PDA

View Full Version : பதில் தாருங்கள்: பார்வை பற்றிய ஒரு கேள்வி!



mkmaran
24-03-2006, 07:01 AM
மன்றத்து நண்பர்களுக்கு,

ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை:rolleyes: )

கேள்வி இதுதான்:

1.

நாம் ஒரு காட்சியை காணும்போது
பிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்
மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
(அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)

2.

நமது உடலின் வலது பாகத்தை இடபக்க மூளையும்
இடதுபாகத்தை வலபக்க மூளையும் இயக்குகிறது.

இவை பள்ளி பாடத்தில் படித்தது.
இதற்கான காரணம் தெரியவில்லை.

இது பற்றி 90'களில் வாசகர் ஒருவர் சுஜாதா அவர்களிடம் கேட்டபோது மருத்துவர்களின் விடைகாண முடியாத கேள்விகளில் இவைகளும் அடங்கும் என்று கூறியதாக எனக்கு நியாபகம்.

இது சம்பந்தமாக மன்றத்தின் நண்பர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். அதன் மூலம் எனக்கு பதில் கிடைக்கலாம்!

இந்த பதில்கள் எனக்கு பயன்படகூடியது. அது பற்றி பிறகு கூறுகிறேன்!

ஓவியா
31-05-2006, 09:50 PM
மன்றத்து நண்பர்களுக்கு,

ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை:rolleyes: )

கேள்வி இதுதான்:

1.

நாம் ஒரு காட்சியை காணும்போது
பிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்
மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
(அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)

2.

நமது உடலின் வலது பாகத்தை இடபக்க மூளையும்
இடதுபாகத்தை வலபக்க மூளையும் இயக்குகிறது.

இவை பள்ளி பாடத்தில் படித்தது.
இதற்கான காரணம் தெரியவில்லை.

இது பற்றி 90'களில் வாசகர் ஒருவர் சுஜாதா அவர்களிடம் கேட்டபோது மருத்துவர்களின் விடைகாண முடியாத கேள்விகளில் இவைகளும் அடங்கும் என்று கூறியதாக எனக்கு நியாபகம்.

இது சம்பந்தமாக மன்றத்தின் நண்பர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். அதன் மூலம் எனக்கு பதில் கிடைக்கலாம்!

இந்த பதில்கள் எனக்கு பயன்படகூடியது. அது பற்றி பிறகு கூறுகிறேன்!



சபையில் இருக்கும் சான்றோர்களே வணக்கம்

:) உங்களில் யாராவது இந்த கேள்விக்கு விளக்கம் அளித்தால் நல்லது.
நமக்கு பயனுள்ளதாக இருக்கும் :)


ஓவியா

அறிஞர்
01-06-2006, 01:40 AM
சபையில் இருக்கும் சான்றோர்களே வணக்கம்

:) உங்களில் யாராவது இந்த கேள்விக்கு விளக்கம் அளித்தால் நல்லது.
நமக்கு பயனுள்ளதாக இருக்கும் :)


ஓவியாமுதலில் நீங்கள் சொல்லுங்கள்.. பிறகு நாங்கள் சொல்லுகிறோம்

சுபன்
01-06-2006, 01:52 AM
மன்றத்து நண்பர்களுக்கு,

ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை:rolleyes: )

கேள்வி இதுதான்:

1.

நாம் ஒரு காட்சியை காணும்போது
பிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்
மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
(அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)

கண்ணில் தலைகீழாகவும் மூளைக்குள் நேராகவும் மறுவதாக ஞாபகம்

gragavan
01-06-2006, 03:57 AM
கண்ணில் தலைகீழாகவும் மூளைக்குள் நேராகவும் மறுவதாக ஞாபகம்மிகச்சரி. விழித்திரையில் தலைகீழாக விழும் ஒளிப்படிவத்தை மூளை நேராகப் புரிந்து கொள்கிறது.

பென்ஸ்
03-06-2006, 08:30 AM
இளசால் இதற்க்கு நல்ல பதில் கொடுக்க முடியும் என்பது என் கருத்து.... நானும் இதே மாதிரி ஒரு கேள்வியை "தெரியாததை கேளுங்கள்" பகுதியில் கேட்டுபுட்டு காத்திருக்கிறேன்...

இளசு ஜூன் துவக்கத்தில் வருவதாக கூறி இருந்தாரே....

மயூ
05-06-2006, 10:06 AM
விழித்திரையில் விம்பம் தலைகீழாக வீழ்ந்தாலும் அது மூளையால் நேராக உணரப்படுகின்றது.

