View Full Version : பேன் பார்க்கலாமா,,,,?
இனியவன்
16-06-2006, 03:10 AM
என் மனைவிக்கு எப்போதும் தலையில் நான் தான் "பேன்' பார்ப்பது வழக்கம். இந்த வழக்கமே ஒரு விபரீதத்திற்கு வித்திட்டுவிட்டது. ஒருநாள் பேருந்தில் பயணித்த போது என் முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியின் தலையிலிருந்து இறங்கிய "விதி' முடிந்த பேன் ஒன்று, அவரது தோளில் ஊர்ந்து கொண்டிருந்தது.
ஆர்வக்கோளாறும், பழக்க தோஷமும் இணைந்த கூட்டணியில் என் சுய புத்தியை இழந்த நான், அந்தப் பெண்மணியின் தோளைத் தொட்டு, "பேனை' எடுத்து, என் நகத்தின் மீது அமர்த்தி சொடுக்கி, பரலோகம் அனுப்பினேன்.
நான் தொட்டதும் சிலிர்த்த அந்த அம்மணியின் அருகில் அமர்ந்திருந்த அவரது கணவர், பேருந்து என்றும் பாராமல், என்னிடம் தன்னிலை விளக்கம் எதுவும் கோராமல், போட்டுத் தள்ளி விட்டார். பஸ்சுக்குள் ஒரே களேபரமாகி நான், நடு வீதியில் இறக்கி விடப்பட்டேன். நொந்து, நுலானேன். வாசக நண்பர்களே... என் போல் நீங்களும் உங்கள் மனைவிக்குக் கூந்தலில் "பேன்' பார்ப்பவரானால் பொது இடங்களில் ஈரையோ, பேனையோ பார்க்க நேர்ந்தால், மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உணர்ச்சிவசப்பட்டு விடாதீர்கள்... ப்ளீஸ்... உங்களை கையெடுத்துக் கும்பிடுகிறேன்.
எஸ்.சமுத்திரகனி, பொள்ளாச்சி.
:) :) :) :)
என்ன கொடுமை சரவணன் இது..??
மனிதாபிமானத்தோடு செஞ்சத யாருமே புரிஞ்சுக்கலியே..!! :-(
இனியவன்
16-06-2006, 03:23 AM
என்ன கொடுமை சரவணன் இது..??
மனிதாபிமானத்தோடு செஞ்சத யாருமே புரிஞ்சுக்கலியே..!! :-(
இது தாண்டா உலகம்,,,,:p
தாமரை
16-06-2006, 03:51 AM
என் மனைவிக்கு எப்போதும் தலையில் நான் தான் "பேன்' பார்ப்பது வழக்கம். இந்த வழக்கமே ஒரு விபரீதத்திற்கு வித்திட்டுவிட்டது.
எஸ்.சமுத்திரகனி, பொள்ளாச்சி.
:) :) :) :)
ஒரு பேன் ஒரு பெண்ணின் தலையில் அமர்ந்து விடுகிறது... நசுக்கப்பட்டு விடுவோம் என்று தெரிந்திருந்தும்.. ம்ஹூம் ஒரு ஆண்?????
ஒரு பேன் ஒரு பெண்ணின் தலையில் அமர்ந்து விடுகிறது... நசுக்கப்பட்டு விடுவோம் என்று தெரிந்திருந்தும்.. ம்ஹூம் ஒரு ஆண்?????
ம்ம்..புரியுது..
உங்க வலியும் வேதனையும்..
mukilan
16-06-2006, 05:47 AM
இது தாண்டா உலகம்,,,,:p
இது தினத்தந்தி குடும்ப மலர்லதானே படிச்சீங்க. அவங்களுக்கு நன்றி அப்படின்னு ஒரு வார்த்தை சேர்த்துக்கோங்க.
இனியவன்
16-06-2006, 07:11 AM
இது தினத்தந்தி குடும்ப மலர்லதானே படிச்சீங்க. அவங்களுக்கு நன்றி அப்படின்னு ஒரு வார்த்தை சேர்த்துக்கோங்க.
