்.

ஒரு தடவை நான் எனக்கு பக்கத்தில இருந்த பொடியனுக்கு ஏதோ சொல்ல அவன் பகிடியாக எனக்கு அடிக்க அதை நான் உண்மையாக எடுத்துக்கொண்டு என் பென்சில் பெட்டியை திறந்து என் பென்சில எடுத்து ஒரு பச்சக்........!. அவ்வளவுதான் இரத்தம் குபு குபு என ஓடத்தொடங்கியது. டேய் சொரிடா!, தேற்ற முயற்சித்தேன், மானத்தை விட்டு கெஞ்சிப் பார்த்தேன். மஹும் அவன் மசியவே இல்லை. அழுதுகொண்டு சரஸ் ரீச்சரிடம் முறையிட்டான். எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. விழப்போகின்ற அடியை நினைத்தால் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மேசையில் இருந்த மூங்கில் பிரம்பைப் பார்த்தேன். அது என்னைவிடப் பெரியதாக இருந்தது...

முன்னுக்கு இருந்து ரீச்சர் என்னை வரச்சொல்லி சைகை செய்வது எனக்குத் தெரிந்தது. சங்கு ஊதப்படப்போகின்றது என்பது மட்டும் வடிவாகத் தெரிந்தது. கிட்டப்போய் தலையை குனிந்து கொண்டு நின்றேன்!.

Уஎன்னப்பு உன்னோட சொறிஞ்சவனா?Ф பக்கத்தில இருந்த பொடியனக் கேக்கிறா எண்டு பார்த்தா கேட்டது என்னத்தான். விடுவேனா நான்... அதுக்குப்பிறகு என்ன அவனுக்கு நல்ல பேச்சு விழுந்தது. என்னப்பற்றி சுமார் 6 மாதங்களுக்கு முன்பும் அம்மாவோட கதைத்தாவாம். இப்பெல்லாம் அவ என்னோட கதைக்கிறதில்ல காரணம் அந்த ஆசிரிய விளக்கு என்றும் அணையாத இறை விளக்குடன் இரண்டறக் கலந்துவிட்டது. கொடிய கான்சர் அவரைக் காவு கொண்டுவிட்டது.

ஒரு தடவை அம்மா, அப்பா அனைவரும் யாழ்ப்பாணம் சென்று விட்ட வேளையில் என்னையும் தங்கச்சியையும் பெரியப்பா வீட்டில் விட்டுச்சென்றனர். அந்த சமயத்தை இப்பவும் என்னால மறக்க ஏலாது. அம்மா மற்றும் அப்பா இல்லாததால் வீடு எனது முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது (வாழ்க்கையில் முதல் தடவையாக). ஆகவே நண்பர்களின் இளைப்பாறுமிடமாகவும் வீடியோ கேம் விளையாடுமிடமாகவும், அப்பப்ப படம் பார்க்கும் தியேட்டராகவும், மொத்தத்தில் ஒரு ரெஸ்ட் கவுஸ் ஆக எங்கட வீடு மாறியது. ஒரு நாள் வீட்டை கூட்டுவதற்காக பெரியப்பா வீட்டில இருந்து எங்கட வீட்டிற்கு வந்த தங்கை வீடு இருந்த கிடையைக்கண்டு திகைத்து விட்டாள் அந்தளவு குப்பை மேடாக கிடந்தது.

இது போதாதென்று பக்கத்து வீட்டு அன்டி வேற தங்கையிடம். Уஉங்கட அண்ணா அம்மா அப்பா வீட்டில இல்லாட்டியும் நண்பர்களை கூட்டிக்கொண்டு வந்து கொம்பைன் ஸ்டடி போடுறார்Ф. அப்பிடியே தங்கச்சி அன்ரிய கூட்டிக்கொண்டு போய் வீட்டைச் சுற்றிக்காட்டி விட்டாள். அவ்வளவுதான் அதுக்குப் பிறகு அந்த அன்ரி என்ன காணும் போதெல்லாம் Уதம்பி! கோம்பைன் ஸ்டடி எப்படீ?Ф என்று கேட்கும் அளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் தான் நான் வாழ்க்கையில் முதல் தடவையாக பெரியப்பாவின் கையெழுத்தை நான் போட்டேன் (அப்பாவின் கையெழுத்தை வெற்றிகரமாகப் பல தடவை போட்டிருக்கின்றேன்). காலை 5.30 க்கு வகுப்பு வைப்பார் என் ரியூசன் ரீச்சர் தனம் அக்கா(இவர் பற்றிய மேலதிக தகவலுக்கு முதலாம் பதிவைப் பார்க்கவும்). எனக்கு காலையில் எழும்புவுது கொலைக் களத்திற்குப் போவதைப் போலாகும். அதனால் சில வேளைகளில் கட் போட்டுவிட்டு வீட்டிலே துங்கிவிடுவேன். அப்படி ஒரு நாள் கட் போட்ட வேளையில் நான் தனம் ரீச்சரிடம் மாட்டுப்பட்டு விட்டேன்.