இளசு
29-06-2006, 09:41 PM
1) விழித்திரை ( ரெட்டினா) ஒரு சட்டியின் உள்பக்கம் போல் குவிந்து உள்ளது. இடப்பக்கக் காட்சிகள் ஒளிக்கதிராய் திரையின்
வலப்பக்கமும், வலப்பக்கக் காட்சிகள் இடப்பக்கமாகவும் விழும்.
அதே போல் மேல், கீழும் மாறி விழும். காரணம் லென்ஸில் நிகழும் ஒளி விலகல்.

இந்தச் சேதிகளை எடுத்துச் செல்லும் ஆப்டிக் நரம்புத்தொகுப்பு ஒரு முறை சரியாக பல்டி அடித்து மூளையில் விழுவதால்...

இரு பல்டிகளில் எல்லாம் நேராகி விடுகிறது.


2) வலப்பக்க உடம்பின் செயல்களை இயக்கும் நரம்புகள் இடப்பக்க மூளையில் புறப்பட்டு மெடுல்லா என்னும் மூளைத்தண்டில் சைடு மாறி விடுகிறது. அதே போல் மறுபக்கமும்.

வலது கைகால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டால், மூளை ஸ்கேன் இடப்பக்கத்தில் நோய் காட்டும்.

இடப்பக்க மூளையில்தான் பெரும்பாலானவருக்கு பேச்சு மையம் உள்ளது. அதனால் வலது கை பாதிக்கப்பட்டோருக்கு பேச்சிழக்கும் அபாயமும் உண்டு.. ( எம்ஜிஆரின் கடைசிக்காலங்கள்..)


ஏன் இப்படி மாறி மாறி கட்டுப்பாடு? என்ன பரிணாமக் காரணங்கள்?

தெரியவில்லை.

ஓவியா
30-06-2006, 04:14 PM
நன்றி இளசு சார்

இனியவன்
30-06-2006, 06:41 PM
பயனுள்ள தகவல்கள்
இளசு ஐயாவுக்கு நன்றி.

இனியவன்
01-07-2006, 07:17 AM
இமைகள மூடினால் முன்னால் தெரிந்த உலகம் சட்டென மறைந்து போகிறது. ஓர் இமை மூடலில் காணாமல் போகும் உலகத்தை உங்களுக்குக் கண்டுபிடித்து தருவது எது?

நிச்சயம் அது இமையல்ல. பின் எது? பதிலைச் சொல்லும்முன் ஒரு சிறிய கதை.

உடலில் ஆடையில்லாமல் திகம்பரராய் ஆற்றங்கரையைக் கடந்து கொண்டிருந்தார், சுகப்பிரம்மம். அங்கு குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்கள் அவரை ஒரு பொருட்டாய்க் கருதவில்லை. ஆனால் அடுத்த நொடியே நிலைமை தலைகீழானது.

வாலிபன் சுகப்பிரம்மத்தின் தந்தை வியாசர், அதே இடத்திற்கு வந்தார். குளித்துக் கொண்டிருந்த பெண்கள் பதறியடித்துக் கொண்டு ஆடைகளைத் தேடி ஓடினர்.

நிகழ்ந்த அத்தனையும் பார்த்த வியாசர் வியர்த்துப் போனார்.

என்ன இது! என் மகன் இளைஞன். அதுவும் ஆடையில்லாமல் உங்களைத் தாண்டிச் செல்லும்போது கூச்சமில்லாமல் கும்மாளமடித்தீர்கள்.

நான் முதிர்ந்தவன். பண்பானவன். என்னைப் பார்த்ததும் இப்படிப் பதறியடித்து ஓடுகிறீர்களே! என்ன காரணம்? என குழப்பத்தோடு கேட்டார்.

அதற்கு அப்பெண்கள், உங்கள் மகனின் கண்கள் வேறு. உங்கள் கண்கள் வேறு என்றார்கள்.

அப்படியென்றால்? _கேட்டார் வியாசர்.

பெண்கள், உங்கள் பார்வயில் ஆண், பெண் என்ற வித்தியாசம் தெளிவாய்த் தெரிகிறது. அது எங்களை உறுத்கிறது! என அவர்கள் சொன்ன பதிலில், வியாசர் ஆடிப்போனார்.

வியாசரையே ஆடிப்போக வைக்குமளவு சக்தி வாய்ந்தது கண்பார்வை.

நம்மில் பெரும்பாலோர் எதிரில் இருப்பவரின் முகத்தைக் கூடப் பார்த்துப் பேசுவதில்லை.

பேசிக்கொண்டிருப்பவரைக் கவனிக்காமல் அவருடைய உடை,கை, கால் அசைவுகளைக் கவனிப்போம்.

