PDA

View Full Version : பார்த்ததும் கா(சா)தல் !!.......



poo
23-04-2003, 06:06 PM
அன்பு நண்பர்களே.. இதில் ஏராள குறைகள் இருக்கலாம்.. மன்னியுங்கள்!!

புருவம் உயர்ந்தது..
புலன்கள் இறந்தது..
புன்னகைத்தால் புத்துயிர் - நான்
குற்றுயிராய் போனதேனோ?!!..

இருகோடி கவிதைகள்..
ஒரு கோடி இளைஞர்கள்...
மாதர்களின் மயக்கத்தில்..
மதியிழந்தவர்கள் மத்தியில்
இன்னொரு இதயம் தொலைத்தவனாய்
இணைந்துவிட்டேன்!!..

பருவம் படுத்தும்பாடில்
உருவம் என்றாலே
உன் ஞாபகம் மட்டும்தான்..
சுயநினைவில்லாமல்
நினைவுகள்!!..

குறும்புப்பார்வை
குத்திய வினாடிகள்..
எண்ணுகையில் வியர்வையில்
குளிக்கிறது இதயம்!..

தேவதை
திருமேனியுடன் காதல்..
தலைக்கனம் போனது..
நான் மனிதனாவென்ற
மாபெரும் சந்தேகத்தோடு!!..

உன்னையே ஊற்றாக..
உருவகத்தில்
உள்ளமெல்லாம் வெள்ளம்..
திருநாள் மட்டுமல்ல
ஒருநாளும் நினைவில் இல்லை..

பார்த்தவுடன் வந்ததே..
இது காதலா....
சாதலா??!!

இளசு
23-04-2003, 06:11 PM
தம்பி பூ
சுயநினைவில்லாமல்
நினைவுகள்........
சுயகர்வம் அழிந்த
நிகழ்வுகள்........
அழகாய்ப் பதித்தமைக்கு அண்ணனின் வாழ்த்து.

rambal
23-04-2003, 06:11 PM
நன்றி பூ.. வேண்டுகோளுக்கிணங்கி எசப்பாட்டு பாடியமைக்கு..
அருமையான பதிவு..
தொடரட்டும் உன் சேவை..

poo
23-04-2003, 06:16 PM
நன்றி... அண்ணனுக்கும் அருமை நண்பனுக்கும்!!!

(ராம்... வேண்டுகோள் பெரிய வார்த்தை.. நான் சற்றுமுன்னர்தான் அந்த கவிதை படித்தேன். கீழே பார்த்தால் ஆளுக்கால் என்னை மாட்டிவிட முயற்சித்திருந்தார்கள்... அதனால் மும்முரமாய் மூன்றே நிமிடத்தில்... குறைகளை மறந்திடு!!)

gans5001
24-04-2003, 01:56 AM
பூவின் காதல் மயக்கம் நன்றாகவே இருந்தது. "இது காலதேவனின் கலக்கம். இதை காதல் என்பது வழக்கம்.. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெறப்போகும் துன்பத்தின் துவக்கம்" என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவு படுத்தப்பட்டது

puppy
08-01-2004, 06:48 PM
அடடா பூ.....அருமை

பூமகள்
21-07-2008, 08:41 AM
பார்த்ததும் மேல் எழுப்ப எண்ணத் தூண்டியது உங்கள் கவிதை பூ அண்ணா... ;) :)

பாராட்டுகளும் வாழ்த்துகளும்..