PDA

View Full Version : யாரோ!



நிலா
23-04-2003, 10:47 PM
ஒருங்குறியாக்கம்-ஓவியன்

கடலில்
எத்தனை புயல்களைச் சந்தித்தீர்கள்
என்பதில் உலகுக்கு அக்கறையில்லை .
கப்பலை கரைசேர்த்தீர்களா
என்பதைச் சொல்லுங்கள்!
------------------------------யாரோ

....

இளசு
23-04-2003, 11:08 PM
பிரசவ வேதனையைக் கேட்கவா வந்தனர்?
குழந்தையைக் காட்டுங்கள்.... அதுதானே விருந்தினர் விருப்பம்..!!!

அமரன்
25-10-2007, 05:42 PM
வெற்றி பெற்றீர்களா ?
அதைச்சொல்லுங்கள்
போராட்டங்களை எமக்கெதுக்கு..
வீணர்கள் வேண்டுவது இதைத்தானே...!

யாரோ கொடுத்ததை
பொழிந்த நிலாவுக்கு நன்றி சொல்ல
காலக்கருமேகங்கள் திரை போட்டுவிட்டன..!

ஓவியன்
25-10-2007, 06:48 PM
இமயத்தில் எவரும் எப்போதும் ஏறலாம், ஆனால் ஏறி எவரெஸ்டைத் தொட்டால் தானே அவர் பெயர் வரலாற்றில் பதியும்....

தந்த யாரோக்கும் அதனைக் கண்டெடுத்து மன்றில் தந்த நிலாக்கும் நன்றிகள்!.

சுகந்தப்ரீதன்
27-10-2007, 08:10 AM
நான் இதை இப்படிதான் படித்திருக்கிறேன் நண்பர்களே...!

நீ எத்தனை புயல்களை
கடந்து வந்தாய் என்று
மற்றவர்களுக்கு கவலையில்லை!
கப்பலை கரை சேர்த்தாயா
என்பதே கவலை....?

இப்படி இருந்தால் உற்சாகமூட்டும் வரிகளாக இருக்கும் என்பது என் கருத்து...! இதை தந்த நிலாவுக்கு எனது பாராட்டுக்கள்..!

தென்னவன்
27-10-2007, 11:16 AM
அருமையான வரிகள் நிலா!!!
நானும் அவ்வாறே படித்தேன் சுகா..
எடுத்துக்கொள்ளும் விதம் உற்சாகம் ஊட்டும் விதமாக இருந்தால் தானே நல்லது!!!

சூரியன்
27-10-2007, 04:14 PM
நல்ல படைப்பு நன்றி நிலா..