gragavan
12-06-2006, 09:37 AM
பராசக்தி படத்துக்கு தடை
(அரசியல் நையாண்டி என்பது எழுத வேண்டும் என்று திடீர் ஆசை. தமிழக, இந்திய அரசியல்வாதிகளின் அன்றாட நகைச்சுவைப் பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் ஈடுகுடுத்து எழுதுவது யாருக்கும் கடினம்தான். ஆனாலும் ஒரு சிறு முயற்சி.)
தமிழக அரசு பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. பராசக்தி படத்தைத் தடை செய்வது காலத்தின் கட்டாயம் எனக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் பராசக்தி. இந்தப் படம் வெளிவந்த காலத்தில் மிகுந்த புரட்சிகரமானத கருதப் பட்டு இமாலய வெற்றி பெற்றது.
இந்தத் திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு தடை. இந்தப் படம் இப்பொழுது திரையரங்கில் ஓடினால் யாரும் வந்து பார்ப்பார்களா என்று சொல்ல முடியாது. ஆனாலும் இந்தப் படத்தின் உரிமைகள் சன் டீவியிடம் இருப்பது அனைவரும் அறிந்ததே. சன் டீவியினர் இந்தப் படத்தை அடிக்கடி ஒளிபரப்பு செய்வதும் அனைவரும் அறிந்ததே.
இந்தப் படத்திற்குத் தடை விதித்து அதைச் செயல்படுத்தும் படி மாவட்ட ஆட்சியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது. இன்றைய சூழ்நிலையில் இந்தத் திரைப்படத்தைத் திரையிடுவது என்பது பலருடைய மனதைப் புண்படுத்தும் செயலாக அமையும் என்று அரசாங்கம் நம்புகிறது. இதில் பலருடைய நம்பிக்கையைப் புண்படுத்தும் விதமாகக் கருத்துகள் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் நாட்டில் ஆங்காங்கு கலவரம் உண்டாகலாம் என்று அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர் நம்பிக்கையைப் புண்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் படத்தின் வசனங்கள் நிச்சயமாக ஆட்சேபனைக்குறியவை. பலரும் கடவுளாக நம்புகின்ற தெய்வத்தைப் பற்றி படத்தில் அவதூறு வசனங்கள் இருப்பதால் படத்தைத் தமிழக அரசு தடை செய்கிறது.
இதுதான் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு மக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தணிக்கைக் குழு சான்றிதழ் கொடுத்த ஒரு திரைப்படத்தை இது போன்று தடை செய்வது முதல்வரின் ஒருதலைப்பட்சமான நிலையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது என்றும் பலர் கருதுகிறார்கள். ஆனால் படத்தை முதலில் தமிழகத்திலுள்ள மடாதிபதிகளிடம் போட்டுக்காட்டி அவர்கள் விருப்பப் படியே இது செய்யப் பட்டிருப்பதாக அரசாங்கம் சொல்கிறது.
தணிக்கைக் குழு என்று ஒன்று இருக்கையில் மடாதிபதிகளிடம் படத்தை ஏன் காட்ட வேண்டும் என்றும் பலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இந்தப் படம் மக்கள் மனதை நிச்சயம் புண்படுத்தும் என்று பலர் கருதுகிறார்கள். முதலில் ஒரு மடாதிபதி உண்ணாவிரதம் தொடங்கியதாலேயே பிரச்சனை பெரிதானது. வலைப்பூக்களில் இதை ஆதரித்தும் எதிர்த்தும் ஏற்கனவே பல பதிவுகள் வந்து விட்டன.
ஆனால் இந்தத் தடையைத் தனது ஆட்சியேலே கொண்டு வந்து விட்டதாகவும் தேர்தல் கமிஷன் இதை வெளியில் சொல்லக் கூடாது என்று சொன்னதால் சொல்லவில்லை என்றும் ஜெயலலிதா அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். தேவையில்லாமல் இரண்டாம் முறை இந்தப் படத்தைத் தடை செய்வது கருணாநிதியின் ஏமாற்றுவேலை என்றும் அவர் சாடினார். தன் மீது கட்டவிழ்த்து விடப்படும் இது போன்ற அடக்குமுறைகளை கட்சியினரும் பொதுமக்களும் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டார்கள் என்று அவர் ஆவேசமாக முழக்கமிட்டார். அதைக் கேட்ட சிலர் அந்தப் பக்கமாக வந்த ஒரு லாரியைக் கொளுத்தினார்கள்.
இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது, "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்ற வழக்கு உண்டு" என்று கூறினார்.
இதற்கிடையில் ஜெயா டீவியில் ரபி பெர்ணாட்டிற்கு பேட்டி அளித்த வைகோ, "இந்தப் படத்தத் தட பண்ணனுங்க. வெளியிட்டிருக்கவே கூடாதுங்க...அவ்வளவுதான்" என்றார்.
இந்தப் படம் தடை செய்யப்பட்டதால் இந்தப் படத்திற்கு திடீர் ஆதரவு பெருகியுள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது என்று அறிய மக்கள் திருட்டு வீசிடிகளை வாங்கிப் பார்க்கிறார்கள். இதனால் பர்மா பஜார், சிங்கப்பூர் பஜார் மற்றும் அனைத்துத் தமிழக திருட்டு வீசீடி விற்பனையாளர்களும் தமிழக அரசிற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். பிரிண்ட் சரியில்லாவிட்டாலும் படம் லேசுமாசாகத் தெரிவதால் மக்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறார்கள்.
இந்தத் தடையைப் பற்றிக் கதாசிரியர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது அவர் நாதழுதழுத்து விட்டதாகத் தெரிகிறது. பராசக்தி தமிழ்ப் பண்பாட்டின் சின்னம். இதைத் தடை செய்வது சரியல்ல என்று அவர் கருத்துத் தெரிவித்தார். தமிழனுக்குச் சூடு இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். அவர்தானே தடை செய்தது என்ற கேள்விக்கு, "அது வேறு. இது வேறு. தடை செய்தது முதல்வர் கருணாநிதி. அதை எதிர்ப்பது கதாசிரியர் கருணாநிதி" என்று விளக்கமாக தெரிவித்தார்.
கிண்டலுடன்,
கோ.இராகவன்
(அரசியல் நையாண்டி என்பது எழுத வேண்டும் என்று திடீர் ஆசை. தமிழக, இந்திய அரசியல்வாதிகளின் அன்றாட நகைச்சுவைப் பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் ஈடுகுடுத்து எழுதுவது யாருக்கும் கடினம்தான். ஆனாலும் ஒரு சிறு முயற்சி.)
தமிழக அரசு பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. பராசக்தி படத்தைத் தடை செய்வது காலத்தின் கட்டாயம் எனக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் பராசக்தி. இந்தப் படம் வெளிவந்த காலத்தில் மிகுந்த புரட்சிகரமானத கருதப் பட்டு இமாலய வெற்றி பெற்றது.
இந்தத் திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு தடை. இந்தப் படம் இப்பொழுது திரையரங்கில் ஓடினால் யாரும் வந்து பார்ப்பார்களா என்று சொல்ல முடியாது. ஆனாலும் இந்தப் படத்தின் உரிமைகள் சன் டீவியிடம் இருப்பது அனைவரும் அறிந்ததே. சன் டீவியினர் இந்தப் படத்தை அடிக்கடி ஒளிபரப்பு செய்வதும் அனைவரும் அறிந்ததே.
இந்தப் படத்திற்குத் தடை விதித்து அதைச் செயல்படுத்தும் படி மாவட்ட ஆட்சியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது. இன்றைய சூழ்நிலையில் இந்தத் திரைப்படத்தைத் திரையிடுவது என்பது பலருடைய மனதைப் புண்படுத்தும் செயலாக அமையும் என்று அரசாங்கம் நம்புகிறது. இதில் பலருடைய நம்பிக்கையைப் புண்படுத்தும் விதமாகக் கருத்துகள் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் நாட்டில் ஆங்காங்கு கலவரம் உண்டாகலாம் என்று அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர் நம்பிக்கையைப் புண்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் படத்தின் வசனங்கள் நிச்சயமாக ஆட்சேபனைக்குறியவை. பலரும் கடவுளாக நம்புகின்ற தெய்வத்தைப் பற்றி படத்தில் அவதூறு வசனங்கள் இருப்பதால் படத்தைத் தமிழக அரசு தடை செய்கிறது.
