தீபன்
16-05-2006, 04:20 PM
ஈழத்தின் தீவகப் பிரதேசத்தில் அரச படைகளால் அண்மையில் நடாத்தப்பட்ட படுகொலைகளைப் பற்றி மன்ற நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். அந்தக் கோரக் காட்சியின் வெளிப்பாடாய் தமிழீழ தேசியக் கவிஞரின் உணர்வின் உருக்கமான வெளிப்பாடுகளே இக் கவிதை.
(முழுமையான செய்தியை அறியாதவர்கள் செய்தி சோலை பகுதிக்கு சென்று நண்பர் இளையவன் பதித்த தீவகப் படுகொலைகள் பற்றிய செய்தியையும் படங்களையும் பார்க்க.)
குருதியில் குளிப்பது எங்களின் விதியா...?
உலகமே! இதற்கும் மௌனம்தான் பதிலா...???
http://i21.photobucket.com/albums/b287/athiradiblogspot/PADU_B5.png
இது
புத்தர் பெருமான் ஞானம் பெற்ற
சித்திரை நாளின் சிறப்புப் பரிசு..!
பாவப்பட்ட ஈழ்த்தமிழருக்கு
பௌத்ததேசம் வளங்கிய விருது..!!
அன்று
விகாரைகள் தோறும் விளக்குகள் ஒளிர்ந்தன...
எங்கள் ஊரில் உயிர்கள் அணைந்தன...
பாருங்கள்
எல்லோரும் உற்றுப்பாருங்கள்,
ஈரம் நொதிக்கும் இதயங்களே!
தீர்ப்பு வளங்க வரும் தேசங்களே!
எங்கள் வாள்வின் அவலத்தை வரைந்து கொள்ளுங்கள்...
ஏதும் அறியாமல்,
ஏன் சாகிறோமென்றும் தெரியாமல்
குருதியில் குளித்துக் கிடக்கிறது ஒரு
குடும்ப விருட்சம்...
பிஞ்சை அணைத்தபடி ஒரு பூவும்
பூவை பிணைந்தபடி காயும்
தமிழருக்கு காவலென்பதால் நாயும்
எரியுண்டு போவதுதான் எமக்கெளுதிய விதியா...?
உலகமே
இதற்கும் உன் மௌனம்தான் பதிலா..?
மரங்களை தறியாதீர்கள் என்பவர்களே!
இங்கு மனிதர்களை சரிக்கிறார்களே..?
ஏன் கேள்வி எளுப்பவில்லை?
எமக்கான ஆறுதலை ஏன் தரவில்லை..?
ஈழ்த் தமிழர் சாகப் பிறந்தவர்களா?
நாயைப்போல் வாழப் பிறந்தவர்களா?
அல்லைப்பிட்டி அழுகைக்கானதல்ல...
அடக்குமுறை அதிகாரத்திற்கான முடிவுக்கானது.
இரத்தமும் இரத்தமும் பேசும் மொழியில்
புத்த பெருமான் போதிக்கவில்லை...
ஆயினும் பேரினவாதம் அதைத்தானே போஷிக்கிறது..!
பொறுமையின் அளவு மட்டம் பெரியதானதல்ல...
சின்ன உணர்வுத்தீயில் மூழக்கூடியது..!
எம்மை மூட்டாதீர்
முளாசியெரிய வைக்காதீர்!
இது ஆற்றாது அழுபவரின் கண்ணீர்
அடக்குமுறைக்குள்ளே கிடப்பவரின் மௌனக் குரல்!
உலகமே!
எமக்குப் பதில் வேண்டும்...
இப்போது வாருங்கள்.
இல்லையெனில் எப்போதும் வர வேண்டாம்..!
எதற்காகவும் வர வேண்டாம்..!!
முடியுமெனில்
உங்கள் வளியில் எங்களை எடுங்கள்!
இல்லையெனில்
எங்கள் வளியில் எங்களை விடுங்கள்..!
பாருங்கள்
உற்றுப் பாருங்கள்...
