இனியவன்
16-06-2006, 03:29 AM
பண்டைக்கால மன்னர் முக்தார் என்பவரின் ஆஸ்தான கவிஞர் அபூபிராஸ். முக்தாரின் மந்திரிக்கு அபூபிராஸ் பற்றி எப்போதுமே ஒரு பயம். அபூபிராஸை ஒழித்துக் கட்டி விட்டால் பயமின்றி இருக்கலாம் என்று திட்டமிட்டு, அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் மந்திரி; சந்தர்ப்பமும் கிடைத்தது. சுவையான உணவைத் தயாரித்து, யாருமறியாமல் அதில் விஷத்தைக் கலந்து, நயவஞ்சகமாகக் கவிஞருக்குக் கொடுத்து விட்டார். அமைச்சரின் சதியை உணராத கவிஞர், அவ்வுணவை ரசித்துச் சாப்பிட்டார். அது தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது. அப்போது தான் கவிஞருக்கும் விஷயம் புரிந்தது. எதுவும் கூறாமல் அங்கிருந்து எழுந்தார்.
"எங்கு செல்கிறீர்?' என்று மந்திரி கேட்டபோது, "நீர் அனுப்புகிற இடத்திற்கு!' என்று அர்த்தத்துடன் பதிலளித்தார் கவிஞர். கருத்தை உணர்ந்து கொண்ட மந்திரி, "காலஞ்சென்ற என் தந்தையை நான் விசாரித்ததாகக் கூறும்!' என்று விஷமப் புன்னகையுடன் கூறினார்.
"நரகத்தின் வழியாக நான் செல்ல மாட்டேனே!' என்று நிதானமாகப் பதிலளித்தார் கவிஞர் அபூபிராஸ்.
"எங்கு செல்கிறீர்?' என்று மந்திரி கேட்டபோது, "நீர் அனுப்புகிற இடத்திற்கு!' என்று அர்த்தத்துடன் பதிலளித்தார் கவிஞர். கருத்தை உணர்ந்து கொண்ட மந்திரி, "காலஞ்சென்ற என் தந்தையை நான் விசாரித்ததாகக் கூறும்!' என்று விஷமப் புன்னகையுடன் கூறினார்.
"நரகத்தின் வழியாக நான் செல்ல மாட்டேனே!' என்று நிதானமாகப் பதிலளித்தார் கவிஞர் அபூபிராஸ்.