Уமயூரேசன்! எழும்படா.... பூனை மாதிரி வந்திருக்கிறாய் என்ன?. போய் ஏன் நேற்று காலம்பிறக் கிளாசுக்கு வரேல எண்டு அப்பாட்ட லெட்டர் வேண்டிக்கொண்டு வா...Ф

Уரீச்சர்! அம்மா அப்பா இரண்டு பேரும் யாழ்ப்பாணம் போயிட்டினம்Ф

Уஇப்ப பெரியப்பபாவோட தானே இருக்கிறாய்?... பெரிப்பாவிட்டையே லெட்டரை வாங்கிக்கொண்டு வா.. போ... கண்ணுக்கு முன்னால நில்லாதФ

எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அப்பாவின்ற லெட்டர் எண்டால் நானே எழுதி குடுத்து விடுவேன் ஆனால் பெரியப்பாவின் கையெழுத்தை எப்படிப் போடுவது. மாட்டுப்பட்டால் அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?. இவ்வாறு பல சிந்தனைகள் என்னைச்சுற்றி கிலியூட்டியவாறே பறந்து திரிந்தது (செல்வன் அண்ணா கொசுவர்த்தி கொழுத்த இல்லாவிட்டால் சுட்டு வீழ்த்த சொல்லமாட்டீங்க என்று நம்புகின்றேன்). இறுதியில் முடிவு எடுத்தேன் கையெழுத்து போடுவதில்லை என்று.

ஆனால் ஒவ்வொரு நாளும் காலையில் என்னை எழுப்பி மயூரேசன் நீ லெட்டர் இல்லாட்டி கிளாசுக்கு வராத என்று விரட்டி விட்டார். எனக்கென்ன போக்கிடமா இல்லை. திருமலை நகரில் இருக்கும் அழகான கடற்கரைக்குச் செல்வேன். இரு குண்றுகள் போன்ற அமைப்பு அவற்றிட்கிடையில் கடல் நீர். கரையிலே பரந்த மணற்பரப்பு இதைவிட வேறு என்ன வேண்டும்?. அதிகாலையில் கடற்கரையில் தேகாப்பியாசம் செய்பவர் தியானம் செய்பவர் என ஒரு கூட்டமே இருந்தது. அவற்றையும் அழகான சூரியோதயக் காட்சியையும் ரசிக்க கற்றுக்கொண்டேன். அத்துடன் பல் வேறு காரணங்களுக்காக ரீச்சரால் துரத்தப்படும் ஒரு குழுவும் என்னோடு இணைந்து கொள்ளும் (குணா-மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்வதாக கேள்விப்பட்டேன், தேவானந்-இப்போ இலங்கை டெலிகொம்மில் வேலைசெய்கின்றான், விஜிதன்-கனடா போய்விட்டான் என்று சொன்னார்கள், சுதர்சன்- இவன்தான் வகுப்பின் ஜோக்கர், மற்றும் சிலர்). இப்படியே அவர் என்னைக்கலைப்பதும் பின்னர் நான் கடற்கரைக்குப் போவதுமாக இரண்டு வாரம் கழிந்தது. எனக்கு இதற்குமேலும் வகுப்புகளைப் பகிஷ்கரிக்க விருப்பமில்லை. அதாவது படிக்க ஆர்வம் வந்து விட்டது என்று வையுங்களேன்!

நான் செய்தது எல்லாம் பெரியப்பாவின் போலி கையெழுத்திட்ட கடிதத்தை தயாரித்து தனம் அக்காவிடம் கொடுத்ததுதான். அதைப்பார்த்த ரீச்சர் இவன் தில்லு முல்லு செய்து விட்டான் என்று தெரிந்து கொண்டுவிட்டார்.

