PDA

View Full Version : சுரதாவுக்கு ஒரு பாசுரம்



இனியவன்
30-06-2006, 06:30 PM
சுரதாவுக்கு ஒரு பாசுரம்

வாலிபக் கவிஞர் வாலி


இரண்டாம் முறையாக
இறந்தான்
புரட்சிக்கவி
பாரதிதாசன்...
உவமைக் கவிஞன் சுரதாவின்
உயிர்நீப்பில்;
இனி _
இவ் வையம்
வழுத்தும் வண்ணம் _ ஓர்
எழுத்து விருட்சம்...
தழைப்ப தேது
தமிழ்த் தோப்பில்?



அவன் உரைக்காத
உவமையில்லை ;
அவனுக்குத்தான்
உவமையில்லை!



வாழ்ந்த
வாழ்வறியாது ;
வாழவும்
வழியறியாது ;
வண்டமிழர் தொண்டை
வறண்டு கிடக்க _
அவன்தான்
அவர்களது....
விக்கல் தீர்த்த _
சிக்கல் தீர்த்தம் ;
சிக்கல்
சிங்காரவேலன் _
தமிழ்க் கடவுள் எனில் _ அவன்
தமிழ்க் கடவுளின் மற்றொரு மூர்த்தம்!



சுரதா! கவி
வரதா!
நீதான்
நீண்ட காலத்திற்குப் _
பகுத்தறிவுப்
பயிர் _
விளைவதற்கான
விதை நெருப்பு ;
விதை நெருப்பை விழுங்குவதோ
சிதை நெருப்பு?



உன்
உத்தம மகன்...
கல்லாடன்
கண்ணீரைத் _
துடைக்க என்னிடம் இல்லை
துவாலை ; அது
கண்ணீரல்ல _
கனலும் சுவாலை!



தகவுசால்
தமிழ் மக்களே! இனி...
வருடா
வருடம்
வரும் வான்மழை ;
வாராது தேன் மழை!

நன்றி குமுதம்

இளசு
30-06-2006, 09:10 PM
மறைந்த கவிஞருக்கு மறக்காத கவியின் அஞ்சலி..

நன்றி இனியன் .