இனியவன்
20-06-2006, 03:57 PM
1) இலங்கை நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி உறுப்பினர்களும் த,தே,கூ. உறுப்பினர்களும் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். அண்மைக்காலமாக அப்பாவி தமிழர்களை ராணுவம் கொடுரமாகத் தாக்கி வருகிறது. அதில் பலர் பலியாகினர். அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் ஜே.வி.பி. பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் குறித்து அறிக்கையொன்றைத் தாக்கல் செய்தார். அதில் விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டிய வீரவன்ச அந்த இயக்கத்தை தடை செய்ய வலியுறுத்தினார். கெப்பிட்டிக்கொல்லாவவில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துமாறும் அவர் கோரினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ந.ரவிராஜ், செ.கஜேந்திரன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோர் வடக்கு-கிழக்கில் படுகொலை செய்யப்படும் தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிக்காமைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதையடுத்து அவை நடுவிற்கு வந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் வன்முறைகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். நடராஜா ரவிராஜ், கஜேந்திரன், ஈழவேந்தன் ஆகியோர் அந்தச் செயலில் ஈடுபட்டனர். அதன் பிறகு அவை நடுவிற்கு வந்த பிரதியமைச்சர்கள் ஜகத் புஷ்பகுமார, ஜயதிஸ்ஸ ரணவீர, ரோஹித அபேகுணவர்த்தன ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு கேட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் தி.மகேஸ்வரனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டர். அதனால் இருசாராருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஜே.வி.பி. உறுப்பினர்கள் ஜயந்த விஜேசேகர, ஜயந்த சமரவீர, திமுது அபேகோன், அனுருத்த பொல்கம்பொல ஆகியோரும் வாக்குவாதத்தில் ஈடுபட நிலைமை மோசமாகியது.
அப்போது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வீசிய புத்தகம் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவர் மீது விழ இருதரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அந்தக் களேபரத்தில் மேசையில் இருந்த மின்குமிழ் ஒன்று வெடித்துச் சிதறியது. அதையடுத்து சபாநாயகர் டபிள்யு. ஜே.எம்.லொக்கு பண்டார நாடாளுமன்றத்தை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
2) யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழத் தேசியத் தலைவருக்கு நோர்வே கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு விடுதலைப் புலிகள் பதில் அனுப்பியுள்ளனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக பேணி நடப்பதாக அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது. அநத்த் தகவலை
தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் கூறினார். இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைக் குழுக்கள் தான் தற்போதைய பிரச்சினைக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
3) பொலநறுவவில் இராணுவக் காவலரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அது சோமவதிய பெளத்த விகாரை அருகே உள்ளது.
அடையாளம் தெரியாத இருவர் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். இராணுவமும் பதிலடியில் இறங்கியது. எனினும் எவருக்கும் காயமில்லை. பெளத்த விகாரை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன மோதலை உருவாக்குவதற்காக அரசாங்கப் படைகளே இத்தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று அவர்கள் சந்தேகித்துள்ளனர்.
4) சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பேருந்துச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் வசதிக்காக பனாகொடை, களுத்துறை, ஹொரணை, அவிசாவளை, திவுலப்பிட்டிய, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களுக்கு அந்தச் சேவை நடத்தப்பட்டு வந்தது.
புலனாய்வுக் குழுவுக்கு கிடைதத ரகசியத் தகவலையடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவத் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதனால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து படையினருக்கும் இலவச பயண அட்டைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
5) நீர்கொழும்பில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் பரவியது. அதனால் நகரெங்கும் பெரும் பதற்றம் நிலவியது. நீர்கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அநத் வதந்தி பரவியது.
அதையடுத்து பாடசாலைகளுக்குச் சென்ற பெற்றோர் தங்களின் பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர். அது நிலைமையை மோசமாக்கியது. அதையடுத்து காவல்துறை பொறுப்பாளர் ஒ.டபிள்யு.சில்வா மக்களுக்கு விளக்கமளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
6) மட்டக்களப்பில் துணை ராணுவக் குழு ஒரவரைக் கடத்திச் சென்றது. அவர் நாசிவன்தீவு நல்லதம்பி சுதாகரன் என்று நம்பப்படுகிறது.
அவருடைய உறவினர் வீட்டை அந்தக் குழு தீ வைத்துக் கொளுத்தியது. அதன் சேதமதிப்பு பல இலட்சம் ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதே பகுதியில் மற்றொரு வீட்டில் புகுந்த துணை இராணுவத்தினர் அங்கிருந்த பொருட்களைச் சூறையாடிச் சென்றனர்.