எழுதியவர் பேரைப் பதிச்சேன், நன்றியை மறந்து விட்டேன், நினைவூட்டியமைக்கு நன்றி,,,,,
பொண்டாட்டின்னா கட்டாயம் பேன் எல்லாம் பார்க்கணுமா... :confused:
நமக்கு இதல்லாம் சரிவராதுப்பா இதுக்கு பேசாம கலியாணமே பண்ணிக்காம இருக்கலாம்... :mad:
இனியவன்
16-06-2006, 08:36 AM
பொண்டாட்டின்னா கட்டாயம் பேன் எல்லாம் பார்க்கணுமா... :confused:
நமக்கு இதல்லாம் சரிவராதுப்பா இதுக்கு பேசாம கலியாணமே பண்ணிக்காம இருக்கலாம்... :mad:
குருடன் யானை பார்த்த கதையால்ல இது இருக்கு,
ஓவியா
16-06-2006, 12:17 PM
ஒரு பேன் ஒரு பெண்ணின் தலையில் அமர்ந்து விடுகிறது... நசுக்கப்பட்டு விடுவோம் என்று தெரிந்திருந்தும்.. ம்ஹூம் ஒரு ஆண்????? ..
:) :) :) :)
ம்ம்..புரியுது..
உங்க வலியும் வேதனையும்..
:D :D :D
முதலில் மனைவியின் தலையில் இருக்கும் பேனை எப்படி விரட்டலாம் என்று பாருங்கள். அப்படி செய்துவிட்டால் பின்னால் இந்த மாதிரியெல்லாம் கை நெருடாதில்லையா?
தாமரை
16-06-2006, 12:30 PM
முதலில் மனைவியின் தலையில் இருக்கும் பேனை எப்படி விரட்டலாம் என்று பாருங்கள். அப்படி செய்துவிட்டால் பின்னால் இந்த மாதிரியெல்லாம் கை நெருடாதில்லையா?
ஹா ஹா ஹா .. முதல் தடவை படிக்கும் போது .. முதல் மனைவியின் தலையில் அப்படின்னு படிச்சுட்டு ஙஏ ன்னு விழிச்சேன். ஹா ஹா ஹா :D :D :D :D
ஓவியா
16-06-2006, 01:27 PM
ஹா ஹா ஹா .. முதல் தடவை படிக்கும் போது .. முதல் மனைவியின் தலையில் அப்படின்னு படிச்சுட்டு ஙஏ ன்னு விழிச்சேன். ஹா ஹா ஹா :D :D :D :D
:D :D :D :D :D
இனியவன்
16-06-2006, 05:02 PM
:D :D :D :D :D
ஒரே தமாசு தான் போங்கோ,,,,:p :p :p
றெனிநிமல்
16-06-2006, 05:45 PM
:D :D :D :D
ஹா ஹா ஹா .. முதல் தடவை படிக்கும் போது .. முதல் மனைவியின் தலையில் அப்படின்னு படிச்சுட்டு ஙஏ ன்னு விழிச்சேன். ஹா ஹா ஹா :D :D :D :D
ஒன்னை பார்த்துக்கொள்வதற்கே விழி பிதுங்குகிறது. இன்னொன்றா?
அறிஞர்
23-06-2006, 03:44 PM
ஒன்னை பார்த்துக்கொள்வதற்கே விழி பிதுங்குகிறது. இன்னொன்றா? வீட்டுல்ல அண்ணியை கேட்டு சொல்லுகிறேன்.. யாருக்கு விழி பிதுங்குகிறது என....:rolleyes: :rolleyes: :rolleyes:
அறிஞர்
23-06-2006, 03:45 PM
இது மாதிரி எல்லாம் உணர்ச்சி வசப்படக்கூடாது அதுவும் பஸ்ஸில்....
பேன் பிடிக்கிறேன் என ஒவ்வொருவரும் ஆரம்பித்தால்... அந்த அம்மாவின் கணவருக்கு கோபம் வரமால்.. வேறு என்ன வரும்....
pradeepkt
24-06-2006, 06:12 PM
என்ன கொடுமை சரவணன் இது..??
