விஜய்
28-06-2006, 09:30 AM
நான் எழுதிய கவிதைகளுள், எனக்கு பிடித்த கவிதையை உங்கள் பார்வைக்காக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்
http://vennila.yarl.net/nilaa/annaa.jpg
இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு
இருபத்தோராம் திகதி
இதே ஆவணி மாதத்தில்
இதோ பசுமையாக அவ்நினைவுகள்
இன்றும் என் நெஞ்சில்;
இனிமையான காலைப்பொழுதில்
இயக்கினேன் கணனியை
இணைந்தேன் அரட்டைக்குள்
இயற்பெயர் வெண்ணிலாவாக
இவளுக்காகவே காத்திருப்பதுபோல்;
இன்முகத்துடன் அரட்டைக்குள்
இளங்கவிக்குயிலாக நீயிருந்தாய்
இதமாக கதைக்க நினைத்து
இதழ்விரித்துக் கேட்டேன்
இருக்கின்றீர்களா நலமா என்று
இதயத்தை தொடுவது போல்
இயம்பினாய் ஆம் நலமே என
இலங்கையில் வசிக்கின்றேன் நான்
இங்கிலாந்தில் வசிக்கின்றாய் நீ
இவ்வாறாக தொடர்ந்த அரட்டையில்
இருநாடுகளில் வாழ்ந்தாலும்
இணைபிரியாது வாழ எண்ணி
இருவரும் கலந்தாலோசித்து
இறுகப் பற்றினோம் நம்நட்பை
இணைந்தோம் ஈ அஞ்சலூடாக
இடைவிடாது கதைத்தோம்
இருபொழுது காலையும் மாலையும்
இன்னல்களைப் பரிமாறினோம்
இன்புடன் அரவணைத்தோம்.
இரட்டை குழந்தைகளாக
இன்றும் இருக்கின்றாய்
இளகிய என் மனதில்
இனிய பாசமான அண்ணாவாக
இணைய அரட்டையில் அன்று
இணைந்த நாம் இன்றும்
இருக்கின்றோம் பாசமாக
இணை பிரியா உறவுகளாக
இதை நினைத்துப் பார்க்கையில்
இறுமாப்படைகிறேன் தினமும்.
இதயத்தில் சலனம் இல்லை
இருந்ததில்லை நமக்குள் சண்டை
இணையத்தில் கண்ட உன்னை
இருவிழிகளால் காண எண்ணி
இன்றைய நம் உறவின்
இனிய ஓராண்டு நிறைவினில்
இறைஞ்சுகிறேன் மனதார
இறைவனிடம் இருகரங்கூப்பி
இனிய உறவாம் அண்ணா தங்கையாக
இனிவரும் ஜென்மத்திலும்
இயல்பாக நாம் இணைந்திட.
உங்களது விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
http://vennila.yarl.net/nilaa/annaa.jpg
இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு
இருபத்தோராம் திகதி
இதே ஆவணி மாதத்தில்
இதோ பசுமையாக அவ்நினைவுகள்
இன்றும் என் நெஞ்சில்;
இனிமையான காலைப்பொழுதில்
இயக்கினேன் கணனியை
இணைந்தேன் அரட்டைக்குள்
இயற்பெயர் வெண்ணிலாவாக
இவளுக்காகவே காத்திருப்பதுபோல்;
இன்முகத்துடன் அரட்டைக்குள்
இளங்கவிக்குயிலாக நீயிருந்தாய்
இதமாக கதைக்க நினைத்து
இதழ்விரித்துக் கேட்டேன்
இருக்கின்றீர்களா நலமா என்று
இதயத்தை தொடுவது போல்
இயம்பினாய் ஆம் நலமே என
இலங்கையில் வசிக்கின்றேன் நான்
இங்கிலாந்தில் வசிக்கின்றாய் நீ
இவ்வாறாக தொடர்ந்த அரட்டையில்
இருநாடுகளில் வாழ்ந்தாலும்
இணைபிரியாது வாழ எண்ணி
இருவரும் கலந்தாலோசித்து
இறுகப் பற்றினோம் நம்நட்பை
இணைந்தோம் ஈ அஞ்சலூடாக
இடைவிடாது கதைத்தோம்
இருபொழுது காலையும் மாலையும்
இன்னல்களைப் பரிமாறினோம்
இன்புடன் அரவணைத்தோம்.
இரட்டை குழந்தைகளாக
இன்றும் இருக்கின்றாய்
இளகிய என் மனதில்
இனிய பாசமான அண்ணாவாக
இணைய அரட்டையில் அன்று
இணைந்த நாம் இன்றும்
இருக்கின்றோம் பாசமாக
இணை பிரியா உறவுகளாக
இதை நினைத்துப் பார்க்கையில்
இறுமாப்படைகிறேன் தினமும்.
இதயத்தில் சலனம் இல்லை
இருந்ததில்லை நமக்குள் சண்டை
இணையத்தில் கண்ட உன்னை
இருவிழிகளால் காண எண்ணி
இன்றைய நம் உறவின்
இனிய ஓராண்டு நிறைவினில்
இறைஞ்சுகிறேன் மனதார
இறைவனிடம் இருகரங்கூப்பி
இனிய உறவாம் அண்ணா தங்கையாக
இனிவரும் ஜென்மத்திலும்
இயல்பாக நாம் இணைந்திட.
உங்களது விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.