இன்னும் சிலர், பேசிக்கொண்டே எழுதுவது, படிப்பது, போனில் உரையாடுவது என்று வேறு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.

இவ்வாறு செய்வதால் அதிகபட்சம் கருத்ப் பரிமாற்றம் (இன்ஃபர்மேஷன் ஷேரிங்)

மட்டுமே நடக்கும். ஆனால் அடிப்படையான உணர்வுகளின் ஆத்மார்த்தமான பரிமாற்றம்

அங்கு நடபெறாது.

கணவன்_மனைவிக்குள், பெற்றோர் _ குழந்தைகளுக்குள், நண்பர் _ உறவினர்களுக்குள், ஆசிரியர் _ மாணவர்களுக்குள் வரும் எல்லா சச்சரவுகளுக்குமான விரிசல் இங்குதான் விழ ஆரம்பிக்கின்றன.

அந்த விரிசல்தான் பிறகு நாளாக நாளாகப் பெரிதாகி, விழுந்தால் எழமுடியாத அளவிற்கு ஆழமான மரணப் பள்ளத்தாக்காகிறது.

நன்றாக ஆராய்ந்தால் தெரியவரும் உண்மை: இது நம் அலட்சிய மனோபாவத்தால் வரும் பிரச்னை மட்டுமே!

குரங்கை விட்டு வாலைப் பிடிக்கக்கூடாது. அலட்சியம் தலைதூக்கும்போதே அதை அலட்சியம் செய்து விடுங்கள்.

உறவுகளிடமிருக்கும் விரிசல்கள் தானாய் ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கும் அதிசயங்களைக் காண்பீர்கள்.

கண்களோடு கண்கள் கலப்பதேயில்லை. நெருங்கிய உறவினர்களைக் கூட நாம் ஆழமாகப் பார்ப்பதில்லை. ஆழமாகப் பார்ப்பது வேறு. அடுத்தவரை ஊடுருவது வேறு.

சுகப்பிரம்மம் ஆழமாய்ப் பார்த்தார். அன்பாய்ப் பார்த்தார். ஆனால் வியாசரின் பார்வயோ ஊடுருவியது.

இன்னொரு உண்மை, பயந்தாங்கொள்ளிகளால் கண்ணுக்குக் கண் கூட பார்த்துப் பேச முடியாது.

கண்ணோடு கண் பார்ப்பது, கையோடு கை சேர்ப்பதை விட ஸ்பரிசமான, நெருக்கமானது.

இந்தச் செய்வதால் நீங்கள் அடையப் போகும் பலன்கள்.

1. நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு சக்தி கிடைக்கும். ஏனென்றால் நீங்கள் சொல்லும் கருத்தை எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்வார்கள்.

2. இதனால் உங்களால் நல்ல பேச்சாளராக முடியும். உங்களச் சுற்றி மக்கள் வசீகரிக்கப்படுவார்கள்.

3. உறவுகளிடம் சுமுகமான உறவு நீடிக்கும்.

4. இது உங்கள் தனித்துவத்தைத செம்மைப்படுத்தும்.

நன்றி குமுதம்.

mkmaran
12-07-2006, 07:50 AM
ஓவியா, அறிஞர், சுபன், G.ராகவன், பெஞ்சமின், மயூரேசன், இளசு அனைவருக்கும் எனது நன்றிகள்.

வேலைபளுவின் காரணமாக தாமதமாக பதிலலிப்பதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

மிகவும் தெளிவான விளக்கம் தந்தமைக்கு திரு.இளசு அவர்களுக்கும் எனது பிரத்தியேகமான நன்றி!

இனியவன் உங்களின் பதிலுக்கும் நன்றி!


03:49PM SG

ஓவியா
12-07-2006, 11:34 AM
மன்னிக்கவும்
ஒரு அன்பு கட்டளை

நன்பரே பளு இருக்கதான் செய்யும்,
இருந்தாலும் அடிக்கடி மன்றம் வர முயற்ச்சி செய்யுங்கள்....

வாழ்த்துக்கள்

இளசு
12-07-2006, 09:31 PM
நண்பர்கள் ஓவியா, இனியவன், மாறன் -

உங்கள் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி.


(சார், ஐயா, திரு போன்ற அடைமொழிகளை தவிருங்கள் நண்பர்களே.. வெறும் பெயர் சொல்லி அழைத்தாலே போதும்..

அந்த பிணைப்பைத் தருவதே இணையம்..)