மனிதாபிமானத்தோடு செஞ்சத யாருமே புரிஞ்சுக்கலியே..!! :-(
என்ன மனிதாபிமானத்தோட யாருக்கு இதைச் செஞ்சீங்க மதி...
bioalgae
30-06-2006, 03:37 AM
பேன் பிடிக்கிறேன் என ஒவ்வொருவரும் ஆரம்பித்தால்... அந்த அம்மாவின் கணவருக்கு கோபம் வரமால்.. வேறு என்ன வரும்....
அவர் தன் மனைவிக்கு செய்வதை பிறர் செய்தால் அவருக்கு கோபம் வரமால்.. வேறு என்ன வரும்
sarcharan
30-06-2006, 05:23 AM
என்ன கொடுமை சரவணன் இது..??
மனிதாபிமானத்தோடு செஞ்சத யாருமே புரிஞ்சுக்கலியே..!! :-(
அவரு செய்ததுக்கு என்கிட்ட கொடுமயை பத்தி கேக்குறீய!!!!!!!!!!
sarcharan
30-06-2006, 05:25 AM
குருடன் யானை பார்த்த கதையால்ல இது இருக்கு,
குருடன் யானைய பாத்தானோ இல்லயோ ஆனால்
மயூரேசரு பேன் பார்ப்பது நிச்சயம் என்று சொல்ல வருகிறீரா இனியவன்!!!!!!!!!!
இனியவன்
30-06-2006, 06:51 AM
மயூரேசரு பேன் பார்ப்பது நிச்சயம் என்று சொல்ல வருகிறீரா இனியவன்!!!!!!!!!![/QUOTE]
புரிஞ்சுக்கிட்டா சரி,,,,,
vckannan
01-08-2006, 10:36 AM
இதுல தெரியவர விசயம் என்னன்ன ....
1. பஸ்ஸுல பொன்ன பாக்கலாம் பேன பாக்கபிடாது.
2. சில பேரு கல்யாணம் பண்ணரதே பார்ட்னர பேன் பார்க்க சொல்லரதுக்குதான் ஹி ஹி :D
சரி சரி அவரு பஸ்ஸுல மட்டும் தான் உதை வாங்கிருப்பாரா ஹி ஹி ஹி....:D :D வீட்டிலயும் தான
ஹி ஹி... ரொம்பவே சிரிச்சுட்டேன்....
ஓவியா
13-05-2007, 02:41 AM
நானும் மீண்டும் படிச்சி நல்லா சிரித்தேன்...
:medium-smiley-002: :medium-smiley-002: :medium-smiley-002:
சுட்டிபையன்
13-05-2007, 03:35 AM
அதெல்லாம் சரி இனியவன் அந்த சமுத்திரக்கனி தாங்கள்தானே :D
மன்மதன்
12-08-2007, 07:10 AM
நல்லா பிடிக்கிறாங்கய்யா பேனு...:D
வெண்தாமரை
12-08-2007, 07:20 AM
விதி வலியது.. பேனை விரட்ட நிறைய வழிகள் உள்ளன.. முதலில் அதை கையாளுங்கள்.. அப்புறம் ஏன் இந்த தொல்லை
பேன் பிடிக்கறது ஒரு கலைங்க.. பேன் கலரும் முடி கலரும் ஒரேமாதிரி இருக்கறதால கொஞ்சம் சிரமம் தான்.. எங்க பாட்டி பேன் பிடுங்க ஒரு குச்சி வெச்சிருப்பாங்க.. அது மைகோதி னு பேரு.. அதுல அப்படியே கோதினாங்கன்னா பேனு கொட்டும்.... அப்படியே தேனு கொட்டறமாதிரி. சில பேரு அவங்க நகத்தை வெச்சு பேனோட வயத்தில குத்தி கொலை பண்ணுவாங்க.. அந்த சமயத்தில அது சட்னியாகும் பாருங்க... உண்மையிலேயே கண்ணுல தண்ணி வரும். பேனால நமக்கு பல நன்மைகள் இருக்கு. ஆனா அது யாருக்கும் தெரியமாட்டேங்குது.
அப்பப்ப சொறிஞ்சுகிட்டே இருக்கலாம். இதனால் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் கிடைக்கும்
பொண்டாட்டிக்கு பேன் பாக்கிறேன்னு சொல்லி அவ கோவமா இருக்கிற நேரத்தில , பேனை கிள்ளுறது மாதிரி தலையில குத்தலாம்..
