PDA

View Full Version : குறிப்பு



ப்ரியன்
16-03-2006, 11:21 AM
குறிப்பு
**********

கவிதை ஒன்றின்
ஓரமாய் குறிப்பெழுதி வைத்தேன்!
குறிப்பை ஆளாளுக்கு
அலசிப் போனார்கள்!
யாருமே கண்டுகொள்ளாமல்
அனாதையாய் கிடந்தது
கவிதை!

- ப்ரியன்.

தாமரை
16-03-2006, 11:22 AM
குறிப்பு
**********

கவிதை ஒன்றின்
ஓரமாய் குறிப்பெழுதி வைத்தேன்!
குறிப்பை ஆளாளுக்கு
அலசிப் போனார்கள்!
யாருமே கண்டுகொள்ளாமல்
அனாதையாய் கிடந்தது
கவிதை!

- ப்ரியன்.


அல்லிராணியைப் பற்றி யாரும் பெருசாப் பேசலியே பிரியன். அப்புறம் ஏனிந்த வருத்தம்?

அல்லிராணி
16-03-2006, 02:26 PM
குறிப்பு
**********
யாருமே கண்டுகொள்ளாமல்
அனாதையாய் கிடந்தது
கவிதை!

- ப்ரியன்.

எழுதியவனே
அனாதையாக்கின கவிதை!
குறிப்பை விட
குறுகிப் போனது....

பென்ஸ்
16-03-2006, 02:46 PM
குறிப்பு
**********

கவிதை ஒன்றின்
ஓரமாய் குறிப்பெழுதி வைத்தேன்!
குறிப்பை ஆளாளுக்கு
அலசிப் போனார்கள்!
யாருமே கண்டுகொள்ளாமல்
அனாதையாய் கிடந்தது
கவிதை!

- ப்ரியன்.

புரியுது... :rolleyes: :rolleyes: :D :D

ஆனால் நாலு வரி கவிதையை விட ஒரு வரி குறிப்பு காரமோ..:rolleyes: :rolleyes:

ப்ரியன்
21-03-2006, 12:41 PM
அல்லிராணியைப் பற்றி யாரும் பெருசாப் பேசலியே பிரியன். அப்புறம் ஏனிந்த வருத்தம்?
ஐய்யோ அதை குறித்தல்ல இது...

ஒரு கவிதை தொகுப்பில் குறிப்பு படித்தவுடன் மனம் அதிலே நின்றுவிட்டது..கவிதை ரசிக்க இயலவில்லை இதை கவிஞன் காண நேர்ந்தால் என்ன ஆகும் என்ற நினைப்பே இது...மற்றபடி அல்லிராணியின் பதில் கவிதைகளை ஆவலுடன் படித்து வருகிறேன்

ப்ரியன்
21-03-2006, 12:42 PM
எழுதியவனே
அனாதையாக்கின கவிதை!
குறிப்பை விட
குறுகிப் போனது....

எழுதியவனே கண்டு கொள்ளாமல் விட்டால் குப்பையாகக்கூட போகும் :)

ப்ரியன்
21-03-2006, 12:44 PM
புரியுது... :rolleyes: :rolleyes: :D :D

ஆனால் நாலு வரி கவிதையை விட ஒரு வரி குறிப்பு காரமோ..:rolleyes: :rolleyes:

இருக்கலாம் பெஞ்சு இல்லாவிட்டால் மனதை திசை திருப்புவதாய் கூட இருக்கலாம்...பத்திரிக்கைகளில் செய்திகளுக்கு சம்பந்தம் இல்லாமல் அரைகுறை நடிகையிம் படம் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்

தாமரை
21-03-2006, 12:45 PM
ஐய்யோ அதை குறித்தல்ல இது...

ஒரு கவிதை தொகுப்பில் குறிப்பு படித்தவுடன் மனம் அதிலே நின்றுவிட்டது..கவிதை ரசிக்க இயலவில்லை இதை கவிஞன் காண நேர்ந்தால் என்ன ஆகும் என்ற நினைப்பே இது...மற்றபடி அல்லிராணியின் பதில் கவிதைகளை ஆவலுடன் படித்து வருகிறேன்
அப்பா! பேச ஆரம்பிச்சுட்டீங்களா!.. பேசுங்க பேசுங்க..

ப்ரியன்
21-03-2006, 01:45 PM
அப்பா! பேச ஆரம்பிச்சுட்டீங்களா!.. பேசுங்க பேசுங்க..
நிறைய பேசனும்னு ஆசை செலவன் வேலை பளு ஆசையில் மண்ணள்ளிப் போடுகிறது

அல்லிராணி
21-03-2006, 01:54 PM
இருக்கலாம் பெஞ்சு இல்லாவிட்டால் மனதை திசை திருப்புவதாய் கூட இருக்கலாம்...பத்திரிக்கைகளில் செய்திகளுக்கு சம்பந்தம் இல்லாமல் அரைகுறை நடிகையிம் படம் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்
ஆமாம்.. அந்த நடிகை கவிதையா இல்லை அவளைப் பற்றிய கிசுகிசு கவிதையா?

தாமரை
21-03-2006, 02:58 PM
ஐய்யோ அதை குறித்தல்ல இது...

ஒரு கவிதை தொகுப்பில் குறிப்பு படித்தவுடன் மனம் அதிலே நின்றுவிட்டது..கவிதை ரசிக்க இயலவில்லை இதை கவிஞன் காண நேர்ந்தால் என்ன ஆகும் என்ற நினைப்பே இது...மற்றபடி அல்லிராணியின் பதில் கவிதைகளை ஆவலுடன் படித்து வருகிறேன்
கவிதை என்றால் பார்ப்பவர் மனம் அதில் பட வேண்டும். கை படக் கூடாது.

அல்லிராணி
22-03-2006, 04:08 AM
கவிதை என்றால் பார்ப்பவர் மனம் அதில் பட வேண்டும். கை படக் கூடாது.
ஒர் வார்த்தை
குறிப்பு கூட
கவிதை தானே
உதாரணம்

காதலி...

குழந்தை...

அம்மா...

"உருவு கண்டு எள்ளாமை வேண்டும்"