மனோஜ்
01-04-2007, 04:49 PM
அருமையான தகவல்
கண்ணீன் பலன் நன்றாக அறிந்து கொண்டேன் நன்றி
இளசு அண்ணா இனியவன் அவர்களே

தங்க கம்பி
08-04-2007, 06:29 AM
சினிமா தியேட்டரிலேயே பிலிமை தலைகீழாகத்தான் ஓட்டுகிறார்கள். ஆனால் நமக்கு படம் நேராக தெரிகிறதே.

virumaandi
08-04-2007, 06:41 AM
என்னமா உதாரணம் காட்றாங்க...
தம்பி..தங்க கம்பி

ஜோய்ஸ்
13-04-2007, 03:59 PM
அதுதான் படைப்பின் இரகசியம்.இடவல மாற்றம் என்பது பல விஷயங்களில் தவிர்க்க முடியாததாகி விடுகிறதே.

Bala manian
12-07-2007, 03:28 PM
10ம் வகுப்பில் படிதது மற*ந்தது. தெளிவாக இப்பொது புரிகிறது. நன்றி

rama
14-07-2007, 04:11 AM
அனைவருக்கும் அன்பான வணக்கம்.

"கிட்னி"" பாதிப்பு எவ்வாறு அறிவது? அதன் நிலைகள் யாவை? அதை குறைக்க முடியுமா? எவ்வாறு? இனிப்பு நீர் நோய் உள்ளவர்களுக்கு எவ்வாறு தற்காக்கலாம்?

என் தாயாருக்கு 'கிட்னி' பிரச்சனை அரம்ப கட்டத்தில் உள்ளது. அவருக்கு இனிப்பு நீர் மற்றும் இருதய நோய் உள்ளது. அவரின் வயது 59.

தங்களின் பதில் பலருக்குப் பயன் தரும்.


இக்கண்,

இராமகிருஷ்ணன்.
மலேசியா.
இன்பமே சூழ்க! என்னோரும் வாழ்க!

leomohan
14-07-2007, 08:20 AM
எளிமையான பதில்கள், தன்னடக்கமும் தெரிகின்றது. நன்றி இளசு

rama
07-08-2007, 06:55 AM
வணக்கம். அறிவு பூர்வமான வினா. பலருக்கு பயன் தரும்.

வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
இராமகிருஷ்ணன்.
மலேசியா

ஜெகதீசன்
03-02-2008, 08:11 PM
மன்றத்து நண்பர்களுக்கு,

ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை:rolleyes: )

கேள்வி இதுதான்:

1.

நாம் ஒரு காட்சியை காணும்போது
பிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்
மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
(அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)

2.

நமது உடலின் வலது பாகத்தை இடபக்க மூளையும்
இடதுபாகத்தை வலபக்க மூளையும் இயக்குகிறது.

இவை பள்ளி பாடத்தில் படித்தது.
இதற்கான காரணம் தெரியவில்லை.

இது பற்றி 90'களில் வாசகர் ஒருவர் சுஜாதா அவர்களிடம் கேட்டபோது மருத்துவர்களின் விடைகாண முடியாத கேள்விகளில் இவைகளும் அடங்கும் என்று கூறியதாக எனக்கு நியாபகம்.

இது சம்பந்தமாக மன்றத்தின் நண்பர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். அதன் மூலம் எனக்கு பதில் கிடைக்கலாம்!

இந்த பதில்கள் எனக்கு பயன்படகூடியது. அது பற்றி பிறகு கூறுகிறேன்!

சத்தியமா எனக்கு தெரியாது:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

Keelai Naadaan
11-04-2008, 09:03 AM
நல்ல பல தகவல்களுக்கு பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றிகள்.

aravinthan21st
18-09-2009, 10:03 PM
பதில் தாருங்கள்: பார்வை பற்றிய ஒரு கேள்வி!
மன்றத்து நண்பர்களுக்கு,

ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை )

கேள்வி இதுதான்:

1.

நாம் ஒரு காட்சியை காணும்போது
பிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்
மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
(அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)

2.

நமது உடலின் வலது பாகத்தை இடபக்க மூளையும்
இடதுபாகத்தை வலபக்க மூளையும் இயக்குகிறது.

இவை பள்ளி பாடத்தில் படித்தது.
இதற்கான காரணம் தெரியவில்லை.

இது பற்றி 90'களில் வாசகர் ஒருவர் சுஜாதா அவர்களிடம் கேட்டபோது மருத்துவர்களின் விடைகாண முடியாத கேள்விகளில் இவைகளும் அடங்கும் என்று கூறியதாக எனக்கு நியாபகம்.

இது சம்பந்தமாக மன்றத்தின் நண்பர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். அதன் மூலம் எனக்கு பதில் கிடைக்கலாம்!