என்னிக்காச்சும் நமக்கு தூக்கம் வரலைன்னா யாரையாவது பேன் பார்க்க வெச்சுட்டு அப்படியே அந்த சொடுக்குல தூங்கிறலாம்.
கொலை வெறியை தணீக்கிறதுக்கு பேனை தேடியெடுத்து குத்தி கொலைபண்ணலாம்..
குறிப்பா இந்த நாலாவது பாயிண்டு கணவனுகளுக்கு பொருந்தும்...
சின்னவயசுல பாடின ஒரு பாட்டு எனக்கு ஞாபகம் வருது...
பேனு வயிறு வெடிச்சு,
ஆறெல்லாம் ரத்தம்.....
இப்படி தொடங்கும்.. யாருக்காச்சும் முழுபாட்டு தெரிஞ்சா சொல்லுங்க... பேனு வயிறு வெடிச்சு ரத்தம் கொட்டுச்சுன்னா அது நிச்சயம் ஓவியா தலைப் பேனாகத்தான் இருக்கும்... நீங்க என்ன நினைக்கிறீங்க..
இப்போதெல்லாம் பேனை விரட்டுவது ரொம்ப ஈசி..கடையில ரெடிமேட்
ஷாம்பே கிடைக்கும்....
அதுசரி மைகோதின்னா என்னது...
[ஃஊஓடே=மலர்;254451]இப்போதெல்லாம் பேனை விரட்டுவது ரொம்ப ஈசி..கடையில ரெடிமேட்
ஷாம்பே கிடைக்கும்....
அதுசரி மைகோதின்னா என்னது...[/ஃஊஓடே]
நீங்க வேற.. இப்படித்தான் ஒருநாள் கடையில போய் பேன் ஷாம்பு கொடுங்கன்னு கேட்டேன். அவனும் ஏதோ ஒரு பேர்ல ஷாம்பு கொடுத்தான்.. அந்த நாள் நல்லா தலைக்கு தேய்ச்சு குளிச்சேன்.. கொஞ்ச நேரத்தில பார்த்தா தலையெல்லாம் பேன் ஊறுது... பயங்கர கடி.. சொறிஞ்சிகிட்டே போய் அந்தாளுகிட்ட கேட்டா, அது பேன் ஷாம்பு,பேன் வருமே தவிர போகாது அப்படீன்னான்... சரிங்க போகட்டும்.. பேன் போகிற ஷாம்பு கொடுங்கன்னு கேட்டேன்... சொறிஞ்சுகிட்டே அதையும் போட்டு குளிச்சா, இன்னும் அதிகமா பேன் புடிச்சுகிச்சி... என்ன ஏதுன்னு போய் விசாரிச்சா, அது தலைக்கு போகிற பேன் ஷாம்பாம்... இப்பவும் சொறிஞ்சு சொறிஞ்சு மண்டையில் பாதி முடியைக் காணோம்...
மைகோதின்னா தெரியாதுங்களா? அப்படீன்னா உங்களுக்கு பேனே புடிக்கலையா? (ஆமாமாம்.. உங்களுக்கு பேன் புடிக்காதுல்ல?) ச்
lolluvathiyar
13-08-2007, 06:45 AM
இறங்கிய "விதி' முடிந்த பேன் ஒன்று, அவரது தோளில் ஊர்ந்து கொண்டிருந்தது.
நல்ல வேலை தோளில் ஊர்ந்து கொண்டிருந்தது இடுப்பில் ஊர்ந்து கொண்டிருந்தால் இவர் இடுப்புடன் திரும்பி போயிருக்க முடியாது
முதலில் மனைவியின் தலையில் இருக்கும் பேனை எப்படி விரட்டலாம் என்று பாருங்கள்.
அதுவா சிம்பிள் டெக்னிக், வீட்டில் ஒரு குரங்கு வாங்கி விடுங்க, அது நல்லா பேன் பாக்குமாம், இப்படி என் மனைவிகிட்ட நான் சொன்னேன். அவ சொன்னா அதான் ஒரு உதவாகர குரங்க கட்டிட்டி வந்திருகேனேனு எனக்கு புரியல.
