இனியவன்
29-06-2006, 05:14 PM
வாலிபக் கவிஞர்
மனிதா ! ஓ !
மனிதா !
காது கொடு ;
கடவுள் பேசுகிறேன் ; உன்
மூளைக்கு ஞான
முலாம் பூசுகிறேன் !
********
அருள்மிகு என்
ஆலயத்தில்...
வேதியர் நீறு கொடுக்க வேறு
சாதியர் நீட்டினார் கை ; வேறு
சாதியர் நீறு கொடுக்க இனி
வேதியர் நீட்டினாலென்ன கை?
பேதங்கள்
பேணாத கை _
திருக்கை ; அதுதான் என்
இருக்கை !
********
நான்
நாலாபுறமும்...
விரிந்து கிடக்கும்
வானம் ;
எனக்குப் பிடிக்கும்
எல்லாப் பறவைகளின் கானம் !
********
நீராட்டவும் ; எனக்கு
நீராஞ்சனம் காட்டவும் ;
இவர்தான் அர்ச்சகர் _ என நான்
இனம் காட்டவில்லை ஒருவரை ;
அனைவர்க்கும்
அம்மையும் அப்பனும் ஆகிய என்
ஆலயத்தில்
அதற்கில்லை ஒரு வரை!
********
ஒரு தேவாரம் ;
ஒரு பூவாரம் ;
இவ்
இரண்டை...
எவர் தரினும் _ நான்
ஏற்பேன்; திருத்
தொண்டர் தம்மிடம்_நான்
தோற்பேன்!
********
ஆயிரம் இருக்கலாம்
ஆகம விதி ; அதனை
ஆரும் கற்கலாம் _ என
ஆகட்டுமே விதி !
மனிதா ! ஓ !
மனிதா !
ஏனயோர்க்கும் _ நீ
எடுத்துச் சொல் :
என் சபையில் _
ஏகலைவனும் ஏந்தலாம் வில் !
நன்றி குமுதம்
மனிதா ! ஓ !
மனிதா !
காது கொடு ;
கடவுள் பேசுகிறேன் ; உன்
மூளைக்கு ஞான
முலாம் பூசுகிறேன் !
********
அருள்மிகு என்
ஆலயத்தில்...
வேதியர் நீறு கொடுக்க வேறு
சாதியர் நீட்டினார் கை ; வேறு
சாதியர் நீறு கொடுக்க இனி
வேதியர் நீட்டினாலென்ன கை?
பேதங்கள்
பேணாத கை _
திருக்கை ; அதுதான் என்
இருக்கை !
********
நான்
நாலாபுறமும்...
விரிந்து கிடக்கும்
வானம் ;
எனக்குப் பிடிக்கும்
எல்லாப் பறவைகளின் கானம் !
********
நீராட்டவும் ; எனக்கு
நீராஞ்சனம் காட்டவும் ;
இவர்தான் அர்ச்சகர் _ என நான்
இனம் காட்டவில்லை ஒருவரை ;
அனைவர்க்கும்
அம்மையும் அப்பனும் ஆகிய என்
ஆலயத்தில்
அதற்கில்லை ஒரு வரை!
********
ஒரு தேவாரம் ;
ஒரு பூவாரம் ;
இவ்
இரண்டை...
எவர் தரினும் _ நான்
ஏற்பேன்; திருத்
தொண்டர் தம்மிடம்_நான்
தோற்பேன்!
********
ஆயிரம் இருக்கலாம்
ஆகம விதி ; அதனை
ஆரும் கற்கலாம் _ என
ஆகட்டுமே விதி !
மனிதா ! ஓ !
மனிதா !
ஏனயோர்க்கும் _ நீ
எடுத்துச் சொல் :
என் சபையில் _
ஏகலைவனும் ஏந்தலாம் வில் !
நன்றி குமுதம்