,,, ,,, ,,,
தினமும் வழங்க முயற்சிக்கிறேன்,,, ,,, ,,,
இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் ஜே.வி.பி. பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் குறித்து அறிக்கையொன்றைத் தாக்கல் செய்தார். அதில் விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டிய வீரவன்ச அந்த இயக்கத்தை தடை செய்ய வலியுறுத்தினார். கெப்பிட்டிக்கொல்லாவவில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துமாறும் அவர் கோரினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ந.ரவிராஜ், செ.கஜேந்திரன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோர் வடக்கு-கிழக்கில் படுகொலை செய்யப்படும் தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிக்காமைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதையடுத்து அவை நடுவிற்கு வந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் வன்முறைகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். நடராஜா ரவிராஜ், கஜேந்திரன், ஈழவேந்தன் ஆகியோர் அந்தச் செயலில் ஈடுபட்டனர். அதன் பிறகு அவை நடுவிற்கு வந்த பிரதியமைச்சர்கள் ஜகத் புஷ்பகுமார, ஜயதிஸ்ஸ ரணவீர, ரோஹித அபேகுணவர்த்தன ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு கேட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் தி.மகேஸ்வரனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டர். அதனால் இருசாராருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஜே.வி.பி. உறுப்பினர்கள் ஜயந்த விஜேசேகர, ஜயந்த சமரவீர, திமுது அபேகோன், அனுருத்த பொல்கம்பொல ஆகியோரும் வாக்குவாதத்தில் ஈடுபட நிலைமை மோசமாகியது.
அப்போது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வீசிய புத்தகம் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவர் மீது விழ இருதரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அந்தக் களேபரத்தில் மேசையில் இருந்த மின்குமிழ் ஒன்று வெடித்துச் சிதறியது. அதையடுத்து சபாநாயகர் டபிள்யு. ஜே.எம்.லொக்கு பண்டார நாடாளுமன்றத்தை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
2) யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழத் தேசியத் தலைவருக்கு நோர்வே கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு விடுதலைப் புலிகள் பதில் அனுப்பியுள்ளனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக பேணி நடப்பதாக அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது. அநத்த் தகவலை
தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் கூறினார். இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைக் குழுக்கள் தான் தற்போதைய பிரச்சினைக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
3) பொலநறுவவில் இராணுவக் காவலரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அது சோமவதிய பெளத்த விகாரை அருகே உள்ளது.
அடையாளம் தெரியாத இருவர் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். இராணுவமும் பதிலடியில் இறங்கியது. எனினும் எவருக்கும் காயமில்லை. பெளத்த விகாரை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன மோதலை உருவாக்குவதற்காக அரசாங்கப் படைகளே இத்தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று அவர்கள் சந்தேகித்துள்ளனர்.
4) சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பேருந்துச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் வசதிக்காக பனாகொடை, களுத்துறை, ஹொரணை, அவிசாவளை, திவுலப்பிட்டிய, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களுக்கு அந்தச் சேவை நடத்தப்பட்டு வந்தது.
புலனாய்வுக் குழுவுக்கு கிடைதத ரகசியத் தகவலையடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவத் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதனால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து படையினருக்கும் இலவச பயண அட்டைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
5) நீர்கொழும்பில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் பரவியது. அதனால் நகரெங்கும் பெரும் பதற்றம் நிலவியது. நீர்கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அநத் வதந்தி பரவியது.
அதையடுத்து பாடசாலைகளுக்குச் சென்ற பெற்றோர் தங்களின் பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர். அது நிலைமையை மோசமாக்கியது. அதையடுத்து காவல்துறை பொறுப்பாளர் ஒ.டபிள்யு.சில்வா மக்களுக்கு விளக்கமளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
6) மட்டக்களப்பில் துணை ராணுவக் குழு ஒரவரைக் கடத்திச் சென்றது. அவர் நாசிவன்தீவு நல்லதம்பி சுதாகரன் என்று நம்பப்படுகிறது.
அவருடைய உறவினர் வீட்டை அந்தக் குழு தீ வைத்துக் கொளுத்தியது. அதன் சேதமதிப்பு பல இலட்சம் ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதே பகுதியில் மற்றொரு வீட்டில் புகுந்த துணை இராணுவத்தினர் அங்கிருந்த பொருட்களைச் சூறையாடிச் சென்றனர்.
,,, ,,, ,,,
தினமும் வழங்க முயற்சிக்கிறேன்,,, ,,, ,,,