இதுதான் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு மக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தணிக்கைக் குழு சான்றிதழ் கொடுத்த ஒரு திரைப்படத்தை இது போன்று தடை செய்வது முதல்வரின் ஒருதலைப்பட்சமான நிலையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது என்றும் பலர் கருதுகிறார்கள். ஆனால் படத்தை முதலில் தமிழகத்திலுள்ள மடாதிபதிகளிடம் போட்டுக்காட்டி அவர்கள் விருப்பப் படியே இது செய்யப் பட்டிருப்பதாக அரசாங்கம் சொல்கிறது.
தணிக்கைக் குழு என்று ஒன்று இருக்கையில் மடாதிபதிகளிடம் படத்தை ஏன் காட்ட வேண்டும் என்றும் பலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இந்தப் படம் மக்கள் மனதை நிச்சயம் புண்படுத்தும் என்று பலர் கருதுகிறார்கள். முதலில் ஒரு மடாதிபதி உண்ணாவிரதம் தொடங்கியதாலேயே பிரச்சனை பெரிதானது. வலைப்பூக்களில் இதை ஆதரித்தும் எதிர்த்தும் ஏற்கனவே பல பதிவுகள் வந்து விட்டன.
ஆனால் இந்தத் தடையைத் தனது ஆட்சியேலே கொண்டு வந்து விட்டதாகவும் தேர்தல் கமிஷன் இதை வெளியில் சொல்லக் கூடாது என்று சொன்னதால் சொல்லவில்லை என்றும் ஜெயலலிதா அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். தேவையில்லாமல் இரண்டாம் முறை இந்தப் படத்தைத் தடை செய்வது கருணாநிதியின் ஏமாற்றுவேலை என்றும் அவர் சாடினார். தன் மீது கட்டவிழ்த்து விடப்படும் இது போன்ற அடக்குமுறைகளை கட்சியினரும் பொதுமக்களும் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டார்கள் என்று அவர் ஆவேசமாக முழக்கமிட்டார். அதைக் கேட்ட சிலர் அந்தப் பக்கமாக வந்த ஒரு லாரியைக் கொளுத்தினார்கள்.
இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது, "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்ற வழக்கு உண்டு" என்று கூறினார்.
இதற்கிடையில் ஜெயா டீவியில் ரபி பெர்ணாட்டிற்கு பேட்டி அளித்த வைகோ, "இந்தப் படத்தத் தட பண்ணனுங்க. வெளியிட்டிருக்கவே கூடாதுங்க...அவ்வளவுதான்" என்றார்.
இந்தப் படம் தடை செய்யப்பட்டதால் இந்தப் படத்திற்கு திடீர் ஆதரவு பெருகியுள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது என்று அறிய மக்கள் திருட்டு வீசிடிகளை வாங்கிப் பார்க்கிறார்கள். இதனால் பர்மா பஜார், சிங்கப்பூர் பஜார் மற்றும் அனைத்துத் தமிழக திருட்டு வீசீடி விற்பனையாளர்களும் தமிழக அரசிற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். பிரிண்ட் சரியில்லாவிட்டாலும் படம் லேசுமாசாகத் தெரிவதால் மக்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறார்கள்.
இந்தத் தடையைப் பற்றிக் கதாசிரியர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது அவர் நாதழுதழுத்து விட்டதாகத் தெரிகிறது. பராசக்தி தமிழ்ப் பண்பாட்டின் சின்னம். இதைத் தடை செய்வது சரியல்ல என்று அவர் கருத்துத் தெரிவித்தார். தமிழனுக்குச் சூடு இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். அவர்தானே தடை செய்தது என்ற கேள்விக்கு, "அது வேறு. இது வேறு. தடை செய்தது முதல்வர் கருணாநிதி. அதை எதிர்ப்பது கதாசிரியர் கருணாநிதி" என்று விளக்கமாக தெரிவித்தார்.
கிண்டலுடன்,
கோ.இராகவன்