PDA

View Full Version : பராசக்தி படத்துக்கு தடை



gragavan
12-06-2006, 09:37 AM
பராசக்தி படத்துக்கு தடை

(அரசியல் நையாண்டி என்பது எழுத வேண்டும் என்று திடீர் ஆசை. தமிழக, இந்திய அரசியல்வாதிகளின் அன்றாட நகைச்சுவைப் பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் ஈடுகுடுத்து எழுதுவது யாருக்கும் கடினம்தான். ஆனாலும் ஒரு சிறு முயற்சி.)

தமிழக அரசு பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. பராசக்தி படத்தைத் தடை செய்வது காலத்தின் கட்டாயம் எனக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் பராசக்தி. இந்தப் படம் வெளிவந்த காலத்தில் மிகுந்த புரட்சிகரமானத கருதப் பட்டு இமாலய வெற்றி பெற்றது.

இந்தத் திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு தடை. இந்தப் படம் இப்பொழுது திரையரங்கில் ஓடினால் யாரும் வந்து பார்ப்பார்களா என்று சொல்ல முடியாது. ஆனாலும் இந்தப் படத்தின் உரிமைகள் சன் டீவியிடம் இருப்பது அனைவரும் அறிந்ததே. சன் டீவியினர் இந்தப் படத்தை அடிக்கடி ஒளிபரப்பு செய்வதும் அனைவரும் அறிந்ததே.

இந்தப் படத்திற்குத் தடை விதித்து அதைச் செயல்படுத்தும் படி மாவட்ட ஆட்சியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது. இன்றைய சூழ்நிலையில் இந்தத் திரைப்படத்தைத் திரையிடுவது என்பது பலருடைய மனதைப் புண்படுத்தும் செயலாக அமையும் என்று அரசாங்கம் நம்புகிறது. இதில் பலருடைய நம்பிக்கையைப் புண்படுத்தும் விதமாகக் கருத்துகள் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் நாட்டில் ஆங்காங்கு கலவரம் உண்டாகலாம் என்று அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர் நம்பிக்கையைப் புண்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் படத்தின் வசனங்கள் நிச்சயமாக ஆட்சேபனைக்குறியவை. பலரும் கடவுளாக நம்புகின்ற தெய்வத்தைப் பற்றி படத்தில் அவதூறு வசனங்கள் இருப்பதால் படத்தைத் தமிழக அரசு தடை செய்கிறது.

இதுதான் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு மக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தணிக்கைக் குழு சான்றிதழ் கொடுத்த ஒரு திரைப்படத்தை இது போன்று தடை செய்வது முதல்வரின் ஒருதலைப்பட்சமான நிலையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது என்றும் பலர் கருதுகிறார்கள். ஆனால் படத்தை முதலில் தமிழகத்திலுள்ள மடாதிபதிகளிடம் போட்டுக்காட்டி அவர்கள் விருப்பப் படியே இது செய்யப் பட்டிருப்பதாக அரசாங்கம் சொல்கிறது.

தணிக்கைக் குழு என்று ஒன்று இருக்கையில் மடாதிபதிகளிடம் படத்தை ஏன் காட்ட வேண்டும் என்றும் பலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இந்தப் படம் மக்கள் மனதை நிச்சயம் புண்படுத்தும் என்று பலர் கருதுகிறார்கள். முதலில் ஒரு மடாதிபதி உண்ணாவிரதம் தொடங்கியதாலேயே பிரச்சனை பெரிதானது. வலைப்பூக்களில் இதை ஆதரித்தும் எதிர்த்தும் ஏற்கனவே பல பதிவுகள் வந்து விட்டன.

ஆனால் இந்தத் தடையைத் தனது ஆட்சியேலே கொண்டு வந்து விட்டதாகவும் தேர்தல் கமிஷன் இதை வெளியில் சொல்லக் கூடாது என்று சொன்னதால் சொல்லவில்லை என்றும் ஜெயலலிதா அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். தேவையில்லாமல் இரண்டாம் முறை இந்தப் படத்தைத் தடை செய்வது கருணாநிதியின் ஏமாற்றுவேலை என்றும் அவர் சாடினார். தன் மீது கட்டவிழ்த்து விடப்படும் இது போன்ற அடக்குமுறைகளை கட்சியினரும் பொதுமக்களும் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டார்கள் என்று அவர் ஆவேசமாக முழக்கமிட்டார். அதைக் கேட்ட சிலர் அந்தப் பக்கமாக வந்த ஒரு லாரியைக் கொளுத்தினார்கள்.

இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது, "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்ற வழக்கு உண்டு" என்று கூறினார்.

இதற்கிடையில் ஜெயா டீவியில் ரபி பெர்ணாட்டிற்கு பேட்டி அளித்த வைகோ, "இந்தப் படத்தத் தட பண்ணனுங்க. வெளியிட்டிருக்கவே கூடாதுங்க...அவ்வளவுதான்" என்றார்.