இந்த பதில்கள் எனக்கு பயன்படகூடியது. அது பற்றி பிறகு கூறுகிறேன்!


வணக்கம் அன்பரே ,
தாங்கள் பிழையான விளக்கம் கொண்டு உள்ளீர்கள்.என்னவென்றால் கண்ணில் படும் விம்பம் விழித்திரையில்தான் தலை கீழாக விழுகிறது.ஆனால் அதை மூளையோ சரியாக விளங்கிக் கொள்கிறது.
மூளைக்கு ஒரு சிறப்பியல்புண்டு,எப்படிப்பட்ட கணத்தாக்கம் தொடர்ந்து கிடைக்கிறதோ அதுக்கு பழகிக்கொள்கிறது.உதாரணமாக,தலை கீழாகவே தொடர்ந்தும் பார்ப்பவர்க்கு முதலில் சிரமமாக இருந்தாலும் காலப்போக்கில் அது நமக்கு தெரிவது போல சாதாரணமாகவே தெரியத் தொடங்கிவிடும்.

இப்போ இரண்டாவது சந்தேகம் -
மூளையில் இரு அரைக் கோளங்கள் உண்டு.அவையுடன் தொடர்பாக உள்ள நரம்பின் உடற் கூற்றியல் அமைப்பே(anatomy) இதற்கு காரணம் .

aravinthan21st
18-09-2009, 10:22 PM
'கிட்னி' பாதிப்பு எவ்வாறு அறிவது?
அனைவருக்கும் அன்பான வணக்கம்.

"கிட்னி"" பாதிப்பு எவ்வாறு அறிவது? அதன் நிலைகள் யாவை? அதை குறைக்க முடியுமா? எவ்வாறு? இனிப்பு நீர் நோய் உள்ளவர்களுக்கு எவ்வாறு தற்காக்கலாம்?

என் தாயாருக்கு 'கிட்னி' பிரச்சனை அரம்ப கட்டத்தில் உள்ளது. அவருக்கு இனிப்பு நீர் மற்றும் இருதய நோய் உள்ளது. அவரின் வயது 59.

தங்களின் பதில் பலருக்குப் பயன் தரும்.


இக்கண்,

இராமகிருஷ்ணன்.
மலேசியா.
இன்பமே சூழ்க! என்னோரும் வாழ்க!



வணக்கம் அன்பரே ,
தாங்கள் ''இனிப்பு நீர் நோய்'' என்று குறிப்பிடாது நீரிழிவு நோயை என்று நினைக்கிறேன் .

"கிட்னி"" பாதிப்பு என்கிறீர்கள் ,அது என்ன பாதிப்பு என்று சொல்லவில்லை.ஏனென்றால் சிறுநீரக பாதிப்பு அல்லது நோய் பலவுண்டு.இது தெரியாமல் பதிப்பை கண்டரிவதேப்படி என்றோ அல்லது நிலைகள் பற்றியோ கூறமுடியாது.
ஆனால்,இதய நோய் உள்ளோர் பெரும்பாலும் உப்பை குறைப்பது நலம்.மீளும் நீரிழிவு நோயுள்ளோர் தொடர்ச்சியான ஒழுங்கான உணவுப் பழக்கத்தின் மூலமும் ,உடற் பயிற்சி மூலமும் குருதி குளுக்கோஸ் மட்டத்தை பேணுவதன் மூலம் எனைய உடல் உபாதைகளை குறைக்கலாம்(சிறுநீரக நோய்கள்,கால் புண்,கண்பார்வை குறைதல்,கால் கையில் உணர்ச்சி குறைதல்).

* வேறு சந்தேகம் இருப்பின் கேக்கவும் எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்.

ஆன்டனி ஜானி
03-11-2010, 04:55 PM
மன்றத்து நண்பர்களுக்கு,

ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை:rolleyes: )

கேள்வி இதுதான்:

1.

நாம் ஒரு காட்சியை காணும்போது
பிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்
மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
(அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)

2.

நமது உடலின் வலது பாகத்தை இடபக்க மூளையும்
இடதுபாகத்தை வலபக்க மூளையும் இயக்குகிறது.

இவை பள்ளி பாடத்தில் படித்தது.
இதற்கான காரணம் தெரியவில்லை.

இது பற்றி 90'களில் வாசகர் ஒருவர் சுஜாதா அவர்களிடம் கேட்டபோது மருத்துவர்களின் விடைகாண முடியாத கேள்விகளில் இவைகளும் அடங்கும் என்று கூறியதாக எனக்கு நியாபகம்.

இது சம்பந்தமாக மன்றத்தின் நண்பர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். அதன் மூலம் எனக்கு பதில் கிடைக்கலாம்!