Уடேய்! உண்மையைச் சொல்லு இது பெரியப்பாவின்ட லெட்டர் இல்லத்தானே?Ф

Уஇல்ல அவர்தான் எழுதினவர்!Ф

Уநீ எனக்கு பூ சுத்துறாய் என்ன?. நான் பெரியப்பாவிடம் நேரடியாக தொடர்பு கொள்கிறேன்Ф என்று கூறி லெட்டரை வாங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார்.

அதே ரியூசனில் சிறிய வகுப்பில் படித்த என் தங்கை முலமாக பெரியப்பாவிற்கு அறிவித்து விட்டார் விசயத்தை. பிறகு என்ன என்ட மானம் கப்பல் ஏறியதுதான் மிச்சம். இப்பவும் பெரியப்பாவுடன் கதைக்கும் போது அந்த நினைவுகள் வந்து சங்கடப்படுத்தும்.........

ஒரு தடவை விஞ்ஞாண பாடப் (அதுதான் தமிழ் நாட்டில் அறிவியல் பாடம்) பரீட்சை பேப்பரை எப்படி மீட்டோம் (பிராஜக்ட் வெப்பவியல் என்று வைப்போமே) என்றும் நர்சரியில் என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றியும் அடுத்த பதிவில் கூறுகின்றேன்....

роЗрогрпИроп роирогрпНрокройрпН
02-07-2006, 10:10 AM
திகதிதான் மறந்தாலும் நிகழ்வுகளின் ஞாபங்கள் மறக்கவில்லை தானே.அதுவே போதும்.தொடருங்கள் உங்கள் குறிப்புக்களை..

роЗро│роЪрпБ
02-07-2006, 10:01 PM
கூட்டுபடிப்பு , திருமலை கடல் காட்சி, போலிக்கையெழுத்து என சுகமான நினைவலைகள்... நாங்களும் மிதக்கிறோம்.


தொடருங்கள் மயூரேசன்..

рооропрпВ
03-07-2006, 06:43 AM
கூட்டுபடிப்பு , திருமலை கடல் காட்சி, போலிக்கையெழுத்து என சுகமான நினைவலைகள்... நாங்களும் மிதக்கிறோம்.


தொடருங்கள் மயூரேசன்..
கூட்டுப்படிப்பாக இருந்தால் பரவாயில்லை இது கூத்தடிப்பல்லவா????:D

рооропрпВ
03-07-2006, 06:44 AM
திகதிதான் மறந்தாலும் நிகழ்வுகளின் ஞாபங்கள் மறக்கவில்லை தானே.அதுவே போதும்.தொடருங்கள் உங்கள் குறிப்புக்களை..
நன்றி விஸ்டா தொடர்ந்து எழுதுகின்றேன் விரைவில் 3 ம் பாகம் எழுதத்தொடங்குவதாக உத்தேசம்.....:)

pradeepkt
03-07-2006, 08:41 AM
அடடே மயூரேசா,
அருமையாக எழுத வந்து விட்டதே உனக்கு... பாராட்டுகள்! கடற்கரையோரம் சூரிய உதயத்தை நீ எழுதுவதை வைத்தே நானும் பார்த்தேன். இன்னும் நிறைய எழுது!

நான் சின்ன வயதில் தாத்தா வீட்டில்தான் வளர்ந்தேன். தாத்தா பாட்டி பையனுக்குச் செல்லம் கொடுத்தால் கெட்டு விடுவான் என்று இரண்டாவது ரேங்க் வாங்கினாலும் சாமானியத்தில் கையெழுத்துப் போட மாட்டார். இப்படி இருந்தாலும் காலங்கார்த்தால அழுது பொரண்டு கண்ணீர் விட்டுக் கையெழுத்து வாங்கிருவேன். அப்புறம் காலேஜு வந்தப்புறம் சில சமயம் அம்மா கையெழுத்தை நானே போட வேண்டிய நிர்ப்பந்தங்கள் வந்தது. அம்மாவிடம் சொல்லிவிட்டு நானே போட்டு விடுவேன்.

рооропрпВ
03-07-2006, 10:54 AM
அடடே மயூரேசா,
அருமையாக எழுத வந்து விட்டதே உனக்கு... பாராட்டுகள்! கடற்கரையோரம் சூரிய உதயத்தை நீ எழுதுவதை வைத்தே நானும் பார்த்தேன். இன்னும் நிறைய எழுது!