இந்தப் படம் தடை செய்யப்பட்டதால் இந்தப் படத்திற்கு திடீர் ஆதரவு பெருகியுள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது என்று அறிய மக்கள் திருட்டு வீசிடிகளை வாங்கிப் பார்க்கிறார்கள். இதனால் பர்மா பஜார், சிங்கப்பூர் பஜார் மற்றும் அனைத்துத் தமிழக திருட்டு வீசீடி விற்பனையாளர்களும் தமிழக அரசிற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். பிரிண்ட் சரியில்லாவிட்டாலும் படம் லேசுமாசாகத் தெரிவதால் மக்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறார்கள்.

இந்தத் தடையைப் பற்றிக் கதாசிரியர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது அவர் நாதழுதழுத்து விட்டதாகத் தெரிகிறது. பராசக்தி தமிழ்ப் பண்பாட்டின் சின்னம். இதைத் தடை செய்வது சரியல்ல என்று அவர் கருத்துத் தெரிவித்தார். தமிழனுக்குச் சூடு இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். அவர்தானே தடை செய்தது என்ற கேள்விக்கு, "அது வேறு. இது வேறு. தடை செய்தது முதல்வர் கருணாநிதி. அதை எதிர்ப்பது கதாசிரியர் கருணாநிதி" என்று விளக்கமாக தெரிவித்தார்.

கிண்டலுடன்,
கோ.இராகவன்

தாமரை
12-06-2006, 09:42 AM
உங்க நல்லதுக்குச் சொல்றேன்.. வீட்டை மாத்திருங்கோ!!!:rolleyes: :rolleyes: :rolleyes:

gragavan
12-06-2006, 09:50 AM
உங்க நல்லதுக்குச் சொல்றேன்.. வீட்டை மாத்திருங்கோ!!!:rolleyes: :rolleyes: :rolleyes:ஹி ஹி ஹி...அடுத்து ஜெயலலிதா வைகோ விஜயகாந்துன்னு ஒவ்வொருத்தரா போடலாம்னு இருந்தேனே..இப்பிடிப் பயமுருத்துறீங்களே...

மதி
12-06-2006, 10:04 AM
ஆனாலும் ரொம்பவே குசும்பு..!
செல்வன் சொன்னது சரி தான். உம்மையும் தீவிர அரசியல்விமர்சகரா நினைத்து சோடா பாட்டிலும் சைக்கிள் செயினும் வீட்டுக்கு வரப்போகுது.

பார்த்து....!

தாமரை
12-06-2006, 10:33 AM
ஹி ஹி ஹி...அடுத்து ஜெயலலிதா வைகோ விஜயகாந்துன்னு ஒவ்வொருத்தரா போடலாம்னு இருந்தேனே..இப்பிடிப் பயமுருத்துறீங்களே...
உண்மை பயந்து போய் கிடக்க உண்மையைச் சொன்னால் பயமுறுத்துவதாக சொல்கிறீர்களே!!!

தாமரை
12-06-2006, 10:34 AM
ஆனாலும் ரொம்பவே குசும்பு..!
செல்வன் சொன்னது சரி தான். உம்மையும் தீவிர அரசியல்விமர்சகரா நினைத்து சோடா பாட்டிலும் சைக்கிள் செயினும் வீட்டுக்கு வரப்போகுது.

பார்த்து....!
ஏற்கெனவே பிக்-காட் ஆளுங்க இவரைத் தேடிகிட்டு இருக்கிறதாக கேள்வி.. தலை மறைவா இருக்க மொட்டையெல்லாம் போட்டார்.. இப்போ இந்த வினை தேவையா.?? இதுல இன்னும் ஆசை இருக்காம் இவருக்கு...

pradeepkt
12-06-2006, 12:43 PM
அது சரி...

இதே ரேஞ்சில் கலைஞர் இன்னும் அம்மையார் ஆட்சியில் இருப்பதாகக் கற்பனையில் இருக்கிறார். அடுத்ததாக இன்று முரசொலியில் கலைஞர், "உடன்பிறப்பே! கல்லில் பெய்த கடும் மழையெனப் புல்லுருவிகள் தமிழகத்தில் வெள்ளமெனப் புகுந்து கலைத்தாயின் முதல் மகன் நடித்து முன்னாள் மகன் எழுதிய படத்தையே தடை செய்வதெனத் துணிந்து விட்டனர். இதனைக் கண்டிக்கப் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு (ஸாரி! தம்பி பட பாதிப்பு) சீறி வரும் சுனாமியெனப் பொங்கி எழு! அடக்குமுறைக்கு எதிராகச் சீறி எழு!" என்று பொங்கி எழுந்திருக்கிறார்.