இந்த பதில்கள் எனக்கு பயன்படகூடியது. அது பற்றி பிறகு கூறுகிறேன்!

இந்த கேள்விகள் நான் அரிந்த கேள்விகள் போல இருக்கு இருந்தாலும் எனக்கு தெரிந்த ஒன்று.........கூருகிறேன் ,,,,,,!!! நீங்கள் கேட்ட கேள்வி எதாவது இயங்க கூடிய ஒரு பொருளை வைத்து கேட்டிருந்தால் எல்லாருக்கும் பதில் கூற நல்லா இருக்கும்...........'''''''இப்போது ஒரு பதில் கூருகிறேன் .....தியேட்டர் நாம் படம் பார்பது ஒன்று ..........இன்னொன்று தொலைகாட்சி பெட்டி இதில் பிம்பங்கள் தலைகிலாகவே உள்ளன இருந்தாலும் நமக்கு நேராகவே தெரிகிறது,,,, இன்னொன்று பூமியின் சுலற்சி இது நம்மை சுற்றி தலைகிளாக தான் வரும் நாமும் தலைகிலாகதான் சுலன்று வருகிறோம் இருந்தாலும் நமது இயக்கங்கள்,பார்வைகள் எல்லாம் நேறாகவே தெரிகிறது இதுவும் கூட சொல்லலாம்,,இது எதற்க்கு அப்படி தெரிகிறது என்றால் இப்பொது குலியாடி,குவியாடி இது போல நமது கண்னில் உள்ள லென் ரெம்ப பவர் புல்லான ஒரு லென் இது ஒரு அசைவற்றது நாம் படுது இருந்தாலும் ஒரு பொருளை பார்த்தாலும் அது நேராக தான் நம்மால் உணருகிறோம்

nambi
03-11-2010, 05:41 PM
தோழர் அந்தோணி கூறியது போல் விழியாடி மூலம் நாம் இப்படித்தான் உணருகிறோம் என்பதை...விஞ்ஞானப்பூர்வமாக...மனித உடலியல் பூர்வமாக விளக்கியது சரிதான்...

ஆனால் அவர் (எம் கே மாறன்) வினவியது அது பற்றியல்ல என்றே தோன்றுகிறது...வலது பக்கத்தை இடது மூளையும் இடது பக்கத்தை வலது பக்க மூளையும் ''கையாஸ்மா'' என்ற '' x '' போன்ற நரம்பு அமைப்புடன் இணைத்து இயக்குகிறது அது ஏன்? அப்படி அமையவேண்டும் என்பதற்கான இயற்கை நியதி அல்லது அப்படி அமைந்ததற்கான அறிவியல் பூரணமான காரணம் என்ன? என்பதே அவரது சந்தேகம்...? அது பற்றித்தான் எழுத்தாளர் சுஜாதா கூறியதாக கூறுகிறார்....

அதே போன்று தான் விழிஆடி (ஐ லென்ஸ்)....நாம் பார்க்கும் எந்த உருவமும் ஒளியாகி கண்ணின் (லென்ஸ்) விழி ஆடி வழியாக பாய்ந்து உள்ளே விழித்திரையில் தலைகீழாகத்தான் விழும், அதை மூளை நேராக்கி உணருகிறது,

(சூரிய ஒளியில் பிலிம் வைத்து சிறுவர்கள் சுவற்றில் வெள்ளைத்துணி கட்டி படம் காட்டுவார்கள் அது தலைகீழாக சுவற்றில் விழும்...இரண்டு ஆடி (லென்ஸ் வைத்தால்) வைத்தால் நேராக பிம்பம் விழும்...அப்படித்தான் என நினைக்கிறேன் மறந்து விட்டது) ...

ஆனால் கண்ணில் அப்படியல்ல விழித்திரையில் தலைகீழாகத்தான் விழும்...நரம்புகள் மூலம் நேராக மாற்றி உணர்ந்து கொள்கிறது மூளை...இந்த நரம்புத்தொடர்பு அறுந்து போனால் காணும் உருவங்கள் எல்லாம் தலைகீழாகத்தான் தெரியும்.:D..அதைத்தான் நண்பர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே போன்று இடது பக்க மூளை, வலது பக்க மூளை கட்டுப்பாடுகளுக்கும் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்பதை அறிவதற்கான வினவல் என்றே தோன்றுகிறது. இது பற்றி எங்கோ பத்திரிகையில் படித்ததாக ஞாபகம்..(இணையத்திலும் இருக்கும்)....அதுவும் கணிப்பாக வெளியிடப்பட்டிருந்தது...அது பற்றி தகவல் முழுமையாக கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்...நண்பர்கள் பகிர்ந்து கொண்டால் நலம்...

நன்றி!

kulandaivel
26-09-2011, 11:23 AM
1)புகைப்பட கருவி வேலை செய்யும் விதத்தில் கண் வேலை செய்கிறது
2)நரம்பு மண்டல இணைப்பு இடம் வலம் மாறி இருப்பதால் இந்த நிகழ்வு

அன்புடன்,
குழந்தை வேல். மு

kulandaivel
26-09-2011, 11:43 AM
(கிட்னி) சிறு நீரகம் இரத்ததை சுத்தம் செய்கிறது .

சிறு நீர் சோதனை செய்து பார்த்தால் தெரிந்து விடும்.
காலை( குளுகோஸ்
பட்டினி -சாப்பாட்டிற்கு -12 மணி நேரத்திற்கு பிறகு ) 80-115
சரியான உடல் நலம்
120 க்கு மேல் இருந்தால் நீரழிவு நோய்க்கு வாய்ப்பு அதிகம்.

பரம்பரை ,மற்றும் உட்கார்ந்து வேலை செய்தல்,
குறைவான உடல் பயிற்சி ஆகியவை முக்கிய காரணங்கள்.

முதல் சட்டம்

கலோரிகளை குறைக்கவும் ( சாப்பாடை)

கலோரிகளை எரிக்கவும் ( உடல் பயிற்சி )


அன்புடன்

குழந்தை வேல்.மு

venkat8
30-01-2012, 08:26 PM
இளசுவின் பதில் அருமை

ந.க
04-11-2012, 07:56 AM
நல்ல ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றல்.
கண்வில்லை, தலை கீழ் விம்பம் கண்திரையில் அதை நேராய் உணர்தல் நரம்பு மண்டல திருகு -முறுக்கேறிய நிலையினால்.
'பல்டி' அருமை.
இளசு அவர்கள் மிக எளிமையைக் கொடுத்துள்ளார் கருத்து. நன்றி.

irungovel
20-05-2013, 08:21 AM
நண்பர் எம்.கே. மாறன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.

அதற்கு பதில் சொல்லும் முயற்சியில் இந்த பதிவு.

நமது கண்கள் அழகான உறுப்பு மட்டுமல்ல ஒரு அற்புதமான உறுப்பும் கூட.

இந்த கேள்விக்கு பதில், நமது கண்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை

விளக்கும் போது தான் கூற முடிகிறது. அதற்கு நமது கண்ணின்

அமைப்பையும், அதன் சில பாகங்களையும் சற்று புரிந்து கொள்ள வேண்டும்.

அடிப்படையில் நமது கண்கள் நமது மூளையின் ஒரு நீட்சியே (Extension)

ஆகும்.

உதாரணமாக நீங்கள் எதிரில் இருக்கும் உங்கள் நண்பரின் கண்களைப்

பார்க்கின்றீர்கள்.

அவரது கண்ணின் முன்புறம் கறுப்பாக ஒரு பகுதி, பலரையும் கவரும்

விதமாக அழகாக இருக்கிறது.

அந்த கறுப்பான பகுதி முதல் உறுப்பு அல்ல, நமது கண்ணின் முன்புறம் உள்ள

முதல் உறுப்பு, கார்னியா (Cornea) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும்

விழி வெண் படலமே ஆகும்.இதற்கு அடுத்து இருக்கும் கருவிழியே

(ஆங்கிலத்தில் ஐரிஸ் (Iris) என்று சொல்லப்படுகிறது)கார்னியா வழியாக

தெரிகின்றது.

கார்னியா ஒரு நிறமேயில்லாத, ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய, இரத்த

குழாய்கள் ஏதுமேயில்லாத ஒரு மெல்லிய திசு.

இதனை நமது கண்களின் கண்ணாடி ஜன்னல் எனலாம்.

நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கார்னியாவில் தான்

முதலில் குவிகின்றது. கார்னியா குவிந்த அமைப்பில் இருப்பதனால் எவ்வளவு

பெரிய பொருளாக இருந்தாலும் அந்த பொருளின் ஒளிக்கதிர்கள் கார்னியாவில்

குவிகின்றது. (உதாரணம்- நீங்கள் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது,

உங்கள் கைப்பிடி (handle bar) மற்றும் விசை அழுத்தி (ஆக்சிலேட்டர்)

அருகே உள்ள பின்னால் உள்ள அல்லது நம்மைத் தொடரும் பொருட்களைக்

காண்பிக்கும் குவி ஆடியில் (ரியர் வியூ மிரரில்), அது ஒரு குவி ஆடியாக

இருப்பதனால் உங்களுக்குப் பின்னால் வரும் உங்கள் இருசக்கர

வாகனத்தைக்காட்டிலும் மிகப் பெரிய பேருந்தின் உருவம் தெரிகிறதல்லவா அது

போல).

அடுத்த செயல்பாடு; கார்னியாவிற்கு அடுத்த பகுதியான ஐரிஸ் எனப்படும்

கருவிழி நமக்கும் அல்லது நமது கண்ணுக்கும், நாம் பார்க்கும் பொருளுக்கும்

இடையே உள்ள தூரத்தைப் பொறுத்து, கருவிழியானது ஒரு திரையப்போல

விரிந்தோ அல்லது சுருங்கியோ ஒளிக்கதிர்களை உள்ளே அனுப்புகிறது.

கருவிழிக்கு அடுத்து இருக்கும், விட்ரியஸ் ஜெல் எனும் திரவத்தினால்

நிரம்பியிருக்கும் பின் அறை என்னும் பகுதியில் அந்த ஒளிக்கதிர்கள் பயணம்

செய்து, கண்ணின் பின்புறம் ஆனால் உள் அடுக்கான விழித்திரை எனப்படும்

ரெட்டினாவில் (Retina) குவிந்து பிம்பம் பதிவாகிறது. இங்கேதான் நாம்

பார்க்கும் பொருளின் பிம்பம் தலைகீழாக பதிவாகிறது.

விழித்திரையில் பதிவான பிம்பமானது விழித்திரையைத் தொடர்ந்து இருக்கும்

பார்வை நரம்பின் மூலமாக பிம்பம் செய்தி மூளையில் உள்ள பார்வை

மண்டலத்திற்கு செய்தியை எடுத்துச் செல்கிறது.பார்வை மண்டலத்தில்

பல்வேறு உயிர் வேதி மாற்றங்கள் மூலம் ஒரு பொருளை நாம் பார்க்க

முடிகின்றது.

பொதுவாக நாம் அனைவரும் ஒரு நல்ல பார்வையை அனுபவிக்க

வேண்டுமானால், இரண்டு கண்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அப்போது தான் நாம் பைனாகுலர் விஷன் எனப்படும் இரண்டு கண்களும்

இணைந்து செயல்படும் சிறந்த பார்வையை பெறுகிறோம்.

நமது கண்ணின் அமைப்பு, நமது வலது கண் நமது மூளையின் பார்வை

மண்டலத்தில் இடது புறத்தோடும், நமது இடது கண் நமது மூளையின்

பார்வை மண்டலத்தில் வலது புறத்தோடும் இணைந்துள்ளது.

நண்பர் திரு எம்கே மாறன் அவர்கள் கேள்வியில் குறிப்பிட்டிருப்பது போல

”மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
(அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)” என்பது தவறாகும்.

விழித்திரையில் ஒளிக்கதிர்கள் குவிந்து பிம்பமாக தலைகீழாக பதிவாகிறது

என்பதே சரி.

இரண்டாவது கேள்வி; நமது உடலின் வலது பாகத்தை இடது பக்க மூளையும்,

இடது பாகத்தை வலது பக்க மூளையும் இயக்குகிறது என்பது உண்மை. இது

மனித உடலியற்கூறு மற்றும் செயல்படும் தன்மை (Anatomy and

Physiology)ஆகும். இயற்கையின் படைப்பில் அல்லது இறைவனின்

படைப்பில் மனித உடலியற்கூறு அவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதன் காரணம்

என்ன? என்பது பதில் காண முடியாத புதிர் எனலாம்.







மன்றத்து நண்பர்களுக்கு,

ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை:rolleyes: )

கேள்வி இதுதான்:

1.

நாம் ஒரு காட்சியை காணும்போது
பிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்
மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
(அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)

2.

நமது உடலின் வலது பாகத்தை இடபக்க மூளையும்
இடதுபாகத்தை வலபக்க மூளையும் இயக்குகிறது.

இவை பள்ளி பாடத்தில் படித்தது.
இதற்கான காரணம் தெரியவில்லை.

இது பற்றி 90'களில் வாசகர் ஒருவர் சுஜாதா அவர்களிடம் கேட்டபோது மருத்துவர்களின் விடைகாண முடியாத கேள்விகளில் இவைகளும் அடங்கும் என்று கூறியதாக எனக்கு நியாபகம்.

இது சம்பந்தமாக மன்றத்தின் நண்பர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். அதன் மூலம் எனக்கு பதில் கிடைக்கலாம்!

இந்த பதில்கள் எனக்கு பயன்படகூடியது. அது பற்றி பிறகு கூறுகிறேன்!