அந்தச் சின்னப் பிள்ளையின் சிரசிலிருந்து
பென்னம் பெரிய நெருப்பு மூள்கிறது...
தெரிகிறதா...?
இது தணியாது...
இனிப் பணியாது...!!!
-புதுவை இரத்தினதுரை.
(முழுமையான செய்தியை அறியாதவர்கள் செய்தி சோலை பகுதிக்கு சென்று நண்பர் இளையவன் பதித்த தீவகப் படுகொலைகள் பற்றிய செய்தியையும் படங்களையும் பார்க்க.)
குருதியில் குளிப்பது எங்களின் விதியா...?
உலகமே! இதற்கும் மௌனம்தான் பதிலா...???
http://i21.photobucket.com/albums/b287/athiradiblogspot/PADU_B5.png
இது
புத்தர் பெருமான் ஞானம் பெற்ற
சித்திரை நாளின் சிறப்புப் பரிசு..!
பாவப்பட்ட ஈழ்த்தமிழருக்கு
பௌத்ததேசம் வளங்கிய விருது..!!
அன்று
விகாரைகள் தோறும் விளக்குகள் ஒளிர்ந்தன...
எங்கள் ஊரில் உயிர்கள் அணைந்தன...
பாருங்கள்
எல்லோரும் உற்றுப்பாருங்கள்,
ஈரம் நொதிக்கும் இதயங்களே!
தீர்ப்பு வளங்க வரும் தேசங்களே!
எங்கள் வாள்வின் அவலத்தை வரைந்து கொள்ளுங்கள்...
ஏதும் அறியாமல்,
ஏன் சாகிறோமென்றும் தெரியாமல்
குருதியில் குளித்துக் கிடக்கிறது ஒரு
குடும்ப விருட்சம்...
பிஞ்சை அணைத்தபடி ஒரு பூவும்
பூவை பிணைந்தபடி காயும்
தமிழருக்கு காவலென்பதால் நாயும்
எரியுண்டு போவதுதான் எமக்கெளுதிய விதியா...?
உலகமே
இதற்கும் உன் மௌனம்தான் பதிலா..?
மரங்களை தறியாதீர்கள் என்பவர்களே!
இங்கு மனிதர்களை சரிக்கிறார்களே..?
ஏன் கேள்வி எளுப்பவில்லை?
எமக்கான ஆறுதலை ஏன் தரவில்லை..?
ஈழ்த் தமிழர் சாகப் பிறந்தவர்களா?
நாயைப்போல் வாழப் பிறந்தவர்களா?
அல்லைப்பிட்டி அழுகைக்கானதல்ல...
அடக்குமுறை அதிகாரத்திற்கான முடிவுக்கானது.
இரத்தமும் இரத்தமும் பேசும் மொழியில்
புத்த பெருமான் போதிக்கவில்லை...
ஆயினும் பேரினவாதம் அதைத்தானே போஷிக்கிறது..!
பொறுமையின் அளவு மட்டம் பெரியதானதல்ல...
சின்ன உணர்வுத்தீயில் மூழக்கூடியது..!
எம்மை மூட்டாதீர்
முளாசியெரிய வைக்காதீர்!
இது ஆற்றாது அழுபவரின் கண்ணீர்
அடக்குமுறைக்குள்ளே கிடப்பவரின் மௌனக் குரல்!
உலகமே!
எமக்குப் பதில் வேண்டும்...
இப்போது வாருங்கள்.
இல்லையெனில் எப்போதும் வர வேண்டாம்..!
எதற்காகவும் வர வேண்டாம்..!!
முடியுமெனில்
உங்கள் வளியில் எங்களை எடுங்கள்!
இல்லையெனில்
எங்கள் வளியில் எங்களை விடுங்கள்..!
பாருங்கள்
உற்றுப் பாருங்கள்...
அந்தச் சின்னப் பிள்ளையின் சிரசிலிருந்து
பென்னம் பெரிய நெருப்பு மூள்கிறது...
தெரிகிறதா...?
இது தணியாது...
இனிப் பணியாது...!!!
-புதுவை இரத்தினதுரை.