நான் சின்ன வயதில் தாத்தா வீட்டில்தான் வளர்ந்தேன். தாத்தா பாட்டி பையனுக்குச் செல்லம் கொடுத்தால் கெட்டு விடுவான் என்று இரண்டாவது ரேங்க் வாங்கினாலும் சாமானியத்தில் கையெழுத்துப் போட மாட்டார். இப்படி இருந்தாலும் காலங்கார்த்தால அழுது பொரண்டு கண்ணீர் விட்டுக் கையெழுத்து வாங்கிருவேன். அப்புறம் காலேஜு வந்தப்புறம் சில சமயம் அம்மா கையெழுத்தை நானே போட வேண்டிய நிர்ப்பந்தங்கள் வந்தது. அம்மாவிடம் சொல்லிவிட்டு நானே போட்டு விடுவேன்.
என்னை முதலிருந்தே ஊக்குவிக்கும் உங்களுக்கு நன்றி....:) :)

பாடசாலை ரிப்போட்டில் நான் கையெழுத்துப் போட்டது கிடையாது காரணம் அப்பா அம்மா நன்கு படித்வர்கள் அது போதாதென்று அம்மா ஒரு ஆசிரியர் (எமது பாடசாலையின் சகோதரப்பாடசாலையில்). எங்களுக்கு நல்லகாலம் பல்கலையில் கையெழுத்துப் படலம் தொடரவில்லை.....B)
நீங்க பரவாயில்ல அம்மாட்ட சொல்லிப்போட்டுதானே போட்டனீங்க. வாழ்க உத்தமன் பிரதீப் அண்ணா.....:D

роУро╡ро┐ропро╛
03-07-2006, 01:00 PM
பாராட்டுகள் மயூரேசன்

நினைவலைகளை தொடர்ந்து தீண்டாவும்

родро╛рооро░рпИ
03-07-2006, 01:32 PM
ஒரு தடவை நான் எனக்கு பக்கத்தில இருந்த பொடியனுக்கு ஏதோ சொல்ல அவன் பகிடியாக எனக்கு அடிக்க அதை நான் உண்மையாக எடுத்துக்கொண்டு என் பென்சில் பெட்டியை திறந்து என் பென்சில எடுத்து ஒரு பச்சக்........!. அவ்வளவுதான் இரத்தம் குபு குபு என ஓடத்தொடங்கியது.டேய் சொரிடா!, தேற்ற முயற்சித்தேன், மானத்தை விட்டு கெஞ்சிப் பார்த்தேன். மஹும் அவன் மசியவே இல்லை. அழுதுகொண்டு சரஸ் ரீச்சரிடம் முறையிட்டான். எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. விழப்போகின்ற அடியை நினைத்தால் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மேசையில் இருந்த மூங்கில் பிரம்பைப் பார்த்தேன். அது என்னைவிடப் பெரியதாக இருந்தது...


சரியான பென்ஸாக இருந்திருப்பீர் போல இருக்கே.. ஆனால் பென்ஸூ என்றால் ஓடிப்போதல், தலைமறைவு வாழ்க்கை என ரேஞ்சே வேறே.. இந்த விஷய்த்தில் நீர் பென்ஸுக்கு கடைக்குட்டித் தம்பிதான்...





அம்மா மற்றும் அப்பா இல்லாததால் வீடு எனது முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது (வாழ்க்கையில் முதல் தடவையாக). ஆகவே நண்பர்களின் இளைப்பாறுமிடமாகவும் வீடியோ கேம் விளையாடுமிடமாகவும், அப்பப்ப படம் பார்க்கும் தியேட்டராகவும், மொத்தத்தில் ஒரு ரெஸ்ட் கவுஸ் ஆக எங்கட வீடு மாறியது. ஒரு நாள் வீட்டை கூட்டுவதற்காக பெரியப்பா வீட்டில இருந்து எங்கட வீட்டிற்கு வந்த தங்கை வீடு இருந்த கிடையைக்கண்டு திகைத்து விட்டாள் அந்தளவு குப்பை மேடாக கிடந்தது.

இது போதாதென்று பக்கத்து வீட்டு அன்டி வேற தங்கையிடம். Уஉங்கட அண்ணா அம்மா அப்பா வீட்டில இல்லாட்டியும் நண்பர்களை கூட்டிக்கொண்டு வந்து கொம்பைன் ஸ்டடி போடுறார்Ф. அப்பிடியே தங்கச்சி அன்ரிய கூட்டிக்கொண்டு போய் வீட்டைச் சுற்றிக்காட்டி விட்டாள். அவ்வளவுதான் அதுக்குப் பிறகு அந்த அன்ரி என்ன காணும் போதெல்லாம் Уதம்பி! கோம்பைன் ஸ்டடி எப்படீ?Ф என்று கேட்கும் அளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது.


அப்ப நீங்க செஞ்ச கொட்டத்தை இப்போ வருடம் இரண்டு மாதம் செய்கிறேன்.. கோடை விடுமுறைக்கு மனைவி குழந்தைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்பி ஊர் சுற்ற வைத்து விட்டு.. பேச்சுலர் லைஃப் தான் எஞ்ஜாய் தான்.. ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் இல்லை...:D :D :D :D




இந்த சந்தர்ப்பத்தில் தான் நான் வாழ்க்கையில் முதல் தடவையாக பெரியப்பாவின் கையெழுத்தை நான் போட்டேன் (அப்பாவின் கையெழுத்தை வெற்றிகரமாகப் பல தடவை போட்டிருக்கின்றேன்). காலை 5.30 க்கு வகுப்பு வைப்பார் என் ரியூசன் ரீச்சர் தனம் அக்கா(இவர் பற்றிய மேலதிக தகவலுக்கு முதலாம் பதிவைப் பார்க்கவும்). எனக்கு காலையில் எழும்புவுது கொலைக் களத்திற்குப் போவதைப் போலாகும். அதனால் சில வேளைகளில் கட் போட்டுவிட்டு வீட்டிலே துங்கிவிடுவேன். அப்படி ஒரு நாள் கட் போட்ட வேளையில் நான் தனம் ரீச்சரிடம் மாட்டுப்பட்டு விட்டேன்.

Уமயூரேசன்! எழும்படா.... பூனை மாதிரி வந்திருக்கிறாய் என்ன?. போய் ஏன் நேற்று காலம்பிறக் கிளாசுக்கு வரேல எண்டு அப்பாட்ட லெட்டர் வேண்டிக்கொண்டு வா...Ф

Уரீச்சர்! அம்மா அப்பா இரண்டு பேரும் யாழ்ப்பாணம் போயிட்டினம்Ф

Уஇப்ப பெரியப்பபாவோட தானே இருக்கிறாய்?... பெரிப்பாவிட்டையே லெட்டரை வாங்கிக்கொண்டு வா.. போ... கண்ணுக்கு முன்னால நில்லாதФ

நான் செய்தது எல்லாம் பெரியப்பாவின் போலி கையெழுத்திட்ட கடிதத்தை தயாரித்து தனம் அக்காவிடம் கொடுத்ததுதான். அதைப்பார்த்த ரீச்சர் இவன் தில்லு முல்லு செய்து விட்டான் என்று தெரிந்து கொண்டுவிட்டார்.

Уடேய்! உண்மையைச் சொல்லு இது பெரியப்பாவின்ட லெட்டர் இல்லத்தானே?Ф

Уஇல்ல அவர்தான் எழுதினவர்!Ф

Уநீ எனக்கு பூ சுத்துறாய் என்ன?. நான் பெரியப்பாவிடம் நேரடியாக தொடர்பு கொள்கிறேன்Ф என்று கூறி லெட்டரை வாங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார்.

அதே ரியூசனில் சிறிய வகுப்பில் படித்த என் தங்கை முலமாக பெரியப்பாவிற்கு அறிவித்து விட்டார் விசயத்தை. பிறகு என்ன என்ட மானம் கப்பல் ஏறியதுதான் மிச்சம். இப்பவும் பெரியப்பாவுடன் கதைக்கும் போது அந்த நினைவுகள் வந்து சங்கடப்படுத்தும்.........

ஒரு தடவை விஞ்ஞாண பாடப் (அதுதான் தமிழ் நாட்டில் அறிவியல் பாடம்) பரீட்சை பேப்பரை எப்படி மீட்டோம் (பிராஜக்ட் வெப்பவியல் என்று வைப்போமே) என்றும் நர்சரியில் என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றியும் அடுத்த பதிவில் கூறுகின்றேன்....

அப்பா கையெழுத்தை போடுமளவுக்கு என் ஆசிரியர்கள் என்னை துன்புறுத்தவில்லை.. 3 ஆம் வகுப்பிலிருந்து வகுப்பில் முதன்மை (முதல் + தன்மை) மாணவனாக இருந்திருக்கிறேன்.. அண்ணன் என்னுடைய கிளாஸ்மேட்.. எப்படியும் 40 க்கு 30 க்கு மேல்தான் அவன் ராங்க்.. டீச்சர் என் விடைத்தாளையும் என் விடைத்தாளையும் படித்து காண்பித்து வெறுப்பேற்றுவார். அவன் பெரிய அறிஞர்.:rolleyes: :rolleyes: :rolleyes: (எழுத்துப் பிழை எக்கச்சக்கமாக இருக்கும்:D :D :D ) எனவே அவன் கையெழுத்து வாங்கிய பின் தான் நான் என்னுடையதை காட்ட வேண்டும் என்பது எழுதப்படாத ஒப்பந்தம்.. அனித்திலும் பாஸ்மார்க் அவன் குறிக்கோள்.. எனக்கு முதல் ரேங்க் மட்டுமே குறிக்கோள்.. ஆனால் அதற்காக இரவு பகலாக விழுந்து விழுந்து படிப்பதில்லை...

என்னால் என் அண்ணன் வாங்கிய உதைகள் ஏராளம்.. பாவம்...

9 ம் வகுப்பில் அவன் வேறு வகுப்பு நான் வேறு வகுப்பு என்று பிரிந்த பிந்தான் அவனுக்கு நிம்மதி.. ...

நான் எனது கையெழுத்தையே மாற்றிப் போட்ட ஒரு சம்பவம் உண்டு.. அதைத் தனித்திரியில் எழுதுகிறேன்.

рооропрпВ
04-07-2006, 08:38 AM
பாராட்டுகள் மயூரேசன்

நினைவலைகளை தொடர்ந்து தீண்டாவும்
நன்றி ஓவியாக்கா!

рооропрпВ
04-07-2006, 08:58 AM
சரியான பென்ஸாக இருந்திருப்பீர் போல இருக்கே.. ஆனால் பென்ஸூ என்றால் ஓடிப்போதல், தலைமறைவு வாழ்க்கை என ரேஞ்சே வேறே.. இந்த விஷய்த்தில் நீர் பென்ஸுக்கு கடைக்குட்டித் தம்பிதான்...


நான் ஒன்றும் ஓடி ஒளியவில்லையே???
பென்ஸ் அண்ணா என்ன அவ்வளவு திறமை சாலியா மான் கராட்டியில்?




அப்ப நீங்க செஞ்ச கொட்டத்தை இப்போ வருடம் இரண்டு மாதம் செய்கிறேன்.. கோடை விடுமுறைக்கு மனைவி குழந்தைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்பி ஊர் சுற்ற வைத்து விட்டு.. பேச்சுலர் லைஃப் தான் எஞ்ஜாய் தான்.. ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் இல்லை...:D :D :D :D
.
இப்போ நமக்கு தெரிஞ்சுட்டுதில்ல.... உங்கட ஐவரணி எதிர் தாக்குதல் நடத்தலாம் கவனம்.



அப்பா கையெழுத்தை போடுமளவுக்கு என் ஆசிரியர்கள் என்னை துன்புறுத்தவில்லை.. 3 ஆம் வகுப்பிலிருந்து வகுப்பில் முதன்மை (முதல் + தன்மை) மாணவனாக இருந்திருக்கிறேன்.. அண்ணன் என்னுடைய கிளாஸ்மேட்.. எப்படியும் 40 க்கு 30 க்கு மேல்தான் அவன் ராங்க்.. டீச்சர் என் விடைத்தாளையும் என் விடைத்தாளையும் படித்து காண்பித்து வெறுப்பேற்றுவார். அவன் பெரிய அறிஞர்.:rolleyes: :rolleyes: :rolleyes: (எழுத்துப் பிழை எக்கச்சக்கமாக இருக்கும்:D :D :D ) எனவே அவன் கையெழுத்து வாங்கிய பின் தான் நான் என்னுடையதை காட்ட வேண்டும் என்பது எழுதப்படாத ஒப்பந்தம்.. அனித்திலும் பாஸ்மார்க் அவன் குறிக்கோள்.. எனக்கு முதல் ரேங்க் மட்டுமே குறிக்கோள்.. ஆனால் அதற்காக இரவு பகலாக விழுந்து விழுந்து படிப்பதில்லை...

என்னால் என் அண்ணன் வாங்கிய உதைகள் ஏராளம்.. பாவம்...

9 ம் வகுப்பில் அவன் வேறு வகுப்பு நான் வேறு வகுப்பு என்று பிரிந்த பிந்தான் அவனுக்கு நிம்மதி.. ...

நான் எனது கையெழுத்தையே மாற்றிப் போட்ட ஒரு சம்பவம் உண்டு.. அதைத் தனித்திரியில் எழுதுகிறேன்.

எனக்கு ஒரு சகோதரன் இல்லை என்று கவலைப்படாத நாள் இல்லை. இப்போதான் புரிகின்றது இல்லாதது எவ்வளவு நல்லது. இப்பட உங்கட அண்ணா எங்க?(யாரையோ குறிப்பாக சொல்வது போலவும் தெரியுது?)

தனித்திரியில் விரைவில் போடுங்க உங்க சாகசத்ததை.....

родро╛рооро░рпИ
04-07-2006, 09:08 AM
நான் ஒன்றும் ஓடி ஒளியவில்லையே???
பென்ஸ் அண்ணா என்ன அவ்வளவு திறமை சாலியா மான் கராட்டியில்?



சுவையான சம்பவங்களில் பென்ஸின் சாதனைப் பதிவுகளைக் காண்க.. வித விதமா வீட்டை விட்டு ஓடிப்போயிடுவார்.. கேரளாம்பார் தூத்துக்குடி என்பார்.. போலீஸூக்கு டிமிக்கி கொடுத்து தலை மறைவாயிடுவார்... மிரட்டல், கெஞ்சல், யப்பா



இப்போ நமக்கு தெரிஞ்சுட்டுதில்ல.... உங்கட ஐவரணி எதிர் தாக்குதல் நடத்தலாம் கவனம்.


ஐவரணியா.. இன்னும் இருக்கா? எங்கே? எங்கே??





எனக்கு ஒரு சகோதரன் இல்லை என்று கவலைப்படாத நாள் இல்லை. இப்போதான் புரிகின்றது இல்லாதது எவ்வளவு நல்லது. இப்பட உங்கட அண்ணா எங்க?(யாரையோ குறிப்பாக சொல்வது போலவும் தெரியுது?)

தனித்திரியில் விரைவில் போடுங்க உங்க சாகசத்ததை.....

என் அண்ணா சேலத்தில் டெக்ஸ்டைல்ஸ் சம்பந்தமான தொழில் செய்து வருகிறார்... "பேர்" அறிஞர் அண்ணா இவரல்ல...:D :D :D

рооропрпВ
05-07-2006, 10:01 AM
சுவையான சம்பவங்களில் பென்ஸின் சாதனைப் பதிவுகளைக் காண்க.. வித விதமா வீட்டை விட்டு ஓடிப்போயிடுவார்.. கேரளாம்பார் தூத்துக்குடி என்பார்.. போலீஸூக்கு டிமிக்கி கொடுத்து தலை மறைவாயிடுவார்... மிரட்டல், கெஞ்சல், யப்பா

ரெம்பவும் ஜாலியான பேர்வழியா நம்ம பென்சு அண்ணா! :D :D

அநியாயத்திற்கு வேறுயாரையோ நினைக்கப் பார்த்தேன்.....!:D :D

роУро╡ро┐ропройрпН
15-07-2008, 11:56 AM
роХрпВродрпНродроЯро┐рокрпНрокродро▒рпНроХро╛роХ роХрпВроЯрпНроЯрпБрокрпН рокроЯро┐рокрпНрокрпБ...
роородро┐рокрпНрокрпЖрогрпН роПроЯрпНроЯро┐ро▓рпН роХро│рпНро│роХрпН роХрпИропрпЖро┤рпБродрпНродрпБ...
родрокрпНрокро┐ роУроЯро┐рокрпН рокрпЛропрпН,
роХроЯро▒рпНроХро░рпИ роХро╛роЯрпНроЪро┐роХро│ро┐ройрпН роЪрпБроХроорпН...!!

роиро┐ро░роорпНрокро╡рпЗ роЗро░роЪро┐родрпНродрпЗройрпН рооропрпВ..!! :)