கலைஞர் இதைச் சொன்னதைக் கேட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, "இந்தத் தடையை நீக்கச் சொல்லும் கருணாநிதியின் கொடும் மனதைத் தாம் கூட்டணி வைத்திருக்கும் தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள். இதை அடுத்து மாநில மத்திய அரசுகளை எதிர்த்து அ இ அதிமுக இந்தியா முழுவதும் மாபெரும் திருட்டு விசிடி போராட்டம் நடத்தும்" என்றார். ஏன் இந்தியா முழுவதும் என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, "நீங்கள் சன் டிவி கைக்கூலி என்று எனக்குத் தெரியும். இனி இப்படி நெருக்கடி தரும் கேள்விகளைக் காட்டுமிராண்டித் தலைவர் கருணாநிதியிடம் மட்டும் கேளுங்கள்" என்று சூடாக பதிலளித்தார்.

வைகோ, "மாண்புமிகு புரட்சித்தலைவி தென்னக ஜான்சிராணி, வடக்கு மங்கம்மா, தங்கத் தாரகை, வைர நிலவு, முன்னாள் (இதை மட்டும் நைஸாக மெதுவாகச் சொன்னார்) முதல்வர் அம்மா அவர்கள் தமிழக மக்களுடன் மட்டும் கூட்டணி வைத்துள்ளதாகக் கூறியதில் கூட்டணிக் கட்சியினரை இழிவு படுத்தியதாகக் கட்டுக்கதை கட்டிவிடும் சன் டிவியின் சதியை மதிமுக விசி உடன்பிறப்புகள் நன்றாகப் புரிந்து கொண்டு எனக்கு பத்தாயிரம் தந்திகள் அனுப்பியுள்ளனர். அவர்கள் அன்புக்கு நான் என்ன செய்வேன்?" என்று நாத் தழுதழுக்கக் கண்ணீர் விட்டு "ஓ"வென்று அழுது கொண்டே கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, "இது குறித்து அன்னை சோனியா காந்தியிடம் விளக்குவதற்காக ஜெட் ஏர்வேஸ் சூப்பர் சேவர் ஸ்கீமில் எங்கள் எம் எல் ஏ, எம் பிக்கள் அனைவரும் டெல்லி செல்கிறோம். பின்னர் வந்து சொல்கிறோம்" என்றார். அதற்குள் இன்னும் மூன்று கோஷ்டியினர் ஸ்பைஸ் ஜெட் பிடித்துச் சென்று விட்டதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வி.சி. பொ.செ. திருமாவளவன், "யார் எப்படிப் போனாலும் இந்தத் தமிழனும் தமிழ்க் குடிதாங்கி அவர்களும் சினிமாவை எதிர்க்கும் போராட்டத்தைத் தொடர்வார்கள், இதற்காகக் கதாசிரியர் கலைஞர் கருணாநிதிக்கு என் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் முதல்வருக்குப் பாராட்டு தெரிவிப்பேனா மாட்டேனா என்று சொல்ல மாட்டேன்" என்றார்.

pradeepkt
12-06-2006, 12:44 PM
ஏற்கெனவே பிக்-காட் ஆளுங்க இவரைத் தேடிகிட்டு இருக்கிறதாக கேள்வி.. தலை மறைவா இருக்க மொட்டையெல்லாம் போட்டார்.. இப்போ இந்த வினை தேவையா.?? இதுல இன்னும் ஆசை இருக்காம் இவருக்கு...
பிக் காட் ஏற்கனவே சாங் லைஃப்புக்குப் பொருத்தமா கால்நடை குடுத்ததுல டென்சனா இருக்காரு...
நீங்க ஏய்யா அவரைத் தூண்டி விடுறீங்க?

தாமரை
12-06-2006, 01:19 PM
தொடரும் தடைகள்:

பராசக்தி படத்தைத் தொடர்ந்து அடிமைப் பெண் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் போறு அடைமை வாழ்வை சித்தரிக்கும் படங்களும் தடை செய்யப்பட்டன என்றும்.. கலைஞரின் நல்லாட்சியில் அடிமைகள் யாருமில்லை என்றும் அனைவரின் சமம் என்றும் அறிக்கைகள் வெளியாகின..

இனியவன்
12-06-2006, 02:47 PM
அய்யகோ பராசக்தி பற்றி இப்படியெல்லாம் புதுக்கதை புனைய அதிகாரம் வழங்கிய அடிவருடிகள் யாரார்? அவர்களின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்து ஆளுக்கொரு 14 அங்குல வண்ணத் தொலைக்காட்சி வழங்க ஆணையிடுகிறேன். இனிமேலாவது தாய்க்குலத்தார் தரமான தொ(ல்)லைக்காட்சித் தொடர்களைப் பார்த்து அதன் படி நடந்து தங்கள் வீட்டின் சிதம்பரங்களை அடக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் அதிகபட்சத் தண்டனையாக தமிழ் பேசும் அத்தனை மக்களுக்கும் பராசக்தி படத்தின் வண்ணப்பதிவு இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.

paarthiban
13-06-2006, 03:43 PM
கலக்கல்ஸ்