. எங்க பாட்டி பேன் பிடுங்க ஒரு குச்சி வெச்சிருப்பாங்க.. அது மைகோதி னு பேரு.. அதுல அப்படியே கோதினாங்கன்னா பேனு கொட்டும்....
ஆதவா அதுக்கு பேரு மைகோதி அல்ல ஈருகோள்.
போர்க் மாதிரி மரகட்டையில் இருக்கும்
மைகோதி என்பது தலை துவட்டும் போது முடியில் உள்ள சிக்கெடுக்க பயன்படும் கம்பி. வடை சுடும் போது அதை குத்தி எடுக்கவும் பயன் படும்
இதயம்
13-08-2007, 06:54 AM
நல்ல வேலை தோளில் ஊர்ந்து கொண்டிருந்தது இடுப்பில் ஊர்ந்து கொண்டிருந்தால் இவர் இடுப்புடன் திரும்பி போயிருக்க முடியாது
அதுவா சிம்பிள் டெக்னிக், வீட்டில் ஒரு குரங்கு வாங்கி விடுங்க, அது நல்லா பேன் பாக்குமாம், இப்படி என் மனைவிகிட்ட நான் சொன்னேன். அவ சொன்னா அதான் ஒரு உதவாகர குரங்க கட்டிட்டி வந்திருகேனேனு எனக்கு புரியல.
ஆதவா அதுக்கு பேரு மைகோதி அல்ல ஈருகோள்.
போர்க் மாதிரி மரகட்டையில் இருக்கும்
மைகோதி என்பது தலை துவட்டும் போது முடியில் உள்ள சிக்கெடுக்க பயன்படும் கம்பி. வடை சுடும் போது அதை குத்தி எடுக்கவும் பயன் படும்
ஆதவா.... நீங்க கவிதையில் பெரிய ஆள்னா எங்க வாத்தியார் பேன் பார்ப்பதில் பெரிய ஆள்..! யார்க்கிட்ட என்ன பேசறீங்க..?! உங்களுக்கு மைகோதிக்கும், செங்கோலுக்கும் அடச்சே..! அதென்ன வாத்தியாரே..? ஆங்..! ஈருகோளுக்கும் வித்தியாசம் தெரியலன்னா வாத்தியார் கிட்ட கேக்கணும்... வாய்ல வந்ததெல்லாம் சொல்லப்படாது..! இதென்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு..?!!
வாத்தியார்.. பேன் பார்க்குறது பத்தி விளக்கம் கொடுத்திட்டீங்க.. இதே மாதிரி அண்ணிக்கு வீடு பெருக்கி கொடுக்கிறது, சேலை துவச்சி கொடுக்கிறது, கால் அமுக்கி விடுறதுன்னு இன்னும் பல பயனுள்ள விஷயங்களையும் சொன்னா கல்யாணமான எங்களுக்கும், கல்யாணம் பண்ணி கஷ்டத்துல விழப்போறவங்களுக்கும் வசதியா இருக்கும். அதெப்படி இவ்வளவு பெரிய குரங்கு நீங்க வெட்டியா இருக்கும் போது பேன் பார்க்க தனியா குரங்கு கேக்கலாம்..?!! ஹி..ஹி..!!
வாத்தியார் ஆல் இன் ஆல்..! எல்லாத்திலயும் கலக்கறார்..!!
விகடன்
14-08-2007, 04:09 AM
நல்லதொரு உபயோகமான விடயம் சொல்லியிருக்கிறீர்கள்.
நாளை ஒரு பெண்ணிடம் யாராச்சும் கை வைச்சு தர்ம அடி வாங்க நேரிட்டால் இந்த துணுக்கை போட்டு சுதாகரிச்சுக் கொள்ளலாம்...
ஹி...ஹி...ஹி...
lolluvathiyar
14-08-2007, 06:42 AM
அண்ணிக்கு வீடு பெருக்கி கொடுக்கிறது, சேலை துவச்சி கொடுக்கிறது, கால் அமுக்கி விடுறதுன்னு இன்னும் பல பயனுள்ள விஷயங்களையும் சொன்னா
சீக்கிரம் எல்லா விசயங்களும் கற்று தர படும், அதான